Tuesday, April 22, 2014

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் !

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்  !

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான்  என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் !
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது
பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?
முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.
இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.
ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.
எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.
பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.
பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

Saturday, April 12, 2014

மந்திராலயம் பற்றி ஜீவநாடி ?

மந்திராலயம் பற்றி ஜீவநாடி

மந்திராலயத்தில் எவர் ஒருவர் 72 மணி நேரம் தங்கி தியானம் செய்கிறாரோ

அவர் பல சித்திகளை அடைகிறார். அது மட்டும் அல்லாமல் ஸ்ரீ

ராகவேந்திரரின் தரிசனத்தையும் பெறுகிறார் என ஸ்ரீ ஞானஸ்கந்தர்             

ஜீவ நாடியில் வந்துள்ளது. அங்கு செல்பவர்கள் பின்வரும் இடங்களையும்

தரிசனம் செய்யலாம்.

ராகவேந்திரர் பிருந்தாவனம்: 339 வருடங்களுக்கு முன்னர் 1671-ல் ஜீவசமாதி

அடைந்த மகான் ராகவேந்திரரது பிருந்தாவனம். முஸ்லிம் மன்னரே

ராகவேந்திரருக்கு விருப்பமான இடமான மாஞ்சலம்மா என்பவரிடம் இருந்து

பெற்றுத் தந்த இடம். அருகில் துங்கப்பத்ரா நதி ஓடும் அருமையான தலம்.

இன்றும் பல பக்தர்களுக்கு பலவிதமான அதிசயங்கள் நிகழும் இடம்.

 ராகவேந்திரரது பாதுகைகள் : 339 வருடங்களாக ராகவேந்திர சுவாமி

தமது கால்களில் அணிந்து ஆசீர்வதித்து கொடுத்த பாதுகைகள்

பரம்பரை பரம்பரையாக ஒருவரது வீட்டில் உள்ளது. பாலாஜி மந்திருக்கு

அருகில் இவ்வீடு உள்ளது.

 பாலாஜி மந்திர் : ராகவேந்திரர் தமது திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து

வழிபட்ட வெங்கடசபெருமாள் கோவில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தின்

வடகிழக்கு திசையில் உள்ளது. அவர் நட்ட பூச்செடிகள் பச்சை பசேலென

பூத்துக் குலுங்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

ராமலிங்கசுவாமி திருக்கோயில் : இதுவும் ராமர் ஸ்தாபித்து வழிபட்ட

சிவன் கோவிலாகும். எனவே ராமலிங்க சுவாமி எனப்படுகிறார். 3 அடி உயர

பிள்ளையாரும், மற்றொரு லிங்கமும் இத்திருக்கோயிலின் காலத்தை நமக்கு

பறைசாற்றுபவையாகும்.

வீரபத்திரர் திருக்கோயில்: ராமலிங்கசுவாமி திருக்கோயிலை அடுத்து உள்ளது.

4 அடி உயர வீரபத்திரர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஷ்டமி, பவுர்ணமி

நாட்களில் வெற்றிலை மாலை பிரபைகள் வைத்து அலங்காரம் செய்து சிறப்பு

வழிபாடுகள் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயர் கோயில்: பாலாஜி மந்திரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு

வலதுபுறம் திரும்பும் இடத்தில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம்.

ஆஞ்சநேயரின் வாலில் மணியுடன் அபயஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார்.

முன்புறமுள்ள தூண்களில் சிவன், விஷ்ணு உருவங்கள் அழகாக

செதுக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸாவரம் ஷீரடி பாபா கோவில் : ரெயில் நிலையத்தில் இருந்து ராகவேந்திரர்

பிருந்தாவனம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் பஸ்ஸாவரத்தில்

சாலையின் வலது புறத்தில் உள்ளது.

மாதவரம் ராமர் அமர்ந்த கல்: ரெயில் நிலையத்தில் இருந்து மந்திராலயம்

செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தூரத்தில்

சாலை வலதுபுறம் திரும்பும்போது இடதுபுறத்தில் சிறிது தொலைவில்

தகரக்கொட்டகை ஒன்று தெரியும். அதுவே ராகவேந்திரர் பிருந்தாவனத்தில்

அமர்ந்து ஜீவ சமாதியானபோது அமர்ந்த கல்லின் மற்றொரு பாதியாகும்.

இதன் மீதுதான் ராமர் இவ்வழியே செல்லும்போது அமர்ந்தார் என்று கூறி

இக்கல்லையே ராகவேந்திரர் எடுத்துவரச் செய்து அதன் மீது அமர்ந்து

பிருந்தாவனம் எழுப்பச் செய்தார். அதன் ஒரு பகுதியே இங்கு ஆஞ்சநேயர் சிலை

வடிக்கப்பட்டு தற்போது சிறிய கோவிலாக உள்ளது.

மாதவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்: ரெயில் நிலைத்தில் இருந்து மந்திராலயம்

செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தொலைவில்

சாலையின் இடதுபுறம் உள்ளது. பல காலங்கள் பூமிக்கடியில் புதைந்து

கிடந்த நரசிம்மர் சிலை, தற்போது மிகச்சிறப்பான கோயிலாக

கட்டப்பட்டுள்ளது.
மந்திராலயம் பற்றி ஜீவநாடி மந்திராலயத்தில் எவர் ஒருவர் 72 மணி நேரம் தங்கி தியானம் செய்கிறாரோ அவர் பல சித்திகளை அடைகிறார். அது மட்டும் அல்லாமல் ஸ்ரீ ராகவேந்திரரின் தரிசனத்தையும் பெறுகிறார் என ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ளது. அங்கு செல்பவர்கள் பின்வரும் இடங்களையும் தரிசனம் செய்யலாம்.

ராகவேந்திரர் பிருந்தாவனம்: 339 வருடங்களுக்கு முன்னர் 1671-ல் ஜீவசமாதி அடைந்த மகான் ராகவேந்திரரது   பிருந்தாவனம். முஸ்லிம் மன்னரே ராகவேந்திரருக்கு விருப்பமான இடமான மாஞ்சலம்மா என்பவரிடம் இருந்து  பெற்றுத் தந்த இடம். அருகில் துங்கப்பத்ரா நதி ஓடும் அருமையான தலம்.
இன்றும் பல பக்தர்களுக்கு பலவிதமான அதிசயங்கள் நிகழும் இடம்.

ராகவேந்திரரது பாதுகைகள் : 339 வருடங்களாக  ராகவேந்திர சுவாமி தமது கால்களில் அணிந்து ஆசீர்வதித்து கொடுத்த பாதுகைகள் பரம்பரை பரம்பரையாக ஒருவரது வீட்டில் உள்ளது. பாலாஜி மந்திருக்கு அருகில் இவ்வீடு உள்ளது.பாலாஜி மந்திர் : ராகவேந்திரர் தமது திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெங்கடசபெருமாள் கோவில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தின் வடகிழக்கு திசையில்  உள்ளது. அவர் நட்ட பூச்செடிகள் பச்சை பசேலென பூத்துக் குலுங்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.
ராமலிங்கசுவாமி திருக்கோயில் : இதுவும் ராமர் ஸ்தாபித்து வழிபட்ட சிவன் கோவிலாகும். எனவே ராமலிங்க சுவாமி    எனப்படுகிறார். 3 அடி உயர பிள்ளையாரும், மற்றொரு லிங்கமும் இத்திருக்கோயிலின் காலத்தை நமக்கு பறைசாற்றுபவையாகும்.
வீரபத்திரர் திருக்கோயில்: ராமலிங்கசுவாமி திருக்கோயிலை அடுத்து உள்ளது. 4 அடி உயர வீரபத்திரர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் வெற்றிலை மாலை பிரபைகள் வைத்து அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயர் கோயில்: பாலாஜி மந்திரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு வலதுபுறம் திரும்பும் இடத்தில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம். ஆஞ்சநேயரின் வாலில் மணியுடன் அபயஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார். முன்புறமுள்ள தூண்களில் சிவன், விஷ்ணு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸாவரம் ஷீரடி பாபா கோவில் : ரெயில் நிலையத்தில் இருந்து ராகவேந்திரர் பிருந்தாவனம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் பஸ்ஸாவரத்தில் சாலையின் வலது புறத்தில் உள்ளது.
மாதவரம் ராமர் அமர்ந்த கல்: ரெயில் நிலையத்தில் இருந்து மந்திராலயம் செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தூரத்தில் சாலை வலதுபுறம் திரும்பும்போது இடதுபுறத்தில் சிறிது தொலைவில் தகரக்கொட்டகை ஒன்று தெரியும். அதுவே ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதியானபோது அமர்ந்த கல்லின் மற்றொரு பாதியாகும். இதன் மீதுதான் ராமர் இவ்வழியே செல்லும்போது அமர்ந்தார் என்று கூறி இக்கல்லையே ராகவேந்திரர் எடுத்துவரச் செய்து அதன் மீது அமர்ந்து  பிருந்தாவனம் எழுப்பச் செய்தார். அதன் ஒரு பகுதியே இங்கு ஆஞ்சநேயர் சிலை வடிக்கப்பட்டு தற்போது சிறிய கோவிலாக உள்ளது.
மாதவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்: ரெயில் நிலைத்தில் இருந்து மந்திராலயம் செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தொலைவில் சாலையின் இடதுபுறம் உள்ளது. பல காலங்கள் பூமிக்கடியில் புதைந்து  கிடந்த நரசிம்மர் சிலை, தற்போது மிகச்சிறப்பான கோயிலாக கட்டப்பட்டுள்ளது.