Tuesday, March 8, 2011

நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL சூப்பரின் மறுபக்கம்...!


டிவிஎஸ் நிறுவனத்துக்கு அடையாளச்சின்னமாக திகழ்ந்த டிவிஎஸ்50 மொபட்டின் மேம்படுத்த மாடலே டிவிஎஸ் XL சூப்பர். இந்திய மார்கெட்டில் கொடிகட்டி பறந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளால் மார்க்கெட்டிலிருந்து பிரியா விடை பெற்றது டிவிஎஸ் 50.

ஆனால், டிவிஎஸ் 50க்கு இருந்த வரவேற்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், புதிய அம்சங்கள் நிறைந்த XL சூப்பரை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டிவிஎஸ் 50க்கு கிடைத்த அதே வரவேற்பு XL சூப்பருக்கும் கிடைத்தது.

வெயிலிலும், மழையிலும் சைக்கிளில் கால் கடுக்க மிதித்து தொழில் செய்த லட்சக்கண்ககான வியாபாரிகளின் காலுக்கு ஓய்வு கொடுத்து, அவர்களை தனது முதுகில் சொகுசாக அமர வைத்து வருவாய் ஈட்டி கொடுத்த பெருமை XL சூப்பருக்கே போய்ச்சேரும்.

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் தோளோடு தோளாக நிற்கும் XL சூப்பர், அவர்கள் குடும்பத்தின் பிரிக்கமுடியாத உறுப்பினராக மாறிப்போய்விட்டது. ஸ்போர்ட்ஸ் பைக், சூப்பர் பைக் என இந்திய மார்க்கெட்டின் டிரென்டு தற்போது அடியோடு மாறிப்போய்விட்டது.

இருந்தாலும், பலருக்கு முதல் டூவீலர் என்ற ஞாபகத்தை ஏற்படுத்திய பெருமை இதற்கு மட்டுமே உண்டு. மேலும், இது பல்வகை பயன்பாட்டு வாகனமாக திகழ்வதால், இதன் மவுசு எத்தனை ஆண்டுகள் கழிநதாலும் குறையாது என்பதே நிதர்சனமான உண்மை.

டிவிஎஸ் XL சூப்பரின் மறுபக்கம்:

எஞ்சின்: 69.9சிசி 2 ஸ்ட்ரோக் எஞ்சின்

அதிகபட்ச திறன்: 2.61 Kw(3.5 Bhp) @ 5000 rpm

டார்க்: Nm 5.0 @ 3750 rpm

கியர்: ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம்

ஸ்டார்ட்டர்: கிக் ஸ்டார்ட்

வீல்பேஸ்: 1222மிமீ

டயர்களின் அளவு(முன்பக்கம் & பின்பக்கம்): 2.5 x 16

வண்டியின் எடை: 66 கிலோ

சஸ்பென்ஷன்

முன்பக்கம்: டெலிஸ்கோபிக் ஸ்பிரிங் ஃபோர்க்
பின்பக்கம்: மாற்றியமைக்கும் வசதிகொண்ட ஹைட்ராலிக் ஸ்பிரிங் ஆர்ம் ஷாக்ஸ்அப்சார்பர்

பிரேக்:

முன்பக்கம்: 80மிமீ டிரம் பிரேக்
பின்பக்கம்: 110மிமீ டிரம் பிரேக்

பெட்ரோல் டேங்க் : ஒரு லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 4 லிட்டர் கொள்ளளவு

சென்னையில் ஆன்ரோடு விலை:

டிவிஎஸ் XL சூப்பர்: ரூ.27,184 (தோராயமாக)

டிவிஎஸ் XL சூப்பர் ஹெவி ட்யூட்டி:28,709 (தோராயமாக)

The World's Billionaires

Rank Name Citizenship Age Net Worth ($bil) Residence
1 Carlos Slim Helu & family Mexico 70 53.5 Mexico
2 William Gates III United States 54 53.0 United States
3 Warren Buffett United States 79 47.0 United States
4 Mukesh Ambani India 52 29.0 India
5 Lakshmi Mittal India 59 28.7 United Kingdom
6 Lawrence Ellison United States 65 28.0 United States
7 Bernard Arnault France 61 27.5 France
8 Eike Batista Brazil 53 27.0 Brazil
9 Amancio Ortega Spain 74 25.0 Spain
10 Karl Albrecht Germany 90 23.5 Germany
11 Ingvar Kamprad & family Sweden 83 23.0 Switzerland
12 Christy Walton & family United States 55 22.5 United States
13 Stefan Persson Sweden 62 22.4 Sweden
14 Li Ka-shing Hong Kong 81 21.0 Hong Kong
15 Jim Walton United States 62 20.7 United States
16 Alice Walton United States 60 20.6 United States
17 Liliane Bettencourt France 87 20.0 France
18 S. Robson Walton United States 66 19.8 United States
19 Prince Alwaleed Bin Talal Alsaud Saudi Arabia 55 19.4 Saudi Arabia
20 David Thomson & family Canada 52 19.0 Canada
21 Michael Otto & family Germany 66 18.7 Germany
22 Lee Shau Kee Hong Kong 82 18.5 Hong Kong
23 Michael Bloomberg United States 68 18.0 United States
24 Sergey Brin United States 36 17.5 United States
24 Charles Koch United States 74 17.5 United States
51 Susanne Klatten Germany 47 11.1 Germany
52 Iris Fontbona & family Chile NA 11.0 Chile
52 Forrest Mars Jr United States 78 11.0 United States
52 Jacqueline Mars United States 70 11.0 United States
52 John Mars United States 73 11.0 United States
52 Ronald Perelman United States 67 11.0 United States
57 Oleg Deripaska Russia 42 10.7 Russia
58 Vagit Alekperov Russia 59 10.6 Russia
59 Leonardo Del Vecchio Italy 74 10.5 Italy
59 Carl Icahn United States 74 10.5 United States
61 Vladimir Potanin Russia 49 10.3 Russia
62 Philip Knight United States 72 10.2 United States
63 Ricardo Salinas Pliego & family Mexico 54 10.1 Mexico
64 Mohammed Al Amoudi Saudi Arabia 65 10.0 Saudi Arabia
64 Ernesto Bertarelli & family Switzerland 44 10.0 Switzerland
64 Anne Cox Chambers United States 90 10.0 United States
64 George Kaiser United States 67 10.0 United States
64 Hans Rausing Sweden 84 10.0 United Kingdom
64 Joseph Safra Brazil 71 10.0 Brazil
70 Alexei Mordashov Russia 44 9.9 Russia
71 Viktor Rashnikov Russia 61 9.8 Russia
72 German Larrea Mota Velasco & family Mexico 56 9.7 Mexico
73 Sheldon Adelson United States 76 9.3 United States
74 Silvio Berlusconi & family Italy 73 9.0 Italy
74 Dan Duncan United States 77 9.0 United States
74 Kushal Pal Singh India 78 9.0 India
77 Nasser Al-Kharafi & family Kuwait 66 8.7 Kuwait
77 Francois Pinault & family France 73 8.7 France
79 Dmitry Rybolovlev Russia 43 8.6 Russia
80 Iskander Makhmudov Russia 46 8.5 Russia
80 James Simons United States 71 8.5 United States
82 Alberto Bailleres & family Mexico 77 8.3 Mexico
83 German Khan Russia 48 8.2 Russia
84 Eliodoro, Bernardo & Patricia Matte Chile NA 8.1 Chile
85 Edward Johnson III United States 79 8.0 United States
86 Kumar Birla India 42 7.9 India
87 Sunil Mittal India 52 7.8 India
88 John Fredriksen Cyprus 65 7.7 United Kingdom
89 Serge Dassault & family France 84 7.6 France
89 Petr Kellner Czech Republic 45 7.6 Czech Republic
89 Ananda Krishnan Malaysia 71 7.6 Malaysia
89 Tadashi Yanai & family Japan 61 7.6 Japan
93 Mohamed Bin Issa Al Jaber Saudi Arabia 51 7.5 Saudi Arabia
93 Len Blavatnik United States 52 7.5 United Kingdom
93 David & Simon Reuben United Kingdom 67 7.5 United Kingdom
93 Nobutada Saji & family Japan 64 7.5 Japan
93 Alain & Gerard Wertheimer France NA 7.5 NA
93 Vladimir Yevtushenkov Russia 61 7.5 Russia
99 August von Finck Germany 80 7.3 Switzerland
100 Lee Kun-Hee South Korea 68 7.2 South Korea

Saturday, March 5, 2011

indian-overseas-bank-recruitment-2011

Indian Overseas Bank (IOB) is one of the oldest & leading public sector bank of India.With head office in Chennai, IOB has over 2000 branches across India & 6 abroad. Indian Overseas Bank has announced recruitment to fill 1100 clerk posts state-wise.



Post - Vacancies - Payscale:
Clerks – 1100 posts - Rs.7200-19300


Dates :Online applications registration – 4.3.2011 to 25.03.2011

Written Exam – 29.05.2011


Eligibility: Candidates interested in applying for IOB clerk recruitment 2011,

* Should be between 18 – 28yrs of age, as on 1.1.2011

* Must have secured 55% marks in 12th (HSC) OR 60% in Diploma in banking & finance OR 50% in degree (any discipline), as on 1.1.2011

* Fluency in english & ability to read/write/speak the language of state is essential.

* Working knowledge in computers is required or should posses within 6 months.



Selection: Indian Overseas Bank will conduct Written test & Interview, as part of clerk recruitment process.For each wrong answer in objective test, 0.25 as negative marks would be reduced.Based on the performance in the written test, candidates would be shortlisted for Interview.(no descriptive test)



Application fees of Rs.250(Gen/OBC) or Rs.50(SC/ST) should be paid at any Indian Overseas Bank branch before March 25, 2011.After payment is made with the provided challan, online application has to be filled & submitted with necessary details.The printout of this form can be saved for future reference.



The complete advertisement of Indian Overseas Bank clerk recruitment 2011,payment receipt & application link can be seen at their website here

http://iob.in/careers.aspx

Wednesday, March 2, 2011

தொடங்கியது பிளஸ்டூ தேர்வு-பிட் அடித்தால் 5 ஆண்டு தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. பத்து மணிக்கு தேர்வுகள் தொடங்கின. பத்தேகால் மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படித்துப் பார்க்க அவகாசம் தரப்பட்டது. பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்
வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வில் ஒழுங்கீனமாக நடந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து பிட் நோட்டீஸ்களும் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அதில்,

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வறைகளில் சோதனை செய்யப்படுவார்கள். தேர்வறையில் அனுமதிக்காத துண்டு சீட்டுகள், செல்போன் முதலியன வைத்திருந்தால் வினாத்தாள் அல்லது விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை, தேர்வெழுத தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும்.

இதன் காரணமாக எதிர் காலமே பாதிக்கும். எனவே மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ல் தான் 'ரிசல்ட்'!!

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதே போல புதுச்சேரி , கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:

இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

4.59 கோடி வாக்காளர்கள்:

தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும்.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30.

ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.

தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் -புதுச்சேரி தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல்- மார்ச் 19
மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 26
மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30
வாக்குப் பதிவு- ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை- மே 13

Tuesday, March 1, 2011

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட்-வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக அதிகரிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதைப் போல, வருமான வரி விலக்கு உச்சவரம்பை (income tax exemption limit) ரூ. 2 லட்சமாக உயர்த்தவில்லை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. மாறாக ரூ. 1.80 லட்சமாக மட்டுமே தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:

- 2010-11ல் திருப்திகரமான விவசாய உற்பத்தி
- ஊரக பொருளாதாரத்தில் புதிய பரிணாமம் எட்டப்பட்டுள்ளது
- 2010-11ல் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 8.6
- தொழில்துறை வளர்ச்சி 8.1. சதவீதம்
- சேவைத்துறை வளர்ச்சி 9.6 சதவீதம்
- 2012ல் பணவீக்கம் குறையும்
- 2011-12ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்
- 2011ல் விவசாயத்துறை வளர்ச்சி 5.4 ஆக இருக்கும்
- அடுத்த நிதியாண்டில் பொது கடன் நிர்வாக சட்ட மசோதா அறிமுகம்
- 12 முதல் நேரடி வரிவிதிப்பு அறிமுகம்
- மண்ணெண்ணெய், உரங்களுக்கு நேரடி மானியம் அறிமுகம்
- மியூச்சவல் பன்ட்களில் முதலீடு செ��்ய என்ஆர்ஐக்களுக்கு அனுமதி
- பங்கு விலக்கல் திட்டம்-ரூ.40,000 கோடிக்கு இலக்கு

நெசவாளர்கள் கடன் சுமை தீர்க்க ரூ. 3000 கோடி:

- கைத்தறி நெசவாளர்கள் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்

கைத்தறி நெசவாளர்களுக்காக நபார்டு வங்கிக்கு ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கண்காணிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் முதலீட்டு நிதி
- இந்தியாவின் மேற்குப் பகுதியில், பசுமைப் புரட்சியை ஏற்படுத்த ரூ. 400 கோடி
- சிறு கடன்கள் வழங்க ரூ. 100 கோடி
- விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 7860 கோடி நிதி ஒதுக்கீடு
- முன்னுரிமை வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக உயர்வு.
- ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி
- கடன்களை உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி மானியம்
- ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு

மேலும் 15 உணவுப் பூங்காக்கள்:

- மேலும் 15 புதிய உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி
- 7 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
- ஜோத்பூரில் ஊனமுற்றோருக்கான தொழில் பூங்கா அமைக்கப்படும்

கருப்புப் பணத்தை மீட்க 5 அம்சத் திட்டம்:

- கருப்புப் பணத்தைத் தடுக்க 5 அம்சத் திட்டம்
- கருப்புப் பணம் குறித்த தகவல் பெற 13 நாடுகளுடன் ஒப்பந்தம்
- பாரத் நிர்மான் திட்டங்களுக்கு ரூ. 58,000 கோடி ஒதுக்கீடு
- அங்கன்வாடி ஊழியர்களின் மாத ஊதியம் ரூ. 3000 ஆக உயர்வு
- கல்வித் துறைக்கு 24 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு
- 9,10வது படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி
- நதிகளைத் தூய்மைப்படுத்த சிறப்பு நிதியம்

80 வயதைக் கடந்தவர்களுக்கு ரூ. 500 நிதியுதவி:

- 80 வயதைக் கடந்த ஏழைகளுக்கு ரூ. 500 மாத நிதியுதவி
- வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரு்ககான ஓய்வூதியத் தகுதி வயது 65 லிருந்து 60 ஆக குறைப்பு
- நக்சலைட் பாதித்த பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள்

வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சம்:

- தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக அதிகரிப்பு
- மூத்த குடிமக்களுக்கான உச்சவரம்பு தகுதி வயது 58 ஆக குறைப்பு
- மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50 ஆக உயர்வு
- 80 வயதைக் கடந்தவர்களுக்கு இனி தனி வருமான வரி விலக்கு
- 80 வயதைக் கடந்தவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சம்
- சேவை வரி 10 சதவீதமாக தொடரும்
- உள்ளூர், சர்வதேச பயணங்களுக்கான சேவை வரி அதிகரிப்பு

கம்ப்யூட்டர் விலை குறையலாம்:

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பிரிண்டர் இங்கு போன்றவற்றுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்கள்:

உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதிய ரூபாய் குறியீட்டுடன் நாணயங்கள் வெளியிடப்படும்
நீதித்துறை அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 8000 கோடி
வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ. 21,000 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
உணவுப் பாதுகாப்பு திட்ட மசோதா கொண்டு வரப்படும்
காயமடையும் பாதுகாப்புப் படையினருக்கான கருணை நிதி ரூ. 9 லட்சமாக உயர்வு

அதிக முறை பட்ஜெட் சமர்ப்பித்தவர்கள் பட்டியலில் பிரணாப்:
Read: In English
இன்று பிரணாப் சமர்ப்பித்த பட்ஜெட் அவர் சமர்ப்பித்த 6வது பட்ஜெட்டாகும். இந்திய வரலாற்றில் அதிக பட்ஜெட்களை சமர்ப்பித்தவர் என்ற பெயர் மொரார்ஜி தேசாயிடம் உள்ளது. இவர் 10 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளார். 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடத்தில் ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி.சவான் ஆகியோர் உள்ளார். தற்போது 3வது இடத்தை பிரணாப் முகர்ஜி பிடித்துள்ளார்.

Monday, February 28, 2011

பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்:

1. http://www.dailyblogtips.com/

2. http://www.problogger.net/

3. http://www.bloggerbuster.com/

4. http://www.anshuldudeja.com/

5. http://www.blogdoctor.me/

6. http://www.abu-farhan.com/

7. http://www.bloggertipsandtricks.com/

8. http://www.newbloggingtipz.com/

9. http://www.blogspottutorial.com/

10. http://www.allblogtools.com/

11. http://bloggernanban.blogspot.com

குறிப்பு: இந்த அனைத்து தளங்களிலும் விளம்பரம் அதிகமாக இருக்கும். பார்த்துக் கொள்ளவும்.