
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரினால்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய ரினால்ட் கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.
மஹிந்திராவுடன் கூட்டை முறித்துக்கொண்ட பிரான்சை சேர்ந்த ரினால்ட் கார் நிறுவனம் இந்திய சந்தையில் தனித்து களமிறங்கியுள்ளது.
தனது முதல் அறிமுகமாக புத்தம் புதிய புளூயன்ஸ் செடான் சொகுசு காரை சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறக்கியது.
இந்த நிலையில், இந்திய சந்தையில் அமோக வெற்றி பெறுவதற்கு ஏழுமலையானின் அருள் கிடைக்க வேண்டி, அந்த நிறுவனம் புத்தம் புதிய புளூயன்ஸ் காரை திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஆந்தி்ர பிரதேச பிஜேபி செய்திதொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ரெட்டியிடம் கார் சாவியை ஒப்படைத்தார்.
இந்த கார் ரூ.15 லட்சம் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment