Tuesday, November 22, 2011

indian-rupee-falls-all-time-low-against-us-dollar

1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு;
2073ம் ஆண்டை நோக்கி விலைவாசி!

- ஏ.கே.கான்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம்.

இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது.

டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது.

நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது.

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது:

ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார்.

ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும்.

இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும்.

அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும்.

ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும்)

இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம்.

மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

Saturday, November 19, 2011

irctc-reduced-tatkal-ticket-booking-24-hours

டெல்லி: ரயில்களில் தக்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது, இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில் பயணத்துக்கு தக்கல் முறையி்ல் டிக்கெட் எடுக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்படி பயணம் செய்வதற்கு 48 மணிநேரத்துக்கு முன் தக்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, திடீரென பயண ஏற்பாடுகளை செய்யும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நாளாடைவில் தக்கல் டிக்கெட்களை வெளிசந்தைகளை சேர்ந்த ஏஜென்ட்கள் பெற்று கொண்டு, அதிக விலையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ரயில்வே துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. அதனையடுத்து தக்கல் டிக்கெட் எடுக்கும் நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் ஏஜென்ட்களுக்கான நேரம் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஏஜெண்ட்கள் தக்கல் டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.

இது குறித்து ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியதாவது,

அவசரகதியில் பயண ஏற்பாடுகளை செய்யும் பயணிகளுக்காகவே தக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வழக்கமாக செல்லும் பயணிகள் தான் தக்கல் டிக்கெட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தக்கல் முறையின் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் அவசரகதியில் பயணிப்போரின் நலனை கருத்தில் கொண்டே புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறோம்.

புதிய முறை மூலம் தக்கல் டிக்கெட்களை மொத்தமாக ஏஜென்ட்கள் பெற்று கொள்வது தடுக்க திட்டமிட்டுள்ளோம். முன்பதிவு செய்யும் போதே டிக்கெட் வாங்குபவரின் அடையாள அட்டையின் நகலும் இணைக்கப்படும். இதனால் டிக்கெட் பெற்றவர் மட்டுமே பயணிக்க முடியும்.

இறுதி முன்பதிவு பட்டியல் வெளியிடும் போது, அந்த அடையாள அட்டையும் சேர்த்து வெளியிடப்படும். இணையதளத்தில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும் விபரங்களை இணைக்க வேண்டும். ஒரு பி.என்.ஆர். மூலம் தக்கலில் 4 சீட்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். சாதாரண முறையி்ல் ஒரு பி.என்.ஆர். மூலம் 6 சீட்கள் முன்பதிவு செய்யலாம்.

Friday, November 18, 2011

பாரதியார் பாடல்கள்

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? - பாரதியார்

வாழை இலையின் பயன்கள்:

வாழை இலையின் பயன்கள்:
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்க இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டுகிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி,வயிற்று வலி போன்றவை நீங்கும்.அனுபவ வைத்தியம்

- By Nazeer

உங்களுக்கு தெரியுமா?-3

தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்;
அ =எட்டு
ஆ =பசு
ஈ =ஒரு பூச்சி
உ =சிவன்
ஊ =தசை
ஐ =ஐந்து
ஓ=மதகு நீர் தாங்கும் பலகை
கா =சோலை
கு =பூமி
கூ =பூமி
கை =கரம்
சா =இறப்பு
சே =அழிஞ்சில் மரம்
சோ =மதில்
தா =கொடு
து =பறவை இறகு
தே =நாயகன்
தை =ஒரு மாதம்
நா -நாக்கு
நௌ =மரக்கலம்
பா =பாட்டு
பூ =மலர்
வை =வைக்கோல்
பே =மேகம்
பை =பாம்புப் படம்
மா =மாமரம்
மீ= ஆகாயம்
மூ =மூன்று
மை =அஞ்சனம்
யா =அகலம்
வீ=பறவை
தீ =நெருப்பு
து= உணவு
நன்றி - ஜெயராஜன் மதுரை

247 எழுத்துக்களில் 42 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் -> மலேசியர்-தமிழ்-சங்கம்

உயிரெழுத்து - ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள்
ஆ - பசு
ஈ - கொடு ,பறக்கும் பூச்சி
ஊ - இறைச்சி
ஏ - அம்பு
ஐ - அழகு, தலைவன் , வியப்பு
ஓ - வினா , மதகு

ம வரிசை ...... மா . மீ , மு , மே, மை , மோ
மா - பெரிய , விலங்கு
மீ - மேலே , உயரம்
மு - மூப்பு
மே - மேன்மை , மேல் , மாதம்
மை - கண்மை , இருள்
மோ - முகர்தல் , மோதல்

த வரிசை .... தா , தீ, து, தூ , தே, தை
தா - கொடு , கேட்பது
தீ - நெருப்பு
து - கெடு, உண், பிரிவு
தூ - வெண்மை , தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்

ப வரிசை பா, பூ, பே , பை , போ
பா- பாட்டு, நிழல், அழகு
பூ - மலர்
பே - நுரை , அழகு
பை - பசுமை , உறை
போ - செல்

ந வரிசை நா , நீ, நே ,நொ, நை , நோ
நா - நாக்கு
நீ - நின்னை
நே - அன்பு , நேயம்
நை - வருந்து, நைதல்
நொ - நொண்டி , துன்பம்
நோ - நோவு வருத்தம்

க வரிசை கா , கூ , கை , கோ
கா - சோலை , காத்தல்
கூ - பூமி , கூவுதல்
கை - கரம், உறுப்பு
கோ - அரசன் ,தலைவன் , இறைவன்

வ வரிசை .... வா , வீ , வை , வௌ
வா - அழைத்தல்
வீ - பூ , அழகு ,
வை - கூர்மை, வைதல், வைத்தல்
வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்

ச வரிசை ...... சா, சீ, சே , சோ
சா- மரணம் , பேய் , சாதல்
சீ - இகழ்ச்சி , திருமகள்
சே - எருது
சோ - மதில்

மற்ற எழுத்து ..... யா
யா - மரம்

உங்களுக்கு-தெரியுமா-2

ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும்
- கணக்கதிகாரம்