Monday, February 28, 2011

பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்:

1. http://www.dailyblogtips.com/

2. http://www.problogger.net/

3. http://www.bloggerbuster.com/

4. http://www.anshuldudeja.com/

5. http://www.blogdoctor.me/

6. http://www.abu-farhan.com/

7. http://www.bloggertipsandtricks.com/

8. http://www.newbloggingtipz.com/

9. http://www.blogspottutorial.com/

10. http://www.allblogtools.com/

11. http://bloggernanban.blogspot.com

குறிப்பு: இந்த அனைத்து தளங்களிலும் விளம்பரம் அதிகமாக இருக்கும். பார்த்துக் கொள்ளவும்.

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.





அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.





அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.




மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.
1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.


(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

Friday, February 25, 2011

அறிவுச் சொத்துரிமை இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்: மைக்ரோசாஃப்ட்

மென்பொருள் களவாடல் இந்தியாவில் குறையும் என்று கூறியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அறிவுச் சொத்துரிமை (Intelectual Property Rights) நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுவரும் மென்பொருள் மாநாட்டில் பேசிய பிறகு பி.டி.ஐ. செய்தியாளரிடம் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள் களவாடல் தடுப்புப் பிரிவின் தலைமை ஆலோசகர் டேவிட் ஃபின் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவுச் சொத்துரிமை நடைமுறையாக்கல் அவசியமானது. அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிடும். இதனால் வரி வருவாய் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், படைப்புத்திறனை அதிகரிக்கும்” என்று டேவிட் ஃபின் கூறியுள்ளார்.

உலகளாவிய அளவில் மென்பொருள் களவாடலால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும், இந்தியாவில் 65 விஉழக்காடு மென்பொருட்கள் களவாடல்களே என்றும் டேவிட் ஃபின் கூறியுள்ளார். இதனால் நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வேலை வாய்ப்பும் பல இலட்சக்கணக்கில் பறிபோகிறது என்று கூறியுள்ளார்.

அயல் பணிக்கு மிகவும் உகந்த நாடு இந்தியா: உலக ஆய்வில் முதலிடம்

உலக நாடுகளில் தகவல் தொடர்பு அயல் பணிக்கு (Business Process Out-sourcing - BPO) மிகவும் உகந்த நாடாக இந்தியா உள்ளதென, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட ஏடி கியர்னி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011இல் உலக சேவைகள் இட குறியீடு (Global Services Location Index - GSLI) என்ற ஆய்வை, கணினி அயல் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏடி கியர்னி நிறுவனம் நடத்தியுள்ளது. தனது ஆய்வில் கிடைத்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ள ஏடி கியர்னி நிறுவனம், “இந்தியாவே முதன்மை நாடாக உள்ளது.

அயல் பணித் தேவை எப்படிப்பட்டதாக இருப்பினும் அதற்குரிய பணியாளர் சக்தியை அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. வேகமான போக்குவரத்து வசதிகள்(!), ஆழமான திறன் உள்ளமை ஆகியவற்றால் உலக அளவில் அளிக்கப்படும் அயல் பணி வாய்ப்புகளில் சிங்கத்தின் பங்கை இந்தியா பெறுகிறது” என்று கூறியுள்ளது.

உலக சேவைகள் இடக் குறியீட்டின் படி, இரண்டாவது இடத்திலுள்ள சீனாவை விட 0.5 புள்ளிகள் அதிகம் பெற்றும், மலேசியாவை விட 1 புள்ளி அதிகம் பெற்றும் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்று கூறியுள்ள ஏடி கியர்னி ஆய்வு, இந்தியா முதலிடத்தில் உள்ளதற்குக் காரணம் அதன் ஈடிணையற்ற திறன் கொண்ட பணியாளர்களும், பணியை நிறைவேற்ற ஆகும் குறைந்த செலவும் ஆகும் என்று கூறியுள்ளது.

தகவல் தொழில் நுட்ப அயல் பணியில் உருவாகும் போட்டிகளை சமாளிக்கவும், அதனையும் தாண்டி தன்னை நிரூபிக்கவும், அத்துறையில் புதிதாக எழும் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறனும் இந்தியாவை அயல் பணித் துறையில் தலைமையிடத்தையும், மிகச் சிறந்த நாடாகவும் உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளது.

ஆங்கில மொழித் திறன் மட்டுமின்றி, அயல் பணியாற்ற உகந்த திறனைப் பெறக்கூடிய கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தகுதியுடைய பணியாளர்களை உருவாக்குவதும் இந்தியாவை இத்துறையில் தனித்த நாடாக முன்னிறுத்துகிறது என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, தாங்கள் அளிக்கும் சேவையில் தனி முத்திரை பதிக்கும் அளவிற்கு மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் அயல் பணி நிறுவனங்கள் உள்ளதெனவும், அதில் இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியன முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

அயல் பணியில் உலகின் முதல் பத்து நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் மலேசியாவும், இந்தோனேஷியா 5வது இடத்திலும், தாய்லாந்து 7வது இடத்திலும் வியட்நாம் 8வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 9வது இடத்திலும் உள்ளன.

கால் செண்டர்களில் சீனா பெரிதாக பங்கு பெறவில்லை என்றாலும், அதிக திறன் தேவைப்படும் பகுப்பாய்வு, உயர் தகவல் தொழில் நுட்பப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு அது போட்டியாக வளர்ந்து வருகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

Thursday, February 24, 2011

தமிழால் வளர்ந்தேன் - தாய்மொழி தமிழின் சிறப்புகள்


இன்று உலக தாய்மொழி தினம் .என் தாயின் மொழி செம்மொழி தமிழால் வளர்ந்தேன் .என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும் .

தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள் ,வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும் உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான் .

தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை ,எளிமை ,நீர்மை என்பதாகும் .

தமிழில் பகுபதம் ,பகாப்பதம் என இரண்டு வகை உண்டு .அவை பிரித்துப்பார்க்க வேண்டியவை ,பிரித்துப்பார்க்க கூடாதவையாகும் .

உதாரணமாக கடவுள்(கட + உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல . நீ ஆசைகளை ,பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும் .

எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை .கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர் .வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது .இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில் பாருங்கள் .உங்களுக்கே புரியும் .


இது சிறிய அளவின் பிரிவுகள் .

1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

இந்த இம்மியளவும் அசையாது என்று நம் பேச்சு வழக்கில் பேசும் சொல்.

தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு .பட்டியலை பார்க்க

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு .

உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும் முடியாது .

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் .

உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது .

தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு(ப் +உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே சொல் தான் . LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும் .

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்).தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை . உச்சரித்து பாருங்கள் .அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள் .

டாக்டர் கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள் ,திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள் .கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார் .

முக்கியமாக இந்த "கற்க்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க்க அதற்க்கு தக "எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது . இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும் .

3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள் .

சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா வளர்ந்தது .

முக்கியமாக சீனாவின் துயரம் மஞ்சள் நதி ,இந்தியாவின் துயரம் பிராமணர்கள் என்று புதுதாக சேர்த்துள்ளனர் சிலர் அதே போல....

தமிழர்களின்/தமிழின் துயரம்:-
அரசியல்
சினிமா
மதம்/ஜாதி

மேலே உள்ள தமிழ் மொழியின் சிறப்புகள் நம் முன்னோர்கள் புத்திசாலிகள் என்பதை காட்டுகிறது .ஆனால் நாம் ?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலக பொது நியதியை கொண்ட ஒரே மொழி இத்தகைய தமிழில் பிறந்து தமிழால் வளர்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம் .

TODAY GERENAL KNOWLEDGE

 பசுபிக் சமுத்திரத்தினை விட அத்திலாண்டிக் சமுத்திரம் உவர்ப்பானதாகும்.

 சிறுத்தைகள் தமது வேகத்தினை 2 செக்கன்களில் 0 இல் இருந்து 70 கிலோமீற்றர் வேகத்திற்கு விரைவுபடுத்தும் இயலுமை கொண்டதாகும்.

 1666ம் ஆண்டு லண்டன் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாக லண்டன் நகரின் அரைவாசிக்கும் அதிகமான பகுதி எரிந்து நாசமாகியதாம். ஆனால் இத்தீவிபத்தின் காரணமாக 6 பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகினர்.

 90%க்கும் அதிகமான நிக்கரகுவா மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தினையே பின்பற்றுகின்றனர்.

 வெனிசுலாவில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியானது , நயாகாரா நீர்வீழ்ச்சியினை விட அண்ணளவாக16மடங்கு உயரமானதாகும்.


நயாகாரா நீர்வீழ்ச்சி


ஏஞ்சல் நீர்வீழ்ச்சி


 கரீபியன் பிராந்தியத்தில் புகையிரதப் பாதைகளை கொண்டுள்ள ஒரே தீவு கியூபா தேசம்தான்.

 பிரிட்டன் மகாராணியாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பக்கிங்ஹாம் மாளிகையாகும். பக்கிங்ஹாம் மாளிகையானது 602 அறைகளைக் கொண்டுள்ளது.




 பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ Y” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் அலஸ்கா மாநிலமாகும். அலஸ்கா மாநிலமானது, ரஷ்யாவிடமிருந்து ஏக்கருக்கு 2சதங்கள் வீதம் செலுத்தி அமெரிக்காவினால் கொள்வனவு செய்யப்பட்டதாம்.

Wednesday, February 23, 2011

உலகின் மோசமான 10 நகரங்களில் கொழும்பு, கராச்சி: கருத்துகணிப்பு

லண்டன்: உலகில் வாழ்வதற்கு மோசமான 10 நகரங்களில் இலங்கை தலைநகர் கொழும்புவும் ஒன்று என்று தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

பிரபல பத்திரிக்கையான தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் உலகில் வாழ்வதற்கு ஏற்ற மற்றும் மோசமான நகரங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பு சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு உள்ளிட்ட 30 விஷயங்கள் அடிப்படையில் நடத்தப்பட்டது.

இதில் மோசமான 10 நகரங்களில் இலங்கை தலைநகர் கொழும்புவும் ஒன்று.

மோசமான நகரங்கள் விவரம் வருமாறு,

ஹராரே (ஜிம்பாப்வே), தாகா (பங்களாதேஷ்), போர்ட் மோர்ஸ்பி (பாபுவா நியூ கினியா), லாகஸ் (நைஜீரியா), அல்ஜீயர்ஸ் (அல்ஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), தௌவாலா (காமரூன்), தெஹ்ரான் (ஈரான்), தாகர் (செனிகல்), கொழும்பு (இலங்கை).

வாழத் தகுதியான 10 நகரங்கள்:

வான்கூவர் (கனடா), மெல்போர்ன் ( ஆஸ்திரேலியா ), வியன்னா (ஆஸ்திரியா), டொரண்டோ (கனடா), கால்காரி (கனடா), ஹெல்சிங்கி (பின்லாந்து), சிட்னி (ஆஸ்திரேலியா), பெர்த் (ஆஸ்திரேலியா), அடிலெய்ட் (ஆஸ்திரேலியா), ஆக்லேண்ட் (நியூசிலாந்து).

கடந்த 2010-ம் ஆண்டில் இதே பத்திரிக்கை தான் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இலங்கை என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு பட்டியலிலும் இந்தியா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேபிசியில் அதிமுக உள்பட 20 கட்சிகளுக்கு இடம் கிடைக்காது?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் (ஜேபிசி) அதிமுக உள்பட 20 கட்சிகளுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

ஜேபிசி அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் அறிவித்தார். இதையடுத்து இதுதொடர்பான தீர்மானம் நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படவுள்ளது. அது நிறைவேற்றப்பட்டவுடன், ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் ஜேபிசி அமைக்கப்படும்.

தற்போதைய விதிமுறைப்படி ஜேபிசியில் 21 உறுப்பினர்கள் வரை இடம் பெறலாம். ஆனால் அதை 30 பேராக உயர்த்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்காது என்று தெரிகிறது.

21 பேரில் 14 பேர் லோக்சபாவைச் சேர்ந்தவர்களாகவும், 7 பேர் ராஜ்யசபாவைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

தற்போது நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 37 கட்சிகளுக்குப் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் உறுப்பினர் வாய்ப்பு கிடைத்து விடாது. கட்சிகளின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான் உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் பார்த்தால், காங்கிரஸ், பாஜக, திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்தக் கட்சிகளில் காங்கிரஸ் தவிர, திமுக, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் ஆகியவை காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவையாகும். அதாவது மொத்தம் உள்ள 7 கட்சிகளில் நான்கு கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள். மற்ற 3 பேரும் எதிர்க்கட்சியினர். அவர்களிலும், சமாஜ்வாடி கட்சியை ஏதாவது ஒரு வகையில் காங்கிரஸ் தனக்கு சாதகமாக வளைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த ஜேபிசி குழுவின் விசாரணையால் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.

அடுத்து ஜேபிசியின் தலைவராக சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு மிக மிக பாத்திரமான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பி.சி. சாக்கோ நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர், தீவிர சோனியா விசுவாசி. எனவே இவரையே தலைவராக நியமிக்க சோனியா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே எதற்கும் பாதகம் இல்லாத வகையில், இவர் செயல்படலாம் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.

ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், ஜேபிசி அமைக்கப்பட்டு அதன் தலைவர், உறுப்பினர்கள் விவரம் தெரிய வரும்.

எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம்:ரோல்ஸ் ராய்ஸ் அறிவிப்பு

சிங்கப்பூர்: பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுதல்,எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும் என்று கருதப்படுகிறது.இதனால்,பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த பட்டியலில் சொகுசு கார் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இணைய உள்ளது.தனது எலக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

"ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு காரான ஃபான்டோம் மாடலை அடிப்படையாக கொண்டு புதிய 102EX எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.மாதிரி எலக்ட்ரிக் காரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்.

வரும் மார்ச் 1ந்தேதி துவங்கும் ஜெனிவா நகரி்ல் துவங்கும் கார் கண்காட்சியில்,எங்களது புதிய எலக்ட்ரிக் காரை காட்சிக்கு வைக்க முடிவு செய்துள்ளோம்.இந்த ஆண்டு இறுதி வரை புதிய எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்படும்.எலக்ட்ரிக் காரை முழு அளவில் உற்பத்தியை துவங்குவது குறித்து முடிவு செய்யவில்லை,"என்று கூறினார்.

Tuesday, February 22, 2011

ATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!

ATM (Automatic Teller Machine)
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.

கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.

வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.

நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.

Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.

முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.

மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.

அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.

ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.

இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.

இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.

இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.

பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?

இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.

மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.

சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே

ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.

அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.

ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.

ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.

ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.

சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.

சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.

மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.

பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது.

சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.

குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.

சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.

சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.

பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ”கேன்சல்” பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.

இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.

முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ”ஏமாற்று” வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ”ஏமாற்று வேலை” என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.
www.nidur.info

Monday, February 21, 2011

இன்னும் 25ஆண்டுகளில் கார் விற்பனையில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும்

நியூயார்க்: இன்னும் 25 ஆண்டுகளில் அமெரிக்கா,சீனாவை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியா முன்னிலை பெறும் என அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கார் விற்பனை சந்தை உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.இதற்கடுத்து,பொருளாதாரத்தில் புதிய வல்லரசாக மாறியுள்ள சீனாவின் கார் விற்பனை சந்தையும் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது.

இதைத்தொடர்ந்து,இந்தியாவின் கார் விற்பனை சந்தையும் உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கார் விற்பனையில் கொடிகட்டி பறந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.

இந்திய கார் சந்தையின் அசுர வளர்ச்சி தொடர்ந்தால்,இன்னும் 25 ஆண்டுகளில் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா,சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி சாதனை படைக்கும் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூஸ் அண்ட் ஆம்ப் கன்சல்ட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கார் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது.இன்னும் சில ஆண்டுகளில் கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று,கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் உள்நாட்டு கார் விற்பனை மற்றும் ஏற்றுமதியை வைத்து பார்க்கும்போது, 2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கார் விற்பனை ஆண்டுக்கு 5மில்லியன் கார்கள் என்ற இலக்கை எட்டும்என்று தெரிகிறது.

இது அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 மில்லியன் கார்கள் என்ற இலக்கை அடையும்போது,அமெரிக்கா மற்றும் சீனாவை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியா முன்னிலை பெறும்.

இந்தியாவில் கார் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக வளர்ந்து வருவதால்,இது நிச்சயம் சாத்தியமாகும் நிலை உள்ளது,"என்று கூறப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ள மதுரை-நெல்லை ஐடி பூங்காக்கள்

சென்னை: மதுரை-நெல்லையில் உருவாக்கப்பட்டுள்ள ஐடி பூங்காக்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை இலந்தைக் குளத்திலும், திருநெல்வேலியிலும் எல்காட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் சென்னையில் மாநில தரவு மையததையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையிலிருந்து முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டல வளாகங்களையும், சென்னை மாநகரில் அமைந்துள்ள மாநிலத் தரவு மையத்தையும் திறந்து வைக்கும் இந்த இனிய நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் முதல் நிலை நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை இரண்டாம் நிலை நகரங்களிலும் அமைத்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது. அதன்படி இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் வளாகங்கள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கான அந்நகரங்களில் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களுக்கு மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டல அங்கீகாரமும் பெறப்பட்டு உள்ளது. இந்தத் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த பொது உள்கட்டமப்பு வசதிகளான உட்புற சிமெண்ட் சாலைகள், தரவு வடகம்பி, மின்வட்ட கம்பி மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை, தெருவிளக்குகள், சுற்றுப்புறச் சுவர், மதகு பாலங்கள், சுங்க அலுவலகக் கட்டடம், நிர்வாகக் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இரண்டு தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்து அதன்படி இலந்தைகுளம் கிராமத்தில் 28.91 ஏக்கர் நிலப்பரப்பையும் வடபழஞ்சி கிராமத்தில் 245.17 ஏக்கர் நிலப்பரப்பையும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு வழங்கியது. இப்பூங்காக்களக்கு 25.4.2008 அன்று அடிக்கற்கள் நாட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றன. இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 32 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதில் 18 கோடி ரூபாய்ச் செலவில் 50 ஆயிரம் சதுர அடி நிலப் பரப்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டங்கள், 1 கோடியே 44 லட்சம் ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டள்ளன. இலந்தைக்குளம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 2 தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மூன்று தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைய உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த 5 ஆண்டு காலத்தில் இப்பூங்காக்களின் மூலம் 1400 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும், 5000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் கிராமத்தில் 500 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதலீடு 50 கோடி ரூபாயாகும். இப்பூங்காவில் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் முதற்கட்டமாக 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பொது உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் எல்காட் நிறுவனம் 50 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான கட்டடம் கட்டி உள்ளது. இபபூங்காவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத்தில் இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி வைக்கப்படும் 3வது திட்டம் தேசிய மின் ஆளுமை வடிவமைப்பின் தூண்களில் முக்கியமான ஒன்றான மாநில தரவு மையம் ஆகும். இந்த மாநிலத் தரவு மையம் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எல்காட் நிறுனத்தின் தமிழக பெரும் பரபரப்பு வலை அமைப்புச் செயலாக்க மையம் அமைந்துள்ள அதே கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 4500 சதுரடி பரப்பளவில் 35 வழங்கிகளும், 5 வலையமைப்பு அடுக்குகளும் கொண்ட வரையறுக்கப்பட்ட மிகப் பெரிய தரவு மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும் அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல்படுத்தப்படும்.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதன் பங்களிப்பாக 55 கோடியே 80 லட்சம் ரூபாயையும் தமிழக அரசு தனது பங்களிப்பாக 5 கோடியே 16 லட்சம் ரூபாயையும் அளித்துள்ளன.

மிகச் சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும் அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல்படுத்தப்படும்.

இத்தரவு மையத்தை அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Saturday, February 19, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை

10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகின்றன.

இந்த மூன்று நாடுகளிலும் நடக்கும் போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கின்றன.

அதன் விவரம்:

தேதி மோதும் அணிகள் பிரிவு இடம் நேரம்
பிப் 19 வங்கதேசம் Vs இந்தியா பி மிர்பூர் (வங்கதேசம்) பகல் 2 மணி
பிப் 20 கென்யா Vs நியூசிலாந்து ஏ சென்னை காலை 9.30 மணி
பிப் 20 இலங்கை Vs கனடா ஏ ஹம்பன்டோட்டா (இலங்கை) பகல் 2.30 மணி
பிப் 21 ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வே ஏ அகமதாபாத் பகல் 2.30 மணி
பிப் 22 இங்கிலாந்து Vs நெதர்லாந்து பி நாக்பூர் பகல் 2.30 மணி
பிப் 23 கென்யா Vs பாகிஸ்தான் ஏ ஹம்பன்டோட்டா பகல் 2.30 மணி
பிப் 24 தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் பி டெல்லி பகல் 2.30 மணி
பிப் 25 ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து ஏ நாக்பூர் காலை 9.30 மணி
பிப் 25 வங்கதேசம் Vs அயர்லாந்து பி மிர்பூர் பகல் 2 மணி
பிப் 26 இலங்கை Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி
பிப் 27 இந்தியா Vs இங்கிலாந்து பி பெங்களூர் பிறபகல் 2.30 மணி
பிப் 28 கனடா Vs ஜிம்பாப்வே ஏ நாக்பூர் காலை 9.30 மணி
பிப் 28 நெதர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி டெல்லி பகல் 2.30 மணி
மார்ச் 1 இலங்கை Vs கென்யா ஏ கொழும்பு பகல் 2.30 மணி
மார்ச் 2 இங்கிலாந்து Vs அயர்லாந்து பி பெங்களூர் பகல் 2.30 மணி
மார்ச் 3 நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி மொகாலி பகல் 2.30 மணி
மார்ச் 3 கனடா Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி
மார்ச் 4 நியூசிலாந்து Vs ஜிம்பாப்வே ஏ அகமதாபாத் காலை 9.30 மணி
மார்ச் 4 வங்கதேசம் Vs வெஸ்ட் இண்டீஸ் பி மிர்பூர் பகல் 2 மணி
மார்ச் 5 இலங்கை Vs ஆஸ்திரேலியா ஏ கொழும்பு பகல் 2.30 மணி
மார்ச் 6 இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி சென்னை காலை 9.30 மணி
மார்ச் 6 இந்தியா Vs அயர்லாந்து பி பெங்களூர் பகல் 2.30 மணி
மார்ச் 7 கனடா Vs கென்யா ஏ டெல்லி பகல் 2.30 மணி
மார்ச் 8 நியூசிலாந்து Vs பாகிஸ்தான் ஏ பல்லிகிலே (இலங்கை) பகல் 2.30 மணி
மார்ச் 9 இந்தியா Vs நெதர்லாந்து பி டெல்லி பகல் 2.30 மணி
மார்ச் 10 இலங்கை Vs ஜிம்பாப்வே ஏ பல்லிகிலே பகல் 2.30 மணி
மார்ச் 11 அயர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி மொகாலி காலை 9.30 மணி
மார்ச் 11 வங்கதேசம் Vs இங்கிலாந்து பி சிட்டகாங் பகல் 2.30 மணி
மார்ச் 12 இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பி நாக்பூர் பகல் 2.30 மணி
மார்ச் 13 கனடா Vs நியூசிலாந்து ஏ மும்பை காலை 9.30 மணி
மார்ச் 13 ஆஸ்திரேலியா Vs கென்யா ஏ பெங்களூர் பகல் 2.30 மணி
மார்ச் 14 வங்கதேசம் Vs நெதர்லாந்து பி சிட்டகாங் காலை 9 மணி
மார்ச் 14 பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே ஏ பல்லிகிலே பகல் 2.30 மணி
மார்ச் 15 அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி கொல்கத்தா பகல் 2.30 மணி
மார்ச் 16 ஆஸ்திரேலியா Vs கனடா ஏ பெங்களூர் பகல் 2.30 மணி
மார்ச் 17 இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி சென்னை பகல் 2.30 மணி
மார்ச் 18 அயர்லாந்து Vs நெதர்லாந்து பி கொல்கத்தா காலை 9.30 மணி
மார்ச் 18 நியூசிலாந்து Vs இலங்கை ஏ மும்பை பகல் 2.30 மணி
மார்ச் 19 வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்கா பி மிர்பூர் காலை 9 மணி
மார்ச் 19 ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி
மார்ச் 20 கென்யா Vs ஜிம்பாப்வே ஏ கொல்கத்தா காலை 9.30 மணி
மார்ச் 20 இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் பி சென்னை பகல் 2.30 மணி

கால் இறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி

2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி

3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி

4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி

அரையிறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி

2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி

இறுதிப்போட்டி:

ஏப்ரல் 2-மும்பை- பகல் 2.30 மணி

உலகக் கோப்பை போட்டி-அணிகள், வீரர்கள் நிகழ்த்திய சாதனைகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அணிகள், வீரர்கள் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள் விவரம்:

ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்கள்

கேரி கிர்ஸ்டன் (தெ.ஆப்பிரிக்கா) - 188 (ஆட்டமிழக்காமல்-யுஏஇக்கு எதிராக).
கங்குலி (இந்தியா) - 183 (இலங்கைக்கு எதிராக)
விவியன் ரிச்சர்ட்ஸ் (மே.இ.தீவு) - 181 (இலங்கைக்கு எதிராக)
கபில் தேவ் (இந்தியா) - 175 (ஆட்டமிழக்காமல்-ஜிம்பாப்வேக்கு எதிராக)
கிரேக் விஷார்ட் (ஜிம்பாப்வே) - 172 (ஆட்டமிழக்காமல்-நமீபியாவுக்கு எதிராக)

அதிக ரன்கள் குவித்தவர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 1796 (36 போட்டிகள்)
ரிக்கி பான்டிங் (ஆஸ்திரேலியா) - 1537 (39)
பிரையன் லாரா (மே.இ. தீவு) - 1225 (34)
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 1165 (38)
ஆடம் கில்கிறைஸ்ட் (ஆஸ்திரேலியா) - 1085 (31)

அதிக சதங்கள் போட்டவர்கள்

கங்குலி (இந்தியா) - 4
மார்க் வாக் (ஆஸி.) - 4
சச்சின் (இந்தியா) - 4
ரிக்கி பான்டிங் (ஆஸி.) - 4
ரமீஸ் ராஜா (பாக்.) - 3

அதிக அரை சதம் போட்டவர்கள்

சச்சின் (இந்தியா) - 13
கிரீம் ஸ்மித் (தெ. ஆப்பிரிக்கா), கிரஹாம் கூச், மார்டின் குரோ, ஸ்டீவ் டிக்கோலா, ஹெர்ஷெல்லி கிப்ஸ் தலா 8 அரை சதங்கள்.

அதிக சிக்சர்கள் விளாசியவர்கள்

ரிக்கி பான்டிங் (ஆஸி.) - 30
கிப்ஸ் (தெ.ஆப்பிரிக்கா) - 28
ஜெயசூர்யா (இலங்கை) - 27
கங்குலி (இந்தியா) - 25
மாத்யூ ஹெய்டன் (ஆஸி.)- 23

அதிக பவுண்டரிகள் (4) விளாசியவர்கள்

சச்சின் (இந்தியா) - 189
கில்கிறைஸ்ட் (ஆஸி.) - 141
ஸ்டீபன் பிளமிங் (நியூசி) - 135
பான்டிங் (ஆஸி.) - 130
பிரையன் லாரா (மே.இ தீவு) - 124

சிறந்த பந்து வீச்சு

மெக்கிராத் (ஆஸி) - 7/15 (7 ஓவர்கள்) -நமீபியா
ஆண்ட்ரூ பிக்கல் (ஆஸி) - 7/20 (10 ஓவர்கள்) - இங்கிலாந்து
வின்ஸ்டன் டேவிஸ் (மே.இ.தீவு) 7/51 (10.3 ஓவர்கள்) -ஆஸ்திரேலியா.
கேரி கிளாமர் (ஆஸி.) - 6/14 (12 ஓவர்கள்) -இங்கிலாந்து.
ஷேன் பாண்ட் (நியூசி) -6/23 (10 ஓவர்கள்) -ஆஸ்திரேலியா.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

மெக்கிராத் (ஆஸி.) - 71
வாசிம் அக்ரம் (பாக்.) - 55

முரளிதரன் (இலங்கை) - 53
சமிந்தா வாஸ் (இலங்கை) - 49
ஸ்ரீநாத் (இந்தியா) - 44.

அதிக கேட்ச் பிடித்தவர்கள்

பான்டிங் (ஆஸி.) - 25
ஜெயசூர்யா (இலங்கை) - 18
கெய்ர்ன்ஸ் (நியூசி)- 16
லாரா (மே.இ. தீவு) - 16
இன்சமாம் உல் ஹக் (பாக்.) - 16

அதிக ரன் குவித்த அணிகள்

இந்தியா - 413 (பெர்முடாவுக்கு எதிராக)
இலங்கை -398 (கென்யாவுக்கு எதிராக)
ஆஸ்திரேலியா - 377 (தெ. ஆப்பிரிக்காவுக்கு எதிராக
இந்தியா - 373 (இலங்கைக்கு எதிராக)
நியூசிலாந்து - 363 (கனடாவுக்கு எதிராக)

குறைந்த ரன்களைக் குவித்த அணிகள்

கனடா - 36
கனடா - 45
நமீபியா - 45
ஸ்காட்லாந்து - 68
பாகிஸ்தான் - 74

அதிக வித்தியாசத்தில் வென்ற அணிகள்

இந்தியா - 257 (பெர்முடாவுக்கு எதிராக)
ஆஸ்திரேலியா - 256 (நமீபியாவுக்கு எதிராக)
இலங்கை - 243 (பெர்முடாவுக்கு எதிராக)
ஆஸ்திரேலியா - 229 (நெதர்லாந்துக்கு எதிராக)
தென் ஆப்பிரிக்கா - 221 (நெதர்லாந்துக்கு எதிராக)

குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணிகள்

இந்தியா (கிழக்கு ஆப்பிரிக்கா)
மேற்கு இந்தியத் தீவுகள் (ஜிம்பாப்வே)
மேற்கு இந்தியத் தீவுகள் (பாகிஸ்தான்)
தென் ஆப்பிரிக்கா (கென்யா)
இலங்கை (வங்கதேசம்) ஆகியவை தலா 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளன.

Friday, February 18, 2011

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 6 கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் முதலிடம் இரண்டாமிடம் மற்றும் நான்காம் இடங்களை மாருதி நிறுவனத் தயாரிப்புகளே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆல்டோ

அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது மாருதி ஆல்டா. 2009-ம் ஆண்டில் மட்டும் 212568 ஆல்டோ கார்கள் விறபனையாகியுள்ளன. இந்தியாவில் ஒரு ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமாக விற்கப்பட்ட ஒரே கார் ஆல்டோதான்.

நடுத்தர வர்க்கம் மற்றும் சிறிய குடும்பத்தினரின் முதல் விருப்பம் ஆல்டோதான்.
பார்க்கிங் பிரச்சினை இல்லாத காரும் இதுவே என்கிறது சர்வே.

வேகன் ஆர்

இரண்டாம் இடம் மாருதியின் இன்னொரு தயாரிப்பான வேகன் ஆருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 134,768 கார்கள் இந்த மாடலில் விற்பனையாகியுள்ளன.

எல்பிஜியிலும் இயங்கும் வசதியை மாருதி நிறுவனமே செய்து தருவதால், குடும்பத்தினர் விரும்பி வாங்கும் காராக மாறியுள்ளது.

டாடா இன்டிகா

111256 கார்கள் விற்பனையாகி கடந்த ஆண்டில் 3 வது இடம் பெற்றுள்ளது டாடா இன்டிகா.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான முதல்கார் என்ற பெருமை இன்டிகாவுக்கு உண்டு. இந்தப் பிரிவில் மேலும் மேலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது டாடா.

மாருதி ஸ்விப்ட்

நவீன இளைஞர்கள், இளம் தொழிலதிபர்கள் விரும்பி வாங்கும் காராக மாறியுள்ளது இந்த யுகத்தின் காராக வர்ணிக்கப்படும் ஸ்விப்ட். மாருதியின் நடுத்தரப் பிரிவு கார்களில் அதிகம் விற்பனையாவது ஸ்விப்ட்தான்.

2009-ல் இதன் விற்பனை 110,071.

ஹூண்டாய் ஐ 10

106,095 கார்கள் விற்பனையானதன் மூலம் 2009-ல் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் 5-ம் இடம் கிடைத்துள்ளது ஐ 10-க்கு.

மைலேஜ், வசதி, ஓட்டுவதற்கு இலகுவானது என பல சிறப்புகளைக் கொண்டுள்ளது ஐ10.

சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதன் விற்பனை 91,478.

Wednesday, February 16, 2011

அட்டகாசமான ஸ்டைலுடன் எஸ்யூவீ கார்:மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம்



மும்பை: ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,ரூ.1.10கோடி விலை கொண்ட ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்சின் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோப்பிய சந்தையில் கலக்கிய பல மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே சி-கிளால்,இ-கிளாஸ்,எஸ்-கிளாஸ்,எம்-கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜி-55ஏஎம்ஜி அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் தேபஷிஷ் மித்ரா கூறியதாவது:

"ஜி-கிளாஸ் எஸ்யூவீ ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளோம்.காரை இந்தியாவில் முறைப்படி அறிமுகம் செய்வதற்கு முன்பே,15 வாடிக்கையாளர்கள் முழுப்பணமும் செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு இந்த மாத இறுதியிலிருந்து ஜி-கிளாஸ் டெலிவிரி கொடுக்கப்படும்.

ஜி-கிளாஸ் மாடலை ஐரோப்பிய பத்திரிக்கையாளர்கள் பெஸ்ட் எஸ்யூவீயாக தேர்வு செய்துள்ளனர்.
மற்ற முன்னணி எஸ்யூவீ கார்களைவிட ஜி-55ஏஎம்ஜி மாடல் பாதுகாப்பு அம்சங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ளது.

ஜி-55ஏஎம்ஜியில் பொருத்தப்பட்டுள்ள 5.5லிட்டர் வி-8எஞ்சின் 373 kW/507 hp திறனை வெளிப்படுத்தும்.இது 5.5வினாடிகளில் 100 kmphஐ எட்டிவிடும்.இதில்,அதிகபட்சம் 210 kmph வேகத்தில் செல்ல முடியும்,"என்று கூறினார்.


English summary
Mercedes-Benz India on Monday launched its top-end G-Class SUV, the G 55 AMG, with a price tag of Rs 1.1 crore (ex-showroom price). “Even before the official launch, we already had 15 confirmed bookings of the G 55 AMG,” said director, sales & marketing, of Mercedes-Benz India. He said all the confirmed customers had already made full payment and the imported vehicles from the company’s Stuttgart plant in Germany will be delivered to them by the end of February. The imported vehicles attract 102 per cent duty, he said.

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் போயிங் 747

அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய செகுசு விமானத்தை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
FILE



250 அடி நீளமுள்ள போயிங் 747-8 இண்டர்காண்டினென்டல் என்ற அந்த விமானத்தில் 467 பயணிகள் செல்லலாம். இது போயிங் நிறுவனத்தின் போட்டியாளரான ஃபிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏ380இல் செல்லக்கூடிய பயணிகள் எண்ணிக்கையை விட 51 பேர் அதிகமாகும்.

போயிங்கின் முந்தைய தயாரிப்பான 747-400 விமானத்தை விட இந்த புதிய அறிமுக விமானத்தின் சத்த அளவு 30 விழுக்காடு குறைவு என்றும், அதன் கரியமிள வாயு வெளிப்பாடு ஒரு பயணி அளவோடு மதிப்பீடு செய்கையில் 16 விழுக்காடு குறைவு என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.
FILE




“இந்த விமானத்தின் குறைந்த இயக்கச் செலவும், உள் அமைப்பும் பயணிகளை மிகவும் கவரும் என்று எதிர்பார்பதாக” போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜிம் ஆல்பாக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் போயிங் 747-8 விமானத்தின் முதல் தயாரிப்பு சேவைக்கு வரவுள்ளது. இதுவரை 33 விமானங்களுக்கு விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதில் லுஃப்தான்சா, கொரியன் ஏர் ஆகியனவும் அடக்கம் என்றும் போயிங் கூறியுள்ளது.

இந்த விமானத்தின் அறிமுக விலை 31.75 கோடி டாலர்களாகும் (ரூ.1,430 கோடி). இந்த புதிய விமானம் வாஷிங்டனில் உள்ள போயிங் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு நடுவில் கோலாகலமான விழா நடத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Friday, February 11, 2011

காவிரி நதி - சில தகவல்கள்

காவிரிநதியின் வரலாறு:

காவிரி நதி, கர்நாடக மாநிலத்தில், கூர்க் மாவட்டத்தில், பாகமண்டல் என்ற பகுதியில் உற்பத்தியாகிறது. இந்தப் பாகமண்டல், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து, 4,400 அடி உயரத்தில் உள்ளதாகும். இதன்கண், 31 ஆயிரம் சதுரமைல் பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த இடத்தில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென் மேற்குப் பருவமழையால், 100 அங்குலம் முதல் 250 அங்குலம் வரையில் மழைநீர் கிடைக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையால், 50 அங்குலம் மழை கிடைக்கிறது.

காவிரிநதியின் பயணதூரம்:

காவிரிநதியின் மொத்த நீளம் 802 கிலோ மீட்டராகும். இதில், காவிரி நதி கர்நாடக மாநிலத்தில் 381 கிலோ மீட்டர் தூரமும், தமிழ்நாட்டில் 421 கிலோ மீட்டர் தூரமும் ஓடுகிறது. காவிரிநதி, மைசூர், கொள்ளேகால், மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், பூம்புகார் (காவிரிப் பூம்பட்டினம்) வழியாக, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

காவிரிநதியின் உபநிதிகள்:

கர்நாடக மாநிலத்தில் உள்ளவை:

1. ஹேமாவதி; 2. ஹேகஸ்கி; 3. அரக்காவதி; 4. லட்சுமணதீர்த்தம் ஆகியன.

தமிழ்நாட்டில் உள்ளவை:

1. பவானி; 2. நொய்யல்; 3. அமராவதி ஆகியன.

காவிரிநதியின் குறுக்கே உள்ள அணைகள்:

1. கிருஷ்ணராஜசாகர்; 2. கபினி அணை; 3. ஹேமாவதி; 4. ஹேரங்கி; 5. மேட்டூர் அணை; 6. மேலணை; 7. கல்லணை; 8. கீழணை ஆகியன காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளாகும். இந்த அணைகளில், 1. கிருஷ்ணராஜ சாகர், 2. கபினி அணை; 3. ஹேமாவதி; 4. ஹேரங்கி ஆகிய அணைகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன.

1. மேட்டூர் அணை; 2. மேலணை; 3. கல்லணை; 4. கீழணை ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.

அணைகளின் கொள்ளளவு:

1. கிருஷ்ணராஜ சாகர், 45 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

2. கபினி அணை, 19 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

3. ஹேமாவதி அணை, 34 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

4. ஹேரங்கி அணை, 6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

5. மேட்டூர் அணை, 93.50 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாகும்.

மேட்டூர் அணை வரலாறு:

1924-ஆம் ஆண்டு, அப்போதைய மைசூர் அரசாங்கத்திற்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணையின் கட்டுமானப் பணி 1925-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி, 1934-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21-ஆம் தேதி முடிவுற்றது. அப்போதைய நிலையில் இந்த அணையைக் கட்டுவதற்கு ஏற்பட்ட செலவு ரூ 4 கோடியே 80 இலட்சமாகும். மேட்டூர் அணையை அப்போதைய சென்னை மாகாணத்தின் ஆளுநர், ஜார்ஜ் பிரிட்டரிக் ஸ்டான்லி திறந்து வைத்தார். அவருடைய நினைவாக, மேட்டூர் அணை, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றழைக்கப்படுகிறது.

சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. முன்பு இந்த அணையினால், தமிழ்நாட்டில் 20 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. அதாவது, திருச்சி மாவட்டத்தில் 2.74 இலட்சம் ஏக்கரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12.05 இலட்சம் ஏக்கரும், சேலம் மாவட்டத்தில் 4.66 ஏக்கரும் புதுக்கோட்டை, தென்னார்க்காடு மாவட்டத்தில் 2.70 இலட்சம் ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் மொத்த சாகுபடியே 16 இலட்சம் ஏக்கரில்தான் செய்யப்படுகின்றன. அதில் குறுவை 4 இலட்சம் ஏக்கரிலும், சம்பா 12 இலட்சம் ஏக்கரிலும் செய்யப்படுகின்றன.

(உங்கள் நூலகம் ஜூன் 2010 இதழில் வெளியான கட்டுரை)

சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்



சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

Tuesday, February 8, 2011

பெயர்ப்பலகைப் பெயர்கள் (NameBoard Names)

வ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் வணிக மையம்
2 கார்ப்பரேஷன் நிறுவனம்
3 ஏஜென்சி முகவாண்மை
4 சென்டர் மையம், நிலையம்
5 எம்போரியம் விற்பனையகம்
6 ஸ்டோரஸ் பண்டகசாலை
7 ஷாப் கடை, அங்காடி
8 அண்கோ குழுமம்
9 ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் மரக்கடை
18 பிரிண்டரஸ் அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்
24 காபி பார் குளம்பிக் கடை
25 ஹோட்டல் உணவகம்
26 டெய்லரஸ் தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் துணியகம்
28 ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் திரையகம்
30 வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் நிதியகம்
33 பேங்க் வைப்பகம்
34 லாண்டரி வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் கல்நார்
41 ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ தானி
43 ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்
45 பேக்கரி அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் மின்கலப் பணியகம்
47 பசார் கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி
52 பாய்லர் கொதிகலன்
53 பில்டரஸ் கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் கம்பிவடம், வடம்
55 கேபஸ் வாடகை வண்டி
56 கபே அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் சீட்டு நிதி
62 கிளப் மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் குளம்பியகம்
65 கலர் லேப் வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் கூட்டு நிறுவனம்
71 கூரியர் துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் மிதிவண்டி
74 டிப்போ கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்
82 பேக்டரி தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் விரை உணா
85 பேகஸ் தொலை எழுதி
86 பைனானஸ் நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் வண்ண அச்சகம்
93 லாட்ஜ் தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் நலம் பேணகம்
96 பேஜர் விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் கன்னெய், எரிநெய்
102 பார்மசி மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் விசைத்தறி
109 பவர் பிரஸ் மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் தாவளம், உணவகம்
112 ரப்பர் தொய்வை
113 சேல்ஸ் சென்டர் விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்
115 ஷோரூம் காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் வங்குநர்,
120 ஸ்டேஷனரி தோல் பதனீட்டகம்
121 டிரேட் வணிகம்
122 டிரேடரஸ் வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் தேனீரகம்
126 வீடியோ வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே ஊடுகதிர்

தமிழர் வரலாறு (Tamizhar History) Part IV

1923

தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது.

1924

ஜான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.

1925

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.

1926

தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார்.

1927-1981

கவிஞர் கண்ணதாசன் "சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்" இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். "காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை". ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார்.

1930

முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.

1930-1959

பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.

1931

காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார்

1932

சட்ட மறுப்பு இயக்கம் தொடக்கம். போப்பிலி அரசர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

1932

அக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது"- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.

1934

போப்பிலி அரசர் முதலமைச்சர் ஆனார்.

1937

1937 வரை நீதிக்கட்சியினர் பதவியில் நீடித்தனர். நீதிக்கட்சியினரின் சாதனைகள். ஓர் இனத்தாரின் ஏகபோக பதவிக் குத்தகையை ஒழித்தது. உயர் பதவிகள் எளிதில் எல்லா இனத்தாருக்கும் கிடைக்க வழி வகுத்தது.

எளியோர் கல்வி பெற கட்டணச் சலுகையும் நிதி உதவியும் அளித்தது. பேரூர்களுக்கும், சிற்றூர்களுக்கும் கல்வி கிடைக்க தொடக்கப்பள்ளி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925

ஆந்திர பல்கலைக்கழகம் உருவாகியது.

1928

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.

1921

பெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1937

சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச்சர் அவை சென்னை மாநிலத்தில் சுயாட்சியை நட்த்தியது. மதுவிலக்குச் சட்டத்தால் மக்களுக்கு நன்மை செய்தது.

1938

ஆலயம் புகும் சட்டம் சாமான்யர்களுக்கு சமய விடுதலை அளித்தது இந்தி கொள்கை இந்தி எதிர்ப்பை வரவழைத்தது. இந்தி எதிர்ப்பு கொள்கையால் பெரியார் சிறைக்குச் சென்றார்.

1938

தமிழியக்கம் இராசக்காமங்கலத்தில் தோன்றியது. இந்திக் கொள்கையின் தூண்டுதலால் திராவிட நாடு கொள்கை உருவானது.

1939

தாளமுத்து. மொழி காக்கும் பணியில் தன்னுயிர் ஈந்தத் தமிழர்.

1939

இரண்டாம் உலகப் போர் ஆரம்பம்.

1940

திராவிடநாடு கொள்கை வடிவம் பெற்றது.

1942

'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் வலுபெற்றது.

1944

சேலம் மாநாட்டில் திராவிடக் கழகம் உருவானது.

1945

மத்தானியேல் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கினார். தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் இயக்கம் முழுவடிவில் இயங்கியது. 1945 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு போட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவு. இறந்தோர் எண்ணிக்கை 6 மில்லியன்.

1947

காவல் துறையினர் திட்டமிட்டு தாய்த் தமிழக இயக்கத்தை ஒழிக்க முனைந்தனர். மக்கள் பொங்கி எழுந்தனர். மாங்காட்டுச் செல்லையா, தேவசகாயம் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர்.

1947

ஓமந்தூர் இராமசாமியின் தலைமையில் அமைச்சரவை ஏற்பட்டது.

1947

ஆகஸ்ட்டு திங்கள் 14 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றது. திராவிட பண்பாடு தொடர்பானவர்கள் பெரும்பாலோர் தமிழகத்தில் சமூகத் தீமைகளாலும், சாதித் தீமைகளாலும் நசுங்கித் தீர்வுகாணாது தவித்தனர் என்பது வரலாற்று உண்மையானது. மனோன்மணியம் சுந்தர்ம், ந.கந்தையா திராவிடர் பண்பாட்டுப் பழமையை, பெருமையை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தினர்.

1948

நாட்டின் தந்தை மகாத்மா, கோட்சே என்ற இந்து வட இந்தியரால் சனவரி 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1948

இலங்கை ஆங்கிலக் கட்டுக்குள் உட்பட்ட தனி நாடாகியது.

1948

மிராசு, ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது.

1949

திராவிட முன்னெற்றக் கழகம், "அண்ணா" என தமிழர்களால் பெருமையுடன் அழைக்கப்பெறும் தமிழ்ப் பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் உருவானது.

1949

அம்பேத்கர் முன்னணியில் இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டது. தீண்டாமை ஒழிப்புச் சட்டமும் நிறைவேறியது.

1949

குமாரசாமி ராஜாவின் அமைச்சரவை பொறுப்பு ஏற்றது.

திராவிடர் கழகம். சமூகச்சீர்திருத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியது. மூட நம்பிக்கைகள் திராவிடர்களின் தாழ்வுக்குக் காரணம் என்பதை முன் வைத்தது. தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியது. பெண்ணுரிமை, மகளிர் கல்வி, விருப்ப மணம், விதவை மணம், அனாதை இல்லம், கருணை இல்லம், என்பன கழகத்தின் முக்கிய நோக்கங்களாயின.

1952

இராஜாஜி தலைமையில் ஆட்சி. குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் பணியில் தோல்வியுற்று பதவியை இழந்தார்.

1952

தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம் சித்தூர் மாவட்டப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க உரிமைக்குரல் எழுப்பினார்.

1954

ஏப்ரல் 13 ஆம் நாள் பெரியாரின் நல்லாசியுடன் தமிழர் தலைவர் கு.காமராஜர் முதல்வரானார். "ஏழைக்குக் கல்விக் கண் திறந்தவர்" காமராஜர் என்ற புகழ் இவரைச் சூழ்ந்தது.

1955

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் (1879 - 1955) மறைவு. தமிழ்நாடு கண்ட நடராசர் சிலையே உலகின் தலைசிறந்த வேலைப்பாடு என்றவர் இவர்.

1961

சென்னை மாநிலத்தை "தமிழ் நாடு" என்று பெயர் மாற்றல் செய்ய வேண்டுமென 78 நாட்கள் உண்ணா நோன்பு கொண்டு தன்னுயிரையும் ஈந்த தமிழர் "சங்கரலிங்கம் மான்பு தமிழகத்தைக் கண்ணீர்க் கடலில் மூழ்கடித்தது.

1962

காமராஜரின் அமைச்சரவை மூன்றாம் முறை பதவி ஏற்றது. அகில இந்திய அளவில் காமராஜர் திட்டம் வந்தது. காமராஜர் கட்சிப் பணி ஆற்றச் சென்றார்.

1962

அக்டோபர் 3 ஆம் நாள் பக்தவத்சலம் தலைமையில் அமைச்சரவை.

1963

அறிஞர் அண்ணா தலைமையில் இந்தி எதிர்ப்புப் போர் அரசியல் சட்ட எரிப்பு.

1964

மொழி காக்க திருச்சியில் தமிழ் மகன் சின்னச்சாமியின் தியாகத் தீக்குளிப்பு.

1964

ஜனவரி 26 ஆம் நாள் மொழி காக்கும் போராட்டத்தில் தன்னுயிரினையே தந்த தமிழ்மகன் சிவலிங்கம் சென்னையில் தீக்குளிப்பு.

1965

ஜனவரி 26 ஆம் நாளை இந்தித் திணிப்பு நாள் என அறிவித்து, திராவிடர் முன்னேற்றக் கழகம் துக்க நாளென்று அறிவித்து அமைதி ஊர்வலம் நடத்தியது.

1967

மார்ச் 6 ஆம் நாள் தமிழ்நாட்டில் 138 சட்டமன்ற இடங்களுடன் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. உடன் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"ம் தமிழக ஆட்சியில் அமர்ந்தது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நட்த்தினார். சென்னை மாநிலம் 1967 ஜூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் பெற்றது. இப்பணி எதிர்நோக்கி தன்னுயிர் ஈன்ற சங்கரலிங்கம் மனம் அமைதி அடைந்திருக்கும். சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1965ல் மொழி காத்தல் என்ற உறுதியுடன் தம் உயிர் ஈந்த தமிழர்க்கு மதிப்பளித்து இருமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திக்குத் தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற நிலை முடிவானது.

1969

பிப்ரவரி 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பணி ஆற்றினார். தொடர்ந்து முறையாக கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மீட்பும், உயர்விடமும் கிடைத்தன. உயர் கல்வியையும், நிர்வாக நடைமுறைகளையும் எளிமை ஆக்கியது. தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டு உலகுக்கு எடுத்தியம்ப உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சென்னையில் நிறுவினர். கோயில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக்கினர். மாநிலங்களுக்கு சுயாட்சி கோரினர்.

1972

அக்டோபர் 15 ஆம் நாள் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அண்ணா திராவிட முண்ணேற்றக் கழகம் தோன்றியது.

1977

தி.மு.க. அரசு இந்திய அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டது, மக்களாட்சி முறையில் ஏற்பட்ட களங்கம்.

1977

எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வரானார்.

1978

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துண்வுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. சிங்கள நாட்டிலிருந்து 100,000 தமிழர்கள் குடியுரிமை நீக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்திய அரசும் தமிழர் சம்மதமின்றி இதற்கு உடன்பட்டு ஒத்துழைத்தது.

1981

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தஞ்சை, திருச்சி, கோயம்புத்தூரில் பல்கலைக்கழகங்கள் தோன்றின. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் பெண்களுக்கு அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் - பாரதிதாசனார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் - பாரதியார் பல்கலைக்கழகம்.

1983

புத்த மதம் சார்ந்த சிங்கள வெறியர்கள் தமிழ்ஈழ மண்ணில் வெறியாட்டம். 37 தமிழர்கள் ஈழச்சிறையில் படுகொலை செய்யப்பட்டனர். சாத்வீகம் சாத்தியமில்லை என்ற நிலையில் தமிழர்கள் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயுதம் தாங்கிய மறவர் பொறுப்பெற்றனர்.

" தமிழீழ விடுதலைப் புலிகள்" தமிழீழ தமிழர் உரிமை காக்கும் பணியில் தம் விலை மதிக்கவொண்ணா உயிர்க்கொடைக்கும் தயாராயினர்.

1983

பெண்களுக்கான பொறியியற் கல்லூரி உலகில் முதல் முறையாக தந்தை பெரியார் - மணியம்மை பெயரில் வல்லம், தஞ்சையில் நிறுவப்பட்டது.

1990

கிழக்கு, மேற்கு ஜெர்மனியின் "பெர்லின் தடுப்புச் சுவர்" பிப்ரவரி 12 ஆம் நாள் தகர்க்கப்பட்டது.


1990

உருசிய நாடு பொது உடைமை நிலை மாற்றப்பட்டு பல்வேறு கூறுகளாக, 12 குடியரசு நாடுகளாயின.

1992

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

1997

கலைஞர் மு.கருணாநிதி தமிழக்த்தின் முதல்வரானார்.

2000

உலக மக்கட் தொகை 6200 மில்லியன். தமிழ் நாட்டின் மக்கட் தொகை 42 மில்லியன். உலக வாழ் தமிழர் எண்ணிக்கை 70 - 75 மில்லியன்.

2001

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

2006

கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

2009

இலங்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகள்" தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டது. ஆனால் சில நாட்களில், அவர் உயிருடன் இருப்பதாக "தமிழீழ விடுதலைப் புலிகள்" அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிக்கை வெளியிட்டது.

தமிழர் வரலாறு (Tamizhar History) Part III

கி.பி. 1677

விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706

இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1700

உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.

கி.பி. 1705-1742

தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.

புதைபடிவ மனிதர்கள்.

மேல் வரிசை - மாக்ன்னியன்
நடு வரிசை - நியாண்டெர்தல்
கீழ் வரிசை - சீணாந்திரோப்பஸ்
(மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி.பி. 1706

மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.

கி.பி. 1712

மருத பாண்டியன் சாதாரண நிலையிலும் தோன்றி திறமையாலும் தொண்டாலும் சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன். அரசியல் முன்னோக்குப் பார்வையும், செயல்வன்மையும், பெற்று சிவகங்கையின் ஒப்பற்ற தலைவன் ஆனார். 1712 ல் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடிக்கவிருந்த சிவகங்கையை மீட்டார். அதைப் பழைய அரச குடும்பத்திடம் ஒப்படைத்தார்.

இராமநாதபுரத்து மேலப்பனும், சிங்கம் செட்டியும், முத்துக் கருப்பனும், தஞ்சை ஞானமுத்துவும் மருது பாண்டியனின் தலைமையை ஏற்றனர், திருநெல்வேலியில் உள்ள பாளையக்காரர்களின் பக்க வலிமையையும் சேர்த்துக்கொண்டு புரட்சிக்காரர்களின் கூட்டிணைப்பு ஒன்றினை உருவாக்கினார், வரிகொடா இயக்கம் இராமநாதபுரத்தில் துவங்கியது. மேலப்பன் தீவிரவாதியாக மாறினார். சிறைக்கு சென்று பின்னர் தப்பித்தார். இராமநாதபுரத்தில் வரிகொடா இயக்கத்தை துவங்கினார்.

கி.பி.1751

ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.

கி.பி.1760 ஏப்பிரல் 4

பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்

கி.பி.1761

புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கி.பி.1761

திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினான். 1761-ல் தோற்கடிக்கப்பட்டான்.

கி.பி.1761

சகவீர பாண்டியன் மகன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் முப்பதாவது வயதில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மருது பாண்டியர்களுடன் நல்லுறவில் இருந்தார்.

கி.பி.1795-1799

பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.

கி.பி.1799

திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

கி.பி.1799

செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மன் மேஜர் பார்னனுக்கு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை காட்டில் மறைந்திருந்தான். காலப்பூர் என்ற காட்டிலிருந்த கட்டபொம்மனைப் புதுகோட்டை அரசன் விஜயரகுநாதத் தொண்டைமான் கைது செய்து ஒப்படைத்தான்.

கி.பி.1799

அக்டோபர் 16 - ஆம் தேதி கயத்தாற்றில் வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டான். கடைசி நிமிடத்திலும் வீரத்தைக் காட்டி, இன உயர்வை நிலைநாட்டி விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தினான். பானர்மன் எழுதிய அறிக்கையில் "வீரபாண்டியக் கட்டபொம்மன் பகைவரும் போற்றும் பண்பிலும் வீரத்திலும் சிறந்திருந்தார். என எழுதப்பட்டிருக்கிறது.

கி.பி.1799

புரட்சிக்காரர்கள் காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பெற்றனர். பண்டாரகங்களைச் சூறையாடிப் பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவு அளித்தனர். பாலமனோரியில் நடைப்பெற்ற போரில் சிங்கம் செட்டி கொல்லப்பட்டான்.

கோபாலநாயக்கர்:
திப்பு சுல்தான் படைத் துணையுடன் கோபாலநாயக்கர் கண்காணிப்பில் புரட்சிக்காரர்கள் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்பு பண்டங்களையும் பறித்தனர். விருப்பாட்சி பாளையக்காரராக விளங்கியவர் கோபால நாயக்கர். மருதபாண்டியருடனும் அண்டை தேசத்து துண்டாசியுடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்புடன் தென்னக கூட்டினை உருவாக்கினார். மருதபாண்டியன் தலைமையில் இராமநாதபுரம் சீமையானது. கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டிணைவுகளுடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூண்டாசியும் கிருட்டிணப்ப நாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் புரட்சித்தலைவர்களாக உருவாகி கூட்டிணைப்பு மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் தேபக்தர்கள் இயங்கினர். ஈரோட்டு மூதார் சின்னனும், கானி சாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள்.

கி.பி.1800

இந்திய மக்கட் தொகை 200 மில்லியன்

கி.பி.1800 - 1801

தென்னிந்திய விடுதலைப்புரட்சி (முதல் விடுதலை போராட்டம்) உருவானது. மன்னர்கள் செயலிழந்தனர். பாளையக்காரர்கள் மக்களின் நலன்களைப் பேணி உரிமைகளைக் காத்து நின்றனர். கோட்டைகளையும் படைபலத்தையும் கொண்டு மக்கள் தொடர்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். அயலார் ஆதிக்கத்தை ஏற்கவில்லை. திராவிட பண்பாட்டு நிறுவனங்களும், ஆங்கிலேய பண்பாட்டு நிறுவனங்களும் மோதின.

கி.பி.1800 - 1801

தமிழகத்தில் நடைப்பெற்ற முதல் விடுதலை போராட்டம், மருதபாண்டியனின் ஸ்ரீரங்கம் அறிக்கை, இந்திய விடுதலை இயக்கவரலாற்றின் துவக்க விழாவாகவும் எல்லைக் கல்லாகவும் அமைந்தது.

கி.பி.1801

மே22, பாஞ்சாலங்குறிச்சியில் போர், மழை, இடி, புயல், ஏற்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. ஊமைத்துரை காயங்களுடன் கமுதியை அடைந்தபோது மருத பாண்டியன் வரவேற்பு அளித்தான்.

பருமனில் உதடுகளின் வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகள் (முகப்பு தோற்றமும் இடப்புறத் தோற்றமும்):

1 - மெல்லியவை
2 - நடுத்தரமானவை
3 - பருத்தவை
4 - உப்பியவை

கி.பி.1801

அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, சின்ன மருது, செவத்தம்பி, முத்துக்கருப்பன் என பலரும் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

கி.பி. 1801

நவம்பர் மாதம் 16ஆம் நாள் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் கொல்லப்பட்டான்.

கி.பி. 1802-1857

சென்னை (தற்போதைய தென் இந்தியா) மாநிலத்தை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி செய்தது.

கி.பி. 1804

இராமசாமி என்ற தாசன் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது.

கி.பி. 1806

சூலை 10 ஆம் நாள் வேலூரில் சிப்பாய்க்கலகம்.

கி.பி. 1812

நெப்பொலியன் உருசிய போரில் மிகுந்த சேதத்துடன் திரும்பினான். 500,000 போராளிகளில் 20,000 போராளிகளே உயிருடன் திரும்பினர்.

கி.பி. 1814

முதல் புகை வண்டி விடப்பட்டது.

கி.பி. 1820

அமெரிக்காவை முதல் புலம் பெயர்ந்த இந்தியர் அடைந்தார்.

கி.பி. 1822-1892

யாழ்ப்பாணத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் காலம். வேதங்களுடனும், ஆகமங்களுடனும் ஒத்து நோக்க தமிழில் பைபிளை மொழி பெயர்த்தார்.

கி.பி. 1823-1874

இராமலிங்க வள்ளலார் காலம். வடலூர் சத்திய சன்மார்க்க சபை அமைத்தவர். போலிக் கடவுட் தன்மையினை சாடியவர். மனித நேயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்.

கி.பி. 1825

அதிக அளவு தமிழர்கள் ரியூனின், மொரிசியஸ் தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1835

19,000 தமிழர்களும் மற்றவர்களும் மொரிசியஸ் தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1841

தென்னாற்காடு மாவட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.

கி.பி. 1852

சென்னை தன்னுரிமை நலக்கழகம் தொடங்கப்பட்டது.
மெக்ஸிக்கோவைச் சேர்ந்த அத்ஸேக் இந்தியன்.
(மங்கோலிய வகைப் பெரிய இனத்தின் அமெரிக்க கிளை).

கி.பி. 1856

கத்தோலிக்க பாதிரியர் கால்டுவெல்டு "திராவிடர்" என்ற சொல் தென்னிந்தியரைக் குறிப்பதாகும் எனக் குறிப்பிட்டார்.

கி.பி. 1857

இந்தியச் சிப்பாய் கலகம்.

கி.பி. 1860

தமிழ் மக்களும், வங்காள மக்களும் இந்திய, ஆப்பிரிக்க ஆங்கிலேயரிடையே ஏற்பட்ட 51 வருட உடன்படிக்கையால் தோட்டத் தொழில் செய்ய ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1869-1948

நாட்டின் தந்தை எனப்படும் மகாத்துமா காந்தியின் காலம். கத்தியின்றி இரத்தம் இன்றி சாத்வீக வழியில் இந்திய ஆளுரிமையைப் பெற்றுத் தந்தவர்.

கி.பி. 1875

சீமாட்டி பிளாவிட்சுகி சென்னை அடையாற்றில் கடவுணர்வு சங்கம் அமைத்தார். அன்னிபெசன்ட் அம்மையார் இந்த அமைப்பில் 1907-1933ல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

கி.பி. 1876

கிரகம் பெல் தொலைபேசி கண்டுபிடித்தார்.

கி.பி. 1877

ஈழ நாட்டின் ஆனந்த குமாரசாமி காலம். தமிழக ஓவியக் கலைகளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.

கி.பி. 1879

தாமசு ஆல்வா எடிசன் (1847-1931) மின் விளக்கு கண்டுபிடித்தார்.

கி.பி. 1879-1950

இரமண மகரிசி காலம். திருவண்ணாமலை முனி எனப்பட்டவர்.

கி.பி. 1885

இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

கி.பி. 1885

விசையுந்து வண்டி கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மனியரால் செய்யப்பட்டது.

கி.பி. 1887-1920

இராமானுஜம்; உலகப் புகழ் கணித மேதை. ஈரோடு தமிழ் நாட்டில் பிறந்தவர்.

கி.பி. 1888-1952

சி.பி. இராதாகிருட்டிணன் காலம். இந்திய இரண்டாம் குடியரசுத் தலைவர்.

கி.பி. 1888-1970

சி.வி. இராமன்; ஆராய்ச்சியாளர். முதலாவதாக நோபல் பரிசு பெற்ற தமிழர்.

கி.பி. 1894

இந்தியர்களை வெளிநாடுகளுக்குக் கட்டாய வேலைக்காக அனுப்புவது நிறுத்த மகாத்மா செய்த மனு வெற்றியானது

கி.பி. 1893-1974

அறிவியல் அறிஞர் ஜி.டி நாயுடு காலம். தமிழ் நாட்டின் தொழில் நிறுவனர் ஆராய்ச்சியாளர்.

கி.பி. 1894-1977

தமிழீழத் தந்தை செல்வா காலம். வாழும் தமிழர் எங்கும் தன்னுரிமையுடன் இருக்க வேண்டும் என்று தன்னலமற்ற உழைப்பை நல்கியவர்.

கி.பி. 1897

சுவாமி விவேகானந்தா இராமகிருட்டிண மடத்தை நிறுவினார்.

கி.பி. 1898-1907

காலராவில் 370,000 மக்கள் உயிரிழ்ந்தனர். இருபதால் நூற்றாண்டில் தமிழ்நாடு. சென்னை மாநிலம் குமரிமுனை முதல் ஒரிசாவரையிலும், மலபார்கன்னடப்பகுதிகள், ஆந்திரதேசமும் இணைந்து விளங்கியது. இருபதாம் நூற்றாண்டு பிரச்சினைகளுடன் அடியேடுத்து வைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களிடையே பண்பாட்டுணர்வும், பண்பாட்டு முனைப்பும் மேலோங்கி இருந்தன. பாரதியாரின் புரட்சிக்குரலும், வ.உ.சிதம்பரனார் இயக்கங்களும் மக்களை இழுத்தன. உரிமைக்குரல் கொடுக்க இனவாரி அமைப்புகள் தோன்றின.

கி.பி. 1900

செப்டெம்பர் 10 ஆம் நாள் தஞ்சை, மன்னார்குடி, மயிலாடுதுறை இணைத்து தஞ்சை மாவட்டம் ஆக்கப்பட்டது.

1902-1981

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் காலம். அவர் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்கள் பல.

1905-1912

தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் தலைமையிலும் 1913 முதல் 1919 வரை பல தலைவர்கள் தலைமையிலும் விடுதலை இயக்கம் புரட்சிப்பாதையில் முன்னேறியது.

1905

பாரதியார் பொது மேடைகள் வழியாகவும் மையூற்றி முனை மூலமாகவும் தேசிய உணர்ச்சியைத் தூண்டினார்.

1908

தூத்துக்குடியில் அயலார் கப்பல் ஆதிக்கத்தை வ.உ.சிதம்பரனார் தலைமையில் எதிர்த்தனர்.

1908-1957

என்.எஸ்.கிருட்டிணன் காலம். வெள்ளித்திரை மூலமும் பாமரமக்களுக்கு பகுத்தறிவு படைக்கமுடியும் என்ற அப்பட்டமான உண்மையைப் புலப்படுத்தியவர். தற்கால நகைச்சுவைக்கு இலக்கணம் படைத்தவர்.

1910

வ.வே.சு.ஐயர் நாடு விடுதலை வேண்டி. தியாகப்பலிக்கு தயாராகுங்கள். 'பாரத மாதா அழைக்கின்றாள்' '1857 திரும்புகிறது' ஆகிய புத்தகங்கள் வெளியிட்டார். உருசியாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிப்பதை கற்றுவந்தார். சிறந்த தமிழறிஞர். கம்பனுக்கும் வள்ளுவருக்கும் உரை கண்டவர்.

1910-1998

சந்திர சேகர்; ஆரயிச்சியாளர். நோபல் பரிசு பெற்ற இரண்டாம் தமிழர்.

1911

சூன் 17 ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆசுதுரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தன்னுயிரையும் போக்கிக் கொண்டார்.

1912

திராவிடர் அமைப்பு தோன்றியது. 1916 டிசம்பரில் தென்னிந்தியர் நல உரிமைக்கழகம் தோன்றியது. பின் நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. வைதீகர் ஆதிக்கத்தாலும், சாதிக்கொடுமையாலும் புண்பட்டிருந்த மக்களிடத்தில் தனித்தமிழ்ப் பற்று ஏற்பட்டது.

1912-1974

மு.வரதராசனார் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவருக்குத் தனியிடம் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன் முதலாக பேரறிஞர் (டாக்டர்) பட்டம் பெற்றவர். 85 நூல்கள் எழுதியுள்ளார்.

1916

அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.

1917

உருசியாவில் லெனின் தலைமையில் செஞ்சட்டையினர் ஆட்சி அமைத்தனர்.

1918

திரு.வி.கலியாணசுந்தரனார், கேசவபிள்ளை, வாடியா முதலியோர் சென்னையில் முதல் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினர்.

டாக்டர் டி.எம்.நாயர், தியாகராக செட்டியார், கேசவப்பிள்ளை, நடே முதலியார் போன்றோர் சாமானியர் உரிமைகளுக்காகவும், வைதீகர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் இயக்கங்களில் ஈடுபட்டனர்.

1918

முதல் உலகப் போர் முற்றுப் பெற்றது.

1920

தன்னாட்சி கட்சி (Home Rule League) தோற்றுவிக்கப்பட்டது. சுப்புராயுலு தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. வில்லிங்டன் சென்னை ஆளுநர்.

1921

தேவதாசியர் என்ற பெண்ணடிமை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது. பெண்கள் ஓட்டுரிமை பெற்றனர்.

1922-1988

அகிலன் பிறந்தது பெங்களூர், புதுக்கோட்டை மாவட்டம். 1938லிருந்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர். அவருடைய 'பெண்' என்ற நாவல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் அதன் முதல் ஆண்டிலேயே முதற் பரிசை பெற்றது. அதைத் தொடர்ந்து அவருடைய நாவல் படைப்புகள் ஞானப்பீடப் பரிசு, சாகித்திய அகதமிப் பரிசு, நேரு பரிசு, போன்ற ஏராளமான பரிசுகளைப் பெற்றன. அவருடைய படைப்புகள் வார்த்தைகளால் கட்டப்பட்ட கலை வடிவங்கள்.

தமிழர் வரலாறு (Tamizhar History) Part II

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10

உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42

குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100

சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.

கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53

ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105

சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107

ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175

வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200

கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)
மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.



கி.பி.180

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200

இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275

வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300

மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700

தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700

தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358

துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400

மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419

பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535

தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632

முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631

சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900

வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610

நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644

சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.
தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன்
படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.


கி.பி.641-645

அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650

திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788

ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800

இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825

சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850

மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900

குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.

பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900

இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000

உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000

சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000

பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000

துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.

கி.பி.1010

சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137

தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

கி.பி.1024

முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040

சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150

வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197

நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60

ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232

போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250

சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369

தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272

மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296

அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300

கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311

தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378

மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340

போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.

சம்புவராயர்கள்

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".

கி.பி.1336

விஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1336

அரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1336

விஜய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1337

உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350

தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440

ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538

சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492

கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498

போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500

திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500

புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500

உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509

தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510

போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546

நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565

விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595

ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601

கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619

யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1619

அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659

திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680

மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688

திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650

சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 - 1856

சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.