Wednesday, July 12, 2017

சங்கீத சுவரங்கள் - அழகன் - பாடல் வரிகள்

படம் : அழகன்
பாடல் : சங்கீத சுவரங்கள்
இசை : மரகதமணி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சந்தியா


சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்

நானும் தான் நெனைச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசனை வரல

தூங்கினா வெளங்கும்

தூக்கம் தான் வரல

பாடுறேன் மெதுவா… உறங்கு….

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுவரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லிதா
சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்று தான் வந்தது…

சொர்க்கம் மண்ணிலே பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய

பூவுடல் நனைய

காமனின் சபையில்

காதலின் சுவையில்

பாடிடும் கவிதை சுகம் தான்

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் - பொறி (2007) - பாடல் வரிகள்

🎻🎻 இன்றைய இரவின் மடியில் 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻

🎞 படம். பொறி (2007)
பாடல் : "பேருந்தில் நீ எனக்கு"
🎙 பாடலை பாடியவர் :  M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
 🎙 மொழி : தமிழ்
🎼 இசையமைப்பு : தினா
🎬 இயக்குனர் : சுப்ரமணியம் சிவா
✍ எழுதியவர் : யுகபாரதி

ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே

(பேருந்தில்)

ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் வருகிற முதல் கூச்சம்

பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே

(பேருந்தில்)
(பேருந்தில்)

ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே

பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

(பேருந்தில்)
(பேருந்தில்)


🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻