Wednesday, April 11, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவாய் மொழி பத்தாம் பத்து

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாய் மொழி பத்தாம் பத்து

3783 தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. 1.1

3784 இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்
அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்
நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. 1.2

3785 அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்
நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. 1.3

3786 இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்
இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. 1.4

3787 தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன்
அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்
எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. 1.5

3888 கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்
ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. 1.6

3789 மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா
சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா
முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்
சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. 1.7

3790 துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. 1.8

3791 மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்
அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்
துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. 1.9

3792 நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். 1.10.

3793 ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு
கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்
வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. 1.11

3794 கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. 2.1

3795 இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. 2.2

3796 ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. 2.3

3797 பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. 2.4

3798 புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 2.5

3799 அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. 2.6

3800 துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. 2.7

3801 கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். 2.8

3802 நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. 2.9

3803 மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. 2.10.

3804 அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. 2.11

3805 வேய்மரு தோளிணை மெலியு மாலோ.
மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவு மாலோ.
கணமயில் அவைகலந்தாலு மாலோ
ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு
ஒருபக லாயிர மூழி யாலோ
தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ.
தகவிலை தகவிலையே நீ கண்ணா. 3.1

3806 தகவிலை தகவிலை யேநீ கண்ணா.
தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா
சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே
அகவுயிர் அகமதந்தோறும் உள்புக்
காவியின் பரமல்ல வேட்கை யந்தோ
மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்
வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 3.2

3807 வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு
வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்
யாவரும் துணையில்லை யானி ருந்துன்
அஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவதன் றொருபகல் நீய கன்றால்
பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா
சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப்
பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. 3.3

3808 தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந் தா நின்
தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்
துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்
பாவியேன் மனமகந் தோறு முள்புக்
கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். 3.4

3809 பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெருமத மாலையும் வந்தின் றாலோ
மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்
வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து
அணிமிகு தாமரைக் கையை யந்தோ.
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். 3.5

3810 அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்
ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்
பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்
வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா
மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே
வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. 3.6

3811 வேமெம துயிரழல் மெழுகில் உக்கு
வெள்வளை மேகலை கழன்று வீழ
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்
தூணைமுலை பயந்து என தோள்கள் வாட
மாமணி வண்ணா உன்செங்கமல
வண்ணமென் மலரடி நோவ நீபோய்
ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 3.7

3812 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று
ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்க லந்து
கலவியும் நலியுமென் கைகழி யேல்
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ
உகக்குநல் லவரொடும் உழித ராயே. 3.8

3813 உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்
திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம்
எம்பெரு மான். பசு மேய்க்கப் போகேல்
மிதப்பல அசுரர்கள் வேண்டும் உருவங்
கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ
அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. 3.9

3814 அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ.
அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்
தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று
ஊடுற வென்னுடை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. 3.10.

3815 செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு
அத்திருவடி திருவடி மேல் பொ ருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்
உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. 3.11

3816 சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. 4.1

3817 பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. 4.2

3818 ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. 4.3

3819 தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. 4.4

3820 நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. 4.5

3821 நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. 4.6

3822 பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. 4.7

3823 ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். 4.8

3824 கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம்
தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே. 4.9

3825 வகையால் மனமொன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. 4.10.

3826 பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோ ள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. 4.11


பத்து வகை பத்தியும் பிரபத்தியும்

3827 கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. 5.1

3828 நாரணன் எம்மான்
பாரணங்காளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே. 5.2

3829 தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே யாள்வானே. 5.3

3830 ஆள்வான் ஆழிநீர்
கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு
நாள்வாய் நாடீரே. 5.4

3831 நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம்
வீடே பெறலாமே. 5.5

3832 மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட
வாயான் மாதவனே. 5.6

3833 மாதவன் என்றென்று
ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா
ஏதம் சாராவே. 5.7

3834 சாரா ஏதங்கள்
நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே. 5.8

3835 அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே. 5.9

3836 வினைவல் இருளென்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு
நினைமின் நெடியானே. 5.10.

3837 நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து
அடியார்க்கு அருள் பேறே. 5.11

3838 அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. 6.1

3839 வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 6.2

3840 நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. 6.3

3841 என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. 6.4

3842 வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. 6.5

3843 தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. 6.6

3844 குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. 6.7

3845 மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? 6.8

3846 திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. 6.9

3847 பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. 6.10.

3848 காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. 6.11

3849 செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட்
செய்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சு முயிரும் அவைடுண்டு
தானே யாகி நிறைந்தானே. 7.1

3850 தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே. 7.2

3851 என்னை முற்றும் உயிருண்டென்
மாய ஆக்கை யிதனுள்புக்கு
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
திசைகை கூப்பிச் தேர்ந்தயான்
இன்னம் போவே னேகொலோ.
எங்கொல் அம்மான் திருவருளே? 7.3

3852 என்கொல் அம்மான் திருவருள்கள்?
உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் னுடலம் கைவிடான்
ஞாலத் தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய்
நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான்
நண்ணா அசுரர் நலியவே. 7.4

3853 நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணா தனகள் எண்ணும்நன்
முனிவ ரின்பம் தலைசிறப்ப
பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம்மான்
திருமாலிருஞ்சோலையானே. 7.5

3854 திருமாலிருஞ்சோலையானே
ஆகிச் செழுமூ வுலகும் தன்
ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து
ஊழி யூழி தலையளிக்கும்
திருமாலென்னை யாளுமால்
சிவனும் பிரமனும்காணாது
அருமா லெய்தி யடிபரவ
அருளை யீந்த அம்மானே. 7.6

3855 அருளை ஈயென் அம்மானே.
என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும்
தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும்
ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை
திருமாலிருஞ்சோலைமலையே. 7.7

3856 திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என்
ஊழி முதல்வன் ஒருவனே. 7.8

3857 ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே. 7.9

3858 மங்க வொட்டுன் மாமாயை
திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ
யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி
மானாங்கார மனங்களே. 7.10.

3859 மானாங்கார மனம்கெட
ஐவர் வன்கை யர்மங்க
தானாங்கார மாய்ப்புக்குத்
தானே தானே யானானை
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்
சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும்
திருமாலிருங்சோலைமலைக்கே. 7.11

3860 திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன
திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே. 8.1

3861 பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே. 8.2

3862 பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே. 8.3

3863 எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்
தெளிதா கியசேண் விசும்புதரு வானே. 8.4

3864 வானே தருவா னெனக்காயென் னோடொட்டி
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே. 8.5

3865 திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து
இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே. 8.6

3866 உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. 8.7

3867 கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ. 8.8

3868 இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்
அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே. 8.9

3869 உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே. 8.10.

3870 நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே. 8.11

3871 சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே. 9.1

3872 நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில்
நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே. 9.2

3873 தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே
எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே. 9.3

3874 எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்
அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே. 9.4

3875 மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே. 9.5

3876 வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. 9.6

3877 மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி
குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே. 9.7

3878 குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே. 9.8

3879 வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 9.9

3880 விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே. 9.10.

3881 வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே. 9.11

3882 முனியே. நான்முக னே.முக்கண்
ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு
மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை
மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும்
மாயம் செய்யேல் என்னையே. 10.1

3883 மாயம்செய் யேலென்னை உன்திரு
மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை
நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக்
கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. 10.2

3884 கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என்
பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்
அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன்
இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே.
உம்பர் அந்ததுவே. 10.3

3885 உம்ப ரந்தண் பாழேயோ.
அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள்
பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த
முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப்
போரவிட் டிட்டாயே. 10.4

3886 போரவிட் டிட்டென்னை நீபுறம்
போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ.
எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது
போலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக்கு
ஆராவமுதானாயே. 10.5

3887 எனக்கா ராவமு தாயென
தாவியை இன்னுயிரை
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா
யினியுண் டொழியாய்
புனக்கா யாநிறத்த புண்டரீ
கக்கட்f செங்கனிவாய்
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்
கன்பா..என் அன்பேயோ. 10.6

3888 கோல மலர்ப்பாவைக் கன்பா
கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பிறைகவ்வி
நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய்நிலங்
கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப்
பெற்றினிப் போக்குவனோ? 10.7

3889 பெற்றினிப் போக்குவனோ உன்னை
என் தனிப் பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய்ப்
பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந்
தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என்
முதல்தனி னித்தேயோ. 10.8

3890 முதல்தனி வித்தேயோ. முழுமூ
வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்
வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற்
றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த
முடிவி லீயோ. 10.9

3891 சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில்
பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன்
மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான
வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா
அறச்சூழ்ந் தாயே. 10.10.

3892 அவாவறச் சூழரியை அயனை
அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்
சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா
யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந்
தார்பிறந் தாருயர்ந்தே. 10.11


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவாய் மொழி ஒன்பதாம் பத்து

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாய் மொழி ஒன்பதாம் பத்து

3673 கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும்,
கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை,
எண்டி சையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான்,
தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே. 1.1

3674 துணையும் சார்வு மாகுவார்போல் சுற்றத் தவர்பிறரும்,
அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்,
கணையொன் ராலே யேழ்மாமரமு மெய்தேங் கார்முகிலை,
புணையென் றுய்யப் போகிலல்லா லில்லைகண் டீர்பொருளே. 1.2

3675 பொருள்கை யுண்டாய்ச் செல்லக்
காணில் போற்றியென் றேற்றெழுவர்,
இருள்கொள் துன்பத் தின்மை
காணில் என்னேஎன் பாருமில்லை,
மருள்கொள் செய்கை யசுரர்
மங்க வடமது ரைப்பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல்
அல்லால் இல்லைகண் டீரரணே. 1.3

3676 அரணம் ஆவர் அற்ற
காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,
இரணம் கொண்ட தெப்பர்
ஆவர் இன்றியிட் டாலுமஃஅதே,
வருணித் தென்னே வடமது
ரைப்பி றந்தவன் வண்புகழே,
சரணென் றுய்யப் போகல்
அல்லால் இல்லைகண் டீர்சதிரே. 1.4

3677 சதுரம் என்று தம்மைத்
தாமே சம்மதித் தின்மொழியார்,
மதுர போக மதுவுற்
றவரே வைகிமற் றொன்றுறுவர்,
அதிர்கொள் செய்கை யசுரர்
மங்க வடமது ரைப்பிறந்தாற்க,
எதிர்கொள் ஆளாய் உய்யல்
அல்லால் இல்லைகண் டீரின்பமே. 1.5

3678 இல்லை கண்டீர் இன்பம்
அந்தோ. உள்ளது நினையாதே,
தொல்லை யார்க ளெத்த னைவர்
தோன்றிக் கழிந்தொழிந்தார்?
மல்லை மூதூர் வடம
துரைப்பி றந்தவன் வண்புகழே,
சொல்லி யுய்யப் போகல்
அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 1.6

3679 மற்றொன் றில்லை சுருங்கச்
சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,
சிற்ற வேண்டா சிந்திப்
பேயமை யும்கண் டீர்களந்தோ.
குற்றமன் றெங்கள் பெற்றத்
தாயன் வடமது ரைப்பிறந்தான்,
குற்ற மில்சீர் கற்று
வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 1.7

3680 வாழ்தல் கண்டீர் குணமி
தந்தோ. மாயவன் அடிபரவி,
போழ்து போக வுள்ள
கிற்கும் புன்மையி லாதவர்க்கு,
வாழ்து ணையா வடம
துரைப்பி றந்தவன் வண்புகழே,
வீழ்து ணையாய்ப் போமி
தனில்யா துமில்லை மிக்கதே. 1.8

3681 யாது மில்லை மிக்க
தனிலென் றன்ற துகருதி,
காது செய்வான் கூதை
செய்து கடைமுறை வாழ்கையும்போம்,
மாது கிலிங்கொ டிக்கொள்
மாட வடமது ரைப்பிறந்த,
தாது சேர்தாள் கண்ணன்
அல்லால் இல்லைகண் டீரிசரணே. 1.9

3682 கண்ணன் அல்லால் இல்லை
கண்டீர் சரணது நிற்கவந்து,
மண்ணின் பாரம் நீக்கு
தற்கே வடமது ரைப்பிறந்தான்,
திண்ண மாநும் முடைமை
யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ,
எண்ண வேண்டா நும்ம
தாதும் அவனன்றி மற்றில்லையே. 1.10

3683 ஆதும் இல்லை மற்ற
வனிலென் றதுவே துணிந்து,
தாது சேர்தோள் கண்ண
னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
தீதி லாத வொண்தமிழ்
கள் இவை ஆயிரத்து ளிப்பத்தும்,
ஓத வல்ல பிராக்கள்
நம்மை யாளுடை யார்கள்பண்டே. 1.11

3684 பண்டைநா ளாலே நிந்திரு வருளும்
பங்கயத் தாள்திரு வருளும்
கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால்
குடிகுடி வழிவந்தாட் செய்யும்,
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன்
தாமரைக் கண்களால் நோக்காய்,
தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த
திருபுளிங் குடிக்கிடந் தானே. 2.1

3685 குடிகிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த
அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்
அடிக்கட வாதே வழிவரு கின்ற
அடியரோர்க் கருளி,நீ யொருநாள்
படிக்கள வாக நிமிர்த்தநின் பாத
பங்கய மேதலைக் கணியாய்,
கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத்
திருபுளிங் குடிக்கிடந் தானே. 2.2

3686 கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தியுன் திருவுடம் பசைய,
தொடர்ந்துகுற் றவேல் செய்துதொல் லடிமை
வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடந்தோள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன்
தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய்
திருபுளிங் குடிக்கிடந் தானே. 2.3

3687 புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே
என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்பநீ காணவா ராயே. 2.4

3688 பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காண
வந்துநின் பன்னிலா முத்தம்,
தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண்
டாமரை தயங்குநின் றருளாய்,
பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்
தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
கவளமா களிற்றி னிடர்கெடத் தடத்துக்
காய்சினப் பறவையூர்ந் தானே. 2.5

3689 காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்
மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங்
கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே. கதிர்முடி யானே.
கலிவயல் திருபுளிங் குடியாய்,
காய்சின ஆழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் இடர்கடி வானே. 2.6

3690 எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே.
இமையவர் தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து
நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 2.7

3691 எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
இணையடி தொழுதெழுந் திறைஞ்சி
தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால்
தலைதலைச் சிறந்தபூ சிப்ப,
திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்.
திருவைகுந் தத்துள்ளாய். தேவா,
இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள்
இருந்திடாய் வீற்றிடங் கொண்டே. 2.8

3692 வீற்றிடங் கொண்டு வியங்கொள்மா ஞாலத்
திதனுளு மிருந்திடாய், அடியோம்
போற்றியோ வாதே கண்ணினை குளிரப்
புதுமலர் ஆகத்தைப் பருக,
சேற்றிள வாளை செந்நெலூ டுகளும்
செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
கொடுவினைப் படைகள்வல் லானே. 2.9

3693 கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்
கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே.
கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள்
கூவுதல் வருதல்செய் யாயே. 2.10

3694 கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரைகடல் கடைந்தவன் தன்னை,
மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல்
வழுதிநா டஞ்சட கோபன்,
நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையுமோர் பத்தும்வல் லார்கள்,
ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான்
அடியிணை யுள்ளத்தோர் வாரே. 2.11

3695 ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்
பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்
காரா யினகா ளநன்மே னியினன்,
நாரா யணன்நங் கள்பிரான் அவனே. 3.1

3696 அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. 3.2

3697 அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே. 3.3

3698 மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,
பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்
கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும்தே வலைசோ ரேல்கண்டாய் மனமே. 3.4

3699 மனமே. உன்னைவல் வினையேன் இரந்து,
கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,
புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,
இனமே துமிலா னையடை வதுமே. 3.5

3700 அடைவ துமணி யார்மலர் மங்கைதோள்,
மிடைவ துமசு ரர்க்குவெம் போர்களே,
கடைவ தும்கட லுள் அமுது, என்மனம்
உடைவ தும் அவற் கேயொருங் காகவே. 3.6

3701 ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்
ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை,
மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்
ஏக மெண்ணும் இராப்பக லின்றியே. 3.7

3702 இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,
ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,
சென்று தேவர்கள் கைதொழு வார்களே. 3.8

3703 தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,
எழுது மென்னும் இதுமிகை யாதலில்,
பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,
தழுவு மாறறி யேனுன தாள்களே. 3.9

3704 தாள தாமரை யானுன துந்தியான்,
வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,
ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,
நாளும் என்புகழ் கோவுன சீலமே? 3.10

3705 சீல மெல்லையி லானடி மேல்,அணி
கோல நீள்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்
பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே. 3.11

3706 மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே,
வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்
கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே. 4.1

3707 கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 4.2

3708 அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 4.3

3709 உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே. 4.4

3710 அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 4.5

3711 கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்
திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்
தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே. 4.6

3712 உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,
மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா
நகந்தாய், நரசிங் கமதாய வுருவே. 4.7

3713 உருவா கியாஅறு சமயங்கட் கெல்லாம்,
பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும்,
அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,
கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே. 4.8

3714 கண்டுகொண் டேனேகண் ணிணையாரக் களித்து,
பண்டை வினையாயின பற்றோ டறுத்து,
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத் தமரர் பெருமான். அடியேனே. 4.9

3715 அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்
நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே. 4.10

3716 ஆற மதயானை அடர்த்தவன் றன்னை,
சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,
நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,
ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே. 4.11

3717 இன்னுயிர்ச் சேவலும் நீரும்
கூவிக்கொண்டுயிங் கெத்தனை,
என்னுயிர் நோவ மழிற்றேன்
மின்குயில் பேடைகாள்,
என்னுயிர்க் கண்ண பிரானை
நீர்வரக் கூவுகிலீர்,
என்னுயிர்க் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ? 5.1

3718 இத்தனை வேண்டுவ தன்றந்தோ.
அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நுஞ்சே
வலும்கரைந் தேங்குதிர்,
வித்தகன் கோவிந்தன் மெய்ய
னல்ல னொருவர்க்கும்,
அத்தனை யாமினி யென்னு
யிரவன் கையதே. 5.2

3719 அவன்கைய தேயென தாருயிர்
அன்றில் பேடைகாள்,
எவன்சொல்லி நீர்குடைந் தாடு
திர்புடை சூழவே,
தவம்செய் தில்லா வினையாட்டி
யெனுயி ரிங்குண்டோ ,
எவன்சொல்லி நிற்றும்நும் ஏங்கு
கூக்குரல் கேட்டுமே. 5.3

3720 கூக்குரல் கேட்டும் நங்f கண்ணன்
மாயன் வெளிப்படான்,
மேற்கிளை கொள்ளேன்மின் நீரும்
சேவலும் கோழிகாள்,
வாக்கும் மனமும் கரும
மும்நமக் காங்கதே,
ஆக்கையு மாவியும் அந்தரம்
நின்று ழலுமே. 5.4

3721 அந்தரம் நின்றுழல் கின்ற
யானுடைப் பூவைகாள்,
நுந்திரத் தேது மிடையில்
லைகுழ றேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டியிவ்
வேழுல கும்கொண்ட,
நந்திரு மார்பன் நம்மாவி
யுண்ணநன் கெண்ணினான். 5.5

3722 நன்கெண்ணி நான்வ ளர்த்த
சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீமிழிற் றேலென்
னாருயிர்க் காகுத்தன்,
நின்செய்ய வாயொக்கும் வாயங்கண்
ணங்கை காலினன்,
நின்பசுஞ் சாம நிறத்தன்
கூட்டுண்டு நீங்கினான். 5.6

3723 கூட்டுண்டு நீங்கி கோலத்
தாமரைக் கட்செவ்வாய்,
வாட்டமி லெங்கரு மாணிக்கம்
கண்ணன் மாயன்போல்,
கோட்டிய வில்லொடு மின்னும்
மேகக் குழாங்கள்காள்,
காட்டேன் மின்நும் முருவென்
னுயிர்க்கது காலனே. 5.7

3724 உயிர்க்கது காலனென் றும்மை
யானிரந் தேற்கு,நீர்
குயிற்பைதல் காள்.கண்ணன் நாம
மேகுழ றிக்கொன்றீர்,
தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா
லடிசிலும் தந்து,சொல்
பயிற்றிய நல்வள மூட்டினீர்
பண்புடை யீரே. 5.8

3725 பண்புடை வண்டொடு தும்பிகாள்.
பண்மிழற் றேன்மின்,
புண்புரை வெல்கொடு குத்தாலொக்
கும்நும் இன்குரல்,
தண்பெரு நீர்த்தடந் தாமரை
மலர்ந்தா லொக்கும்
கண்பெருங் கண்ணன், நம்மாவி
யுண்டெழ நண்ணினான். 5.9

3726 எழநண்ணி நாமும் நம்வான
நாடனோ டொன்றினோம்,
பழனநன் னாரைக் குழாங்கள்
காள்.பயின் றென்னினி,
இழைநல்ல வாக்கை யும்பைய
வேபுயக் கற்றது,
தழைநல்ல இன்பம் தலைப்பெய்
தெங்கும் தழைக்கவே. 5.10

3727 இன்பம் தலைப்பெய் தெங்கும்
தழைத்தபல் லூழிக்கு,
தண்புக ழேத்தத் தனக்கருள்
செய்த மாயனை,
தெங்குரு கூர்ச்சட கோபன்fசொல்
லாயிரத் துள்ளிவை,
ஒன்பதோ டொன்றுக் கும்மூ
வுலகு முருகுமே. 5.11

3728 உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. 6.1

3729 நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,
நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே. 6.2

3730 நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை
ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,
சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேன். 6.3

3731 அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 6.4

3732 திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,
உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,
திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கருவளர் மேனிஎன் கண்ணங்கள் வங்களே. 6.5

3733 எங்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,
அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,
புங்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,
எங்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே. 6.6

3734 காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,
வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,
ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,
கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே. 6.7

3735 கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,
நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,
காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு,
ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே. 6.8

3736 ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது,
பேரிதழ் தாமரைக் கண்கனி வாயதோர்,
காரெழில் மேகத்தென் காட்கரை கோயில்கொள்,
சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே. 6.9

3737 வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 6.10

3738 கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,
கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல்,
வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்
முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. 6.11

3739 எங்கானல் அகங்கழிவாய்
இரைத்தேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய்.
திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங்
குடக்கூத்தர்க் கென்fதூதாய்,
நுங்கால்க ளென் தலைமேல்
கெழுமீரோ நுமரோடே. 7.1

3740 நுமரோடும் பிரியாதே
நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள்.
அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங்
கென்?தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத்
தக்கிலமே. கேளீரே. 7.2

3741 தக்கிலமே கேளீர்கள்
தடம்புனல்வாய் இரைதேரும்,
கொக்கினங்காள். குருகினங்காள்.
குளிர்மூழிக் களத்துறையும்,
செக்கமலத் தலர்போலும்
கண்கைகால் செங்கனிவாய்,
அக்கமலத் திலைபோலும்
திருமேனி யடிகளுக்கே. 7.3

3742 திருமேனி யடிகளுக்கு
தீவினையேன் விடுதூதாய்
திருமூழிக் களமென்னும்
செழுநகர்வாய் அணிமுகில்காள்,
திருமேனி யவட்கருளீர்
என்றக்கால், உம்மைத்தன்
திருமேனி யொளியகற்றித்
தெளிவிசும்பு கடியுமே? 7.4

3743 தெளிவிசும்பு கடிதோடித்
தீவளைத்து மின்னிலகும்,
ஒளிமுகில்காள். திருமூழிக்
களத்துறையும் ஒண்சுடர்க்கு,
தெளிவிசும்பு திருநாடாத்
தீவினையேன் மனத்துறையும்,
துளிவார்கட் குழலார்க்கென்
தூதுரைத்தல் செப்பமினே. 7.5

3744 தூதுரைத்தல் செப்புமின்கள்
தூமொழியாய் வண்டினங்காள்,
போதிரைத்து மதுநுகரும்
பொழில்மூழிக் களத்துறையும்,
மாதரைத்தம் மார்வகத்தே
வைத்தார்க்கென் வாய்மாற்றம்,
தூதுரைத்தல் செப்புதிரேல்
சுடர்வளையும் கலையுமே. 7.6

3745 சுடர்வளுயும் கலையுங்கொண்டு
அருவினையேன் தோள்துறந்த,
படர்புகழான் திருமூழிக்
களத்துறையும் பங்கயக்கட்,
சுடர்பவள வாயனைக்கடு
ஒருநாளோர் தூய்மாற்றம்,
படர்பொழில்வாய்க் குருகினங்காள்.
எனக்கொன்று பணியீரே. 7.7

3746 எனக்கொன்று பணியீர்கள்
இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,
மனக்கின்பம் படமேவும்
வண்டினங்காள். தும்பிகாள்,
கனக்கொள்திண் மதிள்புடைசூழ்
திருமூழிக் களத்துறையும்,
புனல்கொள்கா யாமேனிப்
பூந்துழாய் முடியார்க்கே. 7.8

3747 பூந்துழாய் முடியார்க்குப்
பொன்னாழி கையார்க்கு,
ஏந்துநீ ரிளங்குருகே.
திருமூழிக் களத்தார்க்கு,
ஏந்துபூண் முலைப்பயந்தென்
இணைமலர்க்கண் ணீர்ததும்ப,
தாம்தம்மைக் கொண்டகல்தல்
தகவன்றென் றுரையீரே. 7.9

3748 தகவன்றென் றுரையீர்கள்
தடம்புனல்வாய் இரைதேர்ந்து,
மிகவின்பம் படமேவும்
மென்னடைய அன்னங்காள்,
மிகமேனி மெலிவெய்தி
மேகலையும் ஈடழிந்து,என்
அகமேனி யொழியாமே
திருமூழிக் களத்தார்க்கே. 7.10

3749 ஒழிவின்றித் திருமூழிக்
களத்துறையும் ஒண்சுடரை,
ஒழிவில்லா அணிமழலைக்
கிளிமொழியாள் அலற்றியசொல்,
வழுவில்லா வண்குருகூர்ச்
சடகோபன் வாய்ந்துரைத்த,
அழிவில்லா ஆயிரத்திப்
பத்தும்நோய் அறுக்குமே. 7.11

3750 அறுக்கும் வினையா யின ஆகத்தவனை,
நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,
வெறித்தண் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
குறுக்கும் வகையுண்டு கொலொகொடி யேற்கே? 8.1

3751 கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 8.2

3752 எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 8.3

3753 நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 8.4

3754 மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 8.5

3755 கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி,
வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 8.6

3756 கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே. திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
ஆவா அடியா னிவன் என் றருளாயே. 8.7

3757 அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்
பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே யின்றியுன்னை என்னெஞ்சத் திருத்தும்,
தெருளே தருதென் திருநாவாய் என்தேவே. 8.8

3758 தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,
மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி,
தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,
யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ. 8.9

3759 அந்தோ. அணுகப் பெறுநாளென் றெப்போதும்,
சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,
கொந்தார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா. 8.10

3760 வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளனை,
திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,
பண்ணர் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,
மண்ணாண்டு மணம்கமழ் வர்மல்லிகையே. 8.11

3761 மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ.
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ.
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. 9.1

3762 புகலிடம் அறிகிலம் தமிய மாலோ.
புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ.
பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து
அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.2

3763 இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.3

3764 பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ.
வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ.
மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ.
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.4

3765 யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ.
ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ.
அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடை துணையென்னும் தோழி மாரும்
எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?
அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.5

3766 அவனுடை யருள்பெ றும்போ தரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை
சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ?
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.6

3767 ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்.
ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்fக ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு
பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.7

3768 புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ.
பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்
கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமன மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.8

3769 ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்.
அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து
பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம.
மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9

3770 மாலையும் வந்தது மாயன் வாரான்
மாமணி புலம்பல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ.
கொடியென குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள்
மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ.
என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.10

3771 அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா
அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி
அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த
ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்.
அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. 9.11

3772 மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட,
காலைமா லைகம லமலர் இட்டுநீர்,
வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரத்து,
ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே. 10.1

3773 கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை,
வெள்ளீயேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்
உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே. 10.2

3774 தொண்டர்.நுந் தந்துயர் போகநீர் ஏகமாய்,
விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கண்புரத்
தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே. 10.3

3775 மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை,
தேனைவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வானையுந் தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரம்,
தான் நயந் தபெரு மான் சர ணாகுமே. 10.4

3776 சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,
அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்,
தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே. 10.5

3777 அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன்,
நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரத்
தன்பன்,நா ளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 10.6

3778 மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம்,
பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம்,
செய்யில்வா ளையுக ளும்திருக் கண்ணபுரத்து
ஐயன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே. 10.7

3779 அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்,
மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே. 10.8

3780 பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி,
ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?,
வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்து
ஆதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே. 10.9

3781 இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?,
அல்லிமா தரம ரும்திரு மார்பினன்,
கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
சொல்ல,நா ளும்துயர் பாடுசா ராவே. 10.10

3782 பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர்,
மாடநீ டுகுரு கூர்ச்சட கோபஞ்சொல்,
பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
பாடியா டிப்,பணி மினவன் தாள்களே. 10.11

Monday, April 9, 2012

பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!

இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும் உள்ள பாதிப்பில் 30% பேர் ஆஸ்துமா நோயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிக்காய்ச்சல் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதற்கு வீட்டிலேயே நம்மிடம் பல்வேறு மருந்துகள் உள்ளன என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

அன்னாசிப் பூ

பன்றிக்காய்ச்சல் மருந்தின் மூலப் பொருள் அன்னாசிப் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மட்டன், சிக்கன் சமைக்கும் போதும், பிரியாணி செய்யும் போதும் பயன்படுத்தப்படும் இந்த அன்னாசிப் பூ பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அருமருந்தாக உள்ளது. இதில் உள்ள ஷிகிமிக் அமிலத்தில் (skimikic acid) இருந்து தான் அந்த ஆஸ்டமிலாவிர் தயாரிக்கப்படுகிறது.

நில வேம்பு

இந்த ஷிகிமிக் அமிலம் நம் நாட்டு மூலிகைகள் கிட்டதட்ட 291 தாவரங்களில் இருப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்வம், வேம்பு முதலான 9 முக்கிய மூலிகைகள் இந்த ஷிகிமிக் அமிலம் காணப்படுகிறது. அருகாமையில் வசிப்பவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் குடும்பம் முழுவதும் வில்வம், வேம்பு, அன்னாசிப்பூ மூலிகைகள் அடங்கிய சித்த ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம். இந்த தாவரங்களை சிறிது காரத்தன்மையுள்ள மூலிகைகளுடன் சேர்த்து கசாயமாக்கிச் சாப்பிட கண்டிப்பாக அந்த கசாயத்தில் இருக்கும் ஷிகிமிக் அமிலமும், அதனோடு கூடுதலாய் ஏராளமாய்க் கிடைக்கும் பிற மூலிகை நுண்சத்துக்களும் உடலினை பன்றிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவிடும்.

இது தவிர உடல் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த மிளகு, மஞ்சள், துளசி, வேப்பம் பூ, சீந்தில், நிலவேம்பு சேர்ந்த சித்த மருந்துகளை எடுப்பதன் மூலம் எச்1என்1-க்கு இடம் கொடுக்காமல் உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

துளசி கசாயம்

துளசி இருமலைப் போக்கும் அருமருந்து. தினசரி காலையில் துளசி சாப்பிட்டால் தொண்டை, நுரையீரலை எந்த நோயும் தாக்காது. எந்த கிருமிகள் இருந்தாலும் மடிந்து விடுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதைப் போல துளசியை பறித்து தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து அத்துடன் மிளகு, சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்து கசாயம் போல சாப்பிடலாம்.

வெள்ளைப்பூண்டு

பன்றிக்காய்ச்சலை தடுப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்தாகும். காலையில் பச்சை வெள்ளைப்பூண்டை தட்டி சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் வேகவைத்து அதனை சாப்பிடலாம். இதனால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.

மஞ்சள், பால்

பால் குடிப்பதனால் அலர்ஜி எதுவும் ஏற்படாது என்று நினைப்பவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு குடிக்கலாம்.

கற்றாழை

கற்றாழை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருள். கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூச்சுப்பயிற்சி

தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தொண்டை, மூக்கு, நுரையீரல் போன்றவற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும். ஹெச்1என்1 வைரஸ் மட்டுமல்லாது தீமை தரும் எந்த வைரசும் நம்மை அண்டாது.

நெல்லிக்காய்

வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் அதிகம் சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். சிட்ரஸ் அமிலம் அடங்கிய பழங்களை உட்கொள்ளலாம்.

சுகாதாரம் அவசியம்

தினசரி மிதமான தண்ணீரில் நன்றாக கையை கழுவுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அப்புறம் பன்றிக்காய்ச்சல் எப்படி எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவாய் மொழி எட்டாம் பத்து

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாய் மொழி எட்டாம் பத்து

3563 தேவிமா ராவார் திருமகள் பூமி
யேவமற் றமரராட் செய்வார்,
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக்
கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த
அப்பனே. காணுமா றருளாய். 1.1

3564 காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக்
கண்ணநீர் அலமர வினையேன்
பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே
பிதற்றுமா றருளெனக் கந்தோ,
காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா.
தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ்
பெருநிலம் எடுத்தபே ராளா. 1.2

3565 எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன்
இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்
கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே.
அடியனேன் பெரியவம் மானே,
கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக்
கையுகி ராண்டவெங் கடலே,
அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய்
எங்ஙனம் தேறுவர் உமரே? 1.3

3566 உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்
ஆகியுன் தனக்கன்ப ரானார்
அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ்
அடுபடை அவித்தாம் மானே,
அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே.
என்னுடை ஆருயி ரேயோ. 1.4

3567 ஆருயி ரேயோ. அகலிடம் முழுதும்
படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,
பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங்
குறைந்தது கடைந்தடைத் துடைத்த,
சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர்
போலத்தே வர்க்கும்தே வாவோ,
ஒருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம்
உன்னைநான் எங்குவந் துறுகோ? 1.5

3568 எங்குவந் துறுகோ என்னையாள் வானே.
ஏழுல கங்களும் நீயே,
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே,
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலம் இறந்ததும் நீயே. 1.6

3569 இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோ நீயின்னே யானால்,
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
கறந்தபால் நெய்யே. நெய்யின் சுவையே.
கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்தவின் சுவையே. சுவையது பயனே.
பின்னைதோள் மணந்தபே ராயா. 1.7

3570 மணந்தபே ராயா. மாயத்தால் முழுதும்
வல்வினை யேனையீர் கின்ற,
குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர்
கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,
பணங்களா யிரமும் உடையபைந் நாகப்
பள்ளியாய். பாற்கடல் சேர்ப்பா,
வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும்
செய்கையும் யானும்நீ தானே. 1.8

3571 யானும்நீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீயானால்,
வானுய ரின்பம் எய்திலென் மற்றை
நரகமே யெய்திலென்? எனிலும்,
யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் நரகம்நா னடைதல்,
வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய்.
அருளுநின் தாள்களை யெனக்கே. 1.9

3572 தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்
தந்தபே ருதவிக்கைம் மாறா,
தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை
அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய்.
துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய்.
தமியனேன் பெரிய அப்பனே. 1.10

3573 பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கோர் தனியப்பன் தன்னை,
பெரியவண் குருகூர் வண்சட கோபன்
பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால்
உய்யலாம் தொண்டீர்.நங் கட்கே. 1.11

3574 நங்கள் வரிவளை யாயங் காளோ.
நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம்
நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன்
தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன்
வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. 2.1

3575 வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,
ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ.
காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின் றேனே. 2.2

3576 காலம் இளைக்கிலல் லால்வி னையேன்
நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,
ஞாலம் அறியப் பழிசு மந்தேன்
நன்னுத லீர்.இனி நாணித் தானென்,
நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த
நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,
கோல வளையொடு மாமை கொள்வான்
எத்தனை காலம்கூ டச்சென்றே? 2.3

3577 கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல்
பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை
வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
ஆழி வலவினை யாதரித்தே. 2.4

3578 ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன்
நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள்.நம் முடைய மேதான்?
சொல்லுவ தோவிங் கரியதுதான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக
நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித்
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. 2.5

3579 தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென்
சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான்
ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை
மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. 2.6

3580 மாலரி கேசவன் நார ணஞ்சீ
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,
ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட்
டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்குழல் அன்னை மீர்காள்.
என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை
உங்களோ டெங்க ளிடையில் லையே. 2.7

3581 இடையில் லையான் வளர்த்த கிளிகாள்.
பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும்
அஞ்சன வெற்பும் அவைந ணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை
அன்றி யவனவை காண்கொ டானே. 2.8

3582 காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக்
கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த
தேவ பிராற்கென் நிரைவினோடு,
நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். 2.9

3583 என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. 2.10

3584 பாதம் அடைவதன் பாசத் தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல்
வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
தீதிலந்தாதியோ ராயி ரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும்
அங்குமெல் லாமமை வார்கள் தாமே. 2.11

3585 அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. 3.1

3586 சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. 3.2

3587 ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே. 3.3

3588 ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,
ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,
காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்
கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே. 3.4

3589 கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப்
படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 3.5

3590 பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. 3.6

3591 வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. 3.7

3592 என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே. 3.8

3593 திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,
ஒருமா முதல்வா. ஊழிப் பிரானென் னையாளுடை,
கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே. 3.9

3594 கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோ ர்,
துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,
மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,
உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே. 3.10

3595 உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,
வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,
உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,
நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே. 3.11

3596 வார்கடா அருவி யானைமா மலையின்
மருப்பிணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின்
மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட
மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே. 4.1

3597 எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம்
இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்
பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால்
யாவர்மற் றெனமர் துணையே? 4.2

3598 என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள
என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம்
நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே. 4.3

3599 பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும்
நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த
கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ்
திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான்
அடியிணை யல்லதோர் அரணே. 4.4

3600 அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை
அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா
தாதலால் அவனுறை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றெனக்குநல் லரணே. 4.5

3601 எனக்குநல் லரணை எனதா ருயிரை
இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத்
தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும்
அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றதனுள்கண் டேனே. 4.6

3602 திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தையு ளானே. 4.7

3603 திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச்
செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை
அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக்காப் பவனே. 4.8

3604 படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார்
கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றமர்ந்த நாதனே. 4.9

3605 அமர்ந்த நாதனை யவரவ ராகி
அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள்
தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை
நான்முக னையமர்ந் தேனே. 4.10

3606 தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன்
சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும்
பிறவிமா மாயக்கூத் தினையே. 4.11

3607 மாயக் கூத்தா. வாமனா.
வினையேன் கண்ணா. கண்கைகால்
தூய செய்ய மலர்களாச்
சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி
தண்பா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே.
ஒருநாள் காண வாராயே. 5.1

3608 காண வாராய் என்றென்று
கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால்
இரங்கி யொருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி
றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி
முடிசேர் சென்னி யம்மானே. 5.2

3609 முடிசேர் சென்னி யம்மா.நின்
மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால்தோளும்,
துடிசே ரிடையும் அமைந்ததோர்
தூநீர் முகில்போல் தோன்றாயே. 5.3

3610 தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளீ மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே.
எந்தாய். சொல்ல மாட்டேனே. 5.4

3611 சொல்ல மாட்டேன் அடியேனுன்
துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி
றிரண்டு போலென் னுள்ளவா.,
அல்லல் என்னும் இருள்சேர்தற்
குபாயம் என்னே?, ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட
மாநீர்க் கொண்டல் வண்ணனே. 5.5

3612 கொண்டல் வண்ணா. குடக்கூத்தா.
வினையேன் கண்ணா. கண்ணா,என்
அண்ட வாணா. என்றென்னை
ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான்
விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுள் கழல்லாண
ஒருநாள் வந்து தோன்றாயே. 5.6

3613 வந்து தோன்றா யன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்த தொக்கும் அம்மானே. 5.7

3614 ஒக்கும் அம்மா னுருவமென்
றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள்
காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்று
றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாகா.
வாராய் இதுவோ பொருத்தமே? 5.8

3615 இதுவோ பொருத்தம் மின்னாழிப்
படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
மதுரைப் பிறந்த மாயனே? 5.9

3616 பிறந்த மாயா. பாரதம்
பொருத மாயா. நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா.
உன்னை எங்கே காண்கேனே? 5.10

3617 எங்கே காண்கேன் ஈன்துழாய்
அம்மான் றன்னை யான்? என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே
மகிழ்வர் எல்லியும் காலையே. 5.11

3618 எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. 6.1

3619 திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 6.2

3620 ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. 6.3

3621 மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. 6.4

3622 கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. 6.5

3623 கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. 6.6

3624 கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே. 6.7

3625 தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே. 6.8

3626 தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. 6.9

3627 அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. 6.10

3628 சோலை திருக்கடித் தானத் துறைதிரு
மாலை, மதிள்குரு கூர்ச்சடகோபன்fசொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. 6.11

3629 இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று,
அருத்தித் தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு,
பொருத்த முடைவா மனன்தான் புகுந்து,என்தன்
கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே. 7.1

3630 இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,
திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,
பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே. 7.2

3631 அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. 7.3

3632 மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. 7.4

3633 திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? 7.5

3634 பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. 7.6

3635 செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. 7.7

3636 அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. 7.8

3637 வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. 7.9

3638 வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. 7.10

3639 சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்
விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. 7.11

3640 கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான்
ஒருவன் அடியே னுள்ளானே. 8.1

3641 அடியே னுள்ளான் உடலுள்ளான்
அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம்,
படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை
இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வி லும்ப ரொருவனே. 8.2

3652 உணர்வி லும்ப ரொருவனை
அவன தருளா லுறல்பொருட்டு,என்
உணர்வி னுள்ளே யிருத்தினேன்
அதுவும் அவன தின்னருளே,
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெறவூர்ந் திறவேறி
யானும் தானா யொழிந்தானே. 8.3

3643 யானும் தானா யொழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே. 8.4

3644 நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக்
கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா
துணர்ந்தும் மேலும் காண்பரிது
சென்று சென்று பரம்பரமாய்
யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே. 8.5

3645 நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே. 8.6

3646 அதுவே வீடு வீடு
பேற்றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி
யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடு
பேற்றின்பந் தானும் அதுதேறாது,
எதுவே வீடே தின்பம்? என்
றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே. 8.7

3647 எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென்
றில்லாத் தாரும் புறத்தாரும்
மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம்
போகும் போது,உன் மத்தர்போல்
பித்தே யேறி யனுராகம்
பொழியும் போதெம் பெம்மானோடு
ஒத்தே சென்று,அங் குளம்கூடக்
கூடிற் றாகில் நல்லுறைப்பே. 8.8

3648 கூடிற் றாகில் நல்லுறைப்புக்
கூடா மையைக் கூடினால்,
ஆடல் பறவை யுயர்கொடியெம்
ஆய னாவ ததுவதுவே,
வீடைப் பண்ணி யொருபரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,
ஓடித் திரியும் யோகிகளும்
உளரு மில்லை யல்லரே. 8.9

3649 உளரு மில்லை யல்லராய்
உளரா யில்லை யாகியே,
உளரெம் மொருவர் அவர்வந்தென்
உள்ளத் துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும்
போல் அசைவும் ஆக்கமும்,
வளரும் சுடரும் இருளும்போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே. 8.10

3650 தெருளும் மருளும் மாய்த்துத்தன்
திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம்
அண்ணல் கருமா ணிக்கமே. 8.11

3651 கருமா ணிக்க மலைமேல்மணித்
தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை
யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல்
குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீரிதற் கென்செய்கேனா. 9.1

3652 அன்னைமீ ரிதற்கென் செய்கேன்?
அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும்
அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன்
றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப்
புலியூர் புகழுமிவளே. 9.2

3653 புகழு மிவள்நின் றிராப்பகல்
பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச்
செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர்
புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு
திருப்பூலி யுர்வளமே. 9.3

3654 ஊர்வ ளம்கிளர் சோலையும்
கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக்
குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
சீர்வ ளம்கிளர் மூவுல
குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்
பேச்சிலளின்றிப் புனையிழையே. 9.4

3655 புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ்கினளே. 9.5

3656 திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
திருவருள் அருளால் அவன்fசென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழத்தது மெல்லியல் செவ்விதழே. 9.6

3657 மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. 9.7

3658 மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச்
சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள்
நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை
மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம்
அல்லால் பரவா ளிவளே. 9.8

3659 பரவா ளிவள்நின் றிராப்பகல்
பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி
வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக்
கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப்
புலியூர்ப்புக ழன்றிமற்றே. 9.9

3660 அன்றிமற் றோருபாய மென்னிவ
ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக்
கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக்
குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு
வருளாமிவள் நேர்ப்பட்டதே. 9.10

3661 நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும்
நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர்
தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள்
இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார்
நெடுமாற்கடி மைசெய்யவே. 9.11


அறுசீர் ஆசிரிய விருத்தம்

3662 நெடுமாற் கடிமை செய்வேன்போல்
அவனை கருத வஞ்சித்து,
தடுமாற் றற்ற தீக்கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்,
கொடுமா வினையேன் அவனடியார்
அடியே கூடும் இதுவல்லால்,
விடுமா றென்ப தென்னந்தோ.
வியன்மூ வுலகு பெறினுமே? 10.1

3663 வியன்மூ வுலகு பெறினும்போய்த்
தானே தானே யானாலும்,
புயல்மே கம்போல் திருமேனி
அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,
சயமே யடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான்பெற்ற
துறுமோ பாவி யேனுக்கே? 10.2

3664 உறுமோ பாவி யேனுக்கிவ்
வுலகம் மூன்றும் உடன்நிறைய,
சிறுமா மேனி நிமிர்த்தவென்
செந்தா மரைக்கண் திருக்குறளன்
நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவனடியார்,
சிறுமா மனிச ராயென்னை
ஆண்டா ரிங்கே திரியவே. 10.3

3665 இங்கே திரிந்தேற் கிழக்குற்றென்.
இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச்
செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்
புலன்கொள் வடிவென் மனத்தாய்
அங்கேய் மலர்கள் கையவாய்
வழிபட் டோ ட அருளிலே? 10.4

3666 வழிபட் டோ ட அருள்பெற்று
மாயன் கோல மலரடிக்கீழ்,
சுழிபட் டோ டும் சுடர்ச்சோதி
வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,
இழிபட் டோ டும் உடலினிற்
பிறந்து தன்fசீர் யான்கற்று,
மொழிபட் டோ டும் கவியமுத
நுகர்ச்சி யுறுமோ முழுதுமே? 10.5

3667 நுகர்ச்சி யுறுமோ மூவுலகின்
வீடு பேறு தன்கேழில்,
புகர்ச்செம் முகத்த களிறட்ட
பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள்
நீண்ட அசுர ருயிரெல்லாம்,
தகர்த்துண் டுழலும் புட்பாகன்
பெரிய தனிமாப் புகழே? 10.6

3668 தனிமாப் புகழே யெஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான்தோன்றி,
முனிமாப் பிரம முதல்வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த,
தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவனடியார்,
நனிமாக் கலவி யின்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே. 10.7

3669 நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்
தாளும் தோளும் முடிகளும்
சமனி லாத பலபரப்பி,
நீளும் படர்பூங் கற்பகக்
காவும் நிறைபன் னாயிற்றின்,
கோளு முடைய மணிமலைபோல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே. 10.8

3670 தமர்கள் கூட்ட வல்வினையை
நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,
அமர்கொள் ஆழி சங்குவாள்
வில்தண் டாதி பல்படையன்,
குமரன் கோல ஐங்கணைவேள்
தாதை கோதில் அடியார்தம்.
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே. 10.9

3671 வாய்க்க தமியேற் கூழிதோ
றூழி யூழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள்
பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம்
அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே. 10.10

3672 நல்ல கோட்பாட் டுலகங்கள்
மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே. 10.11

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவாய் மொழி ஏழாம் பத்து

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாய் மொழி ஏழாம் பத்து

3453 உண்ணி லாவிய ஐவ ரால்குமை
தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே. இமையோர்கள்
ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லே.அமு தே.அப்ப னே.என்னை யாள்வானே. 1.1

3454 என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய்
திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லே.அமு தே.கார் முகில்வண்ண
னே.கடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய்.வினை யேனுடை வேதியனே. 1.2

3455 வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
மோது வித்து,உன் திருவடிச்
சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து
கடந்திடந் திட்ட,
சோதி நீண்முடி யாய்.தொண்ட னேன்மது சூதனனே. 1.3

3456 சூது நானறி யாவகை சுழற்றியோர்
ஐவரைக் காட்டி,உன் அடிப்
போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,
யாதும் யாவரு மின்றிநின் னகம்பால்
ஒடுக்கியோ ராலி னீளிலை,
மீது சேர்குழவி. வினையேன் வினைதீர் மருந்தே. 1.4

3457 தீர்மருந் தின்றி யைந்து நோயடும்
செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
ஒக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி
யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ. 1.5

3458 விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய்
வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய்
யாமற்று நீயும்விட்டால்?
பண்ணு ளாய்.கவி தன்னு ளாய்.
பத்தியினுள் ளாய்.பர மீசனே, வந்தென்
கண்ணுளாய். நெஞ்சுளாய். சொல்லுளாய்.
ஒன்று சொல்லாயே. 1.6

3459 ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய்.கொடியேன் பருகின் னமுதே. 1.7

3460 இன்ன முதெனத் தோன்றி யோரைவர்
யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக்
கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா.என் கண்ணா. இமையோர்தம் குலமுதலே. 1.8

3461 குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில்
வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன
செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்.என் கண்ணா.என் பரஞ்சுடரே. 1.9

3462 என்பரஞ் சுடரே. என்றுன்னை அலற்றியுன்
இணைத்தா மரைகட்கு,
அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய்,
வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை
வலித்தெற்று கின்றனர்
முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ. 1.10

3463 கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்
படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
சொல்லா யிரத்து ளிப்பத்தும்,
கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே. 1.11

3464 கங்குலும் பகலும் கண் துயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்.
இவள்திறத் தெஞ்செய்கின் றாயே? 2.1

3465 எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா.
என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்?
என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
முன்செய்த வினையே. முகப்படாய் என்னும்
முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய்.
எங்கொலோ முடிகின்ற திவட்கே? 2.2

3466 வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும்
வானமே நோக்கும்மை யாக்கும்,
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட
ஒருவனே. என்னுமுள் ளுருகும்,
கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய்
காகுத்தா. கண்ணனே. என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்.
இவள்திறத் தென்செய்திட் டாயே? 2.3

3467 இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
கட்டமே காதல். என்றுமூர்ச் சிக்கும்
கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,
வட்டவாய் நேமி வலங்கையா. என்னும்
வந்திடாய் என்றென்றே மயங்கும்,
சிட்டனே. செழுநீர்த் திருவரங் கத்தாய்.
இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே? 2.4

3468 சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும்
திருவரங் கத்துள்ளாய். என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
வந்திடாய் என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே.
அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல்செய் தானே. 2.5

3469 மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே.
என்னும் மா மாயனே. என்னும்,
செய்யவாய் மணியே. என்னும் தண் புனல்சூழ்
திருவரங் கத்துள்ளாய். என்னும்,
வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில்
ஏந்தும்விண் ணோர்முதல். என்னும்,
பைகொள்பாம் பணையாய். இவள்திறத் தருளாய்
பாவியேன் செய்யற்பா லதுவே. 2.6

3470 பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்.
பற்றிலார் பற்றநின் றானே,
காலசக் கரத்தாய். கடலிடங் கொண்ட
கடல்வண்ணா. கண்ணணே. என்னும்,
சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
என்னும் என் தீர்த்தனே. என்னும்,
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே. 2.7

3471 கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக்
கோநிரை காத்தவன். என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே. என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
என்செய்கேன் என்திரு மகட்கே? 2.8

3472 என்திரு மகள்சேர் மார்வனே. என்னும்
என்னுடை யாவியே. என்னும்,
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
நிலமகள் கேள்வனே. என்னும்,
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட
ஆய்மகள் அன்பனே. என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே.
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. 2.9

3473 முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும்
மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும்
நான்முகக் கடவுளே. என்னும்,
வடிவுடை வானோர் தலைவனே. என்னும்
வண்திரு வரங்கனே. என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 2.10

3474 முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ்
வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை
ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ
இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. 2.11

3475 வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,
வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த
வேத வொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத்
திருப்பே ரையில் சேர்வன் நானே. 3.1

3476 நானக் கருங்குழல் தோழி மீர்காள்.
அன்னை யர்காள்.அயல் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்
என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்
தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்த துவே. 3.2

3477 செங்கனி வாயின் திறத்த தாயும்
செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்
தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத
தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ.
நாணும் நிரையு மிழந்த துவே. 3.3

3478 இழந்தவெம் மாமை திறத்துப் போன
என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ?
ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு
தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்
அன்னையர் காள்.என்னை யென்மு னிந்தே? 3.4

3479 முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த
கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்.
முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே
காலம் பெறவென்னைக் காட்டு மினே. 3.5

3480 காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான்
நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த
நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல்திருப் பேரை யிற்கே. 3.6

3481 பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை
செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப்
பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
ஆரை யினிங் குடையம் தோழி.
என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,
ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது?
என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே. 3.7

3482 கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக்
கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்
கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக்
கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,
மண்டிணி ஞால முமேழ் கடலும்
நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த
தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே. 3.8

3483 சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள்.
அன்னையர் காள்.என்னைத் தேற்ற வேண்டா,
நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட
கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத்
தென்திருப் பேரை யின்மா நகரே. 3.9

3484 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,
சிகரம் அணிநெடு மாடம் நீடு
தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்
னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே? 3.10

3485 ஊழிதோ றூழி யுருவம் பேரும்
செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை
அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
கேழிலந் தாதியோ ராயி ரத்துள்
இவைதிருப் பேரையில் மேய பத்தும்,
ஆழியங் கையனை யேத்த வல்லார்
அவரடி மைத்திறத் தாழி யாரே. 3.11

3486 ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. 4.1

3487 ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே. 4.2

3488 நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 4.3

3489 நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
கோளு மெழேரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே. 4.4

3490 ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே. 4.5

3491 போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 4.6

3492 மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே. 4.7

3493 நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணந்திண் டோ ள்கொண்ட அன்றே. 4.8

3494 அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே. 4.9

3495 மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 4.10

3496 குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. 4.11

3497 கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே. 5.1

3498 நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? 5.2

3499 கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,
சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே? 5.3

3500 தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,
நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? 5.4

3501 சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ,
ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை,
தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? 5.5

3502 கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே? 5.6

3503 கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ,
வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல,
கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே? 5.7

3504 செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,
எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,
அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,
மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே? 5.8

3505 மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே? 5.9

3506 வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்
சேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? 5.10

3507 தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,
தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே. 5.11

3508 பாமரு மூவுலகும் படைத்த
பற்ப நாபாவோ,
பாமரு மூவுலகும் அளந்த
பற்ப பாதாவோ,
தாமரைக் கண்ணாவோ. தனியேன்
தனியா ளாவோ,
தாமரைக் கையாவோ. உன்னை
யென்றுகொல் சார்வதுவே? 6.1

3509 என்றுகொல் சேர்வதந் தோஅரன்
நான்முக னேத்தும்,செய்ய
நின்திருப் பாதத்தை யான்நிலம்
நீரெரி கால்,விண்ணுயிர்
என்றிவை தாம்முத லாமுற்று
மாய்நின்ற எந்தாயோ,
குன்றெடுத் தாநிரை மேய்த்தவை
காத்தவெங் கூத்தாவோ. 6.2

3510 காத்தவெங் கூத்தாவோ. மலையேந்திக்
கன்மாரி தன்னை,
பூத்தண் டுழாய்முடி யாய்.புனை
கொன்றையஞ் செஞ்சடையாய்,
வாய்த்தவென் நான்முக னே.வந்தென்
னாருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியி னாய்.உன்னை
யெங்குத் தலைப்பெய்வனே? 6.3

3511 எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில்
மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட்fபிரான்
பிரமன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந்
திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி
யென்னுடைக் கோவலனே. 6.4

3512 என்னுடைக் கோவல னே.என்
பொல்லாக்கரு மாணிக்கமே,
உன்னுடை யுந்தி மலருலகம்
அவைமூன் றும்பரந்து,
உன்னுடைச் சோதிவெள் ளத்தகம்
பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
என்னுடை யாருயிரார் எங்ஙனே
கொல்வந் தெய்துவரே? 6.5

3513 வந்தெய்து மாறறி யேன்மல்கு
நீலச் சுடர்தழைப்ப,
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு
மாணிக்கம் சேர்வதுபோல்,
அந்தர மேல்செம்பட் டோ டடி
உந்திகை மார்வுகண்வாய்,
செஞ்சுடர்ச் சோதி விடவுறை
என்திரு மார்பனையே. 6.6

3514 என்திரு மார்பன் தன்னையென்
மலைமகள் கூறன்தன்னை,
என்றுமென் நாமக ளையகம்
பால்கொண்ட நான்முகனை,
நின்ற சசிபதி யைநிலங்
கீண்டெயில் மூன்றெரித்த,
வென்று புலம்துரந் தவிசும்
பாளியைக் காணேனோ. 6.7

3515 ஆளியைக் காண்பரி யாயரி
காண்நரி யாய்,அரக்கர்
ஊளையிட் டன்றிலங்கைகடந்
துபிலம் புக்கொளிப்ப,
மீளியம் புள்ளைக் கடாய்விறல்
மாலியைக் கொன்று,பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த்
தானையும் காண்டுங்கொலோ? 6.8

3516 காண்டுங்கொ லோநெஞ்ச மே.கடி
யவினை யேமுயலும்,
ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்f
கன்fகுலத் தைத்தடிந்து,
மீண்டுமவன் தம்பிக்கே விரி
நீரிலங்கையருளி,
ஆண்டுதன் சோதிபுக் கவம
ரர்அரி யேற்றினையே? 6.9

3517 ஏற்றரும் வைகுந்தத் தையருளும்
நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்
காயக்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்
சோதிபுக் கஅரியே. 6.10

3518 புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே. 6.11

3519 ஏழையர் ஆவியுண் ணுமிணைக்
கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியுங் கண்ண பிராந்திருக்
கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர்
போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்.அன்னை மீர்.என்fசெய்
கேந்துய ராட்டியேனே? 7.1

3520 ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை
மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு
மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக் கின்
சுடரய்நிற்கும் வாலியதே. 7.2

3521 வாலிய தோர்கனி கொல்வினை
யாட்டியேன் வல்வினைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந்
துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு
மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லாம்வந்து
தோன்றுமென் னின்னுயிர்க்கே. 7.3

3522 இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும்
இணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னங்கருப்புச்
சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான்
புரு வமவையே,
என்னுயிர் மேலன வாய்
அடுகின்றன என்று நின்றே. 7.4

3523 என்று நின்றேதிக ழும்செய்ய
வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி
முத்தங்கொ லோவறியேன்,
குன்றம் எடுத்தபி ரான்
முறுவலெனதாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை
மீர்.எனக் குய்விடமே. 7.5

3524 உய்விடம் ஏழையர்க் கும்
அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமகரம்
தழைக் கும்தளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான்
திருக்குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின் றிய்
அடுகின்றன காண்மின்களே. 7.6

3525 காண்மின்கள் அன்னையர் காள்.என்று
காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்.
நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள்
பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன்
உயிர் கோளிழைத்தே. 7.7

3526 கோளிழைத் தாமரையும்
கொடியும் பவளமும் வில்லும்,
கோளிழைத்தண் முத்தமும்
தளிரும் குளிர்வான் பிறையும்,
கோளிழையாவுடைய கொழுஞ்
சோதி வட்டங்கொல், கண்ணன்,
கோளிழைவாள் முகமாய்க் கொடியேன்
உயிர் கொள்கின்றதே? 7.8

3527 கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந்
திட்ட கொழுஞ்சுருளின்,
உள்கொண்ட நீலநன் னூல்தழை
கொல்?அன்று மாயங்குழல்,
விள்கின்ற பூந்தண் டுழாய்விரை
நாறவந் தென்னுயிரை,
கள்கின்ற வாறறி யீரன்னை
மீர்.கழ றாநிற்றிரே. 7.9

3528 நிற்றிமுற் றத்துள் என் றுநெரித்
தகைய ராயென்னைநீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச்
சோதி மணிநிறமாய்,
முற்றவிம் மூவுல கும்விரி
கின்ற சுடர்முடிக்கே,
ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை
மீர்.நசை யென்நுங்கட்கே? 7.10

3529 கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,
கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,
உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே. 7.11

3530 மாயா. வாமன னே.மது சூதா. நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,
நீயாய் நீநின்ற வாறிவை யென்ன நியாயங்களே. 8.1

3531 அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுத னே.அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே. 8.2

3532 சித்திரத் தேர்வல வா.திருச் சக்கரத் தாய்.அருளாய்,
எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,
ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,
வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே. 8.3

3533 கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே.எனக் கொன்றருளாய்,
உள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய்,
வெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி,
உள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே. 8.4

3534 பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,நீ
வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே.அருளாய்,
காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
மாயங்கள்செய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே. 8.5

3535 மயக்கா. வாமன னே.மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,
வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
துயக்காய் நீநின்ற வாறிவை யென்ன துயரங்களே. 8.6

3536 துயரங்கள் செய்யுங்கண்ணா.சுடர் நீண்முடி யாயருளாய்,
துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,
துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,
துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே. 8.7

3537 என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,
இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,
முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,
பின்னுமுள் ளாய்.புறத் தாய்.இவை யென்ன இயற்கைகளே. 8.8

3538 என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,
துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்
உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,
உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே. 8.9

3539 இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்
தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே
அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே,
வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே. 8.10

3540 ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த
ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,
ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே. 8.11

3541 என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? 9.1

3542 என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்
முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே. 9.2

3543 ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்
நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ? 9.3

3544 அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,
ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? 9.4

3545 சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,
நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கி என் னால்தன்னை,
பார்பரவு இன்கவி பாடும் பரமரே. 9.5

3546 இன்கவி பாடும் பரம கவிகளால்,
தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. 9.6

3547 வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,
செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,
வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,
செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ. 9.7

3548 ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே? 9.8

3549 திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே? 9.9

3560 உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,
அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,
எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே. 9.10

3551 இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,
அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே. 9.11

3552 இன்பம் பயக்க எழில்மலர்
மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன்
வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா
ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து
கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. 10.1

3553 ஆகுங்கொல் ஐயமொன் றின்றி
அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த
திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள்
நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி
வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. 10.2

3554 கூடுங்கொல் வைகலும் கோவிந்த
னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு
கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை
வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன்
விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. 10.3

3555 வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு
தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்
நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல
கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி
ரான்றன் மலரடிப் போதுகளே. 10.4

3556 மலரடிப் போதுகள் என்னெஞ்சத்
தெப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய
பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள்
நீடு மதில்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம்
மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. 10.5

3557 ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்
தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பிணி
நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம்
துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன்
விளையென்னும் நீணக ரமதுவே. 10.6

3558 நீணக ரமது வேமலர்ச்
சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி
ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக்கட்பி
ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித்
தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 10.7

3559 அன்றிமற் றொன்றிலம் நின்சர
ணே. என் றகலிரும் பொய்கையின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய
ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,
சென்றங் கினிதுறை கின்ற
செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?
தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 10.8

3560 தீவினை யுள்ளத்தின் சார்வல்ல
வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்
அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும்
பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக்
கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 10.9

3561 சிந்தைமற் றொன்றின் திறத்ததல்
லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி
யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை
யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன்
விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. 10.10

3562 தீர்த்தனுக் கற்றபின் மற்றோர்
சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச்
செழுங்குரு கூர்ச்சட கோபன்fசொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை
பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து
நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. 10.11