Tuesday, June 7, 2011

திருப்பதி கோவில் ரகசியங்கள் tirumala tirupati balaji








திருப்பதிஸ்ரீனிவாசபெருமாளுக்குதிருவேங்கடமுடையான்,ஏழுமலையான்,மலகுனிய நின்ற பெருமாள் ,வெறுங்கை வேடன்,புனுகு காப்பு மேனியன் என பல பெயர்கள் உண்டு! பொதுவாகவ்றே கோவிந்தன்,ஏழுமலையான்.,சீனிவாசன் என்று பக்தர்களின் கோஷம் மலையில் எதிரொலிக்கிறது.

தாளப்பாக்கம் அன்னமய்யா 32,000 பாடல்கள் பாடியிருக்கின்றார்.1491 ஆம் ஆண்டு மசிண்டி வேங்கட்த்துறைவார் என்பவரால் வேங்கடாச்சால மஆத்மியம் எழுதப்பட்ட்து.வராஹ புராணம் ,பத்ம புராணம் ,கருட புராணம்,ப்ரம்மாண்ட புராணம்,மார்க்கெண்டேய புராணம் போன்ற பல புராணங்களில் இருந்து எடுத்தாண்ட தொகுப்பாகவே வேங்கடாச்சல மஹாத்மியம் விளங்குகிறது.

இந்த திருப்பதி திருமலை,திருச்சானூர் கோயில்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன..பல்லவ,சோழ,பாண்டிய,சாளுவ வம்ச மன்னர் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டு,அச்சுதராயர்,சதாசிவராயர் காலத்து கல்வெட்டு,பல்லவ மன்ன்ன் ந்ந்திவர்மன் கல்வெட்டு(இவரது கல்வெட்டு பார்த்தசாரதி கோயிலிலும் உள்ளது)இதில் தமிழ் கல்வெட்டுகள் அதிகம் காணப்பெறுகின்றன.




கி.பி 1583 ஆம் ஆண்டு கல்வெட்டில் அபிஷேகப்பொருட்களை பற்றி விரிவான விவரங்கள் உள்ளன்.பெருமாளது அபிஷேகப்பொருளாக குங்குமப்பூ,புனுகு,வாசனை திரவியங்கள்,அரைத்த சந்தனம்,போன்றவை தங்க வட்டிகளில் வைக்கப்பட்டு இவருக்கு திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.ஹைதராபாத் நிஜாமிடம் தான் கோடிக்கணக்கான ஆபரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.இவரிடம் அதைவிட பலகோடி மிகுதியாக ஆபரணங்கள் திருமலையில் உள்ளன.

பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் முடித்து 21 முழ நீளமுள்ள பட்டு பீதாம்பரம் அணிவிக்கப்படுகிறது.ஒருமுறை அணிவிக்கப்படும் பட்டு வஸ்திரம் மறுமுறை அணிவிக்கப்படுவதில்லை.இவர் திருமணத்திற்காக குபேரனுக்கு எழுதிய கடன்பத்திரம் இப்போதும் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.இது வடமொழியில் உள்ளது.இதை எழுத சொன்னவர் பிரம்மா.எழுதி கொடுத்தவர் ஸ்ரீனிவாசன்.எழுதி வாங்கியவர் குபேரன்.
கலியுகத்தில் விளம்பி வருசத்தில் வைசாக மாசத்தில் வளர்பிறையில் ஏழாவது நாளன்று கடன் வாங்கியதாகவும்,ராமர் முத்திரையுடன் கூடிய பதினாலு லட்சம் பணத்தை பெற்றதாகவும் ஆயிரம் வருட்த்தில் திருப்பி கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


முதல் சாட்சி நான்முகன்.இரண்டாவது சாட்சி சிவபெருமான்.மூன்றாவது சாட்சி அரச மரம்.இவ்வாறு ஸ்ரீனிவாசப்பெருமாள் தன் கையால் எழுதி கொடுத்த்தாக சொல்லப்படுகிறது.தெலுங்கு வருஷப்பிறப்பன்றும் தீபாவளி நாளிலும் ஆனி மாதமும் நடக்கும் அரசு தர்பார் மிகவும் விஷேசமானதாகும்.

அதிகாலை தோமாலை சேவை ஆரம்பமாகும் முன்,அன்றாட வரவு செலவு கணக்குகள் பெருமாளின் முன்பு படிக்கப்படுகிறது.ஆங்கிலேயரான சர் தாமஸ் மன்றோ தன் பெயரில் ஒரு நைவேதிய கட்டளையை இங்கு ஏற்படுத்திய வைத்துள்ளார்.(நீங்கள் நினைப்பது சரிதான்..அவர் வேரு யாருமல்ல..சென்னை அண்ணா சாலையில் குதிரை மீது அமர்ந்தவாறு சிலையாக நிற்கும் சர் தாமஸ் மன்றோ தான்)
மூலவரை போன்ற திருமேனி கி.பி.966 ஆம் ஆண்டு வெள்ளியால் செய்யப்பட்ட்து.சக்தி விடங்கன் என்ற மன்ன்னின் அரசி காடவன் பெருந்தேவி சில ஆபரணங்களையும் அளித்துள்ளார்.இந்த தகவல் கல்வெட்டாக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் 16 தமிழ்வரி எழுத்துக்களால் செதுக்கப்பட்டுள்ளது...

இத்திருக்கோயில் முதலில் அரசர்களாலும் ,பின் ஆங்கிலேயர்களாலும் பின் மஹந்தகளாலும் ,பரம்பரை மிராசு தீக்‌ஷிதர்களாலும்,பின் திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டியாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது...

திருப்பதி கோயிலின் கதை நீண்ட வரலாறு கொண்ட்து..ஒரு சந்தர்ப்பத்தில் அரசனால் அங்குள்ள அர்ச்சகர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்....அது எதற்காக..விரைவில் எழுதுகிறேன்...
-ராணி வார இதழில் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யார் எழுதியது.

Saturday, May 28, 2011

அகத்தை சுத்தமாக்கும் சீரகம்

“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே ”


என்பது சித்தர் பாடல். இதுபோல பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

எகிப்து நாட்டில் பழங்காலம் தொட்டு மணத்திற்காகவும், மருந்திற்காகவும் சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்திய, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சமையலில் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவகுணம் தெரியாமலேயே ஏராளமானோர் சீரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். உடலின் உள் உறுப்புகளை முக்கியமாக வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் சீரகம் பெரும் பங்காற்றுகிறது. இதனாலேயே இது சீர்+அகம்=சீரகம் என்று பெயர் பெற்றுள்ளது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட சீரகம், இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக சமையலில் சேர்க்கப்படுகிறது.

வேதிப்பொருட்கள்

சீரகத்தில் 2.5 சதவிகிதம் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருள் காணப்படுகிறது. இதிலிருந்து ஆல்டிஹைடுகள், பைனினி, ஆல்பா டெர்பினியோல், குயிமினின் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் உள் உறுப்புகள் சீராக இயங்க:

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது,

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்ற மருந்து

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு ளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரக நீரை சேர்த்துக் கொடுக்கலாம். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.

ரத்த அழுத்த நோய் குணமாகும்

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.

சிறிதளவு சீரகத்துடன் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சக்தி நிறைந்த உடல் – அறிவியல் உண்மைகள்

மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.


மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.

முன்னோர் வார்த்தைகள்

எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.

பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள்

மின் அதிர்ச்சி

மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

உடல் என்னும் சக்தி

உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

எப்படி உறங்குவது?

வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை இலக்கியங்களும், ஜைனர் குகைக்கோவில் படுகைகளும் நிறுவுகின்றன. நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

விரல்களின் முத்திரையில் வியாதிகள் தீரும்



நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

விரல்களும் மூலகங்களும்

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

சிந்தனைச் சக்தி

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும். இதன்படி தியானம் செய்தால் வலிகள் குணமாகும்.

காது நன்கு கேட்க!

காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

Friday, May 20, 2011

புகழ் பெற்ற ஊட்டி மலர்க்கண்காட்சி இன்று தொடக்கம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது.

கோடை விழா

ஊட்டியில் கோடை விழா கடந்த 7ம்தேதி ரோஜா கார்டனில் ‘ரோஜா கண்காட்சி’ மூலம் துவங்கியது. அதனை அடுத்து கடந்த 14,15ம்தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. ஊட்டி சீசனின் மிக முக்கிய நிகழ்வான மலர்க்கண்காட்சிஇன்று முதல் துவங்க இருக்கிறது. 22ம் தேதிவரை இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.

பூக்களால் உலகக் கோப்பை

இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றியை நினைவூட்டும் வகையில் பூக்களால் ஆன பிரம்மாண்டமான உலகக்கோப்பை அலங்காரம் இந்த ஆண்டு மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சம் ஆகும். இது தவிர, பிரம்மாண்டமான கங்காரு ஒன்றின் உருவத்தையும் தாவரவியல் பூங்காவில் உருவாக்கி வருவார்கள். இந்த ஆண்டு கண்காட்சிக்கென பிரத்யேகமாக 15 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.

சிறப்பு ஏற்பாடுகள்

மலர்க்கண்காட்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தினரால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

ஐஎம்எப் தலைவராவாரா சிங்கப்பூர் நிதியமைச்சர் சண்முகரட்னம்?

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நிதிக் கழகத்தின் (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ்ப்பாண வம்சாவளித் தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் நியமித்தார் அந் நாட்டு பிரதமர் லீ சென் லூங்.

அந் நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான சண்முகரட்னம் நேற்று தான் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் (Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் இவரை சர்வதேச நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பான்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஐஎம்எப் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதி்த்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.

இப்போது சண்முகரட்னம் ஐஎம்எப்பின் ஸ்டீரிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 10, 2011

ஸ்கைப்பை வாங்க முயற்சிக்கும் கூகுள், பேஸ்புக்!!



தொலைபேசி இல்லாமல் இணையதளம் மூலம் பேச, சாட் செய்து கொள்ள வசதி செய்து தரும் ஸ்கைப் தளத்தை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள்.

ஸ்கைப்பை வாங்குவது குறித்து தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஸுகர்பர்க் பங்கேற்றதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த டீலில் தன்னுடன் லக்சம்பர்க்கைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள ஸுகர்பர்க் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் ஸ்கைப்பை தன்வசப்படுத்த கூகுள் நிறுவனமும் கடும் முயற்சி செய்து வருகிறது.

ஸ்கைப்பின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகையை கொடுத்து வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டுமே தயாராக உள்ளன.

ஆனால், இதற்கான பேச்சுக்கள் இப்போதுதான் முதல்கட்டத்தில் இருப்பதாகவும், பொருத்தமான நேரத்தில் இந்த டீல் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் ஸ்கைப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2003-ல் ஆரம்பிக்கப்பட்டது ஸ்கைப். 2005-ல் 3.1 பில்லியன் டாலர் கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்கியது இபே. 2009-ல் ஸ்கைப்பிலிருந்த தனது பெரும்பான்மைப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனத்துக்கு விற்றது இபே. ஆனால் இப்போதும் மூன்றில் ஒரு அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது இபே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 1 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய பங்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தது ஸ்கைப். ஆனால் இந்த முயற்சி தாமதமாகி வருவதால், நிறுவனம் கைமாறுவது குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன.

கூகுள் ஏற்கெனவே கூகுள் வாய்ஸ் என்ற நிறுவனத்தை தன்வசம் வைத்துள்ளது. ஸ்கைப் செய்யும் சேவையைத்தான் கூகுள் வாய்ஸும் செய்கிறது. எனவே பேஸ்புக் நிறுவனத்திடம் ஸ்கைப் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.