Sunday, July 24, 2011

ஒரு இணைய தமிழ் புரட்சி தேவை ...ஒன்று சேருங்கள் ...

தமிழ் இணைய உலகில் ஒரு நல்ல முயற்சி...
அனைவரும் அவரவர் நிலையில் தங்களின் பங்களிப்பை செய்யலாமே .

............................................
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள் ..
இந்த பதிவை எவளவு தூரம் கவனிக்கக் போகிறீர்களோ அல்லது அனைவரிடமும் சேர்க்க போகிறீர்கள் என்று தெரியவில்லை .எத்தனை பேர் இதில் இணைய முன் வந்து நிற்க்க போகிறீர்களோ தெரியவில்லை .ஆனால் தயவுசெய்து ஒரு 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் . http://www.ewow.lk/ தளம் பற்றியது .
கல்வி ,வேறு தொழில் நடவடிக்கைகளுடன் இதையும் இயக்குவதால் எம்மால் முழுநேரமாக தனியாக செய்ய முடியாது . ஆனால் அனைவரும் நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் முடியும் .

ஒரு சமூகத்தின்/மொழியின் வளர்ச்சி அதன் பரிணாம வளர்ச்சியில் தான் இருக்கிறது . அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வளர்ச்சியடையவேண்டும் .இணையத்தில் தமிழை தொகுப்போம் .

ஒரு சமூகம் வளர்ச்சி அடைய அந்த சமூகத்திலேயே இருந்து நன்றாக வந்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு மிக மிக முக்கியமானது .ஆனால் எம் சமூகத்தில் உள்ளவர்கள் வளர்ந்தவுடன் தன் சமூகத்தை திரும்பி பார்ப்பதில்லை என்ற எண்ணமே நிலவுகிறது . முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் .மிகவும் பின் தங்கி இருக்கிறோம் .நிச்சயம் ஒரு இணைய தமிழ் புரட்சி தேவைப்படுகிறது. அதற்கான வேண்டுகோள் பதிவு இது .ஒன்று சேருங்கள் .

இணையம் என்பது எதிர்காலத்தில் ஏழை ,பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க போகும் ஒன்று . உலக விடயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலமும் பகுத்தறிவை வளர்ப்பதன் மூலமுமே எமது சமூகத்தை வளர்க்க முடியும் . அனைவருக்கும் அனைத்திலும் அடிபப்டை அறிவு இருக்க வேண்டும் .கல்வித்தளம் /விழிப்புணர்வு தளம் என்று எந்த வகையிலும் வைத்திருக்கலாம் .

முதலில் வெறுமனே அறிவியல் கட்டுரைகளை மட்டுமே நானும் எனது நண்பன் பிரபுவும் எமது வலைப்பதிவுகளில் கிடைக்கும் நேரங்களில் படித்தவற்றை பகிர்ந்து /எழுதி வந்தோம் . அறிவியல் விடயங்கள் தமிழில் இணையத்தில் தேடினால் கிடைக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்காக இருந்தது .இருவரும் எழுதியதை இணைத்து ஒரு தளமாக்கி தொடர்ந்து எழுவது தான் நோக்காக இருந்தது .

ஆனால் பொதுவாக பார்த்தபோது அறிவியல் விடயம் மட்டுமன்றி கல்வி தொடர்பான எதுவுமே இணையத்தில் தமிழில் இருக்கவில்லை .வளர்ச்சி என்றால் அது அறிவியலில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றியது .

அதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது :: http://www.ewow.lk/

இந்த தளத்தில் இணைந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய விரும்புவர்கள் info@ewow.lk தொடர்புகொள்ளவும் .

இதன் உள்ளடக்கங்கள்::எந்த பகுதிக்கும் பங்களிப்பு செய்யலாம் .

கல்விப்பகுதி : இரசாயனவியல் ,பௌதீகவியல் பாட பகுதிகள் வீடியோ வடிவில் விளங்கப்படுத்தபட்டுள்ளன .: இவை இன்னும் சேர்க்க வேண்டும் .எங்கிருப்பவர்களும் இவற்றை படித்துக்கொள்ளலாம் .

தமிழில் இயங்கவில் ஆவர்த்தன அட்டவணை

ஏன்? எதற்கு ? : ஏன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது .இந்த பகுதியை தொகுத்து வருகிறோம் .உங்களுக்கு தெரிந்தவற்றை மூலத்தை குறிப்பிட்டு பகிரலாம்.

சுகாதார கல்விகளையும் வீடியோ வடிவில் தொகுத்துள்ளோம் .வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகிறது ?அதை தடுப்பது பற்றி சுகாதார விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது .ஆக்கங்கள் கேள்வி பதில்களாக உள்ளது .

அனைவரும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருக்கக் வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் பற்றிய விடயங்களை தொகுக்கிறோம் .மனித உரிமை சட்டங்களையும் தொகுக்கலாம் .

தமிழ் ஆவணப்படங்களும் செய்து வருகிறோம் .

அது தவிர வரலாறு ,தொழிநுட்பம் ,நாகரிகம் என பல விடயங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது .ஆனால் நாம் அவற்றை வழங்கு விதமும் தொகுக்கும் விதமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் .

எமக்கு தெரிந்தவற்றை மற்றயவர்களுக்கு தமிழில் கற்பிப்போம்,மற்றவர்களுக்கு தெரிந்ததை நாம் தெரிந்துகொள்வோம். தானாக இணையத்தில் தமிழ் சேர்ந்துகொண்டிருக்கும் .

நண்பர்களுடன் ,சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலே உதவியாக இருக்கும் .. இப்படியான பணிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை இந்த செய்தி போய் எட்டினால் போதுமானது .
..................................

மிக நல்ல முயற்சி சுதர்சன்

தொடரட்டும் உங்களின் இந்த நற்பணி .

வாழ்த்துக்கள்.
அனைவரும் பங்களிப்பை தருவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

என
அன்புடன்
நண்டு@நொரண்டு .

Thursday, July 21, 2011

உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்

மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்

மூலாதாரம்

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

ஸ்வாதிஷ்டானம்

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது

இன்று தொடங்கும் இங்-இந்தியா டெஸ்ட் - சில வரலாற்று நிகழ்வுகளை நிழ்த்த போகிறது!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.

இதனால் போட்டி தொடங்கப்படுவதற்கு முன்னர், டாஸ் போடும் நேரத்தில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கில்ஸ் கிளார்க் ஆகிய இருவரும் பரிசுக்களை பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொள்கின்றனர்.

போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில், போட்டி மைதானத்தில், இந்திய, இங்கிலாந்து முன்னால் கேப்டன்கள், வீரர்கள் கௌரவிக்கப் படவிருக்கின்றனர்.

இதனால் இந்திய முன்னாள் டெஸ்ட் கேப்டன்கள், ரவி சாஸ்திரி, சௌவ்ரவ் கங்குலி ஆகியோரும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள் இயான் போத்தம், பாப் வில்லிஸ், நசீர் உசேன் ஆகியோரும், போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருகை தரவுள்ளனர். இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 1932ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

இதேவேளை சச்சின் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் சதமடித்தால் அது அவரது 100 வது சதம் என்பதால் இப்போட்டி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் சச்சினுக்கு லார்ட்ஸ் மைதானம் ராசியில்லை எனவும், அங்கு அவர் ஒரு முறை கூட சதமடித்ததில்லை எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. எமது தொடரில் சச்சினை சதமடிக்க விட மாட்டோம் என இங்கிலாந்து வீரர்களும் சவால் விடுத்துள்ளதால், சச்சின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

இங்கிலாந்து - இந்தியாவுக்கு இடையில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டி மேலும் சில சுவாரஷ்யமான விடயங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவை

1. கிரிக்கெட் உலகின் 2000 வது டெஸ்ட் போட்டி இது!
2. ராகுல் ட்ராவிட், லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இறுதியாக லோர்ட்ஸில் விளையாடும் போட்டியாக இருக்கலாம்.
4. மூவரில் ஒருவரும் இங்கு சதமடித்ததில்லை.
5.சச்சின் 100 வது சதத்தை எதிர்பார்த்திருக்கும் போட்டி
6.இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் 100 வது டெஸ்ட் போட்டி
7. ராகுல் ட்ராவிட், லக்ஷ்மன், சச்சின் ஆகியோர் எடுத்துள்ள மொத்த டெஸ்ட் சதங்கள் 99. இதில் ஒருவர் சதமடித்தாலும் இந்த எண்ணிக்கையும் 100 ஆக மாறும்.
8. டன்கன் ஃபிளெட்ஷர், பயிற்றுவிப்பாளராக களமிறங்கும் 100 வது டெஸ்ட்.
9.இந்த போட்டித்தொடரில் வெல்லும் அணி டெஸ்ட் தரவரிசையின் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்ளும்.

Friday, July 15, 2011

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி 17 மூலம் ஜிசாட்-12 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட் மூலம் ஜிசாட்-12 செயற்கைக் கோள் இன்று மாலை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இன்று மாலை சரியாக 4.48 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஏவுதளத்தின் 2வது பேடிலிருந்து ராக்கெட் செலுத்தப்பட்டது.

1410 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான செயற்கைக் கோளான ஜிசாட் 12 செயற்கைக் கோள் ரூ. 90 கோடியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக் கோள் 12 டிரான்ஸ்பாண்டர்களுடன் கூடியதாகும். வானிலை முன்னறிவிப்பு, தொலைத் தொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 200 கோடியாகும்.

முன்னதாக திருப்பதி கோவிலுக்கு வந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வி்ஞ்ஞானிகள், ராக்கெட்டின் மாதிரியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். அதேபோல காளஹஸ்தி கோவிலுக்கும் இவர்கள் சென்று வழிபாடு நடத்தினர்.

19வது பி.எஸ்.எல்.வி:

பிஎஸ்எல்வி வகை ராக்கெட்களில் இது 19வது ராக்கெட்டாகும். இன்றைய தினம் இந்திய விண்வெளித்துறைக்கு முக்கியமானதும் கூட. காரணம், இன்று செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் அதிக எடை கொண்டதாகும். இதை சிறிய வகை ராக்கெட் மூலம் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது

பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக் கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.இதனையடுத்து ஸ்ரீ ஹரிஹோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் கைதட்டி உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் இது இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தெரிவித்தார்

Tuesday, July 12, 2011

அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்

நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மாள் கோவில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தேறியது.

இக்கோவிலில் ஆனி பெருத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதானை நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுத்தருளில் நடந்தது. இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழுங்க விநாயகர் தேரும், அதை தொடர்ந்து சுப்பிரமணியர் தேரும், சண்டிகேஸ்வரி தேரும் இழுக்கப்பட்டது. பிரதான பெருந்தேரான நெல்லையப்பர் தேர் இன்று காலை 8 மணிக்கு இழுக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி ரமண சரஸ்வதி தலைமையில் சுவாமி சங்கரனாந்தா, ராமசுப்பு எம்பி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய, நெல்லையப்பர் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். வழக்கத்தை விட இன்று வேகமாக நகர்ந்தது. காலை 9 மணிக்குள்ளாக திருத்தேர் வாகையடி முனையை தாண்டியது. நெல்லையப்பர் தேரை தொடர்ந்து காந்திமதியம்மன் தேர் இழுக்கப்பட்டது.

4 ரத வீதிகளிலும், ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் அபிஷேகம் வழங்கி வந்தனர். பஜனை குழுவினர் பஜனை பாடி சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு 4 ரத வீதிகளிலும் சுழலும் கேமரா பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Thursday, July 7, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்




ஏழு பேர் அடங்கிய குழு அந்த ஆறாவது அறையின் இரும்புக் கதவை திறப்பதற்கான வழி முறைகளை யோசிக்கும் முன் நாம் இந்த கோவிலின் பூர்விகத்தையும், திருவாங்கூர் சமஸ்தானத்தையும் பார்ப்போம்.


பத்மநாப சாமி கோவில் வைணவர்களின் நூற்றியெட்டு திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். ஆறாவது நூற்றாண்டில் கோவில் தொடங்கப் பட்டிருக்கலாம் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களில் கோடிட்டு காண்பிக்கப் பட்டிருக்கிறது. கோபுரமும் மற்றைய பிரகாரங்களும் பதினாறாவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.

கருவறையில் விஷ்ணு ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கிறார். ஆதிசேஷன் தலையை உயர்த்தி விஷ்ணுவின் இடது கையில் ஏந்தியிருக்கும் தாமரையை நோக்கியிருக்கும். பத்மநாபா சாமியின் வலது கை சிவலிங்கத்தையும், ஸ்ரீதேவி, பூதேவியை நோக்கியிருக்கும். அவர் நாபியிலிருந்து வரும் தாமரையில் பிரம்மா வீற்றிருப்பார். இந்த விக்ரகம் 12008 சாளிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டது. இந்தக் கற்கள் நேபாளத்திலிருந்து தருவிக்கப் பட்டதாம். இந்த விக்ரகத்தின் மேல் ஒரு ஆயுர்வேதக் கலவை பூசப்பட்டிருக்கிறது. ஆதலால் இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

கருவறை முன் உள்ள மேடை ஒற்றைக் கல்லால் செய்யப்பட்ட காரணத்தால் ஒற்றைக்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மேடயிலேறிதான் நாம் பத்மநாபரை தரிசிக்க முடியும். இங்கு ராஜாவைத் தவிர யாரும் விழுந்து வணங்குதல் கூடாது, மேலும் நம்மிடமிருந்து தரையில் விழும் பொருட்கள் கோவிலை சேரும்.



இங்கு நைவேத்யம் செய்யும் பாயசம் மிகவும் பிரபலம். அவை ரத்தினபாயசம், மேனி துலா பாயசம், பால் மாங்கா, ஓட்ட துலா பாயசம், பால் பாயசம். வியாழன் அன்று ஒரு ஸ்பெஷல் பானகம் தருகிறார்கள். “உப்பு மாங்காய்” தேங்காய் ஓட்டில வைத்து சாமிக்கு படைக்கிறார்கள்.

இங்கு நடக்கும் உற்சவங்களில் ஆறு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் லட்சதீபம் காண கிடைக்காத காட்சியாகும், கோவிலை சுற்றி ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றுகிறார்கள்.

பாதாள அறைகள்


கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் தான் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட விலை உயர்ந்த நகைகள், தங்க நாணயங்கள், வைர கற்கள் முதலியவற்றை வைத்து பாதுகாத்திருக்கிறார்கள். அவற்றில் தங்கத்திலான பதினாறடி நீளமுள்ள யானை கட்டும் சங்கிலி இப்பொழுது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. (இதனை வைத்து யானையை கட்டிப்போட முடியாதென்பது வேறு விஷயம்) அதன் எடை மட்டும் முப்பது கிலோவாம். ஐந்து அறைகளில் உள்ள புதையலின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடி. ஆறாவது அறை இரும்பு க்ராதிகளால் அடைக்கப் பட்டிருக்கிறது. அதை திறக்க ஆய்வாளர்களின் உதவியை நாடியிருக்கிறது ஏழு பேர் அடங்கிய சொத்து தணிக்கை குழு.

இந்தக் கோவில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தம். முதலில் கோவிலின் சொத்துக்களை பாதுகாக்க எட்டு வீட்டில் பிள்ளைமார் என்கிற நாயர் குழுவிடம் இருந்திருக்கிறது. பிற்பாடு எழுந்த பிரச்சினைகளின் காரணமாக இந்த சமஸ்தானத்தை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். ராஜா குடும்பம் தங்களை பத்மநாபதாசன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும் இந்த சொத்துக்களை இது நாள் வரை பாதுகாத்திருக்கிறார்கள். ராஜா ஒரு நாள் கோவிலுக்கு போகவில்லை என்றால் அதற்கு உண்டான அபராதத்தை கட்டியிருக்கிறார்கள்.

அவரது வம்சா வழியில் வந்த தற்போதைய ராஜா “உத்ராட திருநாள் மார்த்தாண்ட வர்மா”, இந்த சொத்துக்கள் மதிப்பீட்டிற்கு பின் தான் என் கண்கள் பேசும் என்று சொல்லியிருக்கிறார். இவரும் பழைய வழக்கப்படியே கோவில் செல்லாத நாட்களில் நூற்றைம்பது ருபாய் ஐம்பைத்தைந்து காசு அபராதத் தொகை செலுத்துகிறார். மேலும் கோவிலை விட்டு வெளியே வருமுன் காலில் ஒட்டியுள்ள மண்ணை கோவிலிலேயே தட்டிவிட்டு வருகிறார். கோவிலில் உள்ள மண் பத்மநாப சாமிக்கு சொந்தம் என்ற அசையாத நம்பிக்கையில் தான் கோவில் சொத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த சமஸ்தானத்தின் ராஜா கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என்பது காலம் காலமாக இருந்த நியதி. ராஜாவின் சகோதரியின் மகன்தான் அடுத்த பட்டத்து ராஜா. (ஆதலால் தான் கோவில் சொத்தில் ஆட்டையைப் போடாது இருந்திருக்கிறார்கள். நம்ம அரசியலாக இருந்தால் பெண்டாட்டி வைப்பாட்டி என்று வைத்து ஒரு வழி செய்திருப்பார்கள்).

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல வக்கீல் டி.பி. சுந்தராஜன் தொடுத்த பொது நல வழக்கு இப்பொழுது புதிய பிரச்சினையை கிளப்பியிருக்கிறது இப்பொழுது கேரளா அரசாங்கத்திற்கு புதிய தலை வலி ஏற்கனவே மூன்றடுக்கு செக்யூரிட்டி போட்டிருக்கிறார்கள். சொத்து மதிப்பீட்டிற்கு பிறகு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். இதை அரசாங்கம் உபயோகப் படுத்துவதாக இருந்தால் மற்றைய மத போர்டுகளில் உள்ள சொத்துக்களையும் ஆராய்ந்து கையகப் படுத்த வேண்டும் என்ற புதிய பிரச்சினை கிளம்பும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: கூகிளாண்டவர்

Wednesday, July 6, 2011

What Is Link Building?

Link Building is the process of creating inbound links to ones own website. This can be done by reciprocal links, being listed in e-zines, newsletters, directories, search engines, etc. Link building is one of the best ways to make your site popular. There are few types of linking one of which is reciprocal links.

Reciprocal links or link exchanges is the process where two webmasters agree to show the other's link on their website. After link building when the number of sites which link to a particular site is known as link popularity which helps in the search engine ranking of a website.

There are many advantages of link building.

1. Link building helps in getting quality traffic from relevant sites which increases sales.
2. Also when there will be high quality incoming links the site will also be seen as a valuable resource.
3. Link building helps in creating awarness, visibility and credibility of your site.
4. The site also obtains wider search engine exposure.
5. It also helps the website get indexed by search engines.

Today links have become important for all websites and they are worth the money. In fact, there are several companies dedicated to selling links (as opposed to companies that you can pay to do link building for you).

A Few General Directories.

http://www.a1weblinks.net
http://www.addurl-free.com/
http://www.bzzu.com/
http://www.cbravo.com/
http://www.ccislinks.com
http://www.cell-search.com/
http://www.centraldirectory.net/
http://www.centraldirectory.net/


For more check http://www.directory-owners.com/showthread.php?t=7

How Do Directories Help?

Web directories are collections of web pages with similar subjects and similar content. These directories help in many ways as they are extremely popular with Internet users as they are considered a source of valuable information. Listings in directories improve your chances of page ranking as well. If your site is listed in a directory, the search engines are more likely to find it and add it in their listings for free. Also submitting a site on directories helps in getting one way links which are that we have not linked the other person’s site but they have linked us.

There are three kinds of traffic that you can get from the directories where you are listed. The first is click-through traffic, meaning that anyone who ends up on the directory page will be able to see your web site and information, and there is a good chance that they will visit.

The second is indexing your site. Directories will begin to index the pages of your web site once they find the links to it. After that they can come back again and again, bringing you traffic as they do.

The last way that the directories will increase your traffic is increasing your ranking on the search engines themselves as they find the volume of links and references to your web site.

Overall link building is one of the most important steps in building a site, Getting quality links improves your PR and espouser to search engines. Also the possibility of gaining traffic to your site. Many people say link building is dieing out but the facts are simple, You build a site and build links and traffic will come. Also link building also increase your PageRank thus getting more traffic via Google.