Friday, June 29, 2012

கம்பிரமான அல்கம்பிரா கோட்டை !!!!

கம்பிரமான அல்கம்பிரா கோட்டை !!!!

அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்கம்பிராவுக்குள் உள்ள ஐந்தாம் சார்ல்சின் அரண்மனை 1527-ம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது.


அல்கம்பிரா அமைந்துள்ள சமவெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் (674 அடி) அகலமும் கொண்டது. இது மேல்வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 சதுர மீட்டர்கள் பரப்பளவையும் கொண்டுள்ளது. இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட அல்கசாபா (உள்நகரம்) அமைந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. இப்பகுதியைச் சூழ 13 கோபுரங்களைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக் கோபுரங்கள்
சில பாதுகாப்புக் காரணங்களுக்கானவை.
Photo: கம்பிரமான அல்கம்பிரா கோட்டை !!!!

அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்கம்பிராவுக்குள் உள்ள ஐந்தாம் சார்ல்சின் அரண்மனை 1527-ம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது.


அல்கம்பிரா அமைந்துள்ள சமவெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் (674 அடி) அகலமும் கொண்டது. இது மேல்வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 சதுர மீட்டர்கள் பரப்பளவையும் கொண்டுள்ளது. இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட அல்கசாபா (உள்நகரம்) அமைந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. இப்பகுதியைச் சூழ 13 கோபுரங்களைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக் கோபுரங்கள்
சில பாதுகாப்புக் காரணங்களுக்கானவை.

No comments:

Post a Comment