Friday, October 5, 2012

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் (கவிதை திருவிழா கவிதை)

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் (கவிதை திருவிழா கவிதை)
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ,
மறுக்க முடியாது ,
இதை மறந்துபோனதுதான் வேதனை !

பெருகிப்போகும் மக்கள் தொகை ,
சுருகிப்போன விவசாயம் ,
நாகரீக வாழ்க்கையில்
சேற்று வாசனையும் நாற்று வாசனையும்
மக்களுக்கு நாற்றமாய் தெரிய ,
பட்டினம் தேடி பறக்கிறார்கள் ,
கிராமத்தை வெறுக்கிறார்கள் ,
காசு கொடுத்து வாங்காத இயற்க்கை காற்றை மறந்து ,
காசு கொடுத்து வாங்கும் ஏசி காற்றில் மயக்கம் !

வலுவிழந்த விவசாய முதுகெலும்பு ,
ரத்த ஓட்டத்தில் ஆங்காங்கே தடைகள் ,
துண்டுகலாகிப்போன ஆறுகள் , நதிகள் ,
என்று சேரப்போகிறது ஒன்றாய் ,
வலுவிழந்த முதுகெலும்பிற்கு
வலு சேர்க்கும் வழி நதிகளை தேசியமயமாகளும்
இணைத்தலுமே !

பொன்னை விளைவிக்கும்
பூமித்தாயின் வயிற்றில் ,
கட்டிட புற்றுநோய் அல்லவே தொற்றிகிடக்கு !

உணவு பொருட்கள் விளைந்து செழித்த இடத்தில்
கழிவு குப்பைகளை கொட்டி
பூமியின் புனிதத்தை கெடுக்கிறோம் !

மும்மாரி பொழிந்த மழை ,
முப்போகம் விளைந்த நெல் ,
பசுமையால் செழித்த பூமி ,
பசியாறிய உலகம் ,
மருந்துகள் இல்லாத அந்த காலத்தில் ,
இயற்கையாய் விளைச்சல்,
ஆறுமாத பயிரால்
ஆயிசு நூறு ,
மூன்று மாத பயிரால்
ஆயிசு பாதி ,
இயற்கையை உண்டவன் இயற்கையாய் மடிந்தான் ,
மருந்தால் விளைந்ததை சாப்பிட்டவன்
மருந்தாலே மடிகிறான் !

ஆயிரம் தொழில்களில் ஆர்வம் கொண்டோம் ,
சோறுபோடும் தொழிலை மறந்துபோனோம் ,
சேற்றில் கால்வைக்கவிட்டால் ,
சோற்றுக்கு வழியேது
கணிப்பொறிகள் வந்ததும்
கழனிகளை மறந்துவிட்டோம் ,
எப்படி ஏறி எங்கு சென்றாலும் ,
அடிப்படை என்பது விவசாயம்தானே !

வரப்புகளை வெறுத்தோம் ,
இயற்கையின் வெறுப்புகளை சம்பாதிக்கிறோம் ,
பணமென்பதையே கொள்கையாய் கொண்டுவிட்டோம் ,
விவசாயத்தை விட்டுவிட்டால் ,
நாளை பணத்தையா தின்ன முடியும் !

விளையாட்டு சாதனைக்கு
கோடிக்கணக்கில் பரிசு ,
விவசாய சாதனைக்கு என்னையா இருக்கு ,
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை !

இந்தியாவின் முதுகெலும்பு
கூன் வளைந்து போய்விட்டது ,
ஆமாம்,விவசாய நிலங்களில்
இன்று காடிடங்கள் அல்லவே
விளைந்து கிடக்கு !

எருவும் , நீரும் , சேரும் , விதையும்
கலந்த இடத்தில் ,
இன்று கம்பியும் , கலவையும் , கான்கிரிட்டும்
அல்லவா கலந்து கிடக்கு !

நாற்று வாசனை வந்த இடத்தில் ,
தார் வாசனை ,
வரப்புகளை அபகரித்த
தேசிய நெடுஞ்சாலைகள் ,
சோறுக்கு வழிதேடாத அரசு ,
பீருக்கு வழிதேடுது ,
களையிழந்த விவசாய ஒழுங்குமுறை
விற்பனைக்கூடம் ,
களைகட்டும் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள்!

முட்டாள் சட்டங்களால் ,
முடங்கிப்போன விவசாயம் ,
விளைவித்த நிளங்கள்
இன்று விலைநிலமாய்,
பாரத தாயின் உடலை
பங்கு போட்டுக்கொள்ளும் ரியல் எஸ்டேட் !

வருடா வருடம் வரும் பட்ஜெட் ,
வாழவைக்கும் விவசாயத்தை மறந்துவிட்டு ,
சாகடிக்கும் ராணுவ தளவாடங்கள் வாங்க முதலிடம்!

ரத்தத்தை வியர்வையாக்கி ,
உழைத்து சோர்ந்தவனுக்கு
ஓய்வெடுக்க வீடில்லை ,
A / C அறையில் ஓசியில் தூங்கும் அதிகாரிகளுக்கு
ஐந்தாவது , ஆறாவது ஊதிய கமிஷனில்
சம்பள ஏற்றம் ,வீடு , ஊர் சுற்ற கார் !

படைத்தவன் கடவுளென்றால்
பயிர்விப்பவர்களும் கடவுளே ,
விவசாயிகளை போற்றுவோம் ,
விவசாயத்தை போற்றுவோம் !

மருந்துகளை மறப்போம் ,
இயற்கையை மதிப்போம் ,
செயற்கை வழியை மறந்துவிட்டு ,
இயற்க்கை வழி பயிர் செய்வோம்
வளைந்து போன இந்தியாவின்
முதுகெலும்பிற்கு தெம்பு சேர்ப்போம் !

நதிகளை இணைப்போம் ,
நம்பிக்கையோடு உழைப்போம் ,
விவசாய தொழிலை
விஞ்ஞானத்தோடு சேர்ப்போம் ,
விஞ்ஞானத்தை விவசாயத்திலும்
புகுத்துவோம் ,
நோய்களை கொள்ளுவோம் ,
துவண்ட விவசாயத்திற்கு தோள்கொடுப்போம்
மற்றுமொறுமுறை புரட்சி செய்வோம் ,
விவசாய புரட்சி !
Photo: இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் (கவிதை திருவிழா கவிதை)
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ,
மறுக்க முடியாது ,
இதை மறந்துபோனதுதான் வேதனை !

பெருகிப்போகும் மக்கள் தொகை ,
சுருகிப்போன விவசாயம் ,
நாகரீக வாழ்க்கையில்
சேற்று வாசனையும் நாற்று வாசனையும்
மக்களுக்கு நாற்றமாய் தெரிய ,
பட்டினம் தேடி பறக்கிறார்கள் ,
கிராமத்தை வெறுக்கிறார்கள் ,
காசு கொடுத்து வாங்காத இயற்க்கை காற்றை மறந்து ,
காசு கொடுத்து வாங்கும் ஏசி காற்றில் மயக்கம் !

வலுவிழந்த விவசாய முதுகெலும்பு ,
ரத்த ஓட்டத்தில் ஆங்காங்கே தடைகள் ,
துண்டுகலாகிப்போன ஆறுகள் , நதிகள் ,
என்று சேரப்போகிறது ஒன்றாய் ,
வலுவிழந்த முதுகெலும்பிற்கு
வலு சேர்க்கும் வழி நதிகளை தேசியமயமாகளும்
இணைத்தலுமே !

பொன்னை விளைவிக்கும்
பூமித்தாயின் வயிற்றில் ,
கட்டிட புற்றுநோய் அல்லவே தொற்றிகிடக்கு !

உணவு பொருட்கள் விளைந்து செழித்த இடத்தில்
கழிவு குப்பைகளை கொட்டி
பூமியின் புனிதத்தை கெடுக்கிறோம் !

மும்மாரி பொழிந்த மழை ,
முப்போகம் விளைந்த நெல் ,
பசுமையால் செழித்த பூமி ,
பசியாறிய உலகம் ,
மருந்துகள் இல்லாத அந்த காலத்தில் ,
இயற்கையாய் விளைச்சல்,
ஆறுமாத பயிரால்
ஆயிசு நூறு ,
மூன்று மாத பயிரால்
ஆயிசு பாதி ,
இயற்கையை உண்டவன் இயற்கையாய் மடிந்தான் ,
மருந்தால் விளைந்ததை சாப்பிட்டவன்
மருந்தாலே மடிகிறான் !

ஆயிரம் தொழில்களில் ஆர்வம் கொண்டோம் ,
சோறுபோடும் தொழிலை மறந்துபோனோம் ,
சேற்றில் கால்வைக்கவிட்டால் ,
சோற்றுக்கு வழியேது
கணிப்பொறிகள் வந்ததும்
கழனிகளை மறந்துவிட்டோம் ,
எப்படி ஏறி எங்கு சென்றாலும் ,
அடிப்படை என்பது விவசாயம்தானே !

வரப்புகளை வெறுத்தோம் ,
இயற்கையின் வெறுப்புகளை சம்பாதிக்கிறோம் ,
பணமென்பதையே கொள்கையாய் கொண்டுவிட்டோம் ,
விவசாயத்தை விட்டுவிட்டால் ,
நாளை பணத்தையா தின்ன முடியும் !

விளையாட்டு சாதனைக்கு
கோடிக்கணக்கில் பரிசு ,
விவசாய சாதனைக்கு என்னையா இருக்கு ,
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை !

இந்தியாவின் முதுகெலும்பு
கூன் வளைந்து போய்விட்டது ,
ஆமாம்,விவசாய நிலங்களில்
இன்று காடிடங்கள் அல்லவே
விளைந்து கிடக்கு !

எருவும் , நீரும் , சேரும் , விதையும்
கலந்த இடத்தில் ,
இன்று கம்பியும் , கலவையும் , கான்கிரிட்டும்
அல்லவா கலந்து கிடக்கு !

நாற்று வாசனை வந்த இடத்தில் ,
தார் வாசனை ,
வரப்புகளை அபகரித்த
தேசிய நெடுஞ்சாலைகள் ,
சோறுக்கு வழிதேடாத அரசு ,
பீருக்கு வழிதேடுது ,
களையிழந்த விவசாய ஒழுங்குமுறை
விற்பனைக்கூடம் ,
களைகட்டும் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள்!

முட்டாள் சட்டங்களால் ,
முடங்கிப்போன விவசாயம் ,
விளைவித்த நிளங்கள்
இன்று விலைநிலமாய்,
பாரத தாயின் உடலை
பங்கு போட்டுக்கொள்ளும் ரியல் எஸ்டேட் !

வருடா வருடம் வரும் பட்ஜெட் ,
வாழவைக்கும் விவசாயத்தை மறந்துவிட்டு ,
சாகடிக்கும் ராணுவ தளவாடங்கள் வாங்க முதலிடம்!

ரத்தத்தை வியர்வையாக்கி ,
உழைத்து சோர்ந்தவனுக்கு
ஓய்வெடுக்க வீடில்லை ,
A / C அறையில் ஓசியில் தூங்கும் அதிகாரிகளுக்கு
ஐந்தாவது , ஆறாவது ஊதிய கமிஷனில்
சம்பள ஏற்றம் ,வீடு , ஊர் சுற்ற கார் !

படைத்தவன் கடவுளென்றால்
பயிர்விப்பவர்களும் கடவுளே ,
விவசாயிகளை போற்றுவோம் ,
விவசாயத்தை போற்றுவோம் !

மருந்துகளை மறப்போம் ,
இயற்கையை மதிப்போம் ,
செயற்கை வழியை மறந்துவிட்டு ,
இயற்க்கை வழி பயிர் செய்வோம்
வளைந்து போன இந்தியாவின்
முதுகெலும்பிற்கு தெம்பு சேர்ப்போம் !

நதிகளை இணைப்போம் ,
நம்பிக்கையோடு உழைப்போம் ,
விவசாய தொழிலை
விஞ்ஞானத்தோடு சேர்ப்போம் ,
விஞ்ஞானத்தை விவசாயத்திலும்
புகுத்துவோம் ,
நோய்களை கொள்ளுவோம் ,
துவண்ட விவசாயத்திற்கு தோள்கொடுப்போம்
மற்றுமொறுமுறை புரட்சி செய்வோம் ,
விவசாய புரட்சி !

No comments:

Post a Comment