Saturday, August 20, 2011

அஷ்டமியில் அவதரித்த கண்ணன்


தர்மம் எங்கெல்லாம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே நான் அவதரிப்பேன் என்று மகாவிஷ்ணு பகவத் கீதையில் அருளியுள்ளார். இறைவனின் அருள் வார்த்தை ஒவ்வொரு யுகங்கள் தோறும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிருத யுகத்தில் இரணியகசிபுவை அழிக்க திருமால் நரசிம்மமாக அவதரித்தார். எடுத்தார் . திரேதா யுகத்தில் ராவணனையும் கும்பர்ணனையும் அவனுடன் சேர்ந்த அரக்கர்களையும் கொல்ல ராமனாக அவரித்தார். துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன் , துரியோதனன், நூற்றுக்கணக்கான கௌரவர்களுடன், கர்ணனையும் சேர்த்து அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு.

அவதார நோக்கம்

ஆவணிமாதம், அஷ்டமி திதியுடன் கூடிய ரோகினி நட்சத்திர நன்னாள் அந்த இறைவன் அவதாரம் செய்த நாள் என்பதால் புண்ணியம் தேடிக்கொண்டது. அன்றுதான் தன் தாய்மாமன் கம்சன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து மண்ணுலக மக்களை காக்க மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்.

தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா. அதன்படி வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாய் கண்ணனை பிறக்க வைத்து தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

கிருஷ்ணாவதாரம்

தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகியை கொல்ல முயன்ற போது அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி சிறையில் அடைத்து அவர்களை கண்காணித்த கம்சன், தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.

அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே அருள்வாக்களித்தார்.

அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் குழந்தை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.

அவதார தின கொண்டாட்டம்

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணன், கோபியர்களைப் போல அலங்கரித்தும் மகிழ்கின்றனர். கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த நாளில் உரியடித் திருவிழாவும், மனித பிரமிடுகளை எழுப்புதலும் நடைபெறும். அதாவது மிக உயர்ந்த இடத்தில் வெண்ணை நிரப்பப்பட்ட பானை கட்டி தொங்கவிடப்படும். அதை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி - பிரமீது போன்ற தோற்றத்தில் - அந்த பானையை உடைத்து அதில் இருக்கும் வெண்ணையை உண்பது சிறப்பம்சமாகும்.

இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார் நாராயணமூர்த்தி

டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி இன்றுடன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 20ம் தேதியான நாளை அவருக்கு 65 வயது பிறக்கிறது. இதையடுத்து இன்றுடன் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நாளை அவர் தலைவர் பதவியை கே.வி.காமத்திடம் ஒப்படைக்கிறார். நாராயணமூ்ர்த்தியின் ஓய்வின் மூலம் இன்போசிஸ் நிறுவன வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் பிறந்துள்ளது.

இந்தியாவின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்று இன்போசிஸ் விளங்குவதற்கு நாராயணமூர்த்தியின் பங்குமிகப் பெரியது.

1981 ம் ஆண்டு வெறும் 10,000 ரூபாய் முலீட்டில்-அதிலும் கூட பெரும்பாலான தொகை மனைவி சுதாவிடமிருந்து நாராயணமூ்ர்த்தி கடனாக வாங்கியதுதான்-இன்போசிஸ் நிறுவனத்தை புனேவில் தொடங்கினார் நாராயணமூர்த்தி. அப்போது அந்த நிறஉவனத்தில் 6 என்ஜீனியர்கள் மட்டுமே நாராயணமூர்த்தியுடன் இணைந்தனர்.

21 ஆண்டு காலம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமை செயலதிகாரியாகவும் செயல்பட்டார் நாராயணமூர்த்தி. 2002ம் ஆண்டு மார்ச் மாதம் நந்தன் நிலகேனி தலைவர் பொறுப்புக்கு வந்தார். இருப்பினும் பின்னர் அவர் மத்திய அரசின் பணிக்குச் சென்று விட்டார்.

உலக அளவில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றாக இன்று இன்போசிஸ் விளங்குகிறது. முதல் முறையாக அமெரிக்காவின் நாஸ்டாக்கில் இன்போசிஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டபோது, நாஸ்டாக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமையை அது பெற்றது.

இன்போசிஸுக்கு மட்டுமல்லாமல், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் மிகப் பெரிய பங்காற்றியவர் நாராயணமூர்த்தி. பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாறியதில் இன்போசிஸின் பங்கும் மிக முக்கியமானது. அந்த வகையில் நாராயணமூர்த்தியின் பங்கு இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் மறக்க முடியாதது, வலுவானது.

இன்றுடன் தனது பணியிலிருந்து ஓய்வு பெறும் நாராயணமூர்த்திக்கு பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தலைமையகத்தில் சிறப்பான பிரிவுபச்சார விழா நடைபெறுகிறது. இதில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை. அதேசமயம், இன்போசிஸ் நிறுவனத்தை நாராயணமூர்த்தியுடன் இணைந்து தொடங்கிய 7 இணை நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் புள்ளிகளும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

1946ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிறந்த நாராயணமூர்த்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் பிஇ பட்டம் பெற்றார். பின்னர் கான்பூர் ஐஐடியில் எம்.டெக் படிப்பை முடித்தார். 10,000 ரூபாய் முதலீட்டில் நிறுவனத்தை தொடங்கிய நாராயணமூர்த்தி இன்று ரூ. 27,000 வருவாயுடன் கூடிய இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக நிறுவனராக ஓய்வு பெறுகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பஸ்சிம் பங்கா என மாற்றப்படுகிறது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இனி மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் பங்கா என அழைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வரும்.

மேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் West Bengal என வருவதால் அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருப்பதாகவும், இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்றும் புகார்கள் கிளம்பின. நமது மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அங்கு கோரிக்கைகள் கிளம்பின.

இதுகுறித்து இடதுசாரி கூட்டணி ஆட்சி இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரினமூல் அரசு இதுகுறித்த கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்தது.

இதையடுத்து மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் சூரிய காந்த மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்பட்டு புதிய பெயர்களைப் பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

அக்குழுவும் பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து கடைசியாக பங்களா, பஸ்சிம் பங்கா, பங்க பிரதேஷ், பங்கபூமி ஆகிய நான்கு பெயர்களை இறுதிப்படுத்தி அரசிடம் கொடுத்தது.

இந்தப் பெயர்கள் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. அதிலிருந்து இறுதியாக பஸ்சிம் பங்கா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றவுடன் அமலுக்கு வரும்.

சமீபத்தில்தான் ஒரிசா மாநிலத்தின் பெயர் ஒடிஷா என மாற்றப்பட்டது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது. அதேபோல சென்னை, பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களின் பெயர்களும் கூட மாற்றம் கண்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பஸ்சிம் பங்கா என மாறுகிறது.

பஸ்சிம் என்பது வங்க மொழியில் மேற்கு என்று பொருள். அதாவது இதுவரை ஆங்கிலத்தில் அழைத்து வந்த பெயரை தற்போது வங்க மொழியில் மாற்றியுள்ளனர். எனவே இதுவரை டபிள்யூ என்று ஆரம்பித்த இம்மாநிலத்தின் ஆங்கிலப் பெயர், இனி பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.

Saturday, August 13, 2011

சகோதரிகள் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழா கொண்டாட்டம்


சென்னை: உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழாவை இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களிடையேயும் சகோதர அன்பை பகிர்ந்துக் கொள்ள அன்பின் பிணைப்பாக கட்டப்படுவது, ராக்கி. ராக்கி கயிறுகளை ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவார்கள். இதன் மூலம் அந்த ஆண், ராக்கி கட்டிய பெண்ணுக்கு சகோதரன் முறையாகிவிடுகிறான்.

வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா, தமிழகத்திலும் சமீபக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஆவணி மாத துவக்கத்தில் வரும் பவுர்ணமி அன்று இது கொண்டாடப்படுகிறது.

ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மகாபலி, தனது நாட்டை விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான். அதையேற்றுக் கொண்ட விஷ்ணு, வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

கணவனை காணாத லட்சுமி, மகாபலியின் நாட்டிற்கு வந்தார். அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார். பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு, தனது நிலையை கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த மகாபலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தான். இந்த கயிறே பின்னாளில் ராக்கி கயிறாக மாறியதாக கூறப்படுகிறது.

ராக்கி கட்டும் போது, சகோதரரின் சுக வாழ்விற்காக சகோதரிகள் சாமியை வேண்டுகின்றனர். அதன்பின், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டுகின்றனர். கயிறு கட்டும் போது, சகோதரிகளுக்கு அன்பின் காணிக்கையாக பணம், நகை, பரிசுப் பொருட்களை சகோதர்கள் அளிக்கின்றனர். ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து, ராக்கி காட்டும் பழக்கம் சகோதர அன்பை தெரிவிப்பதன் ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 11, 2011

செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்!

செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

புராணக் கதை

பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

Wednesday, August 3, 2011

வினாயகர் அகவல்;


வினாயகர் அகவல்;

சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலணி அதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக் கொன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே!

Tuesday, August 2, 2011

சூடிக்கொடுத்த சுடர்கொடியாளுக்கு திருவிழா

வைணவ தலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஆடிப்பூரமும் ஒன்றாகும். பன்னிறு ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் 8 நாள் சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை தினம் ஒரு அலங்காரத்தில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் வாகனங்களில் நகர்வலம் வருவதைக் காண கண்கோடி வேண்டும்.

கருட சேவை

5 – ம் திருநாள் அன்று காலையில் பெரியாழ்வார் மங்கலாசாசனம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பெருமாள், காட்டழகர், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய 5 பெருமாள் ஆலய உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளி ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசனம் செய்வர். அன்றைய தினம் இரவு விடிய விடிய கருடசேவை நடைபெறும். இதனைக் காண ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கோவிலில் குவிந்திருப்பார்கள். மக்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ச்சியுடன் ஆண்டாள், ரங்கமன்னாரை தரிசனம் செய்வர். ஆடிப்பூரம் தினத்தன்று ஊர் கூடி தேர் இழுக்க அதில் ஆண்டாள் ரங்கமன்னார் சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வரும் தேரினை பல்லாயிரக்கணக்கனோர் கண்டு தரிசிப்பார்கள்.

ஆண்டாள் அவதாரம்

நளவருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம். சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அந்த திருநாள், பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது. இந்த தினத்தில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் , பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ் லட்சுமியின் அம்சமாய் அவதரித்தாள் ஆண்டாள்.

பிறந்தது முதலே அந்த கண்ணனின் மேல் தீராத பக்தி அந்த கோதைக்கு. அது நாளாக நாளாக வளர்ந்து காதலாகி கசிந்துருகியது. கண்ணனையே நினைந்து உருகி கடைசியில் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனின் திருவடிகளில் சரண்புகுந்தாள் ஆண்டாள்.

சூடிக்கொடுத்த சுடர்கொடி

நந்தவனத்தில் இருந்து சுத்தமாய் பறித்த மலர்களை மாலையாக தொடுத்து அரங்கனுக்கு சூட்டுவது பெரியாழ்வாரின் முக்கிய பணிகளில் ஒன்று. அனுதினமும் தவறாமல் மாலை தொடுப்பதை கண்ட கோதைக்கு அரங்கனின் மாலை மீது அப்படி ஒரு ஆவல். பெரியாழ்வார் வைத்து விட்டு சென்ற பூமாலையை எடுத்து தன் கழுத்தில் சூடி ரசித்து பார்ப்பாள் அந்த பேதை. ஒருநாள் இதை கண்டு பிடித்த பெரியாழ்வார் சொல்லெனா துயரம் கொண்டார். கோதையில் கழுத்தில் ஏறிய பூமாலையை இனி எப்படி அரங்கனுக்கு சூட்டுவேன் என்று அழுது அரற்றினார். ஆனால் அரங்கனோ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைதான் வேண்டு மென்று பெரியாழ்வாருக்கே கட்டளை இட்டான். அதுமுதல் அந்தகோதை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாள்.

மணக் கோலம் கொண்ட கோதை

சிறுமியாய் இருந்த ஆண்டாள் மணப்பருவம் எய்தினாள். பெரியாழ்வாருக்கோ ஆண்டாளை எப்படி மண முடித்துக்கொடுப்பது என்ற கவலை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை உணர்ந்த அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாளை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான். மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.

உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையை கண்ட கணமே ஆண்டாள் அவனுள் ஐக்கியமானாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.

ஆண்டாள் மாலை

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது திருமாலிருஞ்சோலையில் இருந்து இறங்கி வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகர் சூடுவதும் ஆண்டாளின் அழகு மாலைதான்.

திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளின் மாலை திருப்பதிக்குச் செல்கிறது. அந்த மாலையை திருவேங்கடவன் அணிந்து கொள்ள அவரின் அருட்பிரசாதமாக புடவை ஒன்று ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அம்மனுக்கு வளைகாப்பு

இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள். அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

Cabinet Ministers of India 2011 (Latest)

(Reviewed on: 20-07-2011)
Cabinet Ministers
Dr. Manmohan Singh : Prime Minister and also in-charge of the Ministries/Departments not specifically allocated to the charge of any Minister viz.: Personnel, Public Grievances & Pensions, Planning, Department of Atomic Energy and Department of Space
Pranab Mukherjee : Finance
Sharad Pawar : Agriculture and Food Processing Industries
A.K. Antony :Defence
P. Chidambaram : Home Affairs
S.M. Krishna : External Affairs
Virbhadra Singh : Micro, Small and Medium Enterprises
Vilasrao Deshmukh : Science and Technology and Earth Sciences
Ghulam Nabi Azad : Health and Family Welfare
Sushilkumar Shinde : Power
M. Veerappa Moily : Corporate Affairs
Dr. Farooq Abdullah : New and Renewable Energy
S. Jaipal Reddy : Petroleum and Natural Gas
Kamal Nath : Urban Development
Vayalar Ravi : Overseas Indian Affairs and Civil Aviation
Smt. Ambika Soni : Information and Broadcasting
Mallikarjun Kharge : Labour and Employment
Kapil Sibal : Human Resource Development and Communications and Information Technology
Anand Sharma : Commerce and Industry and Textiles
C.P. Joshi : Road Transport and Highways
Kumari Selja : Housing and Urban Poverty Alleviation and Culture
Subodh Kant Sahay : Tourism
G.K. Vasan : Shipping
Pawan Kumar Bansal : Parliamentary Affairs and Water Resources
Mukul Wasnik : Social Justice and Empowerment
M.K. Alagiri : Chemicals and Fertilizers
Praful Patel : Heavy Industries and Public Enterprises
Prakash Jaiswal : Coal
Salman Khursheed : Law and Justice and Minority Affairs
V. Kishore Chandra Deo : Tribal Affairs and Panchayati Raj
Beni Prasad Verma : Steel
Dinesh Trivedi : Railways
Jairam Ramesh : Rural Development and Drinking Water and Sanitation


Ministers of State with Independent Charge
Dinsha J. Patel : Mines
Smt. Krishna Tirath : Women and Child Development
Ajay Maken : Youth Affairs and Sports
Prof. K.V. Thomas : Consumer Affairs, Food & Public Distribution
Srikant Jena : Statistics and Programme Implementation and Chemicals and Fertilizers
Smt. Jayanthi Natarajan : Environment and Forests
Paban Singh Ghatowar : Development of North Eastern Region and Parliamentary Affairs

Ministers of State
E. Ahamed: External Affairs and Human Resource Development
Mullappally Ramachandran : Home Affairs
V. Narayanasamy : Personnel, Public Grievances and Pensions and Prime Minister's Office
Jyotiraditya Madhavrao Scindia : Commerce and Industry
Smt. D. Purandeswari : Human Resource Development
K.H. Muniappa : Railways
Smt. Panabaka Lakshmi : Textiles
Namo Narain Meena : Finance
M.M. Pallam Raju : Defence
Saugata Ray : Urban Development
S.S. Palanimanickam : Finance
Jitin Prasada : Road Transport and Highways
Smt. Preneet Kaur : External Affairs
Harish Rawat : Agriculture, Food Processing Industries and Parliamentary Affairs
Bharatsinh Solanki : Railways
Mahadev S. Khandela : Tribal Affairs
Sisir Adhikari : Rural Development
Sultan Ahmed : Tourism
Mukul Roy : Shipping
Choudhury Mohan Jatua : Information and Broadcasting
D. Napoleon : Social Justice and Empowerment
Dr. S. Jagathrakshakan : Information and Broadcasting
S. Gandhiselvan : Health and Family Welfare
Tusharbhai Chaudhary : Road Transport and Highways
Sachin Pilot : Communications and Information Technology
Pratik Prakashbapu Patil : Coal
R.P.N. Singh : Petroleum and Natural Gas and Corporate Affairs
Vincent Pala : Water Resources and Minority Affairs
Pradeep Jain : Rural Development
Ms. Agatha Sangma : Rural Development
Ashwani Kumar : Planning, Science and Technology and Earth Sciences
K.C. Venugopal : Power
Sudip Bandyopadhyay : Health and Family Welfare
Charan Das Mahant : Agriculture and Food Processing Industries
Jitendra Singh : Home Affairs
Milind Deora : Communications and Information Technology
Rajeev Shukla : Parliamentary Affairs