Thursday, April 28, 2011

ரூ.3.2 லட்சம் விலையில் மினிவேன்:மஹிந்திரா அறிமுகம்


மும்பை: ரூ.3.2 லட்சம் விலையில், 8 பேர் பயணம் செய்யக்கூடிய மேக்ஸீமோ என்ற மினிவேனை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 0.8 டன் இழுவை திறன் கொண்ட மேக்ஸீமோ மினிடிரக்கை மஹிந்திரா அறிமுகம் செய்தது. வியாபாரிகள் மத்தியில் மேக்ஸீமோ மினிடிரக்குக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மேக்ஸீமோ பேஸ் மாடலை கொண்ட மேக்ஸீமோ பயணிகள் வாகனத்தையும் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.

டிரைவரை சேர்த்து 8 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த மினிடிரக்கில் மஹிந்திராவின் சி.ஆர்.டி.இ., தொழில்நுட்பம் கொண்ட காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 18 கி.மீ., மைலேஜ் தரும் இந்த மினிவேன் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் செல்லும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி ராஜேஷ் ஜேஜுரிக்கார் கூறியதாவது:

"இந்த மினிவேன் பாரத் ஸ்டேஜ்-3 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு பொருத்தமான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் போக்குவரத்தில் பெரிதும் பயன்படும். வாடகைக்கு இயக்குபவர்களுக்கு மேக்ஸீமோ பொருத்தமானதாக இருக்கும்.

நவீன தொழில்நுட்பம் கொண்ட பூஸ்டர் அசிஸ்ட் பிரேக்குகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். மேலும், இதன் கேபின் அதிக இடவசதி கொண்டதாக இருப்பதால், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம்

மேலும், இது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்பதால், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி்ச் செல்வதற்கும், இதர போக்குவரத்து உபயோகத்திற்கும் மிகுந்த பயனுள்ளாதக இருக்கும்," என்றார்.

Animation Ebook Collection

Animation Ebook Collection | 1.23GB

Acting for Animators
Facial.Modeling.and.Animation.Done.Right
Gary Faigin – The Artist’s Complete Guide To Facial Expression
Stop Staring -Jason Osipa
Sybex.Stop.Staring.Facial.Modeling.and.Animation.Done.Right.2nd.Edition.May.2007
The Animator’s Survival Kit – Richard Williams
The Artist’s Complete Guide To Facial Expression – Gary Faigin
advanced animation
Animation From Pencils to Pixels – Classical Techniques
Animation the mechanics of motion
AnimationMentor_HowToBecomeAnAnimator
Cartoon.Animation.by.Preston.Blair.Interactive.Book
Course.Technology.PTR.Thinking.Animation.Bridging.the.Gap.Between.2D.and.CG.iNTERNAL.Jun.2006.eBook-LinG
How to Make Animated Films – 2009 -enetlibrary.hostoi.com
The Animator_s Survival Kit – Richard Williams (English)
The Illusion of Life
TimingAnimation
TipsAndTricks_eBook
TipsAndTricksVolume2
Drawing – The.Human.Figure.in.Motion
Eadweard Muybridge – The Human Figure In Motion
Horses and Other Animals in Motion
Animation writing and development
Animating and Drawing-4-Legged Animals
Animation.Background.Layout
Don_Bluths_Art_of_Storyboarding
How To Draw Comics And Cartoons – Basic Drawing Tips Included
Simplified Drawing for Planning Animation
STANCHFIELD Walt – Gesture Drawing for Animation
StoryBoard2Camera
STORYBOARDS MOTION IN ART
The Art of the Storyboard
The_Art_of_Layout_and_Storyboarding
TimingAnimat
Animation Ebook Collection
Download from fileserve.com
http://www.fileserve.com/file/Jqke9N7/Animation-books.part01.rar
http://www.fileserve.com/file/PgBc7cM/Animation-books.part02.rar
http://www.fileserve.com/file/MbNEsKs/Animation-books.part03.rar
http://www.fileserve.com/file/rcWHpTK/Animation-books.part04.rar
http://www.fileserve.com/file/DKAc6tS/Animation-books.part05.rar
http://www.fileserve.com/file/ejuuU5b/Animation-books.part06.rar
http://www.fileserve.com/file/JxEfSmk/Animation-books.part07.rar
http://www.fileserve.com/file/xPuvWsN/Animation-books.part08.rar
http://www.fileserve.com/file/8afWKfE/Animation-books.part09.rar

Download from filesonic.com
http://www.filesonic.com/file/72498599/Animation-books.part01.rar
http://www.filesonic.com/file/72499695/Animation-books.part02.rar
http://www.filesonic.com/file/72497503/Animation-books.part03.rar
http://www.filesonic.com/file/72499477/Animation-books.part04.rar
http://www.filesonic.com/file/72500211/Animation-books.part05.rar
http://www.filesonic.com/file/72502429/Animation-books.part06.rar
http://www.filesonic.com/file/72500673/Animation-books.part07.rar
http://www.filesonic.com/file/72501591/Animation-books.part08.rar
http://www.filesonic.com/file/72497487/Animation-books.part09.rar

Read more: http://www.freedownloadpond.com/animation-ebook-collection/#ixzz1KorWcv6b

Adobe Photoshop Plug-in


1838 Adobe Photoshop Plug-in
Adobe Photoshop Plug-in | Support: Version CS up to CS5 | Size: 110 Mb

With a complete Image edit tool Adobe Photoshop all the work related to graphical is more convenience. However, beside original tool added in software these are all plug-in which increasing Photoshop strength and power.


Download from Hotfile
http://hotfile.com/dl/85687688/b905ac6/PS.1838Plug-in.rar.html

Download from FileServe (Mirror)
http://www.fileserve.com/file/6bBdGY4

Download from FileSonic(Mirror)
http://www.filesonic.com/file/36725503/PS.1838Plug-in.rar

Read more: http://www.freedownloadpond.com/adobe-photoshop-plug-in/#ixzz1Koorlmpr

Apress eBook Collection

Apress eBook Collection
English | 869 Ebooks | PDF, CHM | 9.33 GB
Apress, Inc. is a publisher of information technology books, based in New York City. Apress books, for the most part, are characterized by a uniform yellow and black design. Topics covered relate largely to programming issues, on both proprietary and open source platforms, although hardware hacking is also a theme.

Booklist:
A Complete Guide to PivotTables A Visual Approach.chm
A Programmer’s Guide to Jini Technology.chm
A Programmer’s Introduction to CSharp 2.0 3rd Edition.pdf
A Programmer’s Introduction to CSharp.pdf
A Programmer’s Introduction to PHP 4.0.pdf
A Tester’s Guide to .NET Programming.pdf
Accelerated CSharp 2005.pdf
Accelerated CSharp 2008.pdf
Accelerated CSharp 2010.pdf
Accelerated DOM Scripting with Ajax APIs and Libraries.pdf
Accelerated GWT.pdf
Accelerated Silverlight 2.pdf
Accelerated Silverlight 3.pdf
Accelerated SQL Server 2008.pdf
Accelerated VB 2005.pdf
Accelerated VB 2008.pdf
Active Directory Field Guide.pdf
ADO Examples and Best Practices.chm
Adobe Coldfusion Anthology.pdf
Advanced .NET Remoting 2nd Edition.pdf
Advanced BlackBerry Development.pdf
Advanced NXT The Davinci Inventions Book.pdf
Advanced SharePoint Services Solutions.pdf
Advanced Transact-SQL for SQL Server 2000.pdf
Agile Development with ICONIX Process People Process and Pragmatism.chm
Ajax and REST Recipes.pdf
Ajax Patterns and Best Practices.pdf
Android Essentials.pdf
Android for Work.pdf
Apache Jakarta-Tomcat.pdf
AppleScript 2nd Edition.pdf
Applied .NET Attributes.chm
Applied ADO.NET Building Data-Driven Solutions.chm
Applied ADO.NET Building Data-Driven Solutions.pdf
Applied Mathematics for Database Professionals.pdf
Architecting Web Services.chm
ASP.NET 1.1 Solutions Toolkit.pdf
ASP.NET 2.0 Revealed.chm
ASP.NET MVC Framework Preview.pdf
ASP.NET Web Development with Macromedia Dreamweaver MX 2004.chm
ASP.NET Web Development with Macromedia Dreamweaver MX 2004.pdf
ATL Server High Performance C++ on .NET.chm
AutoCAD 2004 VBA A Programmer’s Reference.chm
AutoCAD 2006 VBA A Programmer’s Reference.pdf
Automating Linux and Unix System Administration 2nd Edition.pdf
Beginning .NET Game Programming in VB.NET.pdf
Beginning Ajax with PHP.pdf
Beginning Android 2.pdf
Beginning Android.pdf
Beginning Apache Struts.pdf
Beginning Arduino.pdf
Beginning ASP.NET 2.0 Databases.pdf
Beginning ASP.NET 2.0 E-Commerce in CSharp 2005.pdf
Beginning ASP.NET 2.0 in CSharp.pdf
Beginning ASP.NET 2.0 in VB 2005.pdf
Beginning ASP.NET 3.5 in CSharp 2008 2nd Edition.pdf
Beginning ASP.NET 3.5 in VB 2008 2nd Edition.pdf
Beginning ASP.NET 4 in CSharp 2010.pdf
Beginning ASP.NET 4 in VB 2010.pdf
Beginning ASP.NET E-Commerce in CSharp.pdf
Beginning BlackBerry Development.pdf
Beginning Blender.pdf
Beginning C 4th Edition.pdf
Beginning CakePHP.pdf
Beginning CouchDB.pdf
Beginning CSharp 2005 Databases.pdf
Beginning CSharp 2008 2nd Edition.pdf
Beginning CSharp 2008 Databases.pdf
Beginning CSharp 2008 Objects.pdf
Beginning CSharp Objects.chm
Beginning CSS Web Development.pdf
Beginning Database Design.pdf
Beginning Database-Driven Application Development in Java EE.pdf
Beginning Databases with PostgreSQL 2nd Edition.pdf
Beginning DB2.pdf
Beginning Digital Image Processing.pdf
Beginning Django E-Commerce.pdf
Beginning DotNetNuke 4.0 Website Creation in CSharp 2005 with Visual Web Developer 2005 Express.pdf
Beginning DotNetNuke 4.0 Website Creation in VB 2005 with Visual Web Developer 2005 Express.pdf
Beginning Drupal 7.pdf
Beginning EJB 3 Application Development.pdf
Beginning Excel What-If Data Analysis Tools.pdf
Beginning Fedora.pdf
Beginning FSharp.pdf
Beginning Game Development with Python and Pygame.pdf
Beginning GIMP 2nd Edition.pdf
Beginning Google Blogger.pdf
Beginning Google Maps API 3.pdf
Beginning Google Maps Applications with PHP and Ajax.pdf
Beginning Google Maps Applications with Rails and Ajax.pdf
Beginning Google Sketchup for 3D Printing.pdf
Beginning Google Web Toolkit.pdf
Beginning Groovy and Grails.pdf
Beginning Hibernate 2nd Edition.pdf
Beginning HTML with CSS and XHTML.pdf
Beginning Information Cards and CardSpace.pdf
Beginning iPad Development for iPhone Developers.pdf
Beginning iPhone 3 Development.pdf
Beginning iPhone and iPad Web Apps.pdf
Beginning iPhone Development.pdf
Beginning iPhone Games Development.pdf
Beginning J2EE 1.4.pdf
Beginning J2ME 3rd Edition.pdf
Beginning Java and Flex.pdf
Beginning Java EE 5.pdf
Beginning Java EE 6 Platform with GlassFish 3 2nd Edition.pdf
Beginning Java Google App Engine.pdf
Beginning Java ME Platform.pdf
Beginning Java Objects 2nd Edition.pdf
Beginning Java SE 6 Platform.pdf
Beginning JavaFX Platform.pdf
Beginning javascript with DOM Scripting and Ajax.pdf
Beginning JBoss Seam.pdf
Beginning Joomla! 2nd Edition.pdf
Beginning JSF 2 APIs and JBoss Seam.pdf
Beginning JSP 2.chm
Beginning JSP JSF and Tomcat Web Development.pdf
Beginning Lua with World of Warcraft Add-ons.pdf
Beginning Mac OS X Snow Leopard Server.pdf
Beginning Microsoft Excel 2010.pdf
Beginning Microsoft Office 2010.pdf
Beginning Microsoft Office Live.pdf
Beginning Microsoft Word 2010.pdf
Beginning Microsoft Word Business Documents.pdf
Beginning Nokia Apps Development.pdf
Beginning Object Oriented ASP.NET 2.0 with VB.NET.pdf
Beginning Object-Oriented Programming with VB 2005.pdf
Beginning Office 2011 for Mac OS X.pdf
Beginning OpenOffice 3.pdf
Beginning Oracle Database 11g Administration.pdf
Beginning Oracle SQL.pdf
Beginning Perl 3rd Edition.pdf
Beginning Perl Web Development.pdf
Beginning PHP and MySQL 4th Edition.pdf
Beginning PHP and MySQL E-Commerce 2nd Edition.pdf
Beginning PHP and Oracle.pdf
Beginning PHP and PostgreSQL 8.pdf
Beginning PHP and PostgreSQL E-Commerce.pdf
Beginning PivotTables in Excel 2007.pdf
Beginning PLSQL.pdf
Beginning POJOs.pdf
Beginning Portable Shell Scripting.pdf
Beginning Python 2nd Edition.pdf
Beginning Python Visualization.pdf
Beginning Rails 3.pdf
Beginning Rails.pdf
Beginning REALbasic.pdf
Beginning Relational Data Modeling 2nd Edition.chm
Beginning Ruby 2nd Edition.pdf
Beginning Ruby on Rails E-Commerce.pdf
Beginning Scala.pdf
Beginning SharePoint with Excel.pdf
Beginning Silverlight 2.pdf
Beginning Silverlight 3.pdf
Beginning Silverlight 4 in CSharp.pdf
Beginning Smartphone Web Development.pdf
Beginning Spatial with SQL Server 2008.pdf
Beginning Spring 2.pdf
Beginning SQL Queries.pdf
Beginning SQL Server 2005 Express Database Applications with Visual Basic Express and Visual Web Developer Express.pdf
Beginning SQL Server 2005 Express for Developers.pdf
Beginning SQL Server 2005 for Developers.pdf
Beginning SQL Server 2008 for Developers.pdf
Beginning SQL Server Modeling.pdf
Beginning SUSE Linux 2nd Edition.pdf
Beginning T-SQL 2008.pdf
Beginning the Linux Command Line.pdf
Beginning Ubuntu Linux 5th Edition.pdf
Beginning Ubuntu LTS Server Administration 2nd Edition.pdf
Beginning VB .NET 1.1 Databases.pdf
Beginning VB 2005 Databases.pdf
Beginning VB 2008 Databases.pdf
Beginning VB 2008.pdf
Beginning Visual Basic 2005 Express Edition.pdf
Beginning Visual CSharp 2005 Express Edition.pdf
Beginning Visual Web Developer 2005 Express.pdf
Beginning Visual Web Programming in VB .NET.pdf
Beginning Web Development Silverlight and ASP.NET AJAX.pdf
Beginning WF Windows Workflow in .NET 4.0.pdf
Beginning Windows Phone 7 Development.pdf
Beginning ***** 3.pdf
Beginning XML with CSharp 2008.pdf
Beginning XML with DOM and Ajax.pdf
Beginning XNA 2.0 Game Programming.pdf
Beginning XNA 3.0 Game Programming.pdf
Beginning XSLT 2.0.pdf
Beginning Zend Framework.pdf
Best Kept Secrets in .NET.chm
BizTalk 2006 Recipes.pdf
BizTalk 2010 Recipes.pdf
BlackBerry Bold Made Simple.pdf
BlackBerry Curve Made Simple.pdf
BlackBerry for Work.pdf
BlackBerry Storm 2 Made Simple.pdf
Bluetooth for Java.pdf
Bug Patterns in Java.chm
Build Your Own .NET Language and Compiler.chm
Build Your Own CNC Machine.pdf
Building a Data Warehouse.pdf
Building an ASP.NET Intranet.chm
Building ASP.NET Server Controls.chm
Building Client Server Applications with VB.NET An Example-Driven Approach.chm
Building Database Driven Flash Applications.chm
Building Flickr Applications with PHP.pdf
Building iPhone OS Accessories.pdf
Building Online Communities with Drupal phpBB and *****.pdf
Building Portals with the Java Portlet API.pdf
Building Spring 2 Enterprise Applications.pdf
Building the SharePoint User Experience.pdf
Building XNA 2.0 Games.pdf

And much more…
Download Links :


http://www.filesonic.com/file/137026191/eb3Apress.books.part01.rar
http://www.filesonic.com/file/137021111/eb3Apress.books.part02.rar
http://www.filesonic.com/file/137023081/eb3Apress.books.part03.rar
http://www.filesonic.com/file/137020371/eb3Apress.books.part04.rar
http://www.filesonic.com/file/137019781/eb3Apress.books.part05.rar
http://www.filesonic.com/file/137021051/eb3Apress.books.part06.rar
http://www.filesonic.com/file/137027681/eb3Apress.books.part07.rar
http://www.filesonic.com/file/137106671/eb3Apress.books.part08.rar
http://www.filesonic.com/file/137026111/eb3Apress.books.part09.rar
http://www.filesonic.com/file/137025351/eb3Apress.books.part10.rar
http://www.filesonic.com/file/137020361/eb3Apress.books.part11.rar
http://www.filesonic.com/file/137026881/eb3Apress.books.part12.rar
http://www.filesonic.com/file/137026401/eb3Apress.books.part13.rar
http://www.filesonic.com/file/137026891/eb3Apress.books.part14.rar
http://www.filesonic.com/file/137027271/eb3Apress.books.part15.rar
http://www.filesonic.com/file/137021651/eb3Apress.books.part16.rar
http://www.filesonic.com/file/137026141/eb3Apress.books.part17.rar
http://www.filesonic.com/file/137027131/eb3Apress.books.part18.rar
http://www.filesonic.com/file/137025831/eb3Apress.books.part19.rar
http://www.filesonic.com/file/137065391/eb3Apress.books.part20.rar
http://www.filesonic.com/file/137026521/eb3Apress.books.part21.rar
http://www.filesonic.com/file/137027121/eb3Apress.books.part22.rar
http://www.filesonic.com/file/137025851/eb3Apress.books.part23.rar
http://www.filesonic.com/file/137019801/eb3Apress.books.part24.rar
http://www.filesonic.com/file/137028791/eb3Apress.books.part25.rar
http://www.filesonic.com/file/137020431/eb3Apress.books.part26.rar
http://www.filesonic.com/file/137020031/eb3Apress.books.part27.rar
http://www.filesonic.com/file/137027371/eb3Apress.books.part28.rar
http://www.filesonic.com/file/137022801/eb3Apress.books.part29.rar
http://www.filesonic.com/file/137022531/eb3Apress.books.part30.rar
http://www.filesonic.com/file/137028611/eb3Apress.books.part31.rar
http://www.filesonic.com/file/137029821/eb3Apress.books.part32.rar
http://www.filesonic.com/file/137019831/eb3Apress.books.part33.rar
http://www.filesonic.com/file/137023431/eb3Apress.books.part34.rar
http://www.filesonic.com/file/137025771/eb3Apress.books.part35.rar
http://www.filesonic.com/file/137026411/eb3Apress.books.part36.rar
http://www.filesonic.com/file/137026341/eb3Apress.books.part37.rar
http://www.filesonic.com/file/137026471/eb3Apress.books.part38.rar
http://www.filesonic.com/file/137011531/eb3Apress.books.part39.rar
or

http://shareflare.net/download/17158.1bd83dd012fa2dc93080d134a0fa/eb3Apress.books.part01.rar.html

http://shareflare.net/download/12213.15a38e5035ecd34a62f07b9315d5/eb3Apress.books.part02.rar.html

http://shareflare.net/download/31068.391147b6eb37e054d7d6db85a871/eb3Apress.books.part03.rar.html

http://shareflare.net/download/22080.202a6d72891dbdc971405140b3c4/eb3Apress.books.part04.rar.html

http://shareflare.net/download/93611.92993d87b47507266e661e020f05/eb3Apress.books.part05.rar.html

http://shareflare.net/download/43554.43b50e0ac1cb58a040d75af05e28/eb3Apress.books.part06.rar.html

http://shareflare.net/download/04665.010839ac461628e3fc72cfa6d5b3/eb3Apress.books.part07.rar.html

http://shareflare.net/download/27496.2491b3367dc2afc570c217c39517/eb3Apress.books.part08.rar.html

http://shareflare.net/download/35617.3252d8c278ee53ba76e7c2902a2d/eb3Apress.books.part09.rar.html

http://shareflare.net/download/75024.74b244057679a58eaaec9427ee7d/eb3Apress.books.part10.rar.html

http://shareflare.net/download/08584.08c6ee3f6710e2c31190b2d5b7e6/eb3Apress.books.part11.rar.html

http://shareflare.net/download/15920.1a64d263f9981609ae89cd23f965/eb3Apress.books.part12.rar.html

http://shareflare.net/download/46613.4206b4cf5ef433f1e0cb5c1a1876/eb3Apress.books.part13.rar.html

http://shareflare.net/download/02400.056ba6c72154bd808abaca52dd7d/eb3Apress.books.part14.rar.html

http://shareflare.net/download/23001.2ee964eaedee50a9560886614be7/eb3Apress.books.part15.rar.html

http://shareflare.net/download/72289.7d87763f487c300a96830be5fc76/eb3Apress.books.part16.rar.html

http://shareflare.net/download/99302.9a0ec5d473d02da0d12e44096fbb/eb3Apress.books.part17.rar.html

http://shareflare.net/download/81670.8fdc812146da7b0ece9ec8844591/eb3Apress.books.part18.rar.html

http://shareflare.net/download/76780.71b233d3028f499953b2fae551e5/eb3Apress.books.part19.rar.html

http://shareflare.net/download/70716.7bbd45205bf457678c3eaba9e4de/eb3Apress.books.part20.rar.html

http://shareflare.net/download/85289.8fa59413e50179941982fa9de770/eb3Apress.books.part21.rar.html

http://shareflare.net/download/45102.416ca2a609803d8dcf0dc6ef0cb0/eb3Apress.books.part22.rar.html

http://shareflare.net/download/02035.039914a5437af6ca250f03945637/eb3Apress.books.part23.rar.html

http://shareflare.net/download/46120.47b6998bee45dc8f21041d913e67/eb3Apress.books.part24.rar.html

http://shareflare.net/download/15713.1efc58f279e3dc66da83b5e18028/eb3Apress.books.part25.rar.html

http://shareflare.net/download/12254.10fe95a8eeef438344dfcb7d807f/eb3Apress.books.part26.rar.html

http://shareflare.net/download/95625.9bbdb2052e38b76bcab1c8343444/eb3Apress.books.part27.rar.html

http://shareflare.net/download/26522.2f69682881497de083538d8d056a/eb3Apress.books.part28.rar.html

http://shareflare.net/download/52722.5cf8e87bc4e3ba7dc0e7e835d380/eb3Apress.books.part29.rar.html

http://shareflare.net/download/11437.14ecc0c1e68fa6c4395abcd4f662/eb3Apress.books.part30.rar.html

http://shareflare.net/download/41715.4858c9155d4c34e6017b43416147/eb3Apress.books.part31.rar.html

http://shareflare.net/download/34934.39343ac7590c9af0a07b9b832f3a/eb3Apress.books.part32.rar.html

http://shareflare.net/download/45670.4ae7daeaddb0e8efa410e4064afa/eb3Apress.books.part33.rar.html

http://shareflare.net/download/66411.63a60c984792ce74916fca007dbc/eb3Apress.books.part34.rar.html

http://shareflare.net/download/75117.7af63f6baf21ad775c0371a254fd/eb3Apress.books.part35.rar.html

http://shareflare.net/download/77359.796bcc5840710cac3073d342f4b0/eb3Apress.books.part36.rar.html

http://shareflare.net/download/38093.33a852e76bc94563f9b57cc1590c/eb3Apress.books.part37.rar.html

http://shareflare.net/download/06177.02cd7a16e4e69df9ef897ecc207e/eb3Apress.books.part38.rar.html

http://shareflare.net/download/29691.207e9a486c1f8ffc2d091b738a7d/eb3Apress.books.part39.rar.html

Read more: http://www.freedownloadpond.com/apress-ebook-collection/#ixzz1KonsoMaR

Wednesday, April 20, 2011

தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்



மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிசுன் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். இன்று அதிகாலை 6.45 மணிக்கு கள்ளழகர் தங்க குதிரையில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.

மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இவ்விழா உலக புகழ் பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளாக வருவது உண்டு. கடந்த 7ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. 14ஆம் தேதி மீனாட்சிக்கு பட்டாபிஷேக மும், 15ஆம் தேதி திக் விஜயமும், நேற்று முன்தினம் (16-ந்தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாக்களில் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படுவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இதற்கான விழா அழகர் கோவிலில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று மாலை சுவாமி கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் சென்றார்.

பின்னர் 16ஆம் தேதியன்று அதிர்வேட்டு முழங்க, மேளதாளத்துடன் அழகர், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அன்று மாலை திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொண்டப்பநாயக்கன் மண்டபம், பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி ஆகிய மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடச்சனேந்தல் வந்தார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு மூன்று மாவடிக்கு காலை 6.30 மணிக்கு வந்தார். அங்கு கள்ளழகருக்கு எதிர் சேவை நடந்தது.

அங்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு அவரை வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், மாரியம்மன் கோவில், ஆயுதப்படை குடியிருப்பு, மாரியம்மன் கோவில், அம்பலக்கார மண்டபம் வந்தடைந்தார். அதன்பிறகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனது.

பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கருப்பணசாமி திருக்கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி, ரூ.1 1/2 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். காலை சரியாக 6.46 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி நின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தீபாராதனை காட்டி கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டனர்.

பின்னர் அங்கிருந்து ராம ராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அங்கபிரதட்சண நிகழ்ச்சி நடந்த பின் இரவு 1 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். நாளை (ஏப்.19) காலை 5 மணிக்கு வண்டியூரில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். காலை 10 மணிக்கு மண்டூக முனி வருக்கு சாபம் தீர்த்து காட்சி யளிக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அனுமார் கோவிலுக்கு வருகிறார். 3 மணிக்கு அங்கப் பிரதட்சணம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் ராமராய மண்டபத்திற்கு கள்ளழகர் வருகிறார். அங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

20ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். மறுநாள் 21ஆம் தேதி பூப்பல்லக்கில் புறப்பட்டு மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபத்தில் எழுந் தருளுகிறார். 22ஆம் தேதி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர்கோவிலுக்கு சென்றடைகிறார். 23ஆம் தேதி சுவாமிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழகத்தின் மக்கள் தொகை அறிக்கை வெளியீடு

சென்னை: 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்து 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆகியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நேற்று (ஏப்.1) சென்னையில் வெளியிட்டார்.

அதன் விவரம் பின் வருமாறு;

இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. இதில் 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 ஆண்களும், 58 கோடியே 64 லட்சத்து 69 லட்சத்து 174 பெண்களும் அடக்கம். தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்களும் அடக்கம்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை குறைவு

இந்திய மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழக மக்கள் தொகை. இதியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 97 லட்சம் அதிகரித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் இருந்தனர். ஆனால் 2011ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் உள்ளனர்.

2001ம் ஆண்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 குழந்தைகள் தான் இருக்கின்றனர். அதாவது 11.59 சதவீதத்தில் இருந்து 9.56 சதவீதமாக குறைந்துள்ளது.

எழுத்தறிவு விகிதம் அதிகரிசுப்பு

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குழந்தைகளின் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதில் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 ஆண் குழந்தைகளும், 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கின்றனர். இது கடந்த 2001-ல் 480 பேராக இருந்தது.

தமிழ் நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.45 சதவீதத்தில் இருந்து 80.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் 86.81 சதவீதம் ஆண்களும், 73.86 சதவீதம் பெண்களும் எழுத்தறிவுள்ளவர்கள்.

குறைந்த மக்கள் தொகை கொண்ட நீலகிரி

மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644-க குறைந்துள்ளது. இதில் 31 ஆயிரத்து 99 ஆண் குழந்தைகளும், 30 ஆயிரத்து 545 பெண் குழந்தைகளும் அடக்கம்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களின் மக்கள் தொகை விவரம்:

மாவட்டம்-2001-ல் மக்கள் தொகை-2011-ல் மக்கள் தொகை

1.திருவள்ளூர்-27,54,756- 37,25,697

2.சென்னை-43,43,645- 44,81,087

3.காஞ்சிபுரம்-28,77,468- 39,90,897

4.வேலூர்-34,77,317- 39,28,106

5.தர்மபுரி-12,95,182- 15,02,900

6.கிருஷ்ணகிரி-15,61,118- 18,83,731

7.திருவண்ணாமலை-21,86,125- 24,68,965

8.விழுப்புரம்-29,60,373- 34,63,284

9.சேலம்-30,16,346- 34,80,008

10.நாமக்கல்-14,93,462- 17,21,179

11.ஈரோடு-20,16,582- 22,59,608

12.நீலகிரி-7,62,141- 7,35,071

13.கோவை-29,16,620- 34,72,578

14.திருப்பூர்-19,20,154- 24,71,222

15.திண்டுக்கல்-19,23,014- 21,61,367

16.கரூர்-9,35,686- 10,76,588

17.திருச்சி-24,18,366- 27,13,858

18.பெரம்பலூர்-4,93,646- 5,64,511

19.அரியலூர்-6,95,524- 7,52,481

20.கடலூர்-22,85,395- 26,00,880

21.நாகப்பட்டினம்-14,88,839- 16,14,069

22.திருவாரூர்-11,69,474- 12,68,094

23.தஞ்சாவூர்-22,16,138- 24,02,781

24.புதுக்கோட்டை-14,59,601- 16,18,725

25.சிவகங்கை-11,55,356- 13,41,250

26.மதுரை-25,78,201- 30,41,038

27.தேனி-10,93,950- 12,43,684

28.விருதுநகர்-17,51,301- 19,43,309

29.ராமநாதபுரம்-11,87,604- 13,37,560

30.தூத்துக்குடி-15,92,769- 17,38,376

31.திருநெல்வேலி-27,03,492- 30,72,880

32.கன்னியாகுமரி-16,76,034- 18,63,174.

3 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக பறந்தது பிஎஸ்எல்வி-சி-16 ராக்கெட்




ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ்.எல்.வி., ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சீறப்பாய்ந்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி செயற்கோள்கள் அதன் இலக்கை அடைந்தது. செயற்கோள்கள் சரியான சுற்றுப்பாதையில் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி -சி16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையை கக்கிக் கொண்டு அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சுமார் 10 நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-16 ராக் கெட்டின் 3 பாகங்களும் திட்டமிட்டபடி பிரிந்தன.

முந்தைய ராக்கெட்டுகளை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக , "இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இதற்கான, ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.

இந்தியாவில் உள்ள இயற்கை வளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் அளவு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக ஆய்வு செய்ய ரிசோர்ஷ் சாட்-2 என்ற செயற்கை கோளை தயாரித்தனர். இந்த செயற்கை கோளை விண்ணில் ஏவும் பணி தொடங்கியது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி-16 என்ற நவீன ராக்கெட் உருவாக்கப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ரிசோர்ஷ் சாட் செயற்கை கோளுடன் மேலும் 2 செயற்கை கோள்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 செயற்கைக் கோள்களும் திட்டமிட்டப்படி அவற்றின் சுற்றுப் பாதைகளில் விடப்பட்டன. 3 செயற்கைக் கோள்களும் தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

ரிசோர்ஷ் சாட்-2 செயற்கை கோள் இந்தியா தயாரிப்பாகும். இது மொத்தம் 1206 கிலோ எடைக் கொண்டது. இந்தியாவின் 18-வது செயற்கை கோளான இது சூரிய சக்தி மூலம் தானாக இயங்கும். ரிசோர்ஷ் சாட் செயற்கைக் கோளின் 3 நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கோமிராக்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

மற்றொரு செயற்கை கோளான யூத் சாட் செயற்கை இந்தியா-ரஷியாவின் கூட்டு தயாரிப்பாகும். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள மாணவர்கள் இந்த செயற்கை கோளை உருவாக் கினார்கள். 92 கிலோ எடை உள்ள இந்த செயற்கை கோள் மூலம் சூரிய கதிர் வேறுபாடுக்கும், காற்று மண்டல உயர்தட்டு பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். 3-வது செயற்கைக்கோள் எக்ஸ் சாட் எனப்படும். இந்த செயற்கை 106 கிலோ எடை கொண்டது.

இது சிங்கப்பூர் நாட்டின் முதல் செயற்கை கோளாகும். இந்த செயற்கை கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி படம் பிடிப்பதற்கு உதவும் பணியை செய்ய உள்ளது. (டிஎன்எஸ்)

Saturday, April 16, 2011

வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்

நான் படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்ற ஆவல் மிகுதியால் இதனை பதிவு செய்தேன் .
படித்து முடிந்ததும் இன்ட்லி யிலோ அல்லது தமிழ் 10 இல்லோ
வாக்களிக்க மறக்காதீர்கள் . ஏனெனில் மற்றவர்களுக்கும் உதவும்
என்பதால் .








1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.
அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை
வரிசைப்படுத்து.
சிறப்பான வழிகளை தேர்வு செய்.
வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
தினமும் எப்படி செய்வதென எழுது..
தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய்,
வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப்
பயிற்சியில் ஈடுபடு. .
2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்
டுதலை வழங்கி வெற்றி பெறு..


3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது
தன்னம்பிக்கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து
அதில் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு...

6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு..

7. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு..

8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து
செயற்படு..

9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு..


10. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும்
சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து
செயற்படுபவனே வெற்றியாளன்.

11. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

12. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும்
இல்லை..

13. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும்
அஞ்சாமல் முன்னேறு...

14. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு,
மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே...

15. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை
மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி
அடைகிறார்கள்...

16. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட
வேண்டுமென எண்ணிச் செயற்படு...

17. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி
ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான
நிர்வாகத்திறன் வேண்டும்.

18. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத்
தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும்
வெற்றி கிடைக்கும்.

19. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை
தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை
ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க
முயல வேண்டும்.

20. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி
தானாகத் தேடி வரும்.

21. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற
சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.

22. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ
அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

23. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.

24. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல
நிஜம்.

25. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.

26. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக்
கற்றுக்கொள்.

27. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடைய
மாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி
மேடையில் அமர வைப்பர்.

28. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்.
உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை
எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது
நிச்சயம்.



29. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து
கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம்
சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு
நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.

30. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 வீதமான
அறிவு போதமானது. 65 வீதம் மற்றவர்களோடு எப்படி பழக
வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

31. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. என்றபடி மற்றவருடன்
பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே
விமர்சனங்களை வையுங்கள்.


32. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக
வேண்டும் என்பதை உணருங்கள்

நண்பர்களே
சிந்தியுங்கள் செயற்படுங்கள் வெற்றிபெறுங்கள்

Friday, April 15, 2011

இலவசத் திட்டங்களை நிறைவேற்ற ரூ. 1,20,000 கோடி தேவை?

சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகியவை மாறி மாறி அறிவித்துள்ள இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைபப்டும் எனத் தெரிகிறது.


முன்பெல்லாம் சாதனைகளைச் சொல்லி மட்டுமே வாக்கு கேட்பார்கள். இப்போது காலம் மாறிப் போய் விட்டது. மகாத்மா காந்தியே வந்து வாக்கு கேட்டாலும் கூட ஏதாவது சோப்பு, சீப்பை இலவசமாக தருவதாக சொன்னால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அவல நிலை.

வழக்கம் போல வருகிற சட்டசபைத் தேர்தலிலும் இலவச அறிவிப்புகள் பொங்கிப் பெருகி ஓடிக் கொண்டுள்ளன. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான இலவசங்களை அறிவித்துள்ளன. பாஜகவும் அறிவித்துள்ளது. ஏன், ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளார். அட, நம்ம மன்சூர் அலிகான் கூட இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுக, அதிமுக அறிவித்துள்ள இலவசங்களில் முக்கியமானவை மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவைதான். இது போக மிக முக்கியமானது இலவச லேப்டாப். மற்றும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் 20 கிலோ இலவச அரிசி தரப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதேபோல குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடாக கட்ட தற்போது வழங்கப்படும் ரூ. 75,000 நிதிக்குப் பதில் ரூ. 1.80 லட்சம் தருவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இப்படி அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்களைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் இவற்றையெல்லாம் சொன்னபடி நிறைவேற்ற அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தெரிகிறது.

- ரேசன் கார்டு வைத்துள்ள 1 கோடியே 90 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி கொடுத்தால் ஆண்டுக்கு கூடுதலாக 360 கோடி ரூபாய் செலவாகும்.

- மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இலவசமாக கொடுக்க ரூ. 3742 கோடி தேவைப்படும்.

- மிக்சி அல்லது கிரைண்டர் மட்டும் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும். இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால்

- மிக்சி அல்லது கிரைண்டர் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டால் ரூ. 1720 கோடி தேவைப்படும்.

- மின்விசிறி வழங்க மட்டும் ரூ. 500 கோடி செலவாகும்.

- 3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு திமுக அரசு ரூ. 2250 கோடி செலவழிக்கிறது.

- அதிமுக சொன்னபடி ரூ. 1.8 லட்சமாக தருவதாக இருந்தால் கூடுதலாக ரூ. 705 கோடி செலவாகும்.

- தமிழகத்தில் பிளஸ்டூ படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 12 லட்சம். கல்லூரிகளில் படிப்போரின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம். அதாவது சுமாராக 20 லட்சம். இவர்களுக்கு இலவசமாக லேப்டாப் தருவதாக இருந்தால் உத்தேசமாக ரூ. 1000 கோடி செலவாகும்.

மொத்தத்தில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொட்டினால்தான் இலவசத் திட்டகங்களை சொன்னபடி கொடுக்க முடியும்.

ரத்தன் டாடா பதவிக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! - குழு அறிவிப்பு


மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸின் வெற்றிகரமான தலைவராக உள்ளார் ரத்தன் டாடா.

71 பில்லியன் டாலர் வர்த்தக சாம்ராஜ்யமாக இன்று டாடா வளர்ந்திருப்பதற்கு ரத்தன் டாடாதான் முக்கிய காரணம். இன்னும் இரு ஆண்டுகளில் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். தனது 75 வயதில் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அறிவித்திருந்தார். எனவே தனது இடத்துக்கு பொருத்தமான நபரைக் கண்டுபிடிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் டாடா.

5 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு நபர்களிடம் நேர்காணல் நடத்திப் பார்த்தது. ஆனால் அவர்களால் டாடாவுக்கு மாற்றாக யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள குழுவின் உறுப்பினரும் டாடா சன்ஸின் இயக்குநருமான ஆர் கே கிருஷ்ணகுமார், "டாடாவின் இடத்தில் வேறொருவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவருக்கு நிகரான ஒரு தலைவரை எங்களால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை.

ரத்தன் டாடா பிறவியிலேயே ஒரு தலைவருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் பிறந்தவர். சிறந்த ஆராய்ச்சியாளர். இதனை அவர் எந்த விஷயத்தைச் செய்யும் போதும் கவனித்தால் புரியும். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் அவரது பங்களிப்பு மகத்தானது. நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்ய முயன்று வருகிறோம். ஆனால் மிக சவாலான காரியம் இது. எந்த அளவு வெற்றி கிட்டும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியுள்ளது," என்று கூறியுள்ளார்.

உலகின் குறைந்த விலைக் காரான டாடா நானோவை உருவாக்கி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ரத்தன் டாடாவுக்கே உண்டு. டச்சு ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கி டாடா ஸ்டீலுடன் இணைத்த பெருமையும் டாடாவுக்கே. அதேபோல இவரது காலத்தில்தான் பிரிட்டனின் பெருமைக்குரிய ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது.

ஆனால் டாடாவின் இத்தனை பெருமையும் ஒரு விஷயத்தில் சற்றே அடிவாங்கிவிட்டது என்பதும் உண்மையே. அது நீரா ராடியாவால் வந்த வம்பு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் விஷயத்தில் பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் அவர் சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.

Happy Tamil New Year

இணைய நண்பர்களுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கர ஆண்டினை கரம் குவித்து
கரகோஷத்தோடு வரவேற்போம்

Tuesday, April 12, 2011

10 things to know about Anna Hazare and Lok Pal Bill

*1. Who is Anna Hazare?*
An ex-army man. Fought 1965 Indo-Pak War
*2. What's so special about him?*
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra
*3. So what?*
This village is a self-sustained model village. Energy is produced in the
village itself from solar power, biofuel and wind mills.
In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest
village in India. It has become a model for self-sustained, eco-friendly &
harmonic village.
*4. Ok,...?*
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for
his social activities.
*5. Really, what is he fighting for?*
He is supporting a cause, the amendment of a law to curb corruption in
India.
*6. How that can be possible?*
He is advocating for a Bil, The Lok Pal Bill (The Citizen Ombudsman Bill),
that will form an autonomous authority who will make politicians
(ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.
*7. It's an entirely new thing right..?*
In 1977, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan.
Since then it has been neglected by the politicians and some are trying to
change the bill to suit thier theft (corruption).

*8. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a
Bill ! How can that be possible in such a short span of time?*
The first thing he is asking for is: the government should come forward and
announce that the bill is going to be passed.
Next, they make a joint committee to DRAFT the LOK PAL BILL. 50% goverment
participation and 50% public participation. Because you cant trust the
government entirely for making such a bill which does not suit them.
*9. Fine, What will happen when this bill is passed?*
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge,
say like the Election Commission of India. In each and every state,
Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial
in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be
punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been
going for last 25 years without any result.
*10. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?*
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI
activist Arvind Kejriwal and many more.
* Ok, got it. What we can do?*

o At least we can spread the message. How?

o *Putting status message, links, video, changing profile pics.*

o Give a missed call to 022-61550789 (it will disconnect by itself after 1
or 2 call) by doing this your mobile number will be registered in that
number and you will receive

§ SMS from Sri Anna Hazare what next can be done.

o At least we can support Anna Hazare and the cause for uprooting
corruption from India.

o At least we can hope that his Hunger Strike does not go in vain.

o At least we can pray for his good health.

o Kindly forward it to as many people as you can to create an awareness

*Unite India against Corruption*



Thursday, April 7, 2011

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்-ஐந்தாம்படை வீடு திருத்தணிகை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப் பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி.


தல வரலாறு:

தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து, முருகன் கோபம் தணிந்து அமர்ந்த தலம் என்கின்றன புராணங்கள். இதனால் இத்தலம் அமைந்த இடம் தணிகை எனப் பெயர் பெற்றுள்ளது.

தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்றும் ஒரு பொருள் உள்ளது. "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அவர்களுக்கு அருள் புரியும் தலம்தான் திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு இன்னொரு பொருள் சொல்லப்படுகிறது.

மலையின் சிறப்புகள் :

திருத்தணியில் முருகப் பெருமான் மலை மீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன.

வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன. மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.

"குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

விழாக்கள்:

- இந்தக் கோயிலில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, மாசிக் கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். .

- வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

- சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்த சஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

சிறப்புக்கள்:

- இந்தத் தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றிப் பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியது தெரிகிறது.

- சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

எப்படி செல்வது:

திருத்தணிகை நகருக்கு சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற முக்கிய நகரங்கள் அனைத்திலிருந்தும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான முதல் அடி - அண்ணா ஹசாரே









கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 வயது அண்ணா ஹசாரே தில்லியில் இன்று 3 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.


யார் இந்த அண்ணா ஹசாரே?
மகாராஷ்டிரத்தில் ஜூன் 15, 1938ல் பிறந்த கிசான் பாபு அசாரே (எ) அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர். இவர் சமூக சேவையை பாராட்டி இந்தியா பத்மபூசன் விருதை 1992 ல் இவருக்கு வழங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டவரைவினை விட வலுவானதாக உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றகோரி இவருடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். நாடு முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஊழலுக்கெதிரான இந்தியா:
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.



இந்த சட்ட வரையறை மூலம்,
1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
3. ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
4. இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
5. சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
6. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

ஒரு தனி மனிதனாக இருந்து மாபெரும் சமூக போராட்டத்தை தூண்டியிருக்கும் அண்ணா ஹசாரேவிற்கு தோள் கொடுப்போம். நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் புற்றுநோயை களைய சரியான சமயம் இதை விட்டால் வேறு கிடைக்காது.

உலககோப்பை வெற்றிக்காக தெருவிற்கு வந்து கொண்டாடும் நாம், ஏன் இது போன்ற நல்லவிஷயத்துக்காக வீதியில் இறங்ககூடாது.

குறைந்தபட்சம் பதிவுகள் மூலமாகவாவது நம் ஆதரவை தெரிவிக்கலாமே.....

facebook மூலம் ஆதரவு தர இங்கே சொடுக்குங்கள்

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரிப்பவர்கள்

இந்தியா முழுதும் வெடித்தது புதிய புரட்சி !!!


இந்தியா உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு. 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் பூமி. ஆனால் உலகிலயே பெரும் கோடிஸ்வரனும் உலகிலேயே பிச்சைக்காரனும் பக்கத்துத் தெருவில் வசிக்கும் நிலைமை இந்த நாட்டில் தான். எதையும் சகித்துப் பொறுத்து வாழப் பழகிய நமக்கு எதிர்த்துப் பேசவும், போராடவும் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டார்கள். பெண்டாட்டியைத் தவிர நம்மில் பலருக்கு எதையும் அடித்துப் பழக்கம் இல்லை. சிலருக்கோ அந்தப் பாக்கியமும் இல்லை. இந்த தேசம் எப்படி எல்லாம் சீரழிந்து இருக்கின்றது. இதற்கு யார் காரணம் ??? அரசியல்வாதிகளா, சினிமாக் காரர்களா, குண்டர்களா ??? நிச்சயம் இல்லை இதற்கு காரணமே நம் இயலாமைத் தனம் தான். வெறும் வாய்ப் பேச்சில் வீரம் பேசும் இந்திய ஆண்களுக்கு மனதில் வீரம் இல்லை. ஆண்மை நிரூபிக்க பெண்களிடம் தான் செல்கின்றோமே தவிர வேறு ஒன்றையும் வெட்டிப் பிடுங்கியது இல்லை.

இதோ இன்று இப்போது இந்த நாட்டில் பலர் இந்த நாட்டை பிடித்து இருக்கும் லஞ்சம், ஊழல் என்னும் பீடையை அகற்ற போராடத் தொடங்கிவிட்டனர். இதோ நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் இத்தருணம் எண்ணற்ற இளைஞர்களும், குடும்பத்தார்களும், முதியோர்களும் ஆங்காங்கே ஊழலற்ற இந்தியாவை நிர்மாணிக்க எதோ ஒரு வகையில் போராட ஆரம்பித்து விட்டனர்.

‘India against corruption’ (IAC) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக எண்ணற்ற மக்களும் உண்ணாவிரதம், போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஊழலை அகற்றக் கூடிய ஜன் லோக்பால் மசோதாவை உடனடியா நிறைவேற்றும் படி ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாநோன்பில் இறங்கியுள்ளார்.

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், கர்நாடாக லோகயுக்தா நிறுவனரும் ஆனா பிரசாந்த பூஷண், கிரண் பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், ஐஏஎஸ் அதிகாரி நிராஜ் பிரபு ஆகியோர் இணைந்து இதனை நிறைவேற்ற முயற்சி எடுத்தும் மத்திய அரசு இவற்றை நிறைவேற்ற கள்ள மௌனம் சாதித்து வருகின்றது.

லோக்பால் மசோதா கடந்த 1964 முதல் பாராளமன்றத்தில் நிறைவேற்ற கொண்டு வந்தும் நம் நாட்டின் அரசியல்வாதிகளின் மெத்தனத்தால் இவை இன்று வரை நிறைவேறாமல் இருக்கின்றது. இந்த மசோதா நிறைவேறினால் நிச்சயம் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் மீது மக்களே நேரடியாக பல நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கும் என்பது ஈங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போராட்டத்தை முடக்கவும், இந்த மசோதாவை இல்லாமல் செய்யவும் ஆளும் அரசுகள் கள்ள நடவடிக்கைகள் எடுக்க முனைவதாக செய்திகள் கூறுகின்றன.

72 வயதான காந்தியவாதியான அண்ணா ஹசாரேவின் சாகும் வரை உண்ணாநோன்பு போராடத்துக்கு ஆதரவு தரும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால், சாமி அகின்வேஷ், கிரண் பேடி உட்பட 2,000-க்கும் அதிகமானோர் அவருடன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை இந்தியா நல்லதொரு தேசமாய் மலர் நீங்களும், நானும் என்னச் செய்யப் போகிறோம் ? கூடுமானவரை இந்த செய்திகளையும், லோக்பால் மசோதாவுக்கு ஆதரவும் தர முன்வர வேண்டும், ஆங்காங்கு தோழர்களுடன் இணைந்துப் போராட்டத்தில் ஈடுபடவும் வேண்டும்.

Tuesday, April 5, 2011

இணையவெளியில் திருக்குறள்!


திருக்குறள் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பெருநூலாக விளங்குகின்றது. உலக அளவில் பலமொழிகளில் பல வடிவங்களில் திருக்குறள் பரவியுள்ளது. ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள் அச்சுவடிவம் கண்டதுபோல் இணையவெளியிலும் பல தளங்களில் பலவாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயன்படும்வண்ணம் திருக்குறள் மூலமாகவும், உரையுடனும், மொழிபெயர்ப்புடனும், ஒலி, ஒளிவடிவிலும், திருக்குறள் கருத்துகள் அசைவுப்படங்களாகவும், படக்கோப்புகளாகவும், ஒருங்குகுறிவடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்துகளிலும், தனியார் நிறுவனங்களின் எழுத்துகளிலும் உள்ளன. திருக்குறளைச் செல்பேசிகளில் எடுத்துச்செல்லும் வண்ணம் தரவிறக்கும் வாய்ப்புகளுடனும் உள்ளது.

ஒலிவட்டுகளாக்கி மூலமும் உரையும் இணைந்த பேச்சு வடிவிலும் திருக்குறள் உள்ளது. திருக்குறள் சார்ந்த அறிஞர்களின் பேச்சுகளாவும் திருக்குறள் இணையத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருக்குறள் பரவல் இணையப்பெருவெளியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் பதிப்புகள் பற்றியும் இணையதளங்களின் பதிப்புச் சிறப்புகள், சில தளங்களின் மேம்படுத்தலின் இன்றியமையாமை பற்றியும் இக்கட்டுரையில் சில செய்திகள் பதிவாக உள்ளன.

திருக்குறள் இணையப் பதிப்புகளின் பொதுத்தன்மைகள்:

திருக்குறள் தொடக்கத்தில் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. படக்கோப்புகளாகவும் (பி.டி.எப்.) சில தளங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சில தளங்கள் தனியார் நிறுவன எழுத்துகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன (கலைஞரின் திருக்குறள் உரை, குறளோவியம்). இன்று ஒருங்குகுறிப் பயன்பாட்டின் முதன்மை தெரிந்த பிறகு பல இணையதளங்களும் ஒருங்குகுறி எழுத்துருவில் யாவரும் படிக்கும் வண்ணம் எந்த எழுத்துருச்சிக்கலும் இல்லாமல் படிக்கும் வகையில் பதிப்பித்துள்ளன.

தினமலர் போன்ற நாளிதழ்களின் தளத்தில் திருக்குறள் சிறப்பாக மூலத்துடனும் உரையுடனும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழ்த் தளத்தில் நாளும் ஒரு திருக்குறள் இடம்பெறுகின்றது. அருகில் உள்ள பொத்தானை அழுத்தி திருக்குறளுக்கு உரிய பொருளை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கணினி, இணையத் தொழில்நுட்பம் அறிந்த ஆர்வலர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் திருக்குறளைப் பலவகையாகப் படித்து மகிழும்வண்ணம் பதிப்பித்துள்ளனர். பொதுவாகப் பால்பகுப்பு, இயல்பகுப்பு, அதிகாரப் பகுப்பு இவற்றின் வழியாகத் திருக்குறளைப் பார்வையிடும்படி செய்துள்ளனர். சில தளங்களில் திருக்குறள் எண்ணைச்சொடுக்கியும் திருக்குறளைக் காணலாம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பதிப்பில் மூலமும் மொழிபெயர்ப்புகளும் உரைகளும் பலவாக இருக்கின்றமை பயனாளிகளுக்குப் பெரும் பயன் தரும் ஒன்றாகும்.

மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தின் முகப்பிலும் குறள் அமுதம் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் உள்ள திருக்குறள் தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் உள்ளன. இந்த எழுத்துகளை நம் கணினியில் உள்ளிட்ட பிறகே திருக்குறள் பயன்பாட்டை நுகரமுடியும்.ஒருங்குகுறி வடிவில் இருக்கும்பொழுதே இதன் பயன்பாடு எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும்.

இதில் பரிமேலழகர் உரை,பாவாணர் உரை, கலைஞர் உரை எனப் பல உரைகள் உள்ளிடப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் ஆங்கிலமொழிபெயர்ப்பும், சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. ஒலிவடிவில் கேட்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் தொழில்நுட்பம் எளிமைப்படுத்தப் படவேண்டும்.

முத்து வ.,சித்தார்த் என்னும் இருவர் (http://kural.muthu.org/)உருவாக்கியுள்ள தளத்துக்குச் சென்றால் திருக்குறள் பயன்படுத்துவதற்கு எளிய முறையில் உள்ளிடப்பட்டுள்ளது. பால் பகுப்பும், இயல்பகுப்பும், அதிகாரப் பகுப்பும் சிறப்பாக உள்ளது. தேடும் வசதியும் இந்தத்தளத்தில் சிறப்பாக உள்ளது.

திருக்குறள் (http://www.thirukkural.com/) என்னும் தளத்தில் எளிமையான அமைப்பில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளனர். பயன்மிகு பக்கங்கள் என்ற தலைப்பில் பல இணைப்புகளும் வைத்துள்ளனர். எழுத்துகள் ஒருங்குகுறி அமைப்பில் இருப்பதால் எந்தக் கணினியும் சிக்கலின்றி எழுத்துகளைக் காட்டும்.கலைஞர் உரை, மு.வ. உரை.சாலமன் பாப்பையா உரை ஆங்கில உரைகள் யாவும் சிறப்பாகப் பயன்படுத்தும்படி உள்ளன.

அகரம் (http://agaram-thirukkural.blogspot.com/) என்னும் தளத்துக்குச் சென்றால் தமிழ் ஆங்கில விளக்கத்துடன் திருக்குறள் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குறள்களை எண்ணைச் சொடுக்கிப் பயன்படுத்தும் வகையில் எளிய உரைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்(http://senthamil.org) என்னும் தளத்தில் திருக்குறளின் முதற்சீர் மட்டும் குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது. அதனைச் சொடுக்கினால் உரிய திருக்குறள் மூலத்தை மட்டும் படிக்கலாம்.இதில் ஒரு நெறிமுறை இல்லாமல் இல்லாத முறையைச் சீர் செய்தால் சிறந்த தளமாக அமையும்.

மதுரைத்திட்டத்தில் (http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html) உள்ள திருக்குறள் மூலம் மட்டும் கொண்டதாக அமைந்துள்ளது. படக்கோப்பு வடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவிலும்,ஒருங்குகுறி வடிவிலும் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

ஆச்சார்யா தளத்தில் (http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.php) உள்ள திருக்குறள் யாவும் மூலமும் அதற்கு ஆங்கில விளக்கமுமாக உள்ளன. எண்ணைச்சொடுக்கிக் குறளைப் பெறும் வகையில் தளம் உள்ளது.

தமிழன் வழிகாட்டி (http://www.tamilsguide.com/) இணைய தளத்தில் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது. தமிழ் ஆங்கிலம் என்னும் இருமொழிகளில் அறியும்வண்ணம் உள்ளது. திருக்குறளுக்குத் தமிழ் உரையை அ.பொ.செல்லையா அவர்கள் வழங்கியுள்ளார். ஆங்கில விளக்கவுரையை அவர் துணைவியார் திருவாட்டி யோகரத்தினம் செல்லையா வழங்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் அதிகார எண், குறள் எண், ஆங்கில எழுத்தில் குறள், ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. தமிழிலும் இந்த வரிசைமுறையில் குறட்பாக்கள் உள்ளன. உரையாசிரியர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பு.


பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் பற்றி அறிய http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm என்னும் தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் சௌராட்டிரமொழி, இந்தி, வங்காளம், குசராத்தி, ஒரியா, மராத்தி, தெலுங்கு, அரபி, உருது, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, இசுபானிசு, சுவீடிசு, என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விவரங்களை ஓரிடத்தில் பெறலாம்.

திருக்குறள் ஒலிப்பதிப்பு (http://universalepublishers.com/)

திருக்குறள் ஒலிப்பேழைகளாக (கேசட்) முன்பு உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.

1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர். முன்னுரையும், பால்பகுப்பும் சுட்டி, இயல் பகுப்பு உணர்த்தி, அரிய இசை முன்னோட்டமும், அதிகாரத்தின் எண்ணும், அதிகாரத் தலைப்பும், குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது. பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.

திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவந்தது.திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடந்த தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்படும்.ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00

திருக்குறள் மறைமொழி (http://panainilam.blogspot.com/2009/02/1330.html)

1330 திருக்குறளும் இசையுடன் பாடிக் குறுவட்டாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியுள்ளது. எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த இரா.இளங்குமரனார் அவர்கள் இதன் விலை 5 அமெரிக்க டாலர் ஆகும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள தமிழ் மையம் திருக்குறளின் 330 குறட்பாக்களை 50 பாடல்களாக உருவாக்கியுள்ளது. திருக்குறள் இசைத்தமிழ் என்னும் பெயரில் இம்மையம் குறுவட்டை உருவாக்கியுள்ளது. செம்மொழி நிறுவனத்தின் தளத்திற்குச் சென்று(http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam ) இலவயமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

திருக்குறள் சார்ந்த பதிப்புகளையும், இணையதளங்களையும் ஆய்வதுடன் திருக்குறள் பதிப்புகள் முறையாக இணையத்தில் உள்ளனவா என்று ஆராய்வது இன்றைய தேவையாக உள்ளது.திருக்குறள் பதிப்புகள், உரைவெளியீடுகள் மிகுந்துவரும் இந்த நாளில் அவற்றை இணையப் பதிப்புகளாக வெளியிடுவது மிகவும் எளிதாகும். அவ்வாறு வெளியீடு செய்தால் இணையப் பெருவெளியில் திருக்குறள் உரைகள் யாவும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு ஏற்படும்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வான்புகழ் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் காட்சிவழிப் படைப்பாக இக்கட்டுரை வழங்கப்பட்டது. நாள் 13.02.2011

நன்றி: முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்

நன்றி: http://muelangovan.blogspot.com

இனி ஏடிஎம்மில் வருமான வரி செலுத்தலாம்!!

சென்னை: வருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை இனி. ஏடிஎம்களிலேயே வருமான வரியைச் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.


தற்போது வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் வங்கிகளுக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பி வரி செலுத்த வேண்டியதுள்ளது. பிறகு அதற்கான ஸ்லிப்பை பெற்று கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் மார்ச் மாதம் கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டு வருகிறது. இதை தவிர்க்க இனி ஏ.டி.எம். மூலமாகவும் வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நேற்று முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இனி படிப்படியாக மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

ஏ.டி.எம். மூலம் வருமான வரி செலுத்த விரும்புபவர்கள் வங்கி இணையத் தளத்தில் தங்கள் TAN மற்றும் PAN எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்போது ஒரு எண் கொடுக்கப்படும். அதை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள குறியீடுகளை தட்டி பான் நம்பர் உள்பட கேட்கும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ளும் ஏ.டி.எம். சிறப்பு எண் ஒன்றை கொடுக்கும். அந்த எண் உதவி கொண்டு வங்கி இணையத் தளத்தில் பதிவு செய்து வருமான வரி கட்டியதற்கான சான்றிதழை பெறலாம்.

இதன் மூலம் வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்து நிற்பதை வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்க்க முடியும்.

முருகனின் 4ம் படை வீடு சுவாமி மலை





முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவத திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்


தல வரலாறு

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத காரணத்தினால் பிரம்மாவை சிறையில் அடைத்தான் முருகப்பெருமான்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமானே, சிஷ்யனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை முருகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் என்கின்றன புராணங்கள். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலைஎன்று பெயர் பெற்றுள்ளது.

கோயில் அமைப்பு

சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

மூலவர்

இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

தல விருட்சம்

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

விழாக்கள்

- இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

- வைகாசி விசாகப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

- ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் இங்கு நடைபெறுகிறது.

- புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

- மேலும் முருகனுக்குரிய விழாக்களான, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சிறப்புக்கள்

- அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாகச் சூட்டியுள்ளார்.

- சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

- சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

எப்படி செல்வது

தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு இந்த இரு ஊர்களிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்-மூன்றாவது படை வீடு பழனி


பழனி


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.

பெயர்க்காரணம்

பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்தப் பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகப் பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார். மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்தப் பழனி மலைக்கு வந்தனர். முருகப் பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக் கோவில் தல புராணம் கூறுகிறது.

மலையின் தோற்றம்

பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப் பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைக் குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

அப்போது முருகப் பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. சிறிது யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனைக் கீழே இறங்குமாறு கூறினான்.

ஆனால் அந்தச் சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப் பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள் பாலிப்பதாக அப்போது அருளினார்.

அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள். இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி சிறப்பு

திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்தப் பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி கோவிலில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்தக் கோவிலின் தலவிருட்சம்தான்.

ஆண்டிக் கோலத்தில் முருகன்

இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.

மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சிறப்புக்கள்

- முருகப் பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.

- பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.

- மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

- ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

- சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேகக் காலத்தில் நன்கு அறியலாம்.

சர்ச்சைக்குரிய விவாதம்

பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவது படை வீடு என்று கூறுவோரும் உண்டு.

எப்படி போவது?

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து மற்றும் இரயில் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை , கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலையில் வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்-திருச்செந்தூர்


திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடகளில் இரண்டாம் படை வீடாகக் போற்றப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். மற்ற ஐந்து படை வீடுகளை விட இந்த ஆலயம் முற்றிலும் மாறுபட்டது. குன்றின் மீது அமர்ந்த தலங்கள் மற்றவை. ஆனால் செந்துரிலோ முருகன் கடற்கரையில் அலைகள் தாலாட்ட அருள் பாலிக்கின்றான்.


சீரலை வாயில் என்று அழைக்கப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது.

தல வரலாறு

வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கனுக்கு பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார்.

முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். அந்த சூரனை வதம் செய்து இறைவன் ஜெயந்திநாதராக நின்ற இடமே திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

கோவில் அமைப்பு

இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.

இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில்குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.

கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார்.

இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள்.

இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில்இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.

சிறப்புப் பூசைகள்

கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. மேலும் ஆவணி, மற்றும் மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றது.

சிறப்புக்கள்

இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள். இந்த இலை விபூதிகளின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாக கருதப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.

கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.

பயண வசதி

தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி , நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருநெல்வேலியிலிருந்து தருச்செந்தூருக்கு ரயில் வசதியும் உண்டு.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்







சூரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர் முருகப் பெருமான் என்கின்றன புராணங்கள்.


அக்னி ரூபமாய் தோன்றியவனை குளிர்விக்க சரவணப்பொய்கைக்கு கொண்டு சென்று விடவும் ஆறு குழந்தைகளாய் உருமாறினான் முருகன். அழகிய முதல்வனை கார்த்திகை பெண்கள் வளர்த்து கார்த்திக்கேயனாய் சிவன் பார்வதியிடம் ஒப்படைத்தனர்.

முருகப்பெருமான் தமிழ்கடவுள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உதாரணங்கள் பல உள்ளன. உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் தோள்களாய், மெய்யெழுத்து பதிணெட்டும் கண்களாய், இன எழுத்து ஆறும் முகங்களாய் ஆய்த எழுத்து ஒன்று இறைவனின் வேலாய் காணப்படுகிறது.

முருகப்பெருமானின் பல்வேறு பெயர்கள் :

ஆறுமுகன்,குகன்,குமரன், முருகன், குருபரன், காங்கேயன், கார்த்திக்கேயன், கந்தன், கடம்பன், சரவணபவன், ஸ்வாமி, சுரேசன், செவ்வேள், சேந்தன், சேயோன், விசாகன், வேலவன், வேலன்,முத்தையன், சோமஸ்கந்தன், சுப்ரமணியன், வள்ளற்பெருமான், ஆறுபடைவீடுடையோன், மயில்வாகனன், தமிழ்தெய்வம்.

அறுபடை வீடுகள் :

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்றாலும், அறுபடைவீடுகள் சிறப்பு வாய்ந்தவை.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறும் அறுபடைவீடுகளாக போற்றபடுவதாக தமிழ் புலவர் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

தமிழ்நாட்டிலுள்ள அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக முருகப்பெருமானின் பக்தர்கள் போற்றுவது திருப்பரங்குன்றம்தான். மதுரை மாநகருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்தத் திருப்பரங்குன்றத்தில்தான் முருகப் பெருமான் தெய்வாணையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பெயர்க் காரணம்

திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என வேறு சில பெயர்களும் உள்ளன.

கோயில் வரலாறு

முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அதன்படி முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டார்கள். இதனால் தனது நன்றியைச் செலுத்தும் விதமாக இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

கோயில் அமைப்பு

இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. பாறையில் இடது புறம் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். பக்கத்தில் முருகப் பெருமானின் திருமணக் கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுவது போல் இங்கு கருவறை அமைந்துள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்தியகிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இந்திரனுடைய மகளான தேவயானையை வளர்த்த ஐராவதம் அவளைப் பிரிய மனமில்லாமல், அப்படியே தன் வளர்ப்பு மகளான தேவயானைக்கும், முருகனுக்கும் தொண்டாற்ற அங்கேயே இருந்து விட்டதாக பெரியவர்கள் சொல்கின்றனர்.

முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

தற்போதுள்ள கோயிலுக்கு நேராக மலையில் மற்றொரு சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதுதான் மூலக் கோயில் என்றும் சொல்கிறார்கள்.

சரவணப் பொய்கை

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நக்கீரர் கோயில்

நக்கீரர் சிவபூசையின் போது வழுவியதால் பூதம் ஒன்று அவரைக் குகையில் கொண்டு போய் அடைத்து விட்டது. இதனால் அவர் அங்கிருந்தபடி திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் தோன்றி மலையைப் பிளந்து அவரை விடுவித்து அருளினார். நக்கீரர் அமர்ந்து பூசை செய்த இடத்தைப் பஞ்சாட்சரப் பாறை உள்ளது. சரவணப் பொய்கைக்கரையில் பஞ்சாட்சரப் பாறை எனுமிடத்தில் நக்கீரருக்குக் கோயில் இருக்கிறது.

சிறப்புக்கள்

இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாகவே மேலே செல்ல வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு இயலாது.

நக்கீரர் முருகன் மீது திருமுருகாற்றுப்படையைப் பாடியது இத்தலத்தில்தான்.

முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் முதல்படைக் கோயில் என்பதுடன் இக்கோயில் அளவிலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்வது?

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மதுரையின் அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களிலிலிருந்து திருமங்கலம், திருநகர் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் திருப்பரங்குன்றம் வழியாகத்தான் செல்கின்றன.

மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் ஒன்றும் உள்ளது.

அறுபடைவீடுகளின் சிறப்புகளை இனிவரும் கட்டுரைகளில் தொடர்ந்து காண்போம்

Monday, April 4, 2011

28 வருடங்களின் பின் இந்தியா வசமானது உலக கோப்பை!


உலக கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கையை வென்ற இந்திய அணி

28 வருடங்களின் பின்னர் உலக கோப்பையை மீண்டும் தனது வசமாக்கியது.

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது.

இதன் மூலம் 3வது முயற்சியில் 2 வது தடவையாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 28 வருடங்களின் பின்னர் பெற்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்தியா மும்பையில் வைத்து உலக சாம்பியனானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். ஆட்ட நாயகன் கேப்டன் தோனியும் தொடர் நாயகனாக யுவராஜ் சிங்கும் தெரிவாகினர்.

ஆரம்பத்தில் இலங்கை அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதும் இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஸ்கோரை உயர்த்தவே இலங்கையின் பந்து வீச்சு பலத்தில் இந்திய அணி சேஸ் செய்வதற்கு பெரிய ஸ்கோர் எண்ணிக்கையான 275 என்ற ரன் நிர்ணயிக்கப்பட்டது.

அதற்கேற்றால் போல் 10 ஓவர்களுக்கள் சச்சின் சேவாக் ஆகியோரை இழந்த இந்திய அணி தடுமாறியது. எனினும் அதிரடியாக காம்பீர் 97 ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை ஏற்படுத்தினார். இந்நிலையில் 3 வது 4 வது விக்கெட்களையும் பறிகொடுத்த இந்தியா மீது மீண்டும் அழுத்தத்தை கொடுத்தனர் இலங்கை பந்து வீச்சாளர்கள். ஆனால் அதிரடியாக களமிறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக ஆடி விக்கெட் சரிவை நிலைநிறுத்தியதுடன் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்திக் கொண்டே வந்தார்.

எவ்வளவு முயன்றும் தோனியை ஆட்டமிளக்க செய்ய முடியவில்லை இலங்கை பந்து வீச்சாளர்களால் மோசமாக களத்தடுப்பையும் செய்துவந்தனர். இறுதியில் 11 பந்துகளில் 4 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் அபாரமான சிக்ஸ் ஒன்றை விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினார் கேப்டன் தோனி.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் உலக கோப்பை கனவு நிறைவேறியதுடன் சச்சினும் தான் விளையாடும் காலத்தில் பெற்ற சாதனை இதுவென்ற பெருமையையும் அடைந்தார்.