Monday, April 4, 2011

28 வருடங்களின் பின் இந்தியா வசமானது உலக கோப்பை!


உலக கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கையை வென்ற இந்திய அணி

28 வருடங்களின் பின்னர் உலக கோப்பையை மீண்டும் தனது வசமாக்கியது.

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது.

இதன் மூலம் 3வது முயற்சியில் 2 வது தடவையாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 28 வருடங்களின் பின்னர் பெற்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்தியா மும்பையில் வைத்து உலக சாம்பியனானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். ஆட்ட நாயகன் கேப்டன் தோனியும் தொடர் நாயகனாக யுவராஜ் சிங்கும் தெரிவாகினர்.

ஆரம்பத்தில் இலங்கை அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதும் இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஸ்கோரை உயர்த்தவே இலங்கையின் பந்து வீச்சு பலத்தில் இந்திய அணி சேஸ் செய்வதற்கு பெரிய ஸ்கோர் எண்ணிக்கையான 275 என்ற ரன் நிர்ணயிக்கப்பட்டது.

அதற்கேற்றால் போல் 10 ஓவர்களுக்கள் சச்சின் சேவாக் ஆகியோரை இழந்த இந்திய அணி தடுமாறியது. எனினும் அதிரடியாக காம்பீர் 97 ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை ஏற்படுத்தினார். இந்நிலையில் 3 வது 4 வது விக்கெட்களையும் பறிகொடுத்த இந்தியா மீது மீண்டும் அழுத்தத்தை கொடுத்தனர் இலங்கை பந்து வீச்சாளர்கள். ஆனால் அதிரடியாக களமிறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக ஆடி விக்கெட் சரிவை நிலைநிறுத்தியதுடன் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்திக் கொண்டே வந்தார்.

எவ்வளவு முயன்றும் தோனியை ஆட்டமிளக்க செய்ய முடியவில்லை இலங்கை பந்து வீச்சாளர்களால் மோசமாக களத்தடுப்பையும் செய்துவந்தனர். இறுதியில் 11 பந்துகளில் 4 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் அபாரமான சிக்ஸ் ஒன்றை விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினார் கேப்டன் தோனி.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் உலக கோப்பை கனவு நிறைவேறியதுடன் சச்சினும் தான் விளையாடும் காலத்தில் பெற்ற சாதனை இதுவென்ற பெருமையையும் அடைந்தார்.

No comments:

Post a Comment