Wednesday, June 29, 2011

10 SEO Tips Everyone With A Website Should Know

I’m going to start with the basics here. The following are ten things everyone with a website should know to gain online visibility in search engines. These are the basics of the basic and when applied will give you a firm basis to start a long term Search Engine Optimisation campaign. The structure of your website is important, just as much as the structure of your link building campaign. I know these may seem rehashed, but they are the building blocks for a good SEO campaign.

1) A Keyword Rich Domain. While not always possible, when setting up a new website, consider setting it up on a domain that contains the sites main keywords. Search Engines give considerable weight to a website with keywords in the URL. Never use a keyword stuffed domain (ie. www.your-key-word-here-and-another.com)

2) Title Tag.

The title tag on your page is the most powerful on page factor you can control as a webmaster. Use it wisely. Carefully choose which keywords are going to go in here and remember that it will be read by humans as well as search engines. Never stuff keywords into your title. It only devalues its weight and makes you look spammy.

3) Heading Tags.

The second most important on page factor you can control is the heading tags. Not only are they useful for search engines to determine the context of your document, it is semantically sound HTML practice.

4) Bold, Strong and Emphasis Tags.

While there is no set answer to which carries more weight, assume that both are the same. Emphasize keywords in bold using the BOLD or STRONG tags. Search engines give more weight to keywords if they are emphasized.

5) Keyword Rich Text.

It is always possible to rank for search terms when they are not on your page but using them sparingly will only help increase your search engine visibility for these keywords and

6) Structured Navigation And Correct Internal Navigation.

Make it easy for search engines to index your entire site. Use a text link navigation. I this is not possible, use a sitemap or second text navigation in the footer of your site.

7) Keyword Rich Internal Links.

Use your sites main keywords in the anchor text when linking to pages within your site. This not only describes the link to your visitors, it also lets the search engines know what content is on the page being linked to.

8) Avoid Flash.

While some search engines claim that they can index some flash content, it is still in its infancy. An entire website does not need to be built in flash. Use it wisely and make sure any text that is output by flash is rendered as HTML text so search engines can see it. If possible, avoid flash completely.

9) Avoid Duplicate content.

Search Engines do not like duplicate content. Make sure all the content on your website is different on all pages. Many navigation elements, headers, footers etc. is the same, but make sure that each page has marginally more unique content. Some search engines give a penalty for duplicate content, while others just ignore it. Just make your content unique. If anything else, it benefits your site visitors.

10) Keyword Rich, Relevant Inbound Links.

A relevant, keyword rich inbound link is the holy grail of online marketing. There are many ways to get quality inbound links to your website. Directory Submissions, Article writing/marketing, Press Releases, Posting in forums and blogs, Link Exchanges. Obtaining inbound links is the undisputed king of SEO tactics.

We will be going into more detail on each of the above methods over the coming weeks. Am I missing any? What other basic SEO tips are essential to today’s SEO?

Tuesday, June 28, 2011

“அறுபத்து நான்காவது நாயன்மார்“ முனைவர் சி.சேதுராமன்



பெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர். இச்சிவனடியார்களுள் ஒருவராக வைத்து போற்றத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார். அவர் சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். சொற்பொழிவின் மூலம் ஈட்டிய பொருள் அனைத்தையும் கோவில் திருப்பணிகளுக்காகச் செலவிட்டவர் வாரியார் ஆவார். தனிப்பட்ட முறையில் அதிகமாக திருப்பணிகளுக்கு வாரிவழங்கிய வள்ளல் கிருபானந்தவாரியாரே ஆவார்.
தமக்கென்று எதனையும் சேர்த்து வைக்காத பெருந்தகையான கிருபானந்த வாரியார் தமிழ் நாட்டிலுள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் செங்குந்த வீர சைவ மரபில், மல்லையதாசருக்கும், கனகவல்லி அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாக 1906 –ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாள் அவதரித்தவர். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி என்பதாகும்.

கல்வியும்-மணமும்

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து அவருக்குக் கல்வி கற்பித்தார். வாரியாரைப் பள்ளிக்கு அனுப்பாமல் அவருக்கு வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார் என்பது நோக்கத்தக்கது. நன்னூல் முதலான இலக்கண நூல்களையும், தேவாரம், நளவெண்பா, ஒளவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் வாரியாருக்குக் கற்பித்து, அவற்றை மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் செய்தார். கீர்த்தனைகள், இலக்கியங்கள், இலக்கணங்கள் மட்டுமின்றி வாரியாருக்கு அவரது தந்தையார் வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். வாரியாருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மனப்பாடம் செய்ததுதான் தம் வாழ்நாளில் தாம் அடைந்த பெருஞ்செல்வம் என்று வாரியார் குறிப்பிடுகிறார். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது பத்தொன்பதாவது வயதில் மணந்தார்.

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

இசைச் சொற்பொழிவாற்றல்

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். வாரியார் தமது 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணச் சொற்பொழிவுகள் செய்யத் தொடங்கினார். அவருடைய சொற்பொழிவுகள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களும் அவரது உரையை மனம்மகிழ்ந்து கேட்டனர். அவர் தமது “ஆன்மிகச் சொற்பொழிவில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறினார். பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய சொற்பொழிவுகளை செவிமடுத்து மகிழ்ந்தனர்.

தனது இசை ஞானத்தால் அவர் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் அம்மனத்தின் வெள்ளி விழாவின் போது அவருக்கு, “இசைப் பேரறிஞர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.

சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அதுமட்டுமின்றி மிகச்சிறந்த நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்ட அறிஞர்கள் இதுகாறும் இதனை அறியவில்லையே என்று அவரை வியந்து பாராட்டினார்கள். ‘‘வாரியார் வாக்கு கங்கை நதியின் வெள்ளப்பெருக்கைப் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன“ என்று அறிஞர்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக முறையிலான தன்மை அனைவரையும் கவரும். அவரது சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.ஒருமுறை சொற்பொழிவின்போது வாரியார் சுவாமிகள் தமக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, ‘நீ உனது வீட்டில் எத்தனையாவது குழந்தை? என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் ‘‘நான்தான் எனது வீட்டில் கடைசிக் குழந்தை” என்று கூறினான். அதனைக் கேட்ட வாரியார், ‘‘தம்பி நீதான் உன்வீட்டில் கடைசிக் குழந்தை என்பதை நீ முடிவு செய்து சொல்லக் கூடாது. அதனை உனது தந்தையார்தான் முடிவு செய்வார்” என்று கூறவே அவையினர் அனைவரும் மகிழ்ந்து சிரித்தனர்.

வாரியாருடைய சொற்பொழிவுகளால் மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின. ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ஐயா இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இஸலாம் சமயத்தைச் சார்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவறல்லவா. இது குறித்துத் தங்களின் கருத்து என்ன? தாங்கள் இதற்கு என்ன கூறவிழைகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு வாரியார், இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே. என்று கூற அனைவரும் அது எவ்வாறு பொருந்தும் என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் மற்றவர்கள் இதனை எவ்வாறு பொருத்துப் போவார்கள்? சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா? என்று கேட்டனர். இதனைக் கேட்ட வாரியார், முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். வேறுபட்ட இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது.

மழையை நாடியிருக்கும் சகோரம் என்ற பறவைபோல அவரது சொற்பொழிவைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

பத்திரிக்கைப் பணி

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

தமிழ்ப்பணி

வாரியார் ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலையில் பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றித் தமக்கு சடக்கரமந்திரத்தை உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.

இறைப்பணியும், முக்தி பெறலும்

தமது சொற்பொழிவின் வாயிலாக் கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் இறைப்பணிக்கே வாரியார் செலவிட்டார். தமக்கென்று எந்த ஒரு பொருளையும் அவர் வைத்துக் கொண்டதே கிடையாது எனலாம். வயலூர் முருகனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார். அக்கோயிலின் திருப்பணியை முன்னின்று நடத்தினார். அக்கோயில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல முருகன் திருத்தலங்களையும் புதுப்பித்து கோயில் திருப்பணி செய்தார். இவ்வாறு அவர் செய்த்தால் தான் அவரை திருப்பணிச் செம்மல் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். கிருபானந்த வாரியார் கந்தவேளை எந்த வேளையும் மறவாது வணங்கி முருகன் அருள் பெற்ற அடியவராகத் திகழ்ந்தார். எங்கு சென்றாலும், எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் முருகனை வழிபடாது எந்தப் பணியையும் அவர் தொடங்க மாட்டார். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பலநாடுகளுக்கும் சென்று தமிழ்த் திருப்பணி ஆற்றியவர் வாரியாராவார்.

இங்ஙனம் இசையாலும், தமிழாலும், இசையாதவரையும் இசைவித்த திருமுருக கிருபானந்த வாரியார், 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் நாள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தமது விமானப் பயணத்திலேயே கந்தவேளின் திருவடிகளில் கலந்தார். அவரது இறப்பு பூமியில் நிகழவில்லை என்பது நோக்கத்தக்கது. வாழ்நாள் முழுவதும் தமது இறைப்பணியிலும், சமுதாயப் பணியிலும் சிறந்து விளங்கிய கிருபானந்த வாரியார் இறைவனுடன் இரண்டரக்கலந்து அறுபத்து நான்காவது நாயன்மாராக என்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆன்மீகச் செல்வர்கள் அனைவரும் வாரியாரை அறுபத்து நான்காவது நாயன்மாராகவே கருதி இன்றும் அவரை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு எவ்வாறு நமது நெஞ்சங்களில் நின்று நிலைத்து விளங்குகின்றதோ அதனைப்போன்று அறுபத்து நான்காவது நாயன்மாராகிய வாரியாரின் வரலாறும் நமது நெஞ்சில் நிலைத்து நின்று நமதுவாழ்க்கைக்கு வழிகாட்டும் எனலாம்.

முனைவர் சி.சேதுராமன்,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு நகைச்சுவை எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

1889 ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலி வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழயங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.

1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார் 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"

என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளினைப்போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும் என்பதுதான் சார்லி சாப்ளின் நமது காதோரம் சொல்லும் உண்மை.

Friday, June 24, 2011

சாம்சங் இன்ப்யூஸ் 4ஜி- எச்டிசி இவோ 4ஜி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு



ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களுக்கான சந்தைப்போட்டி முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு புதிய அம்சத்துடன் ஸ்மார்ட்போனை ஒரு நிறுவனம் வெளியிட்டால், அடுத்த வாரமே அதே புதிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை மற்றொரு நிறுவனம் அறிமுகம் செய்துவிடுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா, சாம்சங், எச்டிசி மற்றும் சோனி எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், சந்தையில் ஒரே அம்சங்கள் கொண்ட சாம்சங் இன்ப்யூஸ் 4ஜி மற்றும் எச்டிசி இவோ 4ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பற்றிய ஓர் ஒப்பீட்டு அலசல்.

திரை:

இரண்டு போன்களும் தொடுதிரை (டச்ஸ்கிரீன்) மூலம் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் அகன்ற திரையை கொண்டிருந்தாலும், சிறிய வித்தியாசம் உள்ளது. சாம்சங் இன்ப்யூஸ் 4ஜியில் 4.3 இஞ்ச் திரையும், எச்டிசி இவோ 4ஜியில் 4.5 திரையும் கொண்டிருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்கள்:

இரண்டு போன்களும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கின்றன. ரெக்கார்டிங், ப்ளேபேக், எம்பி3, ஏஏசி+ உள்ளிட்ட அனைத்து மியூசிக் பார்மெட்டுகளையும் இயக்கலாம்.

ஆடியோ:

ஆனால், சாம்சங் இன்ப்யூசை விட எச்டிசியின் ஸ்பீக்கர்கள் துல்லியமான ஒலியை வழங்குகிறது. தவிர, இரண்டு போன்களிலும், ஹோம்தியேட்டருடன் இணைத்துக்கொள்ளும் வகையில் ஆடியோ ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா:

இரண்டு போன்களும் ஒரே கான்பியூகிரேஷன் கொண்ட 8 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. எச்டிசி இவோ 4ஜியில் எல்இடி பிளாஷ் வசதி உள்ளது. ஆனால், சாம்சங் இன்ப்யூஸ் 4ஜியில் எல்இடி பிளாஷ் இல்லை.

தவிர, இரண்டு போன்களிலும் முகப்பு கேமரா இல்லை. இதனால், வீடியோ காலிங் வசதியை பெறமுடியாது என்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.

தகவல் பரிமாற்றம்:

இரண்டு போன்களிலும் புளூடூத், வை-பை கனெக்ஷன் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் நவீன தொழில்நுட்பங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், அதிவேக தகவல் பரிமாற்ற வசதியை பெற முடிகிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்:

இரண்டு போன்களிலும் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரோயோ ஓ.எஸ் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வசதி:

எச்டிசி இவோவில் வைமேக்ஸ் இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டியை பெற முடியும். அதேவேளை, சாம்சங் இன்ப்யூஸ் 4ஜியில் உள்ள ஜிபிஆர்எஸ், எட்ஜ், எச்எஸ்டிபிஏ மற்றும் எச்எஸ்பிஏ வசதிகள் எச்டிசி இவோ 4ஜியில் இல்லை.

இரண்டு போன்களும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுவதால், தேர்வு செய்வதில் சிரமம் இருந்தாலும், வசதிகளை வைத்து பார்க்கும்போது எச்டிசி இவோ 4ஜி மனதை தன்பக்கம் இழுக்கிறது.

சனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர்!


வாஷிங்டன்: சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்கிளேடஸில் உப்பு நீர் (liquid salt water ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய கேசினி விண்கலம், இந்த நிலவிலிருந்து வெளியேறும் துகள்களை கைப்பற்றிய கேசினி விண்கலம், அதை Cosmic Dust Analyser கருவி மூலம் ஆராய்ந்து உப்பு நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சனி கிரகத்திற்கு 19 நிலவுகள் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது. (இன்னும் கூட பல நிலவுகள் இருக்கலாம்). அதில் என்கிளேடஸ் நிலவிலிருந்து நீர்த் துகள்கள் வெளியேறுவதை கேசினி விண்கலம் 2005ம் ஆண்டில் கண்டுபிடித்தது.

இந்த துகள்கள் சனி கிரகத்தை சுற்றி ஒரு வளையத்தையே ஏற்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. சனி கிரகத்தைச் சுற்றி ஏராளமான வளையங்கள் உண்டு. அதில் ஒரு வளையம் உருவாக இந்த நீர்த் துகள்கள் காரணமாகியுள்ளன.

இதையடுத்து 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கேசினியை இந்த நிலவை நோக்கித் திருப்பியது நாஸா. இந்த நிலவை மிக நெருக்கமாக நெருங்கிச் சென்ற கேசினி விண்கலம் அதிலிருந்து வெளியேறும் துகள்களை டஸ்ட் அனலைசர் மூலம் ஆராய்ந்தது.

அதன்முலம் கிடைத்த விவரங்களை இரு ஆண்டுகளாக ஆய்வு செய்த நாஸா, இந்த நிலவிலிருந்து உப்பு நீர் வெளியேறுவதை உறுதி செய்துள்ளது. சூரியனிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இந்த நிலவிலிருந்து வெளியேறும் நீர் உடனடியாக பனிக் கட்டிகளாக மாறி சனி கிரகத்தை சுற்றி வரும் கோடிக்கணக்கான துகள்களில் ஒன்றாக இணைந்து வளையமாக மாறிவிடுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரினால்ட் புளூயன்ஸ் கார் நன்கொடை



திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரினால்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய ரினால்ட் கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மஹிந்திராவுடன் கூட்டை முறித்துக்கொண்ட பிரான்சை சேர்ந்த ரினால்ட் கார் நிறுவனம் இந்திய சந்தையில் தனித்து களமிறங்கியுள்ளது.

தனது முதல் அறிமுகமாக புத்தம் புதிய புளூயன்ஸ் செடான் சொகுசு காரை சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறக்கியது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் அமோக வெற்றி பெறுவதற்கு ஏழுமலையானின் அருள் கிடைக்க வேண்டி, அந்த நிறுவனம் புத்தம் புதிய புளூயன்ஸ் காரை திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஆந்தி்ர பிரதேச பிஜேபி செய்திதொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ரெட்டியிடம் கார் சாவியை ஒப்படைத்தார்.

இந்த கார் ரூ.15 லட்சம் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Jun 22, 2011 4 Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி

வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி காலதாமாதபடுத்த விரும்பவில்லை இந்த பதிவை பற்றி அதிகம் எழுதபோவதில்லை நீங்களே இதை உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.

என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.



என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்



என்றும் அன்புடன்
வெங்கடேஷ்

Wednesday, June 15, 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.


பதினாறு பேறுகள்

கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு.

இந்த பேறுகள் கிடைக்கப் பெற்றவர்கள் எவராயினும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வது உறுதி.

அபிராமி பட்டர் கேட்கும் வரங்கள்

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

அந்த பதிகம்:

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!

இந்தப் பதிகத்தில் ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார்.

தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப் பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை.

தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி, குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது. கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன அவன் சமூகத்திலிருந்து கேட்பது.

தொலையாத நிதி, கோணாத கோல்

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும்.

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும், அதன்படி அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ அருளியதற்கு அம்பிகையை போற்றுகிறார்.

இன்னல் தீர கொண்டாடுவோம் ராம நவமி

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.


பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். செவ்வாய்கிழமை தினத்தன்று இந்தியா முழுவதும் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

தர்மம் காக்க அவதரித்த ராமன்

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இதில் ஏழாவதாக எடுத்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முந்தைய அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் வாமனர், பரசுராமர் ஆகியவை, நீர்வாழ்வனவாகவும், விலங்காகவும், விலங்கும், மனிதனும் இணைந்தும் காணப்படும். இந்த ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

அவதார சிறப்புகள்

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராம அவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ராம நவமி கொண்டாட்டம்

அவதார நாயகன் உதித்த நாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

நீர்மோர், பானகம்

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷே கப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ராம நாமத்தின் மகிமை

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வ தும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டு கிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்.

வெளிநாட்டு விமான சேவையை ஆரம்பிக்கிறது இன்டிகோ!

டெல்லி: இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, வரும் செப்டம்பர் முதல் வெளிநாட்டு சேவையை தொடங்குகிறது.

முதல் கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி டெல்லி - துபாய் சேவையையும், செப்டம்பர் 15-ம் தேதி டெல்லி- பாங்காக் மற்றும் அக்டோபர் 2-ல் டெல்லி - சிங்கப்பூர் சேவையையும் இந்த நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

"இந்த மூன்று மார்கங்களில் பயணிப்போரிடம் கட்டண வித்தியாசம் காட்டாமல், ஒரே கட்டணத்தை வசூலிக்கிறது இன்டிகோ என்பதுதான் ஸ்பெஷல். டெல்லியிருந்து, துபாய், சிங்கப்பூர் அல்லது பாங்காக் என எந்த ரூட்டில் போனாலும் கட்டணம் ரூ 9999 மட்டும்தான்," என்கிறார் இன்டிகோ தலைவர் ஆதித்ய கோஷ்.

இந்த சலுகைக் கட்டணம் முதல் 25000 இருக்கைகளுக்கு தரப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1டி மற்றும் 1 சியிலிருந்து இன்டிகோ சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்.

அடுத்த ஆண்டு கொல்கத்தாவிலிருந்து டாகா மற்றும் பாங்காக்கு புதிய விமானங்களை இயக்குவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இன்னும் விமான சேவை துவங்கப்படாத 34 சதவீத செக்டார்களில் புதிய சேவையைத் தொடங்கவும் இன்டிகோ முடிவு செய்துள்ளது.

2006-ல் சேவையைத் துவங்கிய இன்டிகோ, 39 விமானங்களுடன் இந்தியாவின் 26 நகரங்களுக்கிடையே இயங்கி வருகிறது. நாளொன்று 250 விமான சேவைகளைத் தரும் இந்த நிறுவனம், வரும் 2015-க்குள் 100 ஏர்பஸ்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம்

டெல்லி: உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

இந்த வரிசையில், 4வது இடத்தில் இந்தியாவும், 5வது இடத்தில் சோமாலியாவும் உள்ளன.

பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம்.

2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக விளங்குகிறது.

முதுகுவலி வராமல் இருக்க - 2

7. தூங்கும்போது...

(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.

(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.

(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.

8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...

(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.

(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.

(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.

9. கார் ஓட்டும்போது...

(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.

10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.

11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.

12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.

13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி!

தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.

எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

முதுகுவலி வராமல் இருக்க - 1

முதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:

1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப் பெறுங்கள்.

2, வ‌லி அ‌திக‌ரி‌த்தா‌ல்...

வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் ‌கீ‌ழ்‌க்க‌ண்ட உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

(அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.

(ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.

(இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.

(ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.

(உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.

4. வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.

5. உட்காரும் போது...

(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.

(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.

(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

6. நிற்கும்போது...

(அ) இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள்.

(ஆ) நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள்.

(இ) நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.

முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?

நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.

எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.

முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.

திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.

சிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.

உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.

பொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : பீடி சுற்றுவோர், கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.

எப்படி வெளிப்படுகிறது?

முதலித் தசைத்துடிப்பு லேசான வலி தென்படும். இது தாங்க முடியாத நிலை வருவதற்கு முந்திய கட்டம்.

வழக்கத்துக்கு மாறான ஒரு கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது பளிச்சென்று ஒரு வலி முதுகில் தோன்றக் கூடும். அல்லது அந்த வேலை முடித்து இரவு உறங்கிய பின் மறுநாள் காலையில் அது தோன்றக்கூடும்.

முதுகுவலியின் தாக்குதல் முழு வேகத்தில் இருக்கும்போது வலி மிகவும் கடுமையாக இருக்கும்.

நிற்கிற இடத்திலேயே உறைந்துவிட்டது போல் நகரவே முடியாத நிலை ஏற்படும்.

உடலே வித்தியாசமான முறையில் வளைந்து முறுக்கிக் கொண்டது போல் தோற்றமளிக்கும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.

முதுகின் கீழ்ப்பகுதியில் தான் முதலில் இது தோன்றும்.

முதுகின் மேற்பகுதி மரத்துப்போதல், பளிச் பளிச்சென்று விட்டுவிட்டு வலித்தல் காணப்படும்.

Tuesday, June 14, 2011

எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி

ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த இடுகை. ஒவ்வொரு நண்பர்களின் ஊர்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது. நன்றி ஸாதிகா அக்கா.

திருநெல்வேலி என்று சொன்னாலே உங்களுக்கு அல்வா என்றுதான் ஞாபகத்தில் வரும். இங்கு தயாரிக்கப்படும்‌ அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் நெல்லை டவுணில் உள்ள‌ இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும்
ருசியே தனிதான். அந்த கடையில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என்ற பெயர். கூட்டம் அலைமோதும் அந்த கடையில் வியாபாரம் ஓஹோ. திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கே அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.

திருநெல்வேலிக்கு பெயர்க்காரணம் இந்துமத நம்பிக்கையின்படி, ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றான தாமிரபரணி வளம்கொழிக்கும் நெல்லைக்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. நம்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பல வீரர்களை வித்திட்டபூமின்னு சொல்லலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கான்சாகிப், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஊமைத்துரை மற்றும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாதவர்களும் வாழ்ந்த ஊர்ன்னு சொல்லலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பேசப்படும் வட்டாரமொழிகளில் நெல்லைத்தமிழும் பிரசித்தி பெற்றது. நெல்லையும் தூத்துக்குடியும் பிரிக்கப்பட்டாலும் இன்னும் இங்குள்ள மக்களின் சகோதரத்துவமும் பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறன்றன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, கடையந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பை (அம்பாசமுத்திரம்), சேரன்மகாதேவி, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய நகரங்கள் உண்டு.

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவன‌ங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.

நெல்லை ஜங்சனில் ஆசியாவில் முதல் ஈரடுக்கு மேம்பாலம் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் காக்கிறது.

இங்குள்ள மக்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்களும் பெருமளவில் இந்து சமுதாயத்தவரும் நிறைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலபகுதி மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இங்கு உண்டு. ‌பேட்டை, மேலப்பாளையம் மற்றும் சில ஊர்களில் உள்ள பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கு பெற்றோர் தயவை எதிர்பார்க்காமல் தம்மால் இயன்றளவுக்கு பொருளீட்டி சம்பாதிக்கின்றனர்.

நெல்லையில் சுற்றிப்பார்க்க நெல்லையப்பர் கோவில், அறிவியல் மையம், ஜூன் ஜூலை மாதங்களில் அரசு சார்பிலும் தனியாரும் பொருட்காட்சி நடத்துவார்கள். சில சமயங்களில் சர்க்கஸ்ம் நடத்துவார்கள். மக்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். தங்களுடைய ஓய்வு நேரங்களில் இதுமாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள ஜங்சன் பகுதி, கோபாலசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆற்றுக்கு குடும்பத்தினரோடு சென்று பொழுதை கழிப்பார்கள்.

இதுபோக பாபநாசம், குற்றாலம் அருவிகளுக்கும் மற்றைய சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.

இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அதெல்லாம் அப்போ... என்று சொல்லுமளவுக்கு இன்று எங்கும் விளைநிலங்கள் மனைகளாகவும் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது வேதனைக்குரியது. எங்கு பார்த்தாலும் அங்கே இத்தன சென்ட் நிலம் குறைவான தொகை, இங்கே இவ்வளவு தொகை என்று கூவிகூவி மக்கள் தொலைத்தொடர்பு சாதன‌ங்களின் மூலம் விளம்பரம். காண சகிக்கலை.

இது நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும்தான்.

***************


அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!

நெல்லையில் வருகிற 17ம்தேதி வெள்ளிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு பதிவர் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளார்கள்.

வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி.

ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.

பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு உங்களுடைய அனுபவங்களையும் பகிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!..

thanks to

உங்கள் ஸ்டார்ஜன்.

Tuesday, June 7, 2011

India's Top 50 Engineering Colleges 2011

Ranking the top colleges is a very difficult task. While it is relatively easy to create clusters of colleges, it is differentiating within clusters that became the most difficult exercise. So for the first time in the country we have used balanced scorecard methodology to arrive at the ranking of the top 50 colleges. Ranking methodology: We scanned the last five year rankings of about 241 colleges and normalised their ranks, by assigning differential weights to subjective and objective ranking. Such a process is used to develop clusters of institutions. The research standing of individual institutions were further used to refine the clusters and remove the odd men out. Individual clusters were ranked serially. In each of these clusters the differences in cut-off marks, wherever possible (like in case of IITs and AIEEE institutes and some States) were used to arrive at individual ranks. Heavily dominated by public institutions, the top-50 listing is a roll call of excellence India’s top 50 engineering institutions 2011





பிறப்பு :கோயம்புத்தூர், தமிழ்நாடு
தொழில் :கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
எழுதிய காலம்:1999—இன்று

தாமரையின் Website: http://kavithayani.blogspot.com/

கவிதாயினி தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.

கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.


இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார். திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி மிகச்சிறந்த வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.
ஈழநேசன் இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.

கேள்விகள்..
இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?

ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.

முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?

இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.

தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?

ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..

விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?

விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.

மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)

தாமரையின் புகழை மேலும் ஒங்கச்செய்த பாடல்களில் இதுவும் ஒன்று!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை,
பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை,
பெண்ணே நீ காஞ்சனை…

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி…
இனி நீ தான் எந்தன் அந்தாதி… (நெஞ்சுக்குள்)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே...

வைரமுத்து-தெரிந்தவை தெரியாதவை!




பெயர்:கவிப்பேரரசு வைரமுத்து

பிறந்த இடம்:வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.

பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .

தகப்பனார்:ராமஸ்வாமி தேவர்.

தாயார்:திருமதி அங்கம்மாள்

மனைவி:பொன்மணி

மகன்:கார்க்கி ,கபிலன்

எழுத ஆரம்பித்தது:7'வது வயதில்

* 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
* 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
* பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
* உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
* பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
* உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
* திரைப்பட அறிமுகம்:பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.
* முதல் வசனமெழுதிய படம்-நட்பு.

பெற்ற விருதுகளில் சில :

1. தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
2. தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
3. M.G ராமச்சந்திரன் விருது-1989
4. கலைமாமணி விருது-1990
5. தேசிய விருது-1993 (ரோஜா)
6. தேசிய விருது-1995 (கருத்தம்மா)
7. தேசிய விருது-1995 (பவித்திரா)
8. தேசிய விருது-2000 (சங்கமம்)
9. தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
10. பத்மஸ்ரீ விருது -2003.
11. சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)

வைரமுத்துவின் முதலாவது திரைப்பட பாடலாகிய பொன் மாலை பொழுது பாடல் உங்களுக்காக.முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாகும்.அன்று தொடங்கிய வைரமுத்துவின் பயணம் இன்னும் ஓயாமல் இந்திரன் வரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது :

திருப்பதி கோவில் ரகசியங்கள் tirumala tirupati balaji








திருப்பதிஸ்ரீனிவாசபெருமாளுக்குதிருவேங்கடமுடையான்,ஏழுமலையான்,மலகுனிய நின்ற பெருமாள் ,வெறுங்கை வேடன்,புனுகு காப்பு மேனியன் என பல பெயர்கள் உண்டு! பொதுவாகவ்றே கோவிந்தன்,ஏழுமலையான்.,சீனிவாசன் என்று பக்தர்களின் கோஷம் மலையில் எதிரொலிக்கிறது.

தாளப்பாக்கம் அன்னமய்யா 32,000 பாடல்கள் பாடியிருக்கின்றார்.1491 ஆம் ஆண்டு மசிண்டி வேங்கட்த்துறைவார் என்பவரால் வேங்கடாச்சால மஆத்மியம் எழுதப்பட்ட்து.வராஹ புராணம் ,பத்ம புராணம் ,கருட புராணம்,ப்ரம்மாண்ட புராணம்,மார்க்கெண்டேய புராணம் போன்ற பல புராணங்களில் இருந்து எடுத்தாண்ட தொகுப்பாகவே வேங்கடாச்சல மஹாத்மியம் விளங்குகிறது.

இந்த திருப்பதி திருமலை,திருச்சானூர் கோயில்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன..பல்லவ,சோழ,பாண்டிய,சாளுவ வம்ச மன்னர் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டு,அச்சுதராயர்,சதாசிவராயர் காலத்து கல்வெட்டு,பல்லவ மன்ன்ன் ந்ந்திவர்மன் கல்வெட்டு(இவரது கல்வெட்டு பார்த்தசாரதி கோயிலிலும் உள்ளது)இதில் தமிழ் கல்வெட்டுகள் அதிகம் காணப்பெறுகின்றன.




கி.பி 1583 ஆம் ஆண்டு கல்வெட்டில் அபிஷேகப்பொருட்களை பற்றி விரிவான விவரங்கள் உள்ளன்.பெருமாளது அபிஷேகப்பொருளாக குங்குமப்பூ,புனுகு,வாசனை திரவியங்கள்,அரைத்த சந்தனம்,போன்றவை தங்க வட்டிகளில் வைக்கப்பட்டு இவருக்கு திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.ஹைதராபாத் நிஜாமிடம் தான் கோடிக்கணக்கான ஆபரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.இவரிடம் அதைவிட பலகோடி மிகுதியாக ஆபரணங்கள் திருமலையில் உள்ளன.

பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் முடித்து 21 முழ நீளமுள்ள பட்டு பீதாம்பரம் அணிவிக்கப்படுகிறது.ஒருமுறை அணிவிக்கப்படும் பட்டு வஸ்திரம் மறுமுறை அணிவிக்கப்படுவதில்லை.இவர் திருமணத்திற்காக குபேரனுக்கு எழுதிய கடன்பத்திரம் இப்போதும் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.இது வடமொழியில் உள்ளது.இதை எழுத சொன்னவர் பிரம்மா.எழுதி கொடுத்தவர் ஸ்ரீனிவாசன்.எழுதி வாங்கியவர் குபேரன்.
கலியுகத்தில் விளம்பி வருசத்தில் வைசாக மாசத்தில் வளர்பிறையில் ஏழாவது நாளன்று கடன் வாங்கியதாகவும்,ராமர் முத்திரையுடன் கூடிய பதினாலு லட்சம் பணத்தை பெற்றதாகவும் ஆயிரம் வருட்த்தில் திருப்பி கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


முதல் சாட்சி நான்முகன்.இரண்டாவது சாட்சி சிவபெருமான்.மூன்றாவது சாட்சி அரச மரம்.இவ்வாறு ஸ்ரீனிவாசப்பெருமாள் தன் கையால் எழுதி கொடுத்த்தாக சொல்லப்படுகிறது.தெலுங்கு வருஷப்பிறப்பன்றும் தீபாவளி நாளிலும் ஆனி மாதமும் நடக்கும் அரசு தர்பார் மிகவும் விஷேசமானதாகும்.

அதிகாலை தோமாலை சேவை ஆரம்பமாகும் முன்,அன்றாட வரவு செலவு கணக்குகள் பெருமாளின் முன்பு படிக்கப்படுகிறது.ஆங்கிலேயரான சர் தாமஸ் மன்றோ தன் பெயரில் ஒரு நைவேதிய கட்டளையை இங்கு ஏற்படுத்திய வைத்துள்ளார்.(நீங்கள் நினைப்பது சரிதான்..அவர் வேரு யாருமல்ல..சென்னை அண்ணா சாலையில் குதிரை மீது அமர்ந்தவாறு சிலையாக நிற்கும் சர் தாமஸ் மன்றோ தான்)
மூலவரை போன்ற திருமேனி கி.பி.966 ஆம் ஆண்டு வெள்ளியால் செய்யப்பட்ட்து.சக்தி விடங்கன் என்ற மன்ன்னின் அரசி காடவன் பெருந்தேவி சில ஆபரணங்களையும் அளித்துள்ளார்.இந்த தகவல் கல்வெட்டாக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் 16 தமிழ்வரி எழுத்துக்களால் செதுக்கப்பட்டுள்ளது...

இத்திருக்கோயில் முதலில் அரசர்களாலும் ,பின் ஆங்கிலேயர்களாலும் பின் மஹந்தகளாலும் ,பரம்பரை மிராசு தீக்‌ஷிதர்களாலும்,பின் திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டியாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது...

திருப்பதி கோயிலின் கதை நீண்ட வரலாறு கொண்ட்து..ஒரு சந்தர்ப்பத்தில் அரசனால் அங்குள்ள அர்ச்சகர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்....அது எதற்காக..விரைவில் எழுதுகிறேன்...
-ராணி வார இதழில் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யார் எழுதியது.