Saturday, October 29, 2011

Top 10 Richest Man in India

Top 10 Richest Man in India (Forbes 2011 Rich List)

The 10 richest Indians are:
1. Mukesh Ambani (Reliance Industries Ltd) $22.6 billion
2. Lakshmi Mittal (ArcelorMittal) $19.2 billion
3. Azim Premji (Wipro) $13.0 billion
4. Shashi and Ravi Ruia (Essar Group) $10.2 billion
5. Savitri Jindal (O.P. Jindal Group) $9.5 billion
6. Sunil Mittal (Bharti Airtel) $8.8 billion
7. Gautam Adani (Adani Group) $8.2 billion
8. Kumar Birla (Aditya Birla Group) $7.7 billion
9. Pallonji Mistry (Shapoorji Pallonji Group/Tata Group) $7.6 billion
10. Adi Godrej (Godrej Group) $6.8 billion

Friday, October 28, 2011

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!
பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!
ஆம் – பதினெட்டு என்பது; வரலாற்றில், புராண இதிகாசங்களில் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணாகவே இருந்திருக்கிறது. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் – இராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள் – தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் என்று பதினெட்டு என்ற எண்ணுக்குப் பெருமை உண்டு.

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது
பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?
முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.
இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.
ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.
எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.
பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.
பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

TEMPLES IN Tirunelveli

Nellaiappar Temple

This sivasthalam is one of the Pancha Sabha Temples (Copper) of Lord Shiva. This is one of the big temples in Pandiya Naadu measuring 756 in length and 378 feet in breadth. There are 2 temples at Tirunelveli, one for Lord Shiva who is known as Nellaiappar and the other one for Kanthimathi Ammai. Both the temples are located side by side and a corridor joins both the temples. On the southern prakaram of the presiding male deity's temple, the stone statues of Nayak Kings are found who have made immense contributions for the development of this temple. The beautiful statue of Lord Arumugam (Muruga) with His 2 consorts Valli and Deivaanai sitting on His mount Peacock can be seen in the west prakaram. This statue is beautifully carved from single block of big stone. From the eastern prakaram, one has to enter through a series of mandapams to reach the sanctum sanctorum of Nellaiappar.



Kanthimathi Temple

The temple of female deity Kanthimathi Ammai can be reached from the south prakaram and passing through the connecting corridor. The 1000 pillar mandapam inside the female deity's temple is very famous and it is here the celestial wedding of Kanthimathi Ammai with Nellaiappar takes place every year during the festival in the Tamil month of Aippasi corresponding to October 15th to November 15th

Sri Varadharaja Perumal Temple

Sri Varadharaja Perumal Kovil is situated in Tirunelveli Junction, on the banks of the perennial river Thamirabarani. It is an ancient and reputed Vishnu temple.

Mela Thiruvenkatanathapuram Temple

The Mela Thiruvenkatanathapuram temple is located 7 to 10 km south west of Tirunelveli, on the banks of perennial river Thamirabarani. Also known as Thirunankovil, it has Lord Srinivasa as the deity.

Holy Trinity Cathedral

The Holy Trinity Cathedral, Palayamkottai, a big, elegant and beautiful church, was built in 1826 by Rev. CTE Rhenius - the Apostle of Tirunelveli (Charles Theophilus Ewald Rhenius), and opened to public for worship on 26 June 1826. Bishop Corrie named it as Holy Trinity Church on 30 January 1836. Bishop Stephen Neill raised the status of the Church into a Cathedral. Many renovations and additions were made to this structure. This church still serves as a nucleus for this massive Cathedral which developed in later years. Church of glorinda is located one kilometre east to holy cathedral.

Important Places In Tirunelveli

The Tirunelveli City included five important places such places are following here,



District Science Centre

The District Science Centre is located in the land of Tamiraparani and it is an unique institution. Popularizing Science, counting the spirit of enquiry, denoting creative talents, qualifying scientific temper in life, are the facts. There are 124 centres in country among that this is one. In ocean there are two galleries in that 3permanent centres and semi permanent gallery is about popular science and a six acres is filled with science park which has a tremendous help centre for every awareness of scientific development among the people. Generation to the above facilities of District Science Centre is also taking part in conducting following programmes like Mobile Science Exhibition, Planetarium, Film Show, Temporary Exhibition, Science Skit and Rating of Science.

Museum

From Tirunelveli just 2Km travel. It is a multi-use museum situated on Tirunelveli-Thiruvananthapuram Road (NH7) palayamkottai. All varieties of Archaeological remaining can be seen. Entrance free. Museum Open 8.30a.m to 5.30p.m.

Kutrallam

Kutrallam, the " Spa of the south" is situated at an elevation of about 170 m high, on the western Ghats in Thirunelveli district. This is not only a tourist spot but also a health resort too. The waterfall has medicinal properties since the water runs through forests of herbs and the water has therapeutic qualities to cure physical ailments. During the season between June to September every year thousands of tourists visit this place.

Uvari Village

Uvari is a fishing village which is located at shore of way to Bengal at Tirunelveli district, Tamilnadu, South India. This village is just 70 Km from Tirunelveli city. 50 Km east from Nagercoil and 100 Km west from Tuticorin. The total population of that place is nearly 7000. There are around thousands of houses in this village. This village all the needs what they want like electricity, health centre, community centre, schools, bank, hospital, water tanks, ration shop, library and etc., This not like a village nearly a town. There are good bus facilities for the people and it takes just one hour to reach Hindu temple Tiruchendur. Uvari is just 90minutes from railway junction of Tirunelveli and from the beach town of Kanyakumari. From Uvari many private travels are arranged for Tisayanvillai, 7Km away from Uvari. The village is divided into 3types Middle Street, Western Street and Beach Colony.

V.O.C. Mani Mandapam

V.O.Chitambarm with a great personality of Freedom movement in Tamilnadu who struggled in pulling the cooking oil extraction (chekku) in Coimbatore prison, the place he was imprisoned for fighting against British rule. V.O.C. Born at Ottapidaram now in Tuticorin district. But this village was before under Tirunelveli district so that government built a manimandapam for him Tirunelveli and it was honored by our chief minister of Tamilnadu to open it. There is a meditation hall. In this hall V.O.C. statue is kept with the height of 6.5 feet. There is extracted oil kept as a remembrance for his struggle and sacrifice in national freedom fight. At the Entrance of the mandapam two ship shapes are kept which intimate us the V.O.C. brave and intelligent approach against British. V.O.C. also established Navigation Team against British. He was not only sincere to the nation and he was also a leader of labour union. Once there was a strike, in that many labours were starving V.O.C. sold his land and bought food for the labours and Strike continued. His co-mates are Mahakavi Bharathi and Subramania SIVA.



‘Veerar’ Pulithevan Memorial

He was born in 1715. He was the first man to make war of British to cry. He was the only man who refused to pay tax against British. This made a wound to his self respect and in 1755 he was the first herald the freedom movement of defeating the demand of Col. Aaron. He planned a war against the Britishers and defeated them too. At last Britishers planned to attack him while offering prayers at Sankara Nainar Koil but he dis-appeared into a cave and he never returned. Thus to his memorial they kept a Nelkattum Seval at Sivagiri Taluk.



Kalakkaddu Wildlife Sanctuary

You will have to move a little out of the city center as the sanctuary is situated some 47 km away from Tirunelveli. Covering a whopping area of around 223 sq km, the sanctuary is located amidst the western ghats. The sanctuary serves as home to animals like Macaque, common Langur, Nilgiri Tahrs, Sambars, Bears, Elephants, Tigers, Flying Squirrel, Panther, the list goes on. The flora here is also very rich and one can see spreads of tropical wet evergreen forest, tropical dry deciduous and thorn forest. Nature lovers who are also adventure lovers can expect a wonderful outing as trekking is allowed in the sanctuary, but for that prior permission from the forest department is required. Forest Rest House at Sengaltheri proves to be a perfect staying option for tourist who wish to stay a little longer for enjoying the cool and pleasant atmosphere of this serene area.



Kunthakulam Bird Sanctury

It is situated 33 kilometers south of Thirunelveli. Kunthakulam is actually a small and natural scenic village. This village is covered with natural forest and ponds. During winter every year more than 10 thousand birds from various countries like Pakistan, Myanmar, Sri Lanka and Australia migrate here.



Mundanthurai Wildlife Sanctuary

Although this sanctuary is a Project Tiger Reserve you are likely to sight other animals like the leopard, sambhar, sloth bear and the chital apart from a wide variety of Indian primates including the bonnet macaque, common langur, Nilgiri langur and lion-tailed macaque.



Papanasam

Papanasam is located 60 kilometers from Tirunelveli. The famous Shiva temple is located at the bottom of Western Ghats that is very near to the origin of the River Tambraparani. The place is also famous for the Chitrai Vishu festival that is celebrated in the month of April when lacks of people congregate here.

forbes-list-mukesh-ambani-richest-indian

உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி... சொத்துமதிப்பு ரூ 1.13 லட்சம் கோடி!!

டெல்லி: உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அவரது தம்பி அனில் அம்பானி இந்த டாப் 10 பட்டியலில் இடமிழந்தார்.

உலக அளவில் முன்னணியில் உள்ள 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளிநாட்டில் இருந்து வெளியாகும் 'போர்ப்ஸ்' என்ற வர்த்தக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 100 இந்திய பெரும் பணக்காரர்களின் பட்டியல், 'போர்ப்ஸ்' பத்திரிகையின் இந்திய பதிப்பில் நேற்று வெளியானது.

அதன்படி, உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார்.

அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி (22.6 பில்லியன் டாலர்) ஆகும். அவரது சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில் ரூ.22 ஆயிரம் கோடி (4.4 பில்லியன் டாலர்) வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் மீறி, அவர் தொடர்ந்து நம்பர் 1 பணக்கார இந்தியராக இருக்கிறார்.

லட்சுமி மிட்டலுக்கு இரண்டாமிடம்

அவரைத் தொடர்ந்து, வெளிநாட்டு வாழ் இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி (19.2 பில்லியன் டாலர்) ஆகும். ரூ.65 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் விப்ரோ கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர் அஸீம் பிரேம்ஜி.

4-ம் இடத்தில் எஸ்ஸார் குரூப்பை சேர்ந்த சசி ரூயா, ரவி ரூயா ஆகியோரும் (ரூ.61 ஆயிரம் கோடி), 5-ம் இடத்தில் சாவித்ரி ஜிண்டாலும் (ரூ.47 ஆயிரத்து 500 கோடி), 6-ம் இடத்தில் பார்தியின் சுனில் மிட்டலும் (ரூ.48 ஆயிரம் கோடி), 7-ம் இடத்தில் கவுதம் அதானியும் (ரூ.41 ஆயிரம் கோடி), 8-ம் இடத்தில் குமார் மங்கலம் பிர்லாவும் (ரூ.38 ஆயிரத்து 500 கோடி), 9-ம் இடத்தில் பல்லுன்ஜி மிஸ்திரியும் (ரூ.38 ஆயிரம் கோடி), 10-ம் இடத்தில் ஆதி கோத்ரெஜும் (ரூ.34 ஆயிரம் கோடி) உள்ளனர்.

அனில் அம்பானிக்கு இடமில்லை

நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரத்து 500 கோடி ஆகும். அவர் முதன்முறையாக, டாப் டென் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது 13-ம் இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு பட்டியலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 100 பேர் பட்டியலில் 57 பேர் பில்லியனர்கள்.

சொத்து மதிப்பு வீழ்ச்சி

பணக்கார இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் (ரூ.30 ஆயிரம் கோடி) வீழ்ச்சி அடைந்திருப்பதாக இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பண வீக்க உயர்வு, ஊழல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவையே காரணம் என்று 'போர்ப்ஸ்' தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில், சன் பார்மசூட்டிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திலீப் சாங்வி, ஹீரோ குரூப் பி.எம்.முஞ்சால் ஆகியோர் உள்பட 19 பேரை தவிர, மற்றவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்து இருப்பதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது.

ஒவ்வொருவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகள், குடும்ப சொத்துகள், பண பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டு இருப்பதாக 'போர்ப்ஸ்' தெரிவித்துள்ளது.

tamil-nadu-tops-suicide-list

தற்கொலையில் தமிழகம் முதலிடம்- 2010ல் 16,561 பேர் தற்கொலை: இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை!

டெல்லி: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 15,916 பேரும், பெங்களூரில் 1,778 பேரும், டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் தங்கள் உயிரை மாயத்துக் கொண்டனர். இந்தியாவில் 1 மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சதவீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தி்ல் கடந்த 1 ஆண்டில் மட்டும் 64,996 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 835 பேர் பலியாகியுள்ளனர். மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதேசத்தில் அதிகமாகியுள்ளது. அங்கு கடந்த ஆண்டில் 3,135 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 414 பேரும், மும்பையில் 194 பேரும், பூனேயில் 91 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தற்கொலை தலைநகர் என்ற பெயரை பெங்களூர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் பெங்களூரில் மட்டும் 1,778 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

Tuesday, October 25, 2011

childrens songs

அறிவு தரும் ஆனந்தம்: குழந்தைப் பாடல் !

உலகே உலகே காது கொடு

ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு

மனமே மனமே பாடுபடு – படிப்பால்

வாழ்வை வென்று எடு;



படிக்கப் படிக்க வளர்ந்துவிடு

எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு

ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்

கண்ணைத் திறந்தே யொழித்துவிடு;



படிப்பு கொடுக்கும் தைரியத்தில்

பட்டம் சுமந்துக் காட்டிவிடு

படிப்பால் நாளை உலகத்தின்

பசுமைப் போற்ற முயற்சி யெடு;



சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்

வீடு போனால் போனதுதான்

படித்து உழைத்துப் பெற்றக் கல்வி

ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;



மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை

கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –

என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்

எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே;



பாடம் சுமக்கும் மாணவரே

காலம் சுமக்க வாழ்பவரே

உடம்பை சுமக்கும் நத்தைப்போல்

எம் தேசம் சுமந்து நடப்பவரே;



உறங்கா கடலின் அலைபோலே

உழைத்து உயரும் மழலைகளே

விரிந்த வானக் குடைபோலே

மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;



மாறும் மாறும் உலகமெலாம்

மாற்றிப் போடப் படித்திடுவோம்

மாறுதல் காணும் ஒருதினத்தில்

நல்லோர் வாழக் கற்றிடுவோம்!

- வித்யாசாகர்

Monday, October 24, 2011

deepavali-celebration-history

வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி கொண்டாட்டம்

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர்.

தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.

தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார்.

அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.

தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.

தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்ததங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர். இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.

சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை.

முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர். அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது.

தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.

chennai-bangalore-expressway-gets-clearance-centre

சென்னை- பெங்களூர் இடையே புதிய 6 வழிச் சாலை: தூரம் 258 கி.மீ. ஆகக் குறையும்!

சென்னை: சென்னை-பெங்களூர் இடையே புதிதாக 6 வழி அதிவேக 'எக்ஸ்பிரஸ் வே' சாலை அமைக்கப்படவுள்ளது.

இப்போது சென்னை-பெங்களூர் இடையே ஒசூர், கிருஷ்ணகிரி வழியாக 4 வழிச் சாலை உள்ளது. இந் நிலையில் புதிதாக இன்னொரு 6 வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சாலை பெங்களூரின் ஹோஸ்கோட் பகுதியில் ஆரம்பிக்கும் (மாரதஹள்ளியை ஒட்டிச் செல்லும் அவுட்டர் ரிங் ரோடு வழியாக சென்று ஹோஸ்கோட் பகுதியை அடையலாம்)

இந்த 6 வழிச் சாலை சென்னை-பெங்களூர் இடையிலான தூரத்தை 344 கி.மீயிலிருந்து 258 கி.மீ ஆகக் குறைக்கும். தூரம் 86 கி.மீ. குறைவதால், பயண நேரமும் வெகுவாகக் குறையவுள்ளது.

பெங்களூரில் ஹோஸ்கோட் அருகே துவங்கும் இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலை 4க்கு இணையாகச் செல்லும். கோலார், பாலமநேரு, சித்தூர், ராணிப்பேட்டை வழியாக சென்னையை சென்றடையும். (ஏற்கனவே சித்தூர் வழியாக சென்னைக்கு சிங்கிள் லேன் பாதை உள்ளதும் குறிப்பிடத்தக்கது)

மொத்தமுள்ள 258 கி.மீ. தூரத்தில் 74 கி.மீ. கர்நாடகத்துக்குள்ளும், 90 கி.மீ. ஆந்திராவிலும், 94 கி.மீ. தூரம் தமிழகத்துக்குள்ளும் இந்த சாலை அமையும்.

இந்த சாலையை அமைக்க ஒரு கி.மீக்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை செலவிடப்படவுள்ளது. இதனால் இந்தச் சாலையை அமைக்க ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்று தெரிகிறது.

இந்த சாலை அமைக்கத் தேவையான நிலங்களை தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேச மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு கையகப்படுத்தும்.

இந்த சாலையை தனியார் நிறுவனங்கள் அமைக்கவுள்ளன. சாலையை உருவாக்கி, நிர்வகித்து (கட்டணம் வசூலித்து) பின்னர் அரசிடம் ஒப்படைக்கும் build-operate- transfer (BOT) திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு இத் திட்டத்துக்கு சமீபத்தில் தனது அனுமதியை அளித்தது.

இந்த சாலை அமைக்கும் பணியை துரிதமாக்க expressway authority என்ற அமைப்பை உருவாக்கவும் மத்திய வர்த்தகத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை-பெங்களூர் சாலை தவிர, வதோதரா-மும்பை இடையே 400 கி.மீ. தூரத்துக்கும், டெல்லி-மீரட் இடையே 66 கி.மீ தூரத்துக்கும், கொல்கத்தா-தன்பாத் இடையே 277 கி.மீ. தூரத்துக்கும் புதிய 6 வழிச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய அரசு ரூ. 16,680 கோடியை ஒதுக்கவுள்ளது.

இப்போது சென்னை-பெங்களூர் இடையிலான பயண தூரம் கார்களில் 3.30 மணி நேரமாகவும், ஆம்னி பஸ்களில் 5.30 மணி நேரமாகவும் உள்ளது. அதிவேகமாக இயக்கப்படும் கார்கள் 3 மணி நேரத்திலும், ஆம்னி பஸ்கள் 4 மணி நேரத்திலும் சென்னையை அடைவதுண்டு.

இந்த புதிய, தூரம் குறைக்கப்பட்ட சாலை மூலம் பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறைய வாய்ப்புள்ளது.

இதன்மூலம் ஐடிபிஎல் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயன் ஏற்படும். இவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டி வரை வந்து சென்னை சாலையை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

25-days-holidays-tamil-nadu-on-2012

2012ம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள் தமிழக அரசு அறிவிப்பு :

சென்னை: வரும் 2012ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டு செய்திக்
குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வரும் 2012ம் தமிழகத்தில் 25 நாட்கள் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும்
கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஜனவரி 1 (ஞாயிறு) - புத்தாண்டு
ஜனவரி 15 (ஞாயிறு) - பொங்கல்
ஜனவரி 16 (திங்கள்) - திருவள்ளூவர் தினம்
ஜனவரி 17 (செவ்வாய்) - உழவர் திருநாள்
ஜனவரி 26 (வியாழன்) - குடியரசு தினம்
பிப்ரவரி 5 (ஞாயிறு) - மிலாடி நபி
மார்ச் 23 (வெள்ளி) - தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 2 (திங்கள்) - வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு
ஏப்ரல் 5 (வியாழன்) - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 6 (வெள்ளி) - புனித வெள்ளி
ஏப்ரல் 13 (வெள்ளி) - தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 4 (சனி) - அம்பேத்கர் பிறந்தநாள்
மே 1 (சனி) - மே தினம்
ஆகஸ்ட் 15 (புதன்) - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 (திங்கள்) - ரம்ஜான்
செப்டம்பர் 8 (சனி) - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 19 (புதன்) - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 29 (சனி) - வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு
அக்டோபர் 2 (செவ்வாய்) - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 23 (செவ்வாய்) - ஆயுத பூஜை
அக்டோபர் 24 (புதன்) - விஜய தசமி
அக்டோபர் 27 (சனி) - பக்ரீத்
நவம்பர் 13 (செவ்வாய்) - தீபாவளி
நவம்பர் 25 (ஞாயிறு) - முகரம்
டிசம்பர் 25 (செவ்வாய்) - கிறிஸ்துமஸ்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 15, 2011

microsoft buys skype rs.40000 crore

ஸ்கைப் நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட்!

நியூயார்க்: இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.

இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.

2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் 633 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Friday, October 7, 2011

vijyadasami poojas

வெற்றி திருநாளான விஜயதசமி கொண்டாடுவது ஏன்?

பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

வெற்றிநாளான விஜயதசமி நாளில் பராசக்தியின் அருள் பெறும் விதத்தில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாலை வேளையில் இதைப் பாராயணம் செய்து அம்பிகையின் அருள் பெறுங்கள்.

●மலையரசனின் மகளே! உயிர்கள் வாழ அருள்புரிபவளே! விஷ்ணுவின் அம்சமாகத் திகழ்பவளே! அர்ஜுனனால் துதிக்கப்பட்டவளே! நீலகண்டப் பெருமானின் மனைவியே! உலகமாகிய பெரிய குடும்பத்தைக் காப்பவளே! மன நிறைவைத் தருபவளே! மகிஷாசுர மர்த்தினியே! அழகான ஜடை கொண்டவளே! பர்வத குமாரியே! உன் திருவடியை வணங்குகிறேன்.

● பக்தர்கள் வேண்டும் வரம் அருள்பவளே! அசுரர்களை அழிப்பவளே! மூவுலகங்களையும் காப்பவளே! சிவபெருமானிடம் விருப்பம் கொண்டவளே! தைரியமும், கோபமும் குணமாகக் கொண்டவளே! என்றும் இளமை கொண்ட கன்னியே! உன் திருப்பாதத்தை என் தலைமேல் தாங்குகிறேன்.

● உலகின் நாயகியே! தாயாக காப்பவளே! சிரிப்பில் விருப்பம் கொண்டவளே! கதம்பவனத்தில் இருப்பவளே! மலைகளின் அரசனான இமாலாயத்தின் உச்சியில் ஸ்ரீசக்ர பீடத்தில் இருப்பவளே! கைடபரை முறியடித்தவளே! உன் திருவடியைப் போற்றுகிறேன்.

● சதகண்டம் என்னும் ஆயுதத்தால் ருண்டாசுரனைத் அழித்தவளே! கஜாசுரனின் துதிக்கையை துண்டித்தவளே! சாமர்த்தியம் மிக்க சிங்க வாகனம் உடையவளே!
முண்டாசுரனை வென்றவளே! உன் கமலச் செவ்வடிகளில் விழுந்து பணிகிறேன்.

● பாவம், தீய எண்ணம் கொண்ட எதிரிகளை அழித்தவளே! சரணாகதி அடைந்தவருக்கு அபயம் அளிப்பவளே! சூலாயுதம் தாங்கியவளே! ரக்தபீஜன், சும்பன்,
நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளே! உன் திருவடி நிழல் உலகெங்கும் வியாபிக்கட்டும்.

● தும்தும் என்ற நாதத்துடன் வருபவளே! பகைவர்களின் தலையை சதுரங்க காய் போல பந்தாடுபவளே! ஜயஜய என்ற கோஷத்துடன் துதிக்கப்படுபவளே!
தேவலோக பாரிஜாத மலரைப் போல ஒளி கொண்டவளே! பாற்கடலில் பிறந்த சந்திரன் போல குளிர்ச்சி மிக்கவளே! உன் பொற்பாதங்களில் தண்டனிடுகிறேன்.

●பெண்கள் விரும்பும் பேரழகு கொண்டவளே! ராஜகுமாரியே! சுமங்கலிப் பெண்களால் சூழப்படுபவளே! தாமரை மலர் போன்ற நெற்றி கொண்டவளே! கலைக்கு
இருப்பிடமாகத் திகழ்பவளே! வண்டுகள் பாடும் நறுமலர்கள் சூடியவளே! பட்டு பீதாம்பரம் அணிந்தவளே! உன் மலர் பாதங்களில் முகம் புதைக்கிறேன்.

● போர்வீரனாக விளங்கும் கார்த்திகேயனை புத்திரனாகப் பெற்றவளே! ஞானியர் நாடும் சமாதி நிலையில் விருப்பம் கொண்டவளே! கருணைக்கு இருப்பிடமான தேவியே! கோடி சூரியர்களால் வணங்கப்படுபவளே! கிடைத்தற்கரிய உன் திருவடியைக் கண் கொட்டாமல் காண்கிறேன்.

●அம்மா! உனது திருவடியை வணங்கும் பேறு பெற்ற நாங்கள் கல்வி கலைகளிலும், செல்வத்திலும் சிறந்து விளங்க அருள் செய். பரமகருணையால் உலகிற்கெல்லாம் தாயாக விளங்குபவளே! உனக்கு எது விருப்பமோ அதை எனக்குச் செய்தருள்வாயாக. பர்வத ராஜ குமாரியே! எங்கள் வாழ்வில் வெற்றி குவிய உன்னைப் போற்றி வணங்குகிறேன்.

சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருப்பதால் அவளை ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும் போது காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

ஒழுக்கத் திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான் மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்...

முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வட மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திர தீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகு ம். இது தென்னிந் தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.

விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

navarathiri nineth day (06-10-2011) valipadu

விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வழிபடவேண்டும். வெற்றிக்குரிய நாளான விஜயதசமி கல்வி, கலைகளைப் பயிலத் தொடங்குவதற்குரிய நாளாகும். நாளை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணைக் கச்சேரி நடைபெறுகிறது. அருளாளர்கள் இறைவனை நாத வடிவமாகப் போற்றுவர். தேவாரம் இறைவன்,ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பதாகப் போற்றுகிறது. வடமொழியில் கலா என்றும், தமிழில் கல்வி என்றும், ஆங்கிலத்தில் கல்ச்சர் என்றும் சொல்லும் எல்லாவற்றுக்கும் மூலம் ஒன்றே. கலை அகில உலகத்திற்கும் பொதுவானது. பிறை நிலவு வளர்வது போல கலையும் முடிவில்லாமல் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. கலைமகள் சரஸ்வதியும் இடைவிடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறாள் என்பதன் குறியீடே வீணையாகும். இசை மட்டுமல்லாமல், ஓவியம், நாட்டியம், சிற்பம், காவியம், தியாகம்,சேவை, தானம் என்று அனைத்தும் கலைக்குள்ளே சங்கமிக்கின்றன.

இந்த உயர்வான பண்புகளின் முடிவான நோக்கம் அன்பில் தோய்வது தான். அந்த அன்பே கடவுளாக வீற்றிருக்கிறார். அன்பே சிவம் என்று இதைத் தான் சொல்கிறார்கள். இறைவனின் திருவடிகளைப் போற்றும் திருநாவுக்கரசர், மாசில் வீணையும், மாலை மதியமும்... என்று வீணையின் இனிமையை நமக்கு காட்டுகிறார். சரஸ்வதியும் தன் வீணா கானத்தால் பரமேஸ்வரரின் லீலைகளைப் போற்றிப் பாடுவதாக சவுந்தர்யலஹரி குறிப்பிடுகிறது. அதனால், இறையருளைப் பெறும் சாதனமாக இசை இருக்கவேண்டும். பொழுதுபோக்கு என்பது கலையின் இரண்டாவது அம்சம் தான். பாடுபவரோடு கேட்பவரும் இறையருளுக்குப் பாத்திரமாக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு. அப்படி பெருமை மிக்க இசையால் நாளை ஆராதிக்கின்றனர். மீனாட்சியம்மன் கோயிலில் நாளை 108 வீணை வழிபாட்டில் கலந்து மகிழுங்கள்.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்

பாட வேண்டிய பாடல்:

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

Wednesday, October 5, 2011

கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்

கருணை வழிக்காட்டி கல்வியை வாழச்செய் : சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம்பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.
* அழகிய வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே! அன்னையே! என் மனத்தாமரையிலும் நீயே வீற்றிருக்க வேண்டும். பிரம்மதேவன் விரும்புகின்ற வெண்சங்கு போன்ற நிறமும், அழகிய திருவடிகளும் கொண்ட தாயே! உன்னை வணங்குகிறேன்.
* அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே! வெண்பளிங்கு போல் ஒளி பொருந்தியவளே! எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே காத்தருள வேண்டும்.
* வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும், உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே! தினமும் உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை தந்தருளவேண்டும்.
* அறிஞர்களால் விரும்பப்படுபவளே! பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே! முத்துமாலையைக் கையில் ஏந்தியவளே! கலைகளின் நாயகியே! வேதம் நான்கையும் காத்தருள்பவளே! உன் அருளின் தன்மையை வியந்து போற்றுகின்றேன்.
* சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் படைத்தவளே! சூரியோதய வேளையிலும், சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே! அன்று மலர்ந்த பூவைப் போன்ற முகத்தையுடையவளே! என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி அருள்புரிய வேண்டும்.
* அன்னையே! உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில் புகுந்து அக இருளைப் போக்குபவளே! அறிவிற்கு ஆதாரமாய் திகழ்பவளே! ஞானத்தின் பிறப்பிடமே! நாவில் உறையும் நாமகளே! திருமாலின் உந்திக் கமலத்தில் வாழும் பிரம்மனின் துணைவியே! மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே! தாயே! உன்னருளை என் மீது பொழியச் செய்யவேண்டும்.
* பெண் மான் போன்ற மருட்சி தரும் பார்வை உடையவளே! குற்றத்தைப் போக்கியருளும் குணக்குன்றே! அறியாமையை நீக்கும் மாமருந்தே! மெல்லிய பூங்கொடியாய் மகிழ்ச்சியில் திளைப்பவளே! உன் திருவடித் தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக.
* சுவடி, ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே! உபநிஷதங்களின் உட்பொருளானவளே! பாடுவோர், கல்வி பயில்வோர் நாவில் குடியிருப்பவளே! உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம் யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை தந்தருள்பவளே! உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை! உன் கருணைப் பார்வையை என் மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய்.
* சரஸ்வதி தாயே! உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே! தரமான கல்வி, தர்ம வழியில் ஈட்டிய செல்வம், புகழ்மிக்க வாழ்வு ஆகியவற்றை எனக்கு தந்தருள்வாயாக.

02. சரஸ்வதி 108 போற்றி

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமேபோற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையேபோற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய் போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில் உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி
ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி!@பாற்றி!!

03. கல்விக்குறிய நட்சத்திரங்கள்

சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திரம் உச்சமாயிருக்கும் வேளையில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். திதியின் அடிப்படையில் நவமியன்று பூஜை செய்வர். அதனால் Œரஸ்வதி பூஜைக்கு "மகாநவமி' என்றும் பெயருண்டு. இந்த ஆண்டு அக்.4ல் (நேற்று) மூலநட்சத்திரம் வந்தது. அக்.5ல் நவமி வந்துள்ளது. இந்தக் குழப்பத்தை தீர்க்கத்தான், ஒரு காலத்தில் மூலத்தன்று தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை நான்கு நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்தனர். காலப்போக்கில் இவ்வழிபாடு மறைந்துபோனது. நட்சத்திரங்களில் மூலமும், திருவோணமும் கல்விக்குரியவை. திருவோணத்திற்கு "சிரவணம்' என்றும் பெயருண்டு. "சிரவணம்' என்பதற்கு "குருவின் உபதேசங்களைக் கேட்டல்' என்று பொருள்.

04.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

கல்வி தெய்வமான சரஸ்வதிக்குரிய பூஜையை "ஆயுதபூஜை' என்பர். தொழில்முறையில் அவரவருக்குரிய தொழிற்கருவிகளை இந்நாளில் வழிபடுவதால் இப்பெயர் வந்தது. வாழ்வில் வெற்றி பெற, ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். அம்பிகையின் அருள் ஒருவனுக்கு இருந்தால், அவன் தைரியசாலியாக இருப்பான். சரஸ்வதியின் அருள் பெற்றவர்களின் கையில் கத்திக்குப் பதிலாக எழுத்தாணியே இருந்தது. இதையே "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்று குறிப்பிட்டனர். எழுத்து என்பது மிகப்பெரிய சக்தி. பல வல்லரசுகளையும் ஒருவனது எழுத்து கவிழ்த்து விடும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டும்.

05. இலக்கிய விருதில் வாக்தேவி சின்னம்

இந்திய மொழி இலக்கியங்களுக்கு "ஞானபீடம்' விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில் இடம்பெற்றுள்ள சின்னத்தை "வாக்தேவி' (வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி) என்பர். கி.பி.1034ல் போஜமகாராஜன் உஜ்ஜயினியில் நிர்மாணித்த கோயிலில் உள்ள சரஸ்வதியின் வடிவம் இது. தற்போது இந்தச்சிலை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஞானபீடபரிசு பெறுபவருக்கு பஞ்சலோக வாக்தேவி சிலை வழங்கப்படும். அவள் 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் நின்றபடி காட்சிதருவாள். இந்த இதழ்கள் 14 இந்திய மொழிகளைக் குறிப்பதாகும். இவளது கைகளில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, சுவடி இருக்கும்.

mars-is-full-water-molecules-scientists

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரின் அளவை காட்டிலும், அதிகளவிலான நீர் மூலக்கூறுகள் இருப்பதை புதிய ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் குழு மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவின் உதவியுடன் அமெரிக்காவின் நாசா வி்ஞ்ஞானிகள் சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தில் ஆங்காங்கே தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தில், பூமியில் உள்ளதை போல மேகங்கள் போன்ற வாயு நிலை நீர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிக அளவிலான தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த நீரை தரையில் பார்க்க முடியாது. இருப்பதும் தெரியாது. வாயு நிலை உள்ள இந்த நீர் துகள்கள் தூசி மற்றும் காற்றில் கலந்துள்ள மற்ற துகள்களோடு கலந்து செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இது கிரகத்தில் சில இடங்களில் பனிப்பாறையாக உள்ளது.

காற்றில் தொடர்ந்து தூசு சுற்றிக் கொண்டிருப்பதால், அந்த நீர் துகள்கள் நிலத்தை அடைய முடியாமல் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தில் பார்க்கும் போது தண்ணீர் இல்லாவிட்டாலும், கிரகத்தின் எல்லா இடங்களிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.

navarathiri eighth day (05-10-2011) valipadu

அம்பாளை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். இவள் சரஸ்வதியின் அம்சம் ஆவாள். வீடுகளில் மஞ்சளில் செய்த முகத்தை, வீணை, ஏடு, ஜபமாலையுடன் அலங்கரிக்க வேண்டும். இது முடியாதவர்கள், ஒரு மேஜையில் புத்தகங்களை அடுக்கி, அதன் மேல் சரஸ்வதி படம் வைத்தும் வணங்கலாம். மதுரை மீனாட்சியம்மன் நாளை சிவபூஜை அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். ஒருவன் அறிவு பெற்றதன் அடையாளமே அவன் கடவுளின் திருவடியை வணங்குவது தான் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அந்த நல்வழியை நமக்கு எடுத்துக் காட்டும் விதமாக மீனாட்சி சிவபூஜை செய்து வருகிறாள்.

அன்பே சிவம் என்று திருமந்திரம் இறைவனைப் போற்றுகிறது. அருளின் வடிவம் அம்பிகை. அருள் அன்பை பூஜிக்கும் ஆனந்த காட்சியே நாளைய அலங்காரமாகிறது. மீனாட்சிக்கு சுவாமியை விட முதன்மை கொடுப்பர். கணவன் தன் மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, நல்ல முறையில் பார்த்துக் கொண்டால் அவள் கணவனைத் தெய்வமெனக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் தத்துவம் இதில் வெளிப்படுகிறது. நேற்றைய பொழுதில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தேவியை தரிசித்தவர்கள், சிவபூஜையையும் தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நாளை மீனாட்சியன்னையின் சிவபூஜையைத் தரிசித்து சிவபுண்ணியம் பெறுங்கள்.

நைவேத்யம்: பால்பாயாசம், சுண்டல், பொரி, அவல்

பாடவேண்டிய பாடல்:

பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும்
அன்பர் கண்ணும் கருத்தும்
நிறைந்தாய் சகலகலாவல்லியே.

Tuesday, October 4, 2011

navarathiri seventh day (04-10-2011) valipadu

நாளை, நவராத்திரி ஏழாம்நாளில், அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் ஆசனம்அமைத்து, அதன் இருபுறமும் யானை பொம்மைகள் வைக்க வேண்டும். அம்பாளின் கையில் ஜெபமாலை, கோடரி, கதாயுதம், அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுத கலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். வெள்ளைத் தாமரை மலர் மாலை சூட்ட வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவன் நமக்கென ஒரு வாழ்வைத் தந்திருக்கிறான். அது வளம் மிக்கதோ, ஏழ்மையானதோ.. எப்படி இருந்தாலும் ரசித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ்வைப் பார்த்து, அப்படி நமக்கு அமையவில்லையே என பொறாமைப்படக் கூடாது. இவ்வாறு நினைப்பதும், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டு அதை அடைய துடிப்பதும் அம்பிகைக்கு ஏற்புடையதல்ல. சொத்தைப் பறி கொடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் அக்னி பிழம்பாக மாறி, அநியாயம் செய்தவனை நிச்சயம் ஒருநாள் அழித்து விடும் என்பதை நாளைய அலங்காரம் உணர்த்துகிறது.

மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், அவன் தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். சூரியன், சந்திரன், வாயு உள்ளிட்ட தேவர்களுக்கு கூட அங்கு இடமில்லாமல் போனது. முனிவர்களையும் யாகம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டி விட்டான். இவர்களது வயிற்றெரிச்சல் இணைந்து அக்னியானது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களது ஆயுதங்களைக் கொடுத்தனர். அவள் மகிஷனை ஒழித்து மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். நாளை, மீனாட்சி அம்மனின் மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தால், தீய சக்திகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நாளைய நைவேத்யம்: தேங்காய் சாதம்

பாட வேண்டிய பாடல்:

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனைத் துதித்தால்
என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம்
அவளைத் தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்களம் கூடும்.
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்.

Monday, October 3, 2011

navarathiri sixth day (03-10-2011) valipadu

நவராத்திரியின் ஆறாம் நாளான நாளை, அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்றும், குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். இவள் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள். நாளை மீனாட்சியம்மன் திருமணஞ்சேரி பார்வதி திருக்கல்யாணம் கோலத்தில் காட்சிதருகிறாள். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 27 கி.மீ., தூரத்திலுள்ள சிவத்தலம் திருமணஞ்சேரி. இங்குள்ள அம்பிகை, முனிவர்கள் செய்த யாகத்தீயில் இருந்து அவதரித்தாள். வீணை ஓசையை விட இனிய குரல்வளம் கொண்டவளாக இருப்பதால் யாழின் மென்மொழியம்மை என்று பெயர் பெற்றாள். இங்குள்ள சிவன் கல்யாண சுந்தரர் எனப்படுகிறார். மதுரையும் திருமண ÷க்ஷத்திரமே. ஒரு திருமண ÷க்ஷத்திரத்தில், இன்னொரு திருமண ÷க்ஷத்திரத்தைக் காண இருக்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள். கன்னிப்பெண்கள் திருமணஞ்சேரி செல்லாமலேயே, தங்களுக்கு தகுந்த மணாளன் வேண்டி, இன்று சென்று வரலாம். திருமணமானவர்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டி செல்லலாம். திருமணஞ்சேரியிலுள்ள மூலவரை அருள்வள்ளல்நாதர் என்பர். ஆம்..அருள் வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே.

கருவுற்றிருந்த இருபெண்கள், பிறக்கும் குழந்தைகளின் மூலம் எதிர்காலத்தில் சம்பந்திகளாக வாழ்வது என்று தங்களுக்குள் உறுதி செய்து கொண்டனர். அதில் ஒருத்திக்கு பெண் குழந்தையும், மற்றொருத்திக்கு ஆமையும் பிறந்தது. அந்த ஆமை,திருமணஞ்சேரி இறைவனை வழிபட்டு ஆமையுருவம் நீங்கி, ஆணுருவம் பெற்றது. பின்பு அந்த இளைஞன், நிச்சயித்த பெண்ணையே திருமணம் செய்து மகிழ்ந்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற சிறப்பு உடையது. இத்தனை பெருமை பெற்ற திருமணஞ்சேரிக்குச் சென்று வந்த புண்ணியத்தைப் பெற மக்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் நாளை வாய்க்கிறது. திருக்கல்யாணத்திற்குப் பெயர் பெற்ற மதுரை மீனாட்சியை திருமணஞ்சேரி கல்யாண அலங்காரத்தில் கண்டு களிப்போம்.

நாளை நைவேத்யம்: வெண்பொங்கல்

பாடவேண்டிய பாடல்:

விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம்
உடையானை ஊழி தோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.


navarathiri fifth day (02-10-2011) valipadu

அம்பிகையை நாளை மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். இவளை மஹதீ என்று அழைப்பர். அளவிட முடியாத பெரும் சக்தியாகவும், சர்வமங்களம் தருபவளாகவும், தர்மத்தின் வடிவமாகவும் இருக்கிறாள். உழவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும்வரம் தருவாள். நாளை மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறாள். மக்கள்நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியான மீனாட்சி, மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, தன் அருள்பார்வையால் உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி என்ற பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சி வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் ஆகிய வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தாள். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளின் இயல்பாக இருந்தன. ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்னும் விதத்தில் பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகு பார்த்தான். நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் அம்பிகை, அதே கோலத்தில் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறாள். சிம்மாசனத்தில் அமர்ந்து கிரீடம்,ஆபரணங்கள், செங்கோல் ஏந்தி காட்சி தருகிறாள். நாளை பட்டம் சூடும் பட்டத்துராணி மீனாட்சியின் பார்வை நம்மீது பட்டாலே, நம் வாழ்வில் வெற்றி உண்டாகும்.

நைவேத்யம்: கல்கண்டு சாதம்

பாட வேண்டிய பாடல்:

உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே! மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்
இளவஞ்சிக் கொடியே! வருகவே!
மலையத்துவசன் பெற்ற
பெருவாழ்வே! வருக வருகவே!

Saturday, October 1, 2011

navarathiri fourth day (01-10-2011) valipadu

அம்பிகையை நாளை வைஷ்ணவியாக வழிபட வேண்டும் : சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களுடன், கருட வாகனத்தில் அமர்ந்தது போல அலங்கரிக்க வேண்டும். கோபியர்களை தன் மீது மோகம் கொள்ளச் செய்த கிருஷ்ணரின் வடிவம்தான் வைஷ்ணவியாகும். நவராத்திரி நான்காம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் மேருவைச் செண்டால் அடித்த கோலத்தில் காட்சி தருகிறாள். மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் பாண்டியநாட்டில் நல்லாட்சி நடத்தினர். அவர்களின் மகன் உக்கிரபாண்டியனுக்கு, காந்திமதி என்னும் பெண்ணரசியை மணம் செய்து வைத்தனர். அவனை மன்னனாக்கி அரியணையில் அமர்த்தினர். ஒருசமயம், பாண்டிய நாட்டில் மழைவளம் குறைந்து பஞ்சம் உண்டானது. நல்வழி காட்டும்படி சுந்தரேஸ்வரரை அவன் வழிபட்டான். அன்றிரவு இறைவன் கனவில் தோன்றி, ""உக்கிரபாண்டியனே! நாளை மேருமலைக்குப் புறப்படு. அதன் செருக்கை அடக்க உன்னிடமிருக்கும் செண்டால் அடி. அங்குள்ள குகையில் இருக்கும் தங்கத்தில் வேண்டிய அளவு எடுத்துக் கொள். குகையை மூடிவிட்டு, மீன் சின்னத்தைப் பொறித்துவிடு, என்று அருள்புரிந்தார்.

உக்கிரபாண்டியனும், மேருமலையை சென்றடைந்தான். அதன், உச்சியை செண்டால் அடித்தான். அலறிய மலை, மனித உருவெடுத்து ஓடி வந்தது. பாண்டியன் வருகைக்கான காரணத்தை அறிந்து, பொன் குவிந்திருக்கும் குகையைக் காட்டியது. தேவையான பொன்னை எடுத்துக் கொண்டு, மீன்சின்னத்தை பொறித்தான். நாடு திரும்பி, மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தான். நாட்டில் மழை பொழிந்து வளமும் கொழித்தது. உக்கிரபாண்டியனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் மீனாட்சியம்மன் நாளை, மேருவை செண்டால் அடித்த கோலத்தில் காட்சி தருகிறாள். இதனை தரிசித்தவர்கள் பொன் பொருளோடு நல்வாழ்வு வாழ்வர்.

நாளைய நைவேத்யம்: புளியோதரை

பாட வேண்டிய பாடல்: அறம்பல புரிந்த
காமாட்சி அருளை அளிப்பாய் மீனாட்சி
ஆடலில் வல்ல அபிராமி
ஆனந்த தாண்டவ சிவகாமி
தாயாய் அருளும் தயாபரியே
தமியேனைக் காக்க வந்தருள்வாய்
சேயாய் உன்முன் வேண்டி நின்றோம்
‌ஷேமம் தர வேணும் அம்மா!