Tuesday, October 31, 2017

கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

கோவில் கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன? அதை பற்றிய விளக்கத்தையும் விரிவாக பார்க்கலாம்.
கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
ஆலயம் என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ளவேண்டும். மனிதனின் தலை, கழுத்து, மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படியாக கோயிலின் கர்ப்பக்கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன.
கருவறை விமானம் தலை, அர்த்தமண்டபம் கழுத்து, மகாமண்டபம் மார்பு, இங்கு தான் இதயதுடிப்பு இருப்பது போல நடராஜர் நடனமாடும் சந்நிதி அமைக்கப்படும். தொப்புள் கொடிமரம். ராஜகோபுரம் பாதங்கள். இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோயிலில் கருவறையின் மேலே விமானம் உள்ளது. "மானம்' என்றால் "அளவு',"வி' என்றால் "கடந்தது'. "அளவு கடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம்.
கோபுரம் என்பதை"கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லும் வழக்கம் வந்தது.

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் அதன் பலன்கள்

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-_

🌿🔥1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
🌿🔥2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
🌿🔥3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
🌿🔥4. உயர்பதவிகளை அடையலாம்.
🌿🔥5. மனக்கவலை தீரும்.
🌿🔥6. மந்திர சித்தி பெறலாம்.
🌿🔥7. மலையென வருந்துன்பம் பனியென நீங்கும்.
🌿🔥8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
🌿🔥9. அனைத்தும் கிடைக்கும்.
🌿🔥10. மோட்ச சாதனம் பெறலாம்.
🌿🔥11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
🌿🔥12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.
🌿🔥13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
🌿🔥14. தலைமை பெறுவார்கள்.
🌿🔥15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
🌿🔥16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
🌿🔥17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
🌿🔥18. மரணபயம் நீங்கும்.
🌿🔥19. பேரின்ப நிலையை அடையலாம்.
🌿🔥20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
🌿🔥21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
🌿🔥22. இனிப்பிறவா நெறி அடையலாம்.
🌿🔥23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
🌿🔥24. நோய்கள் விலகும்.
🌿🔥25. நினைத்த காரியம் நிறைவேறும்.
🌿🔥26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
🌿🔥27. மனநோய் அகலும்.
🌿🔥28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
🌿🔥29. எல்லா சித்திகளும் அடையலாம்.
🌿🔥30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
🌿🔥31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
🌿🔥32. துர்மரணம் வராமலிருக்கும்.
🌿🔥33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
🌿🔥34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.
🌿🔥35. திருமணம் நிறைவேறும்.
🌿🔥36. பழைய வினைகள் வலிமை அழியும்.
🌿🔥37. நவமணிகளைப் பெறுவார்கள்.
🌿🔥38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.
🌿🔥39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.
🌿🔥40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
🌿🔥41. நல்லடியார் நட்புப்பெறும்.
🌿🔥42. உலகினை வசப்படுத்தும்.
🌿🔥43. தீமைகள் ஒழியும்.
🌿🔥44. பிரிவுணர்ச்சி அகலும்.
🌿🔥45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
🌿🔥46. நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
🌿🔥47. யோகநிலை அடைவார்கள்.
🌿🔥48. உடல்பற்று நீங்கும்.
🌿🔥49. மரணத்துன்பம் இல்லாதிருக்கும்.
🌿🔥50. அம்பிகையை நேரில் காண முடியும்.
🌿🔥51. மோகம் நீங்கும்.
🌿🔥52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
🌿🔥53. பொய்யுணர்வு நீங்கும்.
🌿🔥54. கடன்தீரும்.
🌿🔥55. மோன நிலை கிடைக்கும்.
🌿🔥56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
🌿🔥57. வறுமை ஒழியும்.
🌿🔥58. மன அமைதி பெறலாம்.
🌿🔥59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.
🌿🔥60. மெய்யுணர்வு பெறலாம்.
🌿🔥61. மாயையை வெல்லலாம்.
🌿🔥62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
🌿🔥63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
🌿🔥64. பக்தி பெருகும்.
🌿🔥65. ஆண்மகப்பேறு அடையலாம்.
🌿🔥66. கவிஞராகலாம்.
🌿🔥67. பகைவர்கள் அழிவார்கள்.
🌿🔥68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
🌿🔥69. சகல சவுபாக்கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
🌿🔥71. மனக்குறைகள் தீரும்.
🌿🔥72. பிறவிப்பிணி தீரும்.
🌿🔥73. குழந்தைப்பேறு உண்டாகும்.
🌿🔥74. தொழிலில் மேன்மை அடையலாம்.
🌿🔥75. விதியை வெல்வார்கள்.
🌿🔥76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
🌿🔥77. பகை அச்சம் நீங்கும்.
🌿🔥78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
🌿🔥79. அபிராமி அருள்பெறுவார்கள்.
🌿🔥80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.
🌿🔥81. நன்னடத்தை உண்டாகும்.
🌿🔥82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
🌿🔥83. ஏவலர் பலர் உண்டாகும்.
🌿🔥84. சங்கடங்கள் தீரும்.
🌿🔥85. துன்பங்கள் நீங்கும்.
🌿🔥86. ஆயுத பயம் நீங்கும்.
🌿🔥87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
🌿🔥88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
🌿🔥89. யோக சித்தி பெறலாம்.
🌿🔥90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
🌿🔥91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
🌿🔥92. மனப்பக்குவம் உண்டாகும்.
🌿🔥93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
🌿🔥94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
🌿🔥95. மன உறுதி பெறும்.
🌿🔥96. எங்கு பெருமை பெறலாம்.
🌿🔥97. புகழும் அறமும் வளரும்.
🌿🔥98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
🌿🔥99. அருள் உணர்வு வளரும்.
🌿🔥100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

Thanks,
*https://www.facebook.com/Kannapurathal/*