Friday, November 23, 2012

நேர்மை தேசப்பற்று மதச் சார்பின்மை கொண்ட மகத்தான மனிதர் வி.பி.சிங் !!!

நேர்மை தேசப்பற்று மதச் சார்பின்மை கொண்ட மகத்தான மனிதர் வி.பி.சிங் !!!

மகத்தான மனிதர் யார்? உங்களை நீங்களே கேட்டுக் கொண்டால் சிந்தனை ஒரு நொடி ஓய்வு எடுக்கும். பின்னர் இயங்கத் தொடங்கும் போது யாரை மகத்தான மனிதர், அதிலும் சமகாலத்தில் வாழ்ந்
தவர் என ஓர் கேள்விக்கு நிச்சயம் ஒரு கணம் மனம் குழம்பும். அடுத்தடுத்து பலர் உங்கள் மனக்கண் முன்பு தோன்றுவார்கள். இறுதியில் ஒருவர் உங்களுக்குள் தேர்வானாலும் ஒரு சந்தேகம் எழும். இவர் மகத்தானவர்தானா?

ஆனால், பெயரைச் சொன்னவுடன் அவரின் எதிரிகள்கூட அட இவரா? மகத்தான மனிதர் என ஏற்கும் ஒருவர் வி.பி.சிங்.“”ஒரு வீட்டில் பாகப்பிரிவினை நடந்தது. எல்லாப் பொருளும் சரிசமமாக பங்கு பிரித்தனர். கடைசியில் அந்த வீட்டிற்கு தினசரி பாலைத் தந்த பசுமாடு மிஞ்சியது. மாடும் பங்கு பிரிக்கப்பட்டது. எப்படி? மாட்டின் முன்பகுதி தம்பிக்கும், பின்பகுதி அண்ணனுக்கும் என்றாகியது. தினசரி தம்பி முன் பக்கத்தில் அதற்கு தீனி வைப்பான். அண்ணன் தினசரி தன் பங்கான பின்பக்கத்தில் பாலைக் கறந்து கொள்வான்.

இது எப்படி சமமான, நியாயமான பாகப் பிரிவினை? ஆனால், இப்படித்தான் உயர்சாதி என்பவர்கள் சமூகப் பலன் எனும் பின்பக்கத்துப் பாலைக் கறந்து விடுகின்றனர். உழைப்பாளி கீழ்த்தட்டு பின் தங்கிய மக்கள் சமூகத்திற்கு உழைக்கின்றனர். ஆனால் பயனில்லை. எனவேதான், சமமான பலன் தர சமூகநீதி காக்க இட ஒதுக்கீட்டை வழங்கினேன்.’’

இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து வி.பி.சிங் எனும் மனிதர் இந்தக் கதையைப் பல இடங்களிலும் கூறுவார்.இயல்பாகவே அரசர் குடும்பத்தவர் அரசர் என்றாலும் எளிமையின் சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங். லக்னோ பல்கலையில் ஆசிரியராக இருந்த இவரை நேருதான் வசீகரித்தார். அவரின் ஆட்சிக் காலத்திலேயே இவர் கட்சியில் இணைந்தாலும், தனக்கென ஓர் தனிநபர் ஒழுக்கம், எளிமை, தூய்மை, ஏழைகள் பால் அன்பு என்பதில் மாற்றமில்லாமல் விளங்கினார்.

வி.பி.சிங்கின் அணுகுமுறைகள், அவரின் ஆளுமை பிரதமர் இந்திராவிடம் அவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தன. 1974ஆம் ஆண்டு வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். தான் வசிக்கும் பொறுப்பில் நேர்மை, தூய்மை, சேவை என்பதே அவரின் இலக்காக இருந்ததால் அவரின் கீழுள்ள அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை இவரைப் பின்பற்றினர்.

அதே வேளை வி.பி.சிங் 1980ல் உ.பி. முதல்வரானார். பிற்படுத்தப்பட்டோர் பற்றிய ஓர் ஆய்வுப் பணி பிர்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் மத்திய அரசு அமைத்தது. இக்குழுவும் தன் பணியை நிறைவு செய்து பரிந்துரைகள் பலவற்றை அரசிடம் கூறியது. ஆனால், இவை கிடப்பில் இருந்தன.

உ.பி. முதல்வரான வி.பி.சிங் அடக்குமுறை வழிகளைக் கைவிட்டு சமாதான வழியில் உ.பி.யில் பெருகி இருந்த கொள்ளையர் குழுக்களை ஆயுதங்கள் ஒப்படைக்க வைத்தார். எனினும், ஒரு சில குழுக்கள் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தி வந்தது. ஒரு நாள் அவரின் சகோதரர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி அவர் வீட்டின் முன்பு ஒரு கோணிப் பையில் போட்டு விட்டுச் சென்றனர். அதைக் கண்ட வி.பி.சிங் அப்போதும் தனக்கு அதிகாரம் இருந்தும் அடக்குமுறையைக் கையாளவில்லை. மாறாக “உ.பி.யில் கொள்ளையரிடமிருந்து என் சகோதரனையே காப்பாற்ற இயலாத நான் இந்த மாநில மக்களைக் காப்பதாகக் கூறி முதல்வராக எப்படி நீடிக்க முடியும். எனவே நான் பதவி விலகுகிறேன்’’ என்று கூறி முதல்வர் பொறுப்பை உதறினார்.

பலரும் மதிப்புமிக்க முதல்வர் பொறுப்பிற்கு ஆலா பறவை போல் கண்மண் தெரியாமல் சிறகடிக்கும் நிலையில் பதவியை துச்சமாக நினைத்த வி.பி.சிங்கின் செய்கை, அதிலிருந்த நேர்மை, பிரதமர் இந்திராவைக் கவர்ந்தது. ஏற்கனவே அவர் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்த போது அவரின் துணிவை மதித்த பிரதமர் இவரை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்கி அதே வர்த்தகத் துறையை வழங்கினார். இதனால் பதுக்கல்காரர்கள் மிரண்டனர்.

1984இல் இந்திரா படுகொலைக்குப் பின்னர், ராஜீவ் பொறுப்பேற்றதும், வி.பி.சிங் நிதியமைச்சரானார். பிரதமரான ராஜீவ் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் நாட்டைக் கொண்டு சொல்ல கொள்கை சார்ந்து திட்டமிட்ட போது, அதற்கான நிதியை ஒதுக்க வேண்டிய நிலை நிதியமைச்சரான வி.பி.சிங்குக்கு ஏற்பட்டது. நாட்டில் நிதியோ இல்லை. ஏன் என்ன காரணம் என்பதை பொருளியல் நிபுணரான வி.பி.சிங் சிந்தித்தார். நிதிச் செயலக அதிகாரிகள் கூட்டம் பலமணி நேரம் நடந்தது.

சாமான்ய ஏழைகள் காணி நிலம் கொண்டிருந்தாலும் அதற்குரிய வரிகளை வசூலிக்கும் அரசு, நடுத்தர மக்களும் தாம் அன்றாடம் பயன்படுத்தும் அவசிய, அத்யாவசிய பொருட்களுக்கும் அதன் விலையுடனே வரியும் செலுத்துகின்றனர். ஆனால், பெரும் பண முதலைகள், நிறுவன அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக கணக்கும் காட்டுவதில்லை, வரியும் ஏய்க்கின்றனர். ஆனால்,அவர்கள் தொழில் மட்டும் லாபமாக நடக்கிறது.இதற்கு வடிகாலாக கார்ப்பரேட் வரியை முறையாக வசூலித்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்திராமல் நாடெங்கும் பணத் திமிங்கல வேட்டையைத் தொடங்க, முதலில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிட்டார்.

இந்தப் பட்டியல் மத்திய அமலாக்கத் துறைத் தலைவரான நேர்மையான அலுவலரான பூரலால் வசம் தந்து அவருக்கு சிறப்பு அதிகாரமும் தரப்பட்டது. வேட்டைத் தொடங்கியது. ரிலையன்ஸ் அம்பானி தொடங்கி அமிதாப்பச்சன் வரை சகலரும் பிடிபட்டனர். கிர்லோஸ்கர் என்ற தொழிலதிபர் முரண்டு பிடித்ததால் கைவிலங்கு போடும் நிலை ஏற்பட்டது.அரசின் கஜானா வரி ஏய்ப்புச் செய்தவர்களிடம் வசூலித்த தொகையால் நிரம்பியது. பல தவறான நடவடிக்கைகளை மறைமுகமாகமேற்கொள்ளும் பெரிய மனிதர்கள் என்பவர்கள், அவர்களின் ஆலோசர்கள் வி.பி.சிங் இந்தப் பதவியில் தொடர்வது தங்களுக்கு ஆபத்து எனப் புலம்பினர்.

இதனால், வி.பி.சிங் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார். 1987 ஜனவரி 23ஆம் நாள் அத்துறை அமைச்சரான சிங் பாதுகாப்புத் துறைக்குள்ளே நடக்கும் கணக்கு வழக்கை சரிபார்க்க ராஜிவ் நியமித்த ஃபேர் பாக்ஸ் என்ற வெளிநாட்டுக் கணக்கு நிறுவனத்தால் பாதுகாப்புத் துறை விவரங்கள் வெளிப்படும் ஆபத்து உள்ளதாகக் கூறி அதைத் தடுக்க முயற்சித்தார்.
அடுத்து நீர் மூழ்கிக் கப்பல் ஊழலைக் கண்டறிந்து விசாரிக்க ஆணையிட்டார். அதே நேரம் போபார்ஸ் பீரங்கி வாங்கியதிலும் கமிஷ­ன் கைமாறியதைக் கண்டுபிடித்தார். இதை விசாரிக்கவும் உத்தரவிட்ட நிலையில் 1987 ஏப்ரல் 4ஆம் நாள் அமைச்சரவை, கட்சி என அனைத்திலிருந்தும் விலகினார். தவறுகளைக் கண்டறிவதில் அவருக்கு நெருக்கடி ஏற்படுவதை ஒரு நேர்மையாளரான அவரால் ஏற்க முடியவில்லை.

நேர்மை, தேசப்பற்று, மதச் சார்பின்மை என்பதில் உறுதியான வி.பி.சிங் அலகாபாத் இடைத் தேர்தலில் பலம் மிக்க கட்சி அதன் வேட்பாளர்களை சுவரொட்டி விளம்பரம் கூட செய்யாமல் புடைசூழ தொண்டர்கள் இல்லாமல், மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி தொகுதி முழுவதும் மக்களை சந்தித்துப் பேசி வாக்கு சேகரித்தார். அவரின் நேர்மையை, எளிமையை மக்கள் நேசித்தனர். பலமிக்க அவருக்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தனர்.

1989 டிசம்பர் 2 நாட்டின் பத்தாவது பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார். கூட்டாட்சித் தத்துவத்தில் உறுதிமிக்க வி.பி.சிங் மாநில உரிமைகளைக் காப்பதில் நிகரற்றவராக இருந்தார். தமிழகத்தின் நீண்ட கால இழுபறி பிரச்சனையான காவிரி நீர் தொடர்பாக இவர்தான் நடுவர் மன்றம் அமைத்தார். ஈழத்தில் தங்கி இருந்த இந்திய இராணுவத்தை அந்நாட்டு மக்கள் கடுமையான எதிர்த்ததால் இந்தியா திரும்பும் ஆணை பிறப்பித்தார்.

எல்லாவற்றையும் விட பத்தாண்டுகளாக மத்திய அரசின் பிரதமர் அலுவலகத்தில் தூசி படிந்து கிடந்த மண்டல் குழு அறிக்கையை தூசி தட்டி 1990 ஆகஸ்ட் ஏழாம் நாள் இந்திய பிற்பட்ட மக்களின் மறு சுதந்திர அறிவிப்பான இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செலுத்தி வந்த சாதிய ஆதிக்கத்தை பெரியார் கண்ணாடி அணிந்த வி.பி.சிங்குக்கு மண்டல் தான் சரியான தீர்வு என உணர முடிந்தது. அதனால், சமூகநீதி காக்க ஆணையிட்டார். ஆதிக்க வர்க்கம் அலறியது, அழுது புலம்பியது. கலவரம் நடத்தினர். தகுதி – திறமை எனப் புலம்பினர். அதே ஆண்டு அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார். அத்துடன் சமூகநீதித் துறை என்பதை உருவாக்கி அதற்கு ராம் விலாஸ் பாஸ்வான் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை அமைச்சராக்கினார். இவர்தான் மண்டல் குழுப் பரிந்துரைகளை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டு ஆணையை கையயழுத்திட்டவர்.

இதனால், மேலும் கொதித்தனர். உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். சமூக நீதியை நிலைநாட்டியதற்காக வி.பி.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தத்தை பா.ஜ.க. உருவாக்கியது. இவரை எதிர்க்க பா.ஜ.க.விற்கு பல காரணங்கள் அதில் இடஒதுக்கீடும் ஒன்று.

மண்டல் விவகாரத்தால் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் விவாதப் பொருளானால் தங்கள் வியாபாரம் களைகட்டாது என்ற நிலையில், இந்த மக்களை திசை திருப்ப உணர்வு ரீதியாக அயோத்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்தது. அதே ஆண்டு இவர்களால் வி.பி.சிங் ஆட்சியை வெளிப்படையாக எதிர்க்க இயலவில்லை. அதற்கான தருணமான அயோத்தி யாத்திரை தொடங்கியது. பா.ஜ.க எம்.பி.க்கள் ஆதரவு வி.பி.சிங்கிற்கு இருந்தது. எனினும் அவர் மதச் சார்பின்மையின் பக்கமே நேர்மையாக நின்றார். அவரின் தளபதிகளாக மதிக்கப்பட்ட லாலு பிரசாத் பீகாரின் முதல்வர், முலாயம் சிங் உத்தரபிரதேச முதல்வர். இவர்கள் சமயசார்பின்மையின் பக்கம் இருக்கும் சாதனையாளர்கள். எனவேதான் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக சமயசார்பின்மையை முட்டி மோதித் தள்ள பாபர் மசூதி பக்கம் செல்லவே இவர்கள் அனுமதிக்கவில்லை.

தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.1990 அக்டோபர் அத்வானியின் ரதம் பீகாரில் 23ஆம் தேதி சமண்டிபூரில் தடுக்கப்பட்டது.

சமய நல்லிணக்கம் கேள்விக்குறியாகி திட்டமிட்டு கலவரம் நடந்தது. பீகாரில் லாலுவும், உ.பி.யில் முலாயமும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அடக்கினர். இதைத்தான் பாஜக எதிர்பார்த்தது. 1990 நவம்பர் 7ஆம் நாள் சமூகநீதிக்காகவும், சமயசார்பின்மை கொள்கைக்காகவும், நேர்மைக்காகவும் வி.பி.சிங் பாராளுமன்றத்தில் நம்பிக்கைக் கோரினார். அவருக்கு நன்கு தெரியும் ஆதிக்க சக்திகள் தன்னை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டன. எனினும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. இன்று போல் ஓட்டுக்கும் பணம் தரவில்லை! குதிரை பேரமும் நடத்தவில்லை! மாறாக,

”எனது கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அடைய வேண்டிய லட்சியத்தை அடைந்து விட்டேன்’’ என்று கூறி வெளியேறினார்.பாபர் மசூதியை வி.பி.சிங் காப்பாற்றினார். ஆனால், அடுத்து வந்த நரசிம்மராவ், அது இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அரசியல் உரிமை, அரசில் உரிமை, வேலைவாய்ப்பு, கல்வியல் உரிமை எனப் பலவும் அடைய இயலாத பின்தங்கியோர், சிறுபான்மை மக்கள் ஏராளம் ஏராளம்! அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து செல்ல வி.பி.சிங் எனும் மாமனிதர் போட்டதுதான். இடஒதுக்கீடு எனும் சிறிய அளவிலான வழிநடைப்பாதை. இதுவே இறுதியல்ல. இன்னமும் உண்டு. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற ராஜபாட்டையில் பயணிக்க வேண்டுமெனில், வி.பி.சிங் வழிகாட்டிய இடஒதுக்கீடு எனும் முழக்கத்தை இன்னும் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுதான் சமூக நீதியை அனைவருக்கும் வழங்க வல்லது.

தற்போதுள்ள வாய்ப்புகளே அதற்கான விதைகள். அதை முழுமையாகப் பயன்படுத்தக் கல்வி ஒன்றே முதல் வேலைத் திட்டம். இதைத்தான் மகத்தான மனிதர் வி.பி.சிங்கின் நினைவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தகவலுக்கு நன்றி
குணசேகரன்
Photo: நேர்மை தேசப்பற்று மதச் சார்பின்மை கொண்ட மகத்தான மனிதர்  வி.பி.சிங் !!!

மகத்தான மனிதர் யார்?  உங்களை நீங்களே கேட்டுக் கொண்டால் சிந்தனை ஒரு நொடி ஓய்வு எடுக்கும்.  பின்னர் இயங்கத் தொடங்கும் போது யாரை மகத்தான மனிதர், அதிலும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என ஓர் கேள்விக்கு நிச்சயம் ஒரு கணம் மனம் குழம்பும்.  அடுத்தடுத்து பலர் உங்கள் மனக்கண் முன்பு தோன்றுவார்கள்.  இறுதியில் ஒருவர் உங்களுக்குள் தேர்வானாலும் ஒரு சந்தேகம் எழும்.  இவர் மகத்தானவர்தானா?

ஆனால், பெயரைச் சொன்னவுடன் அவரின் எதிரிகள்கூட அட இவரா?  மகத்தான மனிதர் என ஏற்கும் ஒருவர் வி.பி.சிங்.“”ஒரு வீட்டில் பாகப்பிரிவினை நடந்தது.  எல்லாப் பொருளும் சரிசமமாக பங்கு பிரித்தனர்.  கடைசியில் அந்த வீட்டிற்கு தினசரி பாலைத் தந்த பசுமாடு மிஞ்சியது.  மாடும் பங்கு பிரிக்கப்பட்டது.  எப்படி?  மாட்டின் முன்பகுதி தம்பிக்கும், பின்பகுதி அண்ணனுக்கும் என்றாகியது.  தினசரி தம்பி முன் பக்கத்தில் அதற்கு தீனி வைப்பான்.  அண்ணன் தினசரி தன் பங்கான பின்பக்கத்தில் பாலைக் கறந்து கொள்வான்.

இது எப்படி சமமான, நியாயமான பாகப் பிரிவினை?  ஆனால், இப்படித்தான் உயர்சாதி என்பவர்கள் சமூகப் பலன் எனும் பின்பக்கத்துப் பாலைக் கறந்து விடுகின்றனர்.  உழைப்பாளி கீழ்த்தட்டு பின் தங்கிய மக்கள் சமூகத்திற்கு உழைக்கின்றனர்.  ஆனால் பயனில்லை.  எனவேதான், சமமான பலன் தர சமூகநீதி காக்க இட ஒதுக்கீட்டை வழங்கினேன்.’’

இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து வி.பி.சிங் எனும் மனிதர் இந்தக் கதையைப் பல இடங்களிலும் கூறுவார்.இயல்பாகவே அரசர் குடும்பத்தவர் அரசர் என்றாலும் எளிமையின் சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங்.  லக்னோ பல்கலையில் ஆசிரியராக இருந்த இவரை நேருதான் வசீகரித்தார்.  அவரின் ஆட்சிக் காலத்திலேயே இவர் கட்சியில் இணைந்தாலும், தனக்கென ஓர் தனிநபர் ஒழுக்கம், எளிமை, தூய்மை, ஏழைகள் பால் அன்பு என்பதில் மாற்றமில்லாமல் விளங்கினார்.

வி.பி.சிங்கின் அணுகுமுறைகள், அவரின் ஆளுமை பிரதமர் இந்திராவிடம் அவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தன.  1974ஆம் ஆண்டு வர்த்தகத் துறை துணை அமைச்சரானார்.  தான் வசிக்கும் பொறுப்பில் நேர்மை, தூய்மை, சேவை என்பதே அவரின் இலக்காக இருந்ததால் அவரின் கீழுள்ள அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை இவரைப் பின்பற்றினர்.

அதே வேளை வி.பி.சிங் 1980ல் உ.பி. முதல்வரானார்.  பிற்படுத்தப்பட்டோர் பற்றிய ஓர் ஆய்வுப் பணி பிர்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் மத்திய அரசு அமைத்தது.  இக்குழுவும் தன் பணியை நிறைவு செய்து பரிந்துரைகள் பலவற்றை அரசிடம் கூறியது.  ஆனால், இவை கிடப்பில் இருந்தன.

உ.பி. முதல்வரான வி.பி.சிங் அடக்குமுறை வழிகளைக் கைவிட்டு சமாதான வழியில் உ.பி.யில் பெருகி இருந்த கொள்ளையர் குழுக்களை ஆயுதங்கள் ஒப்படைக்க வைத்தார்.  எனினும், ஒரு சில குழுக்கள் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தி வந்தது.  ஒரு நாள் அவரின் சகோதரர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி அவர் வீட்டின் முன்பு ஒரு கோணிப் பையில் போட்டு விட்டுச் சென்றனர்.  அதைக் கண்ட வி.பி.சிங் அப்போதும் தனக்கு அதிகாரம் இருந்தும் அடக்குமுறையைக் கையாளவில்லை.  மாறாக “உ.பி.யில் கொள்ளையரிடமிருந்து என் சகோதரனையே காப்பாற்ற இயலாத நான் இந்த மாநில மக்களைக் காப்பதாகக் கூறி முதல்வராக எப்படி நீடிக்க முடியும்.  எனவே நான் பதவி விலகுகிறேன்’’ என்று கூறி முதல்வர் பொறுப்பை உதறினார்.

பலரும் மதிப்புமிக்க முதல்வர் பொறுப்பிற்கு ஆலா பறவை போல் கண்மண் தெரியாமல் சிறகடிக்கும் நிலையில் பதவியை துச்சமாக நினைத்த வி.பி.சிங்கின் செய்கை, அதிலிருந்த நேர்மை, பிரதமர் இந்திராவைக் கவர்ந்தது.  ஏற்கனவே அவர் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்த போது அவரின் துணிவை மதித்த பிரதமர் இவரை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்கி அதே வர்த்தகத் துறையை வழங்கினார்.  இதனால் பதுக்கல்காரர்கள் மிரண்டனர்.

1984இல் இந்திரா படுகொலைக்குப் பின்னர், ராஜீவ் பொறுப்பேற்றதும், வி.பி.சிங் நிதியமைச்சரானார்.  பிரதமரான ராஜீவ் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் நாட்டைக் கொண்டு சொல்ல கொள்கை சார்ந்து திட்டமிட்ட போது, அதற்கான நிதியை ஒதுக்க வேண்டிய நிலை நிதியமைச்சரான வி.பி.சிங்குக்கு ஏற்பட்டது.  நாட்டில் நிதியோ இல்லை.  ஏன் என்ன காரணம் என்பதை பொருளியல் நிபுணரான வி.பி.சிங் சிந்தித்தார்.  நிதிச் செயலக அதிகாரிகள் கூட்டம் பலமணி நேரம் நடந்தது.

சாமான்ய ஏழைகள் காணி நிலம் கொண்டிருந்தாலும் அதற்குரிய வரிகளை வசூலிக்கும் அரசு, நடுத்தர மக்களும் தாம் அன்றாடம் பயன்படுத்தும் அவசிய, அத்யாவசிய பொருட்களுக்கும் அதன் விலையுடனே வரியும் செலுத்துகின்றனர்.  ஆனால், பெரும் பண முதலைகள், நிறுவன அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக கணக்கும் காட்டுவதில்லை, வரியும் ஏய்க்கின்றனர்.  ஆனால்,அவர்கள் தொழில் மட்டும் லாபமாக நடக்கிறது.இதற்கு வடிகாலாக கார்ப்பரேட் வரியை முறையாக வசூலித்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்திராமல் நாடெங்கும் பணத் திமிங்கல வேட்டையைத் தொடங்க, முதலில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிட்டார்.

இந்தப் பட்டியல் மத்திய அமலாக்கத் துறைத் தலைவரான நேர்மையான அலுவலரான பூரலால் வசம் தந்து அவருக்கு சிறப்பு அதிகாரமும் தரப்பட்டது.  வேட்டைத் தொடங்கியது.  ரிலையன்ஸ் அம்பானி தொடங்கி அமிதாப்பச்சன் வரை சகலரும் பிடிபட்டனர்.  கிர்லோஸ்கர் என்ற தொழிலதிபர் முரண்டு பிடித்ததால் கைவிலங்கு போடும் நிலை ஏற்பட்டது.அரசின் கஜானா வரி ஏய்ப்புச் செய்தவர்களிடம் வசூலித்த தொகையால் நிரம்பியது.  பல தவறான நடவடிக்கைகளை மறைமுகமாகமேற்கொள்ளும் பெரிய மனிதர்கள் என்பவர்கள், அவர்களின் ஆலோசர்கள் வி.பி.சிங் இந்தப் பதவியில் தொடர்வது தங்களுக்கு ஆபத்து எனப் புலம்பினர்.

இதனால், வி.பி.சிங் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார்.  1987 ஜனவரி 23ஆம் நாள் அத்துறை அமைச்சரான சிங்  பாதுகாப்புத் துறைக்குள்ளே நடக்கும் கணக்கு வழக்கை சரிபார்க்க ராஜிவ் நியமித்த ஃபேர் பாக்ஸ் என்ற வெளிநாட்டுக் கணக்கு நிறுவனத்தால்  பாதுகாப்புத் துறை விவரங்கள் வெளிப்படும் ஆபத்து உள்ளதாகக் கூறி அதைத் தடுக்க முயற்சித்தார்.
அடுத்து நீர் மூழ்கிக் கப்பல் ஊழலைக் கண்டறிந்து விசாரிக்க ஆணையிட்டார்.  அதே நேரம் போபார்ஸ் பீரங்கி வாங்கியதிலும் கமிஷ­ன் கைமாறியதைக் கண்டுபிடித்தார்.  இதை விசாரிக்கவும் உத்தரவிட்ட நிலையில் 1987 ஏப்ரல் 4ஆம் நாள் அமைச்சரவை, கட்சி என அனைத்திலிருந்தும் விலகினார்.  தவறுகளைக் கண்டறிவதில் அவருக்கு நெருக்கடி ஏற்படுவதை ஒரு நேர்மையாளரான அவரால் ஏற்க முடியவில்லை.

நேர்மை, தேசப்பற்று, மதச் சார்பின்மை என்பதில் உறுதியான வி.பி.சிங் அலகாபாத் இடைத் தேர்தலில் பலம் மிக்க கட்சி அதன் வேட்பாளர்களை சுவரொட்டி விளம்பரம் கூட செய்யாமல் புடைசூழ தொண்டர்கள் இல்லாமல், மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி தொகுதி முழுவதும் மக்களை சந்தித்துப் பேசி வாக்கு சேகரித்தார்.  அவரின் நேர்மையை, எளிமையை மக்கள் நேசித்தனர்.  பலமிக்க அவருக்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தனர்.

1989 டிசம்பர் 2 நாட்டின் பத்தாவது பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார்.  கூட்டாட்சித் தத்துவத்தில் உறுதிமிக்க வி.பி.சிங் மாநில உரிமைகளைக் காப்பதில் நிகரற்றவராக இருந்தார்.  தமிழகத்தின் நீண்ட கால இழுபறி பிரச்சனையான காவிரி நீர் தொடர்பாக இவர்தான் நடுவர் மன்றம் அமைத்தார்.  ஈழத்தில் தங்கி இருந்த இந்திய இராணுவத்தை அந்நாட்டு மக்கள் கடுமையான எதிர்த்ததால் இந்தியா திரும்பும் ஆணை பிறப்பித்தார்.

எல்லாவற்றையும் விட பத்தாண்டுகளாக மத்திய அரசின் பிரதமர் அலுவலகத்தில் தூசி படிந்து கிடந்த மண்டல் குழு அறிக்கையை தூசி தட்டி 1990 ஆகஸ்ட் ஏழாம் நாள் இந்திய பிற்பட்ட மக்களின் மறு சுதந்திர அறிவிப்பான இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செலுத்தி வந்த சாதிய ஆதிக்கத்தை பெரியார் கண்ணாடி அணிந்த வி.பி.சிங்குக்கு மண்டல் தான் சரியான தீர்வு என உணர முடிந்தது.  அதனால், சமூகநீதி காக்க ஆணையிட்டார்.  ஆதிக்க வர்க்கம் அலறியது, அழுது புலம்பியது.  கலவரம் நடத்தினர்.  தகுதி – திறமை எனப் புலம்பினர்.  அதே ஆண்டு அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்.  அத்துடன் சமூகநீதித் துறை என்பதை உருவாக்கி அதற்கு ராம் விலாஸ் பாஸ்வான் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை அமைச்சராக்கினார்.  இவர்தான் மண்டல் குழுப் பரிந்துரைகளை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டு ஆணையை கையயழுத்திட்டவர்.

இதனால், மேலும் கொதித்தனர்.  உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர்.  சமூக நீதியை நிலைநாட்டியதற்காக வி.பி.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தத்தை பா.ஜ.க. உருவாக்கியது.  இவரை எதிர்க்க பா.ஜ.க.விற்கு பல காரணங்கள் அதில் இடஒதுக்கீடும் ஒன்று.

மண்டல் விவகாரத்தால் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் விவாதப் பொருளானால் தங்கள் வியாபாரம் களைகட்டாது என்ற நிலையில், இந்த மக்களை திசை திருப்ப உணர்வு ரீதியாக அயோத்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்தது.  அதே ஆண்டு இவர்களால் வி.பி.சிங் ஆட்சியை வெளிப்படையாக எதிர்க்க இயலவில்லை.  அதற்கான தருணமான அயோத்தி யாத்திரை தொடங்கியது. பா.ஜ.க எம்.பி.க்கள் ஆதரவு வி.பி.சிங்கிற்கு இருந்தது.  எனினும் அவர் மதச் சார்பின்மையின் பக்கமே நேர்மையாக நின்றார்.  அவரின் தளபதிகளாக மதிக்கப்பட்ட லாலு பிரசாத் பீகாரின் முதல்வர், முலாயம் சிங் உத்தரபிரதேச முதல்வர்.  இவர்கள் சமயசார்பின்மையின் பக்கம் இருக்கும் சாதனையாளர்கள்.  எனவேதான் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக சமயசார்பின்மையை முட்டி மோதித் தள்ள பாபர் மசூதி பக்கம் செல்லவே இவர்கள் அனுமதிக்கவில்லை.

தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.1990 அக்டோபர் அத்வானியின் ரதம் பீகாரில் 23ஆம் தேதி சமண்டிபூரில் தடுக்கப்பட்டது.

சமய நல்லிணக்கம் கேள்விக்குறியாகி திட்டமிட்டு கலவரம் நடந்தது.  பீகாரில் லாலுவும், உ.பி.யில் முலாயமும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அடக்கினர்.  இதைத்தான் பாஜக எதிர்பார்த்தது.  1990 நவம்பர் 7ஆம் நாள் சமூகநீதிக்காகவும், சமயசார்பின்மை கொள்கைக்காகவும், நேர்மைக்காகவும் வி.பி.சிங் பாராளுமன்றத்தில் நம்பிக்கைக் கோரினார்.  அவருக்கு நன்கு தெரியும் ஆதிக்க சக்திகள் தன்னை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டன.  எனினும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை.  இன்று போல் ஓட்டுக்கும் பணம் தரவில்லை!  குதிரை பேரமும் நடத்தவில்லை!  மாறாக,

”எனது கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால், அடைய வேண்டிய லட்சியத்தை அடைந்து விட்டேன்’’ என்று கூறி வெளியேறினார்.பாபர் மசூதியை வி.பி.சிங் காப்பாற்றினார்.  ஆனால், அடுத்து வந்த நரசிம்மராவ், அது இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அரசியல் உரிமை, அரசில் உரிமை, வேலைவாய்ப்பு, கல்வியல் உரிமை எனப் பலவும் அடைய இயலாத பின்தங்கியோர், சிறுபான்மை மக்கள் ஏராளம் ஏராளம்!  அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து செல்ல வி.பி.சிங் எனும் மாமனிதர் போட்டதுதான்.  இடஒதுக்கீடு எனும் சிறிய அளவிலான வழிநடைப்பாதை.  இதுவே இறுதியல்ல.  இன்னமும் உண்டு.  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற ராஜபாட்டையில் பயணிக்க வேண்டுமெனில், வி.பி.சிங் வழிகாட்டிய இடஒதுக்கீடு எனும் முழக்கத்தை இன்னும் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.  அதுதான் சமூக நீதியை அனைவருக்கும் வழங்க வல்லது.

தற்போதுள்ள வாய்ப்புகளே அதற்கான விதைகள்.  அதை முழுமையாகப் பயன்படுத்தக் கல்வி ஒன்றே முதல் வேலைத் திட்டம்.  இதைத்தான் மகத்தான மனிதர் வி.பி.சிங்கின் நினைவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தகவலுக்கு நன்றி 
குணசேகரன்

No comments:

Post a Comment